சர்வேஷ்வரனின் வாழ்க்கை திருமணம் முடிந்த பின்னும் இலகுவாக தான் எந்த வித பிரச்சனையும் இல்லாது சென்று கொண்டு இருந்தது… ஆனால் மான்சிக்கு…?
தினம் தினம் ஒரு பிரச்சனை அவள் எதிரில் வந்து நின்றது.. அது தானே வருகிறதா..? இல்லை வரவழைக்கபடுகிறதா..? என்று ஆராயும் நிலையில் கூட மான்சிக்கு நேரம் இல்லை…
காலையில் நூலகம்… மாலையில் கோச்சிங் க்ளாஸ்.. பின் அதை பற்றி இன்னும் அறிய புத்தகம்,, கூகுல் என்று அவளின் தேடல் இன்னும் இன்னும் அதிகமானது..
கூடிய விரைவில் அவள் எழுதும் தேர்வு நெருங்கி கொண்டு வருவதால்… அவளுக்கு நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டு இருந்த வேளயில், தன் தம்பியிடமே அவன் படிப்பு …உணவு …அவன் மனநிலை… என்று தன் பேச்சை சுருக்கி கொண்டாள் என்றால்,
மற்றவர்களுக்கு அவள் செலவழிக்கும் நேரத்தை நீங்களே கணக்கீட்டுக் கொள்ளலாம்…
காலை உணவு உண்ண அமர்ந்தால், இது என்ன சத்திரமா என்ற முனுகலோடு தான் அவள் காலை உணவு தொடங்கும்…
பின் அவள் உடுத்தும் உடை… அவள் எப்போதும் உடுத்தும் உடை எளிமையாக தான் இருக்கும்.. அவள் தம்பி கூட…
“ என்ன அக்கா கலெக்ட்டர் ஆகுவதற்க்கு படிப்போட , உடையில் கூட பிரப்பர் ஆகிட்டு வர போல…” என்று அவன் கிண்டல் செய்வான்.. அப்படி தான் இருக்கும் அவள் உடை..
நேர்த்தியாகவும்.. அடர் நிரத்தில் இல்லாதும். முழு உடலும் மறைத்த வாறும் தான் இருக்கும்.. அதே போல் தான் அணிகண்லங்களும்..
காதில் சின்ன கம்பல்… ஒரு கையில் மெல்லிய வளையல்… மறு கையில் வெளியில் போகும் போது மட்டும் அதில் வாட்ச் இடம் பெற்று இருக்கும்.. மற்ற நேரத்தில் அங்கு வெறுமை மட்டுமே காட்சி தரும்…
பார்க்க ஆடம்பரமாக இல்லை என்றாலும், நேர்த்தியாக தான் எப்போதும் இருப்பாள்.. புடவை என்பது திருமணத்தில் உடுத்தியது.. அதன் பின் ஜீன் குர்த்தி.. இல்லை ஜுடி இது தான்… அதுவே அவளுக்கு அழகோடு கம்பீரத்தையும் சேர்த்து கொடுக்கும்..
ஆனால் சர்வேஷ்வரனின் வீட்டு ஆட்களுக்கு மட்டும், குறிப்பாக, அந்த வீட்டின் பெண்களின் கண்களுக்கு அந்த அழகும்… கம்பீரமும் தெரியாது… அவளின் தோற்றம் ஒன்றும் இல்லதவர்கள் போல் தெரிந்தது போல்..
அதனால்.. “ என்ன இது ட்ரஸ்…?” என்று தன் மாமியார் கேட்டார்கள் என்றால், அவளின் பெரிய மாமியார் …
“ உன் வீடு போல் இது ஒன்றும் இல்லாத வீடு கிடையாதும்மா… இது என்ன கண்ணுக்கே தெரியாத போல தாலி சரடு…? கைய் தொட்டா கூட கையோட வந்து விடும் போல இருக்கு… . நான் அப்போதே சொன்னேன் கொஞ்சம் தெருப்பா எடு என்று…
சர்வாவே கூட்டிட்டு நகை கடைக்கு போய் இதை மாற்றி கொஞ்சம் பார்க்குறப்ப போலாவது எடு…” என்று சொன்னவரின் மருமகள் கழுத்தில் ஒன்றும் இல்லாது அந்த வீட்டில் உலவுவது ஏனோ அவர்கள் பார்வைக்கு பட வில்லை போல்..
இல்லை அவளிடம் காட்ட முடியாத மாமியார் அதிகாரத்தை மான்சியிடம் காட்டி தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து பார்த்து கொள்கிறார்களோ… என்னவோ…
பக்கத்தில் அமர்ந்து இருந்த சர்வேஷ்வரை பார்த்து.. “ சர்வா வாங்கி தருவே தானே..?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது தன் மனைவியை திரும்பி தன் மனைவியின் தோற்றத்தை பார்த்தவன் ஒன்றும் சொல்லாது…
“எனக்கு ஆபிசுக்கு டைம் ஆகிறது..” என்று அந்த பேச்சுக்கு உண்டான பதிலாக ஒன்றும் சொல்லாது கிளம்பி விட்டான்…
சொல்லி இருக்கலாம்.. அவள் தோற்றத்தை பார்த்து தன் மனதில் நினைத்தது ஆன.. ‘ இதுக்கு என்ன குறை.. நல்லா தானே இருக்கா…’ என்று சொல்லி இருக்கலாம்.. சொல்லி இருந்தால், குறைந்த பட்சம் அவன் வீட்டு ஆட்கள் இனி மேல் உடை.. நகை விசயத்திலாவது மான்சியை பேசாது விட்டு இருப்பார்கள்…
இதில் என்ன கொடுமை என்றால், உடையை பற்றி வனிதா… பேசுவது தான் மான்சிக்கு தலை வேதனையாக இருந்தது…
மான்சிக்கு இப்போது எல்லாம் நூலகம், கோச்சிங் க்ளாஸ் முடிந்து வீட்டுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே … தலை வேதனையாக இருந்தது…
காரணம் அது என்னவோ இப்போது எல்லாம் இரு அத்தைகளின் பேச்சில் குத்தல் மிக தூக்கலாக தெரிந்தது… இப்போது என்ன அந்த ஒரு நாள் தான் அவளிடம் அவர்கள் பேச்சில் அன்பு தெரிந்தது..
பின் ஏதாவது பேசுவது.. அதில் ஏதாவது மறைத்து வைத்து பேசுவது.. இது எல்லாம் அவளுக்கு புதியது… வாழ்க்கையே புதியது.. அதில் அவள் பொருத்தி கொள்ளும் முன்னவே கணவனாக சர்வேஷ்வரன் மான்சியிடம் தன் உரிமையை எடுத்து கொண்டான்..
ஆனால் அதற்க்கு உண்டான மரியாதையை அவன் அவளுக்கு பெற்று கொடுத்தானா..? என்பதே அவளுக்கு விளங்காத போது.. வீட்டு ஆட்களின் பேச்சை எதிர் சேர்த்து கொள்வது என்று தெரியாது குழம்பி தான் போனாள்…
புது பெண் புகுந்த வீட்டில் நடக்கும் பிரச்சனையை தாயிடம் சொல்லி ஆலோசனை கேட்பாள்.. ஆனால் இங்கு பிரச்சனையே மான்சியின் அன்னை வைத்து எனும் போது..
அதுவும் மான்சி தன் அன்னையிடம் பேச்சு வார்த்தைகளே முற்றிலும் விட்ட நிலையில், தன் குழப்பங்களை யாரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வாள்..
அவளின் ஒரே ஆறுதல் தன் தம்பி… அவனிடம் பேச தான் முடியும்.. தன் பிரச்சனைகளை அவனிடம் சொல்ல தோன்றவில்லை..
காரணம் ஒன்று அவன் வயதாக இருக்கலாம்.. மற்றொரு காரணம் அவன் படிப்பு.. ஏற்கனவே தன்னை தன் எதிர் கால வாழ்க்கையை நினைத்து குழம்பி போய் கொண்டு இருந்தவனின் மனது தெளியவே தான் இந்த திருமணத்திற்க்கு ஒத்துக் கொண்டது…
இதில் தன் குழப்பத்தை சொல்லி அவனிடம் சொல்லி அவனை குழப்புவதோடு மட்டும் அல்லாது, அவனின் மருத்துவ கனவையும் சிதைக்க கூடாது என்று நினைத்து தன் மனதில் தோன்றும் குழப்பங்களை எப்போதும் போல் யாரிடமும் சொல்லாது தன் மனதில் போட்டுக் கொண்டவள் எப்போதும் போல் மனதோடவே பேசிக் கொண்டாள்…
வீட்டில் தான் இப்படி என்றால், வெளியில் யாரோ தன்னை பின் தொடர்வது போல் ஒரு உணர்வு … அவள் மனதில் எழுந்த வண்ணம் இருக்கிறது.. அவள் உணர்வு தந்த வேகத்தில் திரும்பி யார்…? என்று தான் பார்க்கிறாள்..
ஆனால் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் கண்ணில் மாட்டுவது இல்லை.. இல்லை வேறு யாரோ தன்னை பின் தொடர்கிறார்களா..? என்று பார்த்த போது பொதுவான வீதி எனும் போது…
அனைவரும் வர இடத்தில் தன்னை யார் பின் தொடர்கிறார்கள் என்று அவளாள் அறிய முடியவில்லை… கூர்ந்து கவனித்தால் தான்… ஒரே நிறத்தில் இருக்கும் கார் தன்னை பின் தொடர்கிறதா என்று.. அப்படி இல்லை என்பது அவளுக்கு நிச்சயம் ஆனது…
பின் சிறிது நாள் கழித்து, முதலில் தன்னை பின் தொடர்கிறார்களா..? இல்லை தன் மனதின் பிரம்மையா..? என்று அவள் குழம்பும் வேளயில், இன்னொரு குழப்பமாக அவள் வீட்டை விட்டு வெளி வந்த உடன் அவள் பேசிக்கு தனக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்..
அழைப்பு என்றால் தொடர்ந்து கிடையாது… இவள் நூலகத்துக்கு செல்லும் வழியில்… பின் கோச்சிங் க்ளாஸ் செல்லும் வழியில் ஒரு அழைப்பு, பின் மாலை… அதன் பின் இரவு.. ஒரு பத்து மணியளவில்…
முதலில் யாரோ என்று எடுத்தவள் .. பின் அதை எடுக்காது விட்டு விடுவாள்.. என்ன ஒன்று இரவும் சர்வேஷ்வரனும் தன் அறையில், தவறு தவறு சர்வேஷ்வரனின் அறையில் தான் இருப்பதால், அந்த இரவு நேரத்து அழைப்பை தான் ஏற்காத போது…
அவன் எப்போதும் போல் மடி கனிணியில் வேலை பார்க்கும் போது , இரவு நேர அந்த அழைப்பில் அவனுக்கு இடையூறு செய்ததால் தலை நிமிர்ந்து தன்னையும், தன்னை பேசியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு பின் மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவான்..
இது போல் மூன்றாம் நாளும் நிகழும் போது மட்டும்.. “ உனக்கு தெரிந்தவங்களா இருக்க போகிறது.. அதுவும் இந்த நேரத்திற்க்கு உனக்கு நெருங்கினவங்க மட்டும் தானே அழைப்பாங்க.. யார் என்று பார்..” என்று சர்வேஷ்வரன் சொன்ன போது மான்சி சொல்லி இருக்கலாம்…
“ இது போல் எனக்கு தினம் தினம் வருகிறது.. எடுத்து பேசினால் பேச மாட்டார்கள்..” என்று சொல்லி இருக்கலாம்… ஆனால் அதை சொல்லாது..
“ முக்கியமான கால் எல்லாம் கிடையாது..” என்று விட்டாள்…
ஒரு சமயம் பேசியில் அழைத்தவன்.. ஏதாவது அதாவது தவறாக பேசி இருந்தால், சொல்லி இருப்பாளோ.. என்னவோ..? ஆனால் அதுவும் சந்தேகம் தான்.. அவர்களின் விசித்திரமான வாழ்க்கை முறமைக்கு..
ஆம் அவர்கள் வாழ்க்கை ஒருவகையில் விசித்திரத்தில் சேர்த்தி என்று தான் சொல்ல வேண்டும்… பின் என்ன ஆசையோட இல்லை காமத்தோட அவர்களின் உறவு முதல் ராத்திரியோடு சரி..
அடுத்த ராத்திரியில் சர்வேஷ்வரனுக்கு அவளை அணைக்க நினைத்தாலும், அவளின் முக சோர்வில் அவளை சேராது விடுத்தவன்..
அடுத்து அவளை நெருங்கினாலே அவள் அம்மாவை தான் ஏதாவது பேசி விடுகிறோம்.. அது என்னவோ அவன் மான்சியிடம் அவள் அம்மாவை பற்றி பேச கூடாது என்று நினைத்ததை அவனால் நிறை வேற்ற முடியாது போயின…
அதற்க்கு காரணம்.. மான்சியை பார்க்கும் சர்வேஷ்வரனின் மனது தன்னால் அவள் பக்கம் அவனையும் மீறி சாய்வதை அவனால் நன்கு உணர முடிகிறது… அதற்க்கு தன் மனது என்று உணராது..
அம்மாவை போலவே மயக்குகிறாள் என்று தன் மனம் அவள் வசம் சாயும் போது எல்லாம் நினைப்பு தோன்ற… அதன் தாக்கத்தில் வாயை விட்டு விட்ட பின்… அவள் முகம் கசங்களில் தன் தவறை உணர்க்கிறான்..
அதனால் எதற்க்கு வம்பு என்று நினைத்து தனக்கே தன்னை கட்டுப்படுத்துவோம் என்று தோன்றுக்கிறதோ அப்போது அவளை நெருங்கலாம் என்று முடிவோடு இருந்தான்…
மான்சியும் சர்வா முதல் முறை தன்னிடம் அப்படி இருந்தது சரி.. பின் இல்லை எனும் போது ஏன்..? என்று ஒரு இரண்டு நாள் தான் அந்த எண்ணம் எல்லாம்..
பின் தன் கனவு தன் படிப்பு என்று யோசிக்கும் போது இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்து கொண்டு தன் கனவினை நோக்கி அவள் பயணம் இருந்தது..
என்ன ஒன்று இருவரும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்து இருந்தால், இருவருக்கும் நல்லதாக இருந்து இருக்கும்.. என்ன செய்ய… நடப்பதை யாராலும் தடுக்க முடியாது எனும் போது.. இவர்களால் மட்டும் முடியுமா என்ன…?
மான்சி ஏற்கனவே குழப்பத்தில் தத்தளித்து கொண்டு இருக்கும் வேளயில் தான் பத்மாவதி தன் சின்ன மகள் அனிதாவோடு தன் தாய் வீட்டுக்கு வந்தாள்….
அவர்கள் வரும் போது எப்போதும் போல் அனைவரும் அவர் அவர் அறையில் இருக்கும் போது, வைதேகியும், ரேவதியுமே இவர்களை பார்த்து..
“ வா பத்து இப்போ உடம்பு எப்படி இருக்கிறது..?” என்று விசாரித்துக் கொண்டே அனிதாவையும் ஒரு பார்வை பார்த்த வாறு..
“வாம்மா..” என்று சொன்னதோடு சரி.. ஒரு முறைக்கு கூட அவள் உடல் நலத்தை பற்றி விசாரிக்கவில்லை.. அவள் உடலுக்கு என்ன கேடு.. மனது கெட்டு சீரழிந்ததால் தானே உடம்பு கெட்டது என்று எண்ணி விட்டர்களோ என்னவோ..