ஆனால் ஒன்று முன்பு இருந்த அந்த பொலிவு அனிதாவின் முகத்திலும் சரி.. உடம்பிலும் சரி இல்லை.. ஏதோ நோயாளி போல் கழுத்து எலும்பு முன்னுக்கு வந்து கண்கள் சுற்றியும் கருவளையம் படர்ந்து என்னவோ போல் காணப்பட்டாள்.. இருந்தும் அவள் மீது பரிதாபம் எழவில்லை..
பரிதாபப்படும் காரியத்தையா அவள் செய்து இருக்கிறாள் என்று நினைத்து அவளிடம் பேச்சு எல்லாம் ஒரு கடமைக்கு தான் வந்தது…
ஆனால் பத்மாவதியின் சோர்வில் அண்ணிகள் இருவரும் வீட்டு பெண்ணாக அவள் மீது அக்கறை காட்டி பேசினார்கள்…
“என்ன பத்து ஆஸ்பிட்டலில் பார்த்ததோடு இன்னும் சோர்வா தெரியுற..? டாக்டர் சொன்னது போல் மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்குறியா இல்லையா..? என்று கேட்டனர்…
அதற்க்கு பத்மா.. “ம் ..” என்ற பதிலோடு சோர்வாக அங்கு இருந்த ஷோபாவின் மீது சாய்ந்தவளின் ஒய்ந்த தோற்றத்தில் ரேவதி அவசர அவசரமாக அவளுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்து..
“ முதலில் இது குடி..” என்று பத்மாவை குடிக்க வைத்தவர் அனிதாவை பார்த்து..
“ உனக்கும் கொண்டு வரட்டுமா.? என்று கடமைகே என்று கேட்டார்… இதை எல்லாம் அந்த சோர்விலும் பத்மாவதி கவனித்தார் தான்..
ஆனால் அவரால் ஒன்ட்ரும் கேட்க முடியாத நிலையில் தானே அவள் மகள் அவளை வைத்து இருக்கிறாள்…
பத்மாவதியின் சோர்வை பார்த்த வைதேகி.. “ டிபன் எல்லாம் செய்து முடித்து விட்டாங்க்க.. சாப்பிட்டு உன் அறையில் ரெஸ்ட் எடுக்கிறியா பத்மா…” என்று கேட்டார்… இப்போதும் அந்த வீட்டில் பத்மாவதிக்கு என்று தனி அறை இருக்கிறது… தங்கையும், மாப்பிள்ளையோடு வந்து தங்க..
பத்மாவதிக்கு அந்த அறை அவ்வப்போது உபயோகப்படுகிறது தான்.. ஆனால் என்ன ஒன்று… மாப்பிள்ளையோடு தங்க தன் அண்ணங்கள் ஏற்பாடு செய்த அந்த அறை தனியே… வெறுமையில், தன் நிலையை எண்ணி அழுதிட உபயோகமாகிறது….
ஏதோ யோசனையில் இருந்த பத்மாவதி மீண்டும் கேட்கவும் தான் தன்னிலைக்கு திரும்பி அண்ணியின் பேச்சுக்கு ..
“ பரவாயில்லை அண்ணி இப்போ தானே ஜூஸ் குடித்தேன்.. அண்ணங்களை பார்த்துட்டு நான் ரெஸ்ட் எடுக்கிறேன்…” என்று பதில் அளித்தவர் திரும்பி தன் மகளை பார்த்தார்..
அவளோ எப்போதும் போல் தன் பேசியில் மூழ்கி போய் இருந்தவளிடம்… “ நீ வேணா ரெஸ்ட் எடுக்கிறியா…?” என்று கேட்க..
அனிதாவுக்கும் சிறிது படுத்தால் நன்றாக இருக்கும் என்று தான் அவள் உடல் ந்லை அவளுக்கு உணர்த்தியது..
ஆனால் தினம் தினம் வனிதா அவளை அழைத்து.. “ நீ செய்த முட்டாள் தனத்தால், அங்க்த பொம்பளையின் மகளை நான் தினம் தினம் பார்க்க வேண்டி இருக்கிறது..
அதுவும் அந்த சர்வாவோடு அவள் ஜோடி போட்டுக் கொண்டு வருவதை பார்க்க பார்க்க எனக்கு எப்படி இருக்கு தெரியுமா…?
