அனிதா தன் அக்கா எப்போது பார்த்தாலும் மான்சியை பற்றியே பேசுவதை கேட்டவளுக்கு, அப்படி இங்கு என்ன இவள் செய்கிறாள் என்று பார்க்க தான் இங்கு வந்தது..
வந்தவளுக்கு கொடுக்க பட்ட மரியாதையை பற்றி எல்லாம் அவள் கண்டு கொள்ளவில்லை.. இன்னும் கேட்டால் அதை யோசிக்க கூட இல்லை என்று சொல்லலாம்…
அவள் மனது முழுவதுமே மான்சி எப்படி இங்கு இருக்கிறாள்… என்று அறிந்து கொள்ளவே வந்தாள்… அப்போதே அப்படி இருப்பாள்… இப்போது எப்படி இங்கு தாக்கு பிடிக்கிறாள் என்று..
சர்வேஷ்வரனிடம் அதிகம் பழக்கம் கிடையாது.. ஆனால் அவனை பற்றி அனிதாவுக்கு நன்கு தெரியும்… ஆம் சர்வேஷ்வரன் அனிதாவை பற்றி தெரிந்ததை விட இவளுக்கு தெரியும்..
அனிதாவின் கொள்கை வாழ்க்கை வாழ்வதற்க்கே… ஆனால் சர்வேஷ்வரன்… வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவன்…
இருவருக்கும் சிறு வயது முதலே திருமண பேச்சு இருக்கிறது.. சர்வா பார்க்க அழகாக தான் இருக்கிறான்.. பணம் இருக்கிறது.. சமூகத்திலும் நல்ல மதிப்பு.. அந்த மதிப்பு தான் அனிதாவுக்கு பிரச்சனை…
அதற்க்கு பங்கம் வருவது போல் நடந்தால், அவன் சும்மா இருக்க மாட்டான்… அப்படி இருக்க… தனக்கும் அவனுக்கும் பொருந்துமா.. இதை நினைத்து முதலில் இந்த திருமணத்தை வேண்டாம் என்று தான் தன் சகோதரியிடம் சொன்னாள்..
ஆனால் வனிதா அதற்க்கு ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டாள் …
“ என்ன நினைத்து இருக்க நீ… நமக்கு அப்பா சரியில்ல.. அந்த பொம்பளை பேச்சை கேட்டு அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…” என்று வனிதா சொன்னதற்க்கு,
அனிதா…” என்ன செய்ய முடியும்..? என்ன சொத்து எல்லாம் அந்த பொம்பளை பேரில் எழுதி விடுவாரா..? என்ன..? ஒரு சில சொத்துக்கள் பரம்பரை சொத்து.. . அதில் நம்மளை தவிர யாருக்கும் உரிமை கிடையாது…” என்ற பேச்சில்..
வனிதாவுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது அவள் பேச்சால்…
“ நீ உண்மையில் படிச்சியா … இல்ல படிக்கிற என்ற பெயரில் ஊரை சுத்திட்டு இருந்தியா…? ஒரு சில சொத்துக்கள் பரம்பரை சொத்து… அதில் நம்ம அப்பா எதுவும் செய்ய முடியாது தான்…
ஆனால் சர்வேஷ்வரன் செய்ய முடியும்.. பேத்தி என்ற முறையில் நமக்கு உரிமை இருப்பது போல்.. பெண் வயிற்று மகனான பேரனுக்கு இருக்கு.. அதோட நம்ம பரம்பரை சொத்தோட அப்பா அவர் சம்பாதித்தது தான் அதிகம்.. அதில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. இப்போ புரியுதா நம்ம நிலை..
அதோட என் மாமியார் வீட்டில் கூட சர்வாவை தான் தலை மீது தூக்கி வைத்து ஆடுவாங்க… அதனால அவன் பெண்டாடிக்கு தான் தன்னால் மரியாதை அங்கு கூடும்…
வேறு ஒரு பெண் வந்தால், நான் அங்கு டம்மி ஆகிடுவேன்… அதே நீயா இருந்தால் நமக்குள் ஒரு பிரச்சனையும் வராது… நான் மட்டும் என்ன மகியை விருப்ப பட்டா கல்யாணம் செய்தேன்…
நம்ம தகுதியை தக்க வைத்து கொள்ள ஒரு சிலதை நாம் செய்து தான் ஆக வேண்டும்…” என்று தங்கைக்கு அந்த அளவுக்கு விளக்க கொடுத்து..
