மான்சியின் பேச்சின் மூலம் சர்வேஷ்வரன் புரிந்து கொண்டது தன் மாமா சூர்ய நாரயணனை பற்றி தான் அக்கா, தம்பி பேசுகிறார்கள் என்று..
புரிந்தவனுக்கு, இன்னொன்றும் புரிந்தது.. அது சூர்ய நாரயணன் அங்கு வருவது இவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லை என்பதும் தான்..
தெரிந்தவனுக்கு இது தான் தோன்றியது.. அந்த வீடு தன் மாமா சூர்ய நாரயணன் உடையது.. அப்போது பிடிக்கவில்லை என்றால், இவர்கள் தான் அங்கு இருந்து சென்று இருக்க வேண்டும் என்பதும்… நினைத்தவன்..அதை சொல்லவில்லை…
சர்வேஷ்வரனின் யோசனை பலதில் இருந்தாலும், பார்வை மான்சியிடம் மட்டுமே இருந்ததால் அவள் பேசி முடித்து விட்டு, தன்னை யோசனையுடன் பார்ப்பதை பார்த்தவன்..
சைகையில் படுக்கையில் தன் பக்கத்தில் படுக்கும் மாறு சொன்னவனின் பேச்சை கேட்டு மான்சி படுத்தாலுமே, சர்வேஷ்வரன் அவளை அணைக்காது விளக்கை மட்டுமே
அணைத்து படுத்தவனுக்கு ஏனோ இன்று தன்
மனைவியை நாட தோன்றவில்லை..
மான்சியோ விளக்கை அணைத்ததும், தன் அருகில் வருவான் என்று ஒரு வித இறுக்கத்தோடு படுத்துக் கொண்டு இருந்தவள், அது போல் ஒர் நிகழ்வு நடவாது..
நேரம் சென்றதே ஒழிய அவன் தன்னை அணைக்காது போகவும், ஒரு வித நிம்மதியிடன் தூக்கத்தின் வசம் தன்னை ஒப்படைத்தாள்…
சர்வேஷ்வரன் காலையில் எழுந்தது பார்த்த உருவம் தன் மனைவியின் உருவமே.. அதுவும் எங்கோ செல்வது
போல் உடையணிந்து கொண்டு அவள் கை பையில் ஏதோ எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன்… கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தவன்…
“ காலையிலே எங்கே போக கிளம்பிட்ட..?” என்று ஒரு வித ஆராய்ச்சி பார்வையை மான்சியின் மீது செலுத்திக் கொண்டே அவளிடம் கேட்டான்..
“ நேத்து தான் நான் படிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னிங்க .. இப்போ என்ன என்றால் எங்கு ஏன்னு கேட்கிறிங்க..?” என்று மான்சிஅதிர்ச்சியுடன் கேட்டாள்..
எங்கு அவன் மனது மாறி தன் படிப்புக்கு தடை வந்து விடுமோ என்ற பயத்தில்…
“ ஓ லைப்ரேரி கிளம்புறியா..?” என்று ஆசுவாசமாக கேட்டுக் கொண்டே அடர் நீலத்தில் சுடியும் வெள்ளை நிறைத்தில் துப்பட்டாவை ஒழுங்காக போடாது ஏனோ தானோ என்று அவள் போட்ட விதமே, அவளுக்கு இன்னும் அழகு கூடி தெரிவது போல் சர்வேஷ்வரனின்கண்ணுக்கு தெரிந்தது..
மனைவியின் அழகை கண் குளிர ரசித்த வாறே எழுந்தவன் குளியல் அறைக்குள் செல்லாது, மான்சியின் பக்கம் சென்று அவளை பின் பக்கத்தில் இருந்து அணைத்துக் கொண்டவனாய், அவள் கழுத்து நடுவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அவளின் வாசம் பிடித்த வாறே..
“ நேத்து ரொம்ப நிம்மதியா தூங்கின போல..” என்று சர்வேஷ்வரன் பேச பேச அவளின் மீசை முடியின் உராய்வு அவள் கழுத்து வளைவில் பட்டு அவளுக்கு ஒரு வித கூச்சத்தை கொடுத்தாலுமே,
அவன் கேட்ட நிம்மதியா தூங்கினாயா…? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது முழித்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தவளின் தோற்றம் தங்கள் முன் இருந்த கண்ணாடியில் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
அதுவும் அந்த தோற்றம் இன்னும் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் மான்சி இன்னும் அழகோடு தெரிய….பின் பக்கம் அணைத்துக் கொண்டவனுக்கு, அவளின் முன் பக்கம் பரிசமும் தேவைப்பட்டதில்,
நொடி பொழுதில் அவளை ஒரு சுழற்று சுழற்றியவன் முன் பக்கம்அவள் முகத்தை நேராடியக பார்க்கும் படி கொண்டு வந்தான்..
அவள் கண்ணை பார்த்த படி.. “ ஆனால் நான் சரியாவே தூங்கல.. தூங்க முடியல… காரணம் நீ தான்… அதனால் தான் இதோ ஒன்பது மணியாகியும் என்னால் விழிக்க முடியாது ஒரு வித சோம்பலிலேயே இருக்கிறதும் உன்னால் தான் புரியுதா..?
ஆனால் நீ நல்லா நிம்மதியா தூங்கினேன் என்பது உன் முகம் பளிச்சிடலிலேயே தெரியுதே… இப்போ நீ நிம்மதியா போய் படிச்சி உன் ஐ.ஏ.எஸ் கனவைநிறைவேத்திப்ப…
ஆனால் நான் என் கனவு என் தொழில் எல்லாத்திலும் உன்னால் கவனம் செலுத்த முடியாது.. அதனால் அது அதல பாதளத்துக்கு போக போகுது பார்..
ஆனா அப்படி போனா அதற்க்கு காரணம் நீ தான் சொல்லிட்டேன்..” என்றவனின் பேச்சை எதில் எடுத்துகொள்வது என்று தெரியாது இன்னும் தான் திரு திருஎன்று முழித்துக் கொண்டு இருந்தாள்..
அவளின் அந்த தோற்றம் சர்வேஷ்வரனின் கண்ணுக்குஇன்னும் இன்னும் அழகாக தெரிய.. தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாக அவளின் இதழை நோக்கி குனிந்தவன் தனக்கு பிடித்ததை பிடித்த விதத்தில், எடுத்துக் கொண்டவனின் நிலை இன்னும் மோசமாக தான் ஆனது எனலாம்…இன்னும் இன்னும் தேவை என்பது போல்..
நேற்று தன் மனைவியை பேசிய பேச்சுக்கு, ஏனோ அவளை நாட மனது வரவில்லை.. அதனால் தான் அவளை நாடாது இருந்தான்..
ஆனாலும் முன் இரவு தங்களுக்குள் நடந்த அந்த நிகழ்வு கண் முன்வரும் முன்னவே அவன் உடலில் ஒரு வித மாற்றம் நிகழ்ந்தது…
அதன் தாக்கத்தை அடக்க முடியாது தன் மனைவியை திரும்பி பார்த்தவன்… அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்து ஏனோ அவளை எழுப்ப மனம் இல்லாது நடு இரவுக்கு மேல் கூட தூக்கம் வராது விழித்து கொண்டு தான் இருந்தான்..
அதனால் தான் நேரம் போனது கூட தெரியாது தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தவன் மான்சி எங்கோ வெளியில் செல்வது போல் கிளம்பி இருந்தவளை அவள் அம்மாவை பார்க்க தான் செல்கிறாள் என்று நினைத்து ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டே கேட்டது…
பின் அவள் படிப்பு என்பதில் நிம்மதி அடைந்தவனாய் பார்த்த தன் மனைவியின் தோற்றம் நெருங்க சொல்ல.. நெருங்கியவனால் விலக முடியாது போனாலும், அவளை விட்டு விலகி விட்டான்..
நெருங்கினான் அணைத்தான். முத்தம் இட்டான். பின் விலகினான்.. அவை எதற்க்கும் எந்த எதிர் வினையும் காட்டாது அதே திரு திரு பார்வையிலேயே பார்த்துக் கொண்டு இருந்த அவளின் தோற்றம் ஏனோ சர்வேஷ்வரனின் மனதில் பதிந்து போனது..
அந்த பதியதிற்க்கு காரணம்.. அவளின் அந்த தோற்றம் வெகுளியாகவும், தூய்மையானவள் நான் என்பது போல் அவன் கண்ணுக்கு தெரிந்தது.. அவன் மனதில் பதிந்த அந்த தோற்றம் அவன் ஆழ் மனது வரை செல்லவில்லை என்பது, பின் நடந்த சில சம்பவங்கள் மூலம் அவன் மட்டும் அறியாது நமக்குமே புரிய வைத்தான்…
மனைவியின் முகத்தை பார்த்தவன் என்ன
நினைத்தானோ .. “ சரி சரி என் முகத்தையே பார்த்துட்டு இருந்தால் உனக்கு டைம் ஆக வில்லையா..? ஐ,ஏ,எஸ் ஆகனும் என்று கனவு மட்டும் இருந்தால் போதாது…
அதுக்கு உண்டான உழைப்பை நாம் அதற்க்கு கொடுக்க வேண்டும்.” என்ற கணவனின் பேச்சில் மான்சி இப்போது குழப்பத்தில் இருந்து ஒரு தெளிவுக்கு வந்து விட்டாள்… என்பதை அவளின் முறைப்பின் மூலம் அவன் புரிந்து கொண்டான்…
“ இப்போ தான் நீ நார்மல் மோடுக்கு வந்து இருக்க..” என்று சொல்லி விட்டு குளிக்க சென்றவனின் முதுகையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு இது தான் தோன்றியது..
என்னை பற்றி எல்லாம் தெரியும் போல் என்ன இது பேச்சு என்று நினைத்தாள்… எப்போதும் போல் அவள் மனதோடு நினைத்து மனதோடு பேசும் இந்த அவளின் பழக்கம் தான்… பிற்காலத்தில் அவளுக்கே பெரிய வினையாகாக போகிறது என்பதும்..
பேசுவாள்.. ஒரு நாள் பேசுவாள்.. ஆனால் அவள் பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேசாத வாறு தான் அவள் பேச்சு இருக்கும் என்று கூட அவளுக்கு தெரியாது தன் தம்பியின் கை பேசி அழைப்பை ஏற்றவள்..
அவனிடம் பேசி முடிக்கவும் சர்வேஷ்வரன் குளியல் அறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது…
டவளை மட்டும் இடுப்பில் கட்டி வெளியில் வந்தவனுக்கு வெட்கமாக இல்லை.. ஆனால் அதை பார்த்த மான்சிக்கு தான் வெட்கம் பிடிங்கி தள்ளியது..
வேறு திசையில் பார்த்த வாறு நின்று கொண்டவள்.. சாப்பிடுவதற்க்கு கீழே செல்ல.. அவன் ரெடியாகி வரும் வரை காத்துக் கொண்டு இருந்தாள் ..
இவள் முகத்தை வேறு பக்கம் பார்த்தாள் என்றால், சர்வேஷ்வரன் தன் முழு உடையை உடுத்தி, பின் பர்பூயும்.. வாட்ச் …டை… பெல்ட்… என்று அனைத்தும் பொறுமையாக அணியும் வரை, அவன் பார்வை முழுவதும் மான்சியிடம் மட்டுமே நிலை பெற்று இருந்தன..
பின் இருவரும் ஒரு சேர சாப்பிட போகும் போது, குடும்பத்தில் இருக்கும் மொத்த உறுப்பினரும்.. அனைவரும் சாப்பிடும் இடத்தில் தான் இருந்தனர்..
இருவரும் ஜோடியாக படி இறங்கி வரும் போது, ஜோடி பொருத்தம் அவ்வளவு பொருந்தி இருந்தது… அதுவும் சர்வேஷ்வர் படியில் இறங்கும் போதே தன் மனைவியை
பார்க்கும் அந்த பார்வையை பார்த்த குடும்பத்தினருக்கு, தெரிந்தது சர்வாவுக்கு மான்சியை பிடித்து இருக்கிறது என்று..
அதுவும் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாத மான்சியின் உதட்டின் அந்த காயம் வனிதாவுக்கு தெரிந்தது… அது எதனால் என்று அனுபவமிக்கவளுக்கு புரிந்து போனதில், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மகேஷ்வரனின் காதில் சொல்ல..
அவனோ மான்சியை பார்க்காது தன் மனைவி
வனிதாவை முறைத்து.. “ உனக்கு விவஸ்தையே கிடையாதா..? என்ன இது..? சீ..” என்று அருவெறுத்து தான் போனான்..
சர்வா தன் தம்பி.. தன் தம்பி மனைவியோடான அவர்கள் அந்தரங்கமான விசயத்தை பார்ப்பது என்ன அதை பற்றி நினைப்பதே தவறு… இதில் இதை பற்றி என்னிடமே சொல்கிறாளே என்று அருவெருத்தவனாக தன் தம்பியின் பக்கம் பார்வை செலுத்தாது சாப்பிட்டு விட்டு சென்று
விட்டான்..
ஆனால் வனிதாவுக்கு அந்த நாகரிகமே இல்லாது போல்..
“ சின்ன மாமா நீங்க வருவீங்க என்று சாப்பிடாது காத்து கொண்டு இருக்கிறார்… அவருக்கு சுகர் வேறு… நீங்க ரொமன்ஸ் செய்து முடித்து விட்டு வரும் நேரமாகும் என்று சொல்லி இருந்தால்,
குறைந்த பட்சம் இரண்டு மாமாவாவது சாப்பிட்டு இருந்து இருப்பாங்க..” என்று மான்சியின் காயம் பட்ட உதட்டை பார்த்து கொண்டே பேசிய பேச்சில், அவளின் இரண்டு
மாமாக்களும் தலையை குனிந்து கொண்டார்கள் என்றால்,
வைதேகி..“ சீ என்ன பேச்சு இது ..? பெண் போலவா பேசுற..? ” என்று கண்டித்தார்…
அப்போதும் வனிதா விடாது.. “ என்ன அத்தை என்னை சொல்றிங்க.. நான் நம்ம வீட்டு ஆண்களின் நல்லதிற்க்காக தான் சொல்றேன்.. இதில் என்ன சீ இருக்கு..” என்று தன் பேசிய பேச்சு நியாயமான பேச்சு தான் என்பது போல் பேசினாள்..
இப்போதும் அனைவரும் சர்வேஷ்வரனை தான் ஒரு வித பதட்டத்துடன் பார்த்தனர்.. ஆனால் அவனோ கூலாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன்.. சாப்பிடாது ஒரு வித அவஸ்த்தையோடு அமர்ந்திருந்த மான்சியை பார்த்து..
“ சாப்பிடு உனக்கு டைம் ஆகல..”என்று அவளை கண்டிப்பது போல் பேசியவன்.. பின் அனைவரும் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து…
“மாம் வனி சொன்னது சரி தான்.. இனி எங்களுக்காக நீங்க சாப்பிடாது காத்திருக்க வேண்டாம்.. வனி உங்க எல்லோரையும் மனதில் வைத்து தானே சொல்றா…” என்று பொதுவாக அனைவரையும் பார்த்து கூறியவன்..
பின் வனிதாவின் பக்கம் பார்வையை திருப்பியவன்…
“இதில் கூச்சப்பட எதுவும் இல்ல வனி… இரண்டு நாள் முன் கல்யாணம் ஆனவங்களுக்குள் என்ன நடக்குமோ அது நடந்தது.. அவ்வளவு தான்..
அதோடு என் மனைவியோடு ரொமான்ஸ் செய்ய .. நான் காலம் நேரம் எல்லாம் பார்க்க தேவையில்லை தானே..” என்று சொல்லி விட்டு தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றவனின் பேச்சில் ஏதோ மறை முகமான தகவல்…
அதாவது தன்னிடம் மறைமுகமாக ஏதோ சொல்வது போல் தோன்றியது வனிதாவுக்கு…
அவளின் அந்த நினைப்பு எல்லாம் சிறிது நேரம் தான்.. சிறிது நேரம் என்றால், அவளின் பேசிக்கு அழைப்பு வரும் வரை மட்டும் தான்… வனிதாவின் மனது சர்வேஷ்வரனின் பேச்சை மனது அசைப்போட்டது..
வந்த அழைப்பில் பேசிய பின்.. “ இதோ கிளம்பிட்டேன்..” என்ற வனிதாவின் பேச்சை கேட்ட அவளின் இரு அத்தைகளும்..
“என்ன வனி ஆஸ்பிட்டலுக்கா..?” என்று கேட்டு அவளுக்கு என்ன பொய் சொல்வது என்ற, சிரமத்தை கொடுக்காது …
“ஆமாம்..” என்று மட்டும் சொன்னவள்.. அத்தைகள் சொன்னது போல் வனிதா முதலில் நேராக மருத்துவமனைக்கு தான் சென்றாள்..
அன்று தான் பத்மாவதியையும் , அனிதாவையில் டிஜ்ஜார்ஜ் செய்வது… அதனால் அந்த நேரம் சூர்ய நாரயணனும் அங்கு தான் இருந்தார்…
அவரை பார்த்ததும் வனிதா… “ நீங்க டிஜ்ஜார்ஜ் செய்து மாமையும், அனிதாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா..? எனக்கு வெளியில் முக்கியமான வேலை ஒன்று இருக்கு… “ என்று தன் தந்தையிடம் சொன்னாள்..
அதற்க்கு சூர்ய நாரயணன்… “ என்ன முக்கியமான வேலை .. அம்மா, தங்கையை ஆஸ்ப்பிடலில் இருந்து வீட்டுக்கு அழைத்து போவதை விட முக்கியமானது…?” என்ற தந்தையின் கேள்விக்கு வனிதா பதில் அளிக்காது அவரை ஒரு விதமாக பார்த்தவள்..
“ ஏன் உங்களுக்கு இதோட முக்கியமான வேலை இருக்கா…. அவங்க கூட ஏதாவது வெளியில் போவது போல்..” என்ற மகளின் கேள்விக்கு, அவரால் பதில் அளிக்க முடியவில்லையா..? இல்லை பதில் சொல்வதற்க்கு முன் அவரை நோக்கி வந்த மருத்துவரை பார்த்து, இவருக்கு முன் என்ன பேசுவது என்று விட்டு விட்டாரா….? தெரியாது..
ஆனால் ஒன்று அவர் வனிதாவின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பது.. எனக்கு இது தானே தேவை என்பது போல் தன் பேசியில் ஏதோ பேசிக் கொண்டே அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறும் மகளை , ஒரு தந்தையாக தடுக்க வழியில்லாது, தன் மனைவி மகளை வீட்டுக்கு அழைத்து சென்றார்..
அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பும் முன்… இருவரையும் பார்த்த மருத்துவர் சூர்ய நாரயனணை தனியே அழைத்து… அவ்வளவு சொல்லி தான் அனுப்பினர்..
அதுவும் குறிப்பாக மகளை பற்றி சொன்ன.. “ குறைந்தது ஒரு வருடமாவது அவங்க அது போலான உறவில் ஈடு பட கூடாது..” என்று திருமணம் ஆகாத மகளை பற்றி சொன்னவரிடம் சூர்ய நாரயணன் தலை குனிந்து கொண்டு..
‘ சரி..” என்பது போல் சொல்லும் படியான நிலையில் தான் அவரை அவர் மகள் கொண்டு வந்து நிறுத்தி உள்ளாள்..
தன் மனைவியை பற்றிய உடல் நிலையான.. “அவங்களை பற்றி முன்னவே உங்களுக்கு தெரிந்தது தான்… அதோட இப்போ அவங்களுக்கு மகளின் நிலை நினைத்தும் மனது கஷ்டமா தான் இருக்கும்..
அதனால் தூக்கம் குறையலாம்.. அதற்க்கு மாத்திரை எழுதி கொடுத்து இருக்கிறேன்..” என்று ஒரு சில மருந்துவகைகளை சொன்னவர்..
பின்.. “ இந்த மாத்திரை மருந்து எல்லா வற்றையும் விட மிக முக்கியம்.. அவங்க மனது அழுத்தம் கூடாது .. “ என்பது தான்…
அந்த வழி வகையை முதலில் சூர்ய நாரயணனே செய்வாரா என்பது தெரியாத ஒன்று என்றால்,
அவரின் மூத்த மகள்… மான்சியை தன் ஆண் நண்பனிடம் காண்பித்து …
“அந்த பெண் தான் நல்லா பார்த்துக்கோ.. நான் சொன்னது போல் செய்து முடி..” என்று சொல்லி கொண்டு இருந்தாள்… பின் விளைவு தெரியாது…