அவளுக்கு என்று போய் வர தனி கார்… கல்யாணம் ஆன அடுத்த நாளே வாங்கி கொடுத்து விட்டான்… ஏதோ படிப்பு வேற படிக்குதாம்..
நல்லா வேற படிப்பா போல… சர்வா எப்போதும் பிசினஸ் பிசினஸ் என்று சுத்தி கொண்டு இருப்பவன்.. இவளுக்கு என்று அவளுக்கு தேவைப்படும் புக்கை தேடி வாங்கி வந்து கொடுக்கிறான்…
அததைங்க எல்லாம் அவ்ஸ்ளிடம் தான் பிடிக்கவில்லை என்பது போல் பேசுவது.. ஆனால் அவள் போன பின்.. பரவாயில்லை நாம என்ன சொன்னாலும் எதிர்த்து பேசுவது இல்லை .. என்று சொல்றவங்க இடையில் என்னையும் ஒரு பார்வை பார்க்கிறாங்க…
நான் நல்லா கேட்டு விட்டுடேன்… அவள் நிலைக்கு இந்த வீட்டில் எல்லாம் கால் எடுத்து வைக்க கூட முடியாது.. அதனால தான் அவள் அடங்கி இருக்கா. நான் எந்த தேவைக்கு அடங்கி இருக்கனும்…?” என்று கேட்டாள்…
அதற்க்கு நம்ம சின்ன அத்தை… “ கால் வைக்க கூட தகுதி இல்லாதவ இந்த வீட்டுக்கு எதற்க்கு கால் எடுத்து வைத்தாள் என்று யோசித்தா நல்லா இருக்கும் என்று எனக்கே ஸ்ல்ல்லிட்டு போறாங்க..
எல்லாம் உன்னால் தான்.. நீ மட்டும் இப்படி மாட்டாது இருந்து இருந்தால், இந்த பேச்சு எல்லாம் நான் கேட்டுட்டு சும்மா இருந்து இருப்பேனா…
முதல்ல அவங்கள பேச விட்டு தான் மாமாங்க இருப்பாங்களா..? எப்போ எல்லாம் மாமா எதிரில் கூட இது போல் பேச்சு பேசுறாங்க.. அவங்க்களுக்கு இந்த தைரியம் எங்கு இருந்து வந்தது எல்லாம் உன்னால..
அதுவும் இல்லாது இந்த வீட்டில் சர்வா வைத்தது தான் சட்டம் என்பது போல்… இபோ அவன் மனைவி மான்சி எனும் போது நாளை பின்ன இந்த வீட்டில் என் அதிகாரம் எந்த அளவுக்கு இனி இருக்கும் என்று கூட தெரியல..
இவ்வளவு கெட்டதிலும் ஒரு நல்லது என்றால், அந்த மான்சி இந்த வீட்டில் ஒரு பெயின் கெஸ்ட் போல் தான் இருக்கா.. அவள் உண்டு அவள் படிப்பு உண்டு…
கீழே வந்தா அவள் சாப்பிடும் வேலையை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இருப்பா.. இவள் தன் படிப்பை முடித்து விட்டு, இது போலான எண்ணம் மாறி தன்னை சுற்றி கவனிக்க ஆரம்பித்து விட்டாள் .. என் நிலை என்ன என்று எனக்கு தெரியல..” என்று வனிதா அனிதாவிடம் இது போலான பேச்சை கேட்டு கேட்டு தான் அவளை இங்கு வர வழைத்து விட்டது..
இது நல்லதிற்க்கா..? கெட்டதிற்க்கா…? என்று தெரியாத நிலையில் அவளின் இரண்டு மாமன்களும் சாப்பிட வந்தனர்..
பத்மாவதியையும்.. அனிதாவையும் பார்த்தவர்கள்.. பத்மாவதியிட எப்போதும் போல் பாசத்துடன்..
“ எப்போ வந்தே பத்து.. இப்போ உடம்பு எப்படி இருக்கு..?” என்று பாசத்துடன் விசாரித்தவர்கள்.. இரு அத்தைகளையும் போல் அனிதாவிடம் போனால் போகிறது என்பது போல் தான்..
“ எப்படி இருக்க…? என்று கடமைக்கு என்று விசாரித்தனர்.. இதையும் மனதில் வேதனை பொங்க தான் பத்மாவதி பார்த்து கொண்டு இருந்தார்…
முன்பு எல்லாம் தான் மட்டும் இங்கு வரும் போது.. “ ஏன் அனிதாவை அழைத்துக் கொண்டு வர மாட்டே..?” என்று பாசத்துடன் கேட்டவர்கள்..