பின்.. “ இப்போ நான் அந்த வீட்டுக்கு போனதால என் சுதந்திரம் என்ன கெட்டு விட்டது.. இப்போதும் நான் விரும்பும் உடை தான்.. நான் வெளியில் போகனும் என்று நினைத்தால், என்னை தடுக்க முடியாது..
நான் கல்யாணத்திற்க்கு முன் எப்படி இருந்தேனோ அதே வாழ்க்கையை தான் லீட் செய்கிறேன்..” என்ற வனிதாவின் கடைசி பேச்சில் தான் அனிதா சம்மதம் சொல்ல ஏதூவாக அமைந்தது…
அடுத்து அடுத்து அவள் கொஞ்சம் கூட நினைத்து பாராதது… தன் உடல் நிலை தேரினால் போதும் என்று வீட்டில் அடைந்து கிடக்கும் போது தான் வனிதா பேசியில்..
“ மான்சி இங்கு இப்படி இருக்கா..அப்படி இருக்கா.. என்று சரி எப்படி தான் இருக்கா என்று பார்த்து விடுவோம் என்று நினைத்து தான் வந்தது…
வந்ததில் நன்றாக தான் இருக்கிறாள் என்பதை அவள் கண் கூடாக கண்டும் விட்டாள்… அனைவரும் பார்க்க இப்படி மனைவியின் தோள் உரச வருவது சர்வவேஷ்வரனா…? என்று அதிசயமாக தான் அனிதா அவர்கள் இருவரையும் பார்த்தது..
பார்த்ததில் தான் அப்படி தெரிந்தது… பேச்சு என்ன என்று தான் யாருக்கும் தெரியாதே…
சர்வேஷ்வரன் மான்சியிடம்.. “ நான் தான் உன் படிப்புக்கு தேவையான புக் எல்லாம் வாங்கி கொடுத்து விட்டேனே.. இன்னும் என்ன நூலகத்தில் போய் படிப்பது.. இன்னும் புக் தேவை என்றாலும் சொல்…. நான் வாங்கி தருகிறேன்…” என்ற அவன் நீண்ட பேச்சுக்கு…
மான்சியிடம் இருந்து… “ நூலகமே போதும்..” என்ற பதில் ரத்தின சுருக்கமாக தான் அவள் வாயில் இருந்து விழுந்தன…
ஆம் சர்வேஷ்வரன் மான்சியின் படிப்புக்கு தேவையான புத்தகங்களை தான் அண்ணன் மகியின் நண்பன் ஐ.ஏ. எஸ் ஆகா இருப்பவரிடம் கேட்டு வாங்கியதோடு, அவரிடம் கேட்டு என்ன என்ன புத்தகம் தேவைப்படும் என்ற விவரத்தையும் கேட்டு வாங்கி கொடுத்து விட்டான்..
இதுவும் மகியிடம் இருந்து வனிதா அறிந்தவள்… அந்த பொறுமலையும் தன் தங்கையிடம் கொட்டி தீர்த்து விட்டாள்..
அனைவரும் பார்க்க சர்வா மான்சியை அணைக்கவும் இல்லை.. மிக நெருக்கத்திலும் இல்லை.. ஆனால் அவர்கள் இருவரும் ஒரு சேர நடந்து வரும் பாங்கு பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது…
பத்மா அவர்கள் இருவரும் படிக்கட்டில் முதல் அடி எடுத்து வைத்தில் இருந்து அவர் கண் அங்கு இங்கு அசைய வில்லை.. பார்வை முழுவதும் அவர்களிடம் மட்டுமே நிலைத்து இருந்தது..
முன் இதோ போல் தன் மருமகன் நடந்து வருவதை ஆசையோடு பார்த்ததும் நினைவில் வந்தது.. அப்போது தான் தன் மனதில் என்ன பெருமிதன் இவன் என் மருமகன் என்று.. ஆனால் இப்போது ஒரு வெற்று பார்வை தான் அவர்கள் மீது அவரால் செலுத்த முடிந்தது…
சர்வா கூட தன்னை நினைத்து பார்க்கவில்லையே … தன் மகளை தான் மணந்து இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை…
ஆனால் அந்த பெண்ணை மணக்காது இருந்து இருக்கலாமே.. அவன் மானம் காக்கா என்று அவன் ஆயிரம் சொன்னாலுமே,, அந்த ஆயிரத்தில் ஒரு மூலையிலாவது அவன் தன் நினைவு வரவே இல்லையா…
எப்படி இனி என் தாய் வீடு என்று இங்கு நிம்மதியாக வருவேன்… இதோ இந்த பெண் முகத்தை பார்த்தாலே, எனக்கு வேறு ஏதோ நியாபகம் தானே வருக்கிறது…
அதற்க்கு என்று நான் தாய் வீடு வராது இருக்க முடியுமா….? என்று மனதில் வெம்பி கொண்டு இருக்கும் போதே, சர்வா எப்போதும் போல் பத்மாவதியை பார்த்தவன்..
அதே அன்பு கலந்த பாசத்துடன்.. “ அப்படி அத்தை இருக்கிங்க..? இப்போ உடம்புக்கு பரவாயில்லை தானே.. நானே உங்க வீட்டுக்கு வரனும் என்று தான் நினைத்தேன் அத்தை ..” என்று பேசியவன்..
அனிதாவின் பக்கம் பார்வையை செலுத்தி.. “ இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு அனிதா… பரவாயில்லை தானே..” என்று சாதாரணமாக விசாரித்து விட்டு, தன் வாயையே பார்த்து நின்ற மான்சியிடம்…
“ என்ன என்னையே பார்த்துட்டு இருந்தா உன் வயிறு நிறைந்து விடுமா என்ன..? சாப்பிட்டு… நீயும் போகனும் தானே..” என்று சொல்லி விட்டு மனைவியை பக்கத்தில் அமர வைத்து சாப்பிட ஆரம்பித்தவனை அனைவரும் அதிசயமாக தான் பார்த்தனர்..
சர்வாவின் இந்த செயல் வைதேகியை ஒரு விதத்தில் அமைதி படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்..
பத்மா மட்டும் வந்து இருந்தால், பரவாயில்லை கூடவே அனிதாவை பார்த்ததும், தனக்கே இந்த அளவுக்கு கோபம் வருக்கிறதே சர்வாவுக்கு இதை நினைத்து பயப்பட.. அந்த பயமே தேவையில்லாத ஒன்று போல் தான் சர்வாவின் செயல்கள் இருந்தது..
பின்..” ஒகே அத்தை.. பை அனிதா..” என்று சொல்லி எப்போதும் போல் தன் அலுவலகத்திற்க்கு கிளம்பினான்..
என்ன ஒன்று இன்று மான்சி தனக்கு முன் போகிறாளா..? பின் போகிறாளா..? என்று கண்டு கொள்ளாதவன்… அன்று அவளுக்கு என்று ஏற்பாடு செய்து இருந்த காரில் ஏற்றி விட்டு தான் தன் அலுவலகத்திற்க்கு சென்றது..
அனிதாவுக்கு சர்வேஷ்வரனின் இந்த செயல் ஒரு வகையில் ஏமாற்றத்தை தான் அளித்தது.. தன்னை கோபமாக என்ன ஒரு கோபமான பார்வை கூட தன் மீது செலுத்தது.. நீ எல்லாம் ஒரு விசயமே இல்லை என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது அவனின் நடவடிக்கை…
பத்மாவதிக்கோ தன் மருமகன் தன்னை எப்போதும் போல் பாசத்துடன் விசாரித்தது மகிழ்ச்சி தான்.. ஆனால் அவரும் அவனிடம் ஏதோ ஒன்று எதிர் பார்த்து ஏமாந்தது போல் உணர்ந்தார்…
பத்மாவதியும் சரி.. மான்சியும் சரி இருவரும் சாப்பிடும் போது ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க தவிர்த்தனர்…
இதை பற்றி தான் மான்சி காரில் போகும் போது, யோசித்து கொண்டு இருந்தது.. இது போல் எத்தனை நாளுக்கு தவிர்க்க முடியும் என்று…
நூலகத்தில் இருக்கும் நேரம் முழுவதும் அவளாள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை… அடுத்த மாதம் அவளுக்கு தேர்வு.. இருந்தும் அவளாள் படிப்பில் முழு ஈடுபாடு செலுத்தி படிக்க முடியவில்லை…
பத்மாவை பார்த்ததில் அவள் மனதில் தன்னால் ஒரு குற்றவுணர்ச்சி.. ஒரு பெண்ணாக அவர் நிலையை அவளாள் உணர முடிந்தது…
அடுத்து அவளுக்கு இப்பொது எல்லாம் வெவ்வேறு எண்ணில் இருந்து அவள் பேசிக்கு வரும் அழைப்புகள்.. இப்போது அதை சாதாரணமாக அவளாள் எடுத்துக் கொள்ள முடியவில்லை..
முன் வந்த அழைப்பு ஏதோ என் எண்ணை தெரிந்து கொண்