இன்று வந்தவளுக்கு நடத்தும் முறையில் உரிமையுடன்.. “ என்ன…? என்று கேட்க கூட முடியாத நிலையில் தான் அவரை அவள் மகள் வைத்து இருக்கிறாள்…
அனிதாவும் முன் எல்லாம் இங்கு அடிக்கடி எல்லாம் வந்தது கிடையாது தான்.. ஆனால் எப்போதாவது வந்தால், நல்ல உபரிப்பு தான் அவளுக்கு கிடைத்தது..
அதே போல் அத்தைகள் தன் வீட்டுக்கு வந்தால், .. “ என்ன அனி எதுவும் பேச மாட்டேங்குற..” என்று கேட்பார்கள்..
ஆனால் இன்று அவர்கள் தன்னிடம் பேசுவதை தவிர்ப்பதும் அவள் நன்றாகவே உணர்ந்தாள்.. உணர்ந்தவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியாதது போல் தான் அவள் முக பாவம் இருந்தன..
ஆனால் ஒரு வித எதிர் பார்ப்போடு தான் அவள் கண்கள் பேசியிலும் மேல் இருந்து வரும் படிக்கட்டிலும் அவள் பார்வை சென்று சென்று வந்தது..
முதலில் அவளின் மகி அத்தான் டையினிங்க் டேபில் மீது வந்து அமர்ந்தவன்.. பத்மாவதியிடம்.. “ எப்போ அத்தை வந்திங்க எப்படி இருக்கிங்க..” என்று விசாரித்து விட்டு அனிதாவிடமும்.
“ என்ன அனி அதிசயமா வீட்டுக்கு வந்து இருக்க..?” என்று கேட்டவன்.. பின்..
“ உனக்கு போர் அடித்தால், நீ வேணா வனி கிட்டயிடம் பேசிட்டு இறேன்..” என்று சொல்லும் போதே இங்க்கு வைதேகி தன் ஒரவத்தியிடம்..
“ ஆமாம் ஆமாம் இரண்டு குட்டி சுவர்களும் பேசும் ஏத்த இடம் தான் அது..” என்று சொல்ல..
அதற்க்கு ரேவது.. “ நம்ம மகியும் அங்கு தான் இருக்கான்..” என்று சொல்ல ..
“ நான் அவனையும் சேர்த்து தான் சொல்றேன்… இப்போ எல்லாம் வனியி நடவடிக்கை இன்னும் இன்னும் மோசமா தான் ஆகிட்டு வருது… இதோ இந்த நேரம் வர இந்த மகாராணி வந்த பாடு இல்ல… இவனும் அவளை விட்டுட்டு இருக்கான்.. இதே சர்வா இருந்தால்..” என்று ரேவதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…
சர்வாவும் மான்சியும் படியில் இருந்து ஜோடியாக இறங்கி வருவதை மொத்த குடும்பமும் கண் கொட்டாது பார்த்து கொண்டு இருந்தனர்…
பெரும் பாலும் சாப்பிட இருவரும் ஒரு சேர தான் வருவர்.. இந்த வீட்டுக்கு வந்த மறு நாளே இதை சர்வா சொல்லி விட்டான்..
ஆனால் இன்று போல் இந்த அளவு நெருக்கமாக வந்தார்களா? அந்த அகன்ற படிக்கட்டில் சர்வா பக்கத்தில் மான்சி படி இறங்க்கி வர..
அதுவும் அவளுக்கு ஏற்றது போல் சர்வாவும் தன் நீண்ட கால்களை ஒரு ஒரு படியாக எடுத்து வைத்து கொண்டு …
மான்சியிடம் மெல்ல பேசிக் கொண்டு வருவதும்… மான்சி சர்வாவின் முகம் பார்த்து பதில் சொல்ல வேண்டி… கொஞ்சம் நிமிர்ந்து ஏதோ சொன்ன வாறு வந்த அந்த காட்சியை ஒரு சிலர் ரசித்தனர்கள்க் என்றால், ஒரு சிலருக்கு வயற்றில் அமிலம் சுரக்காத குறையாக வடிறு எரிந்து போய் விட்டது… இதை பார்த்த அனிதா என்ன நினைக்கிறாள் என்ன செய்ய போகிறாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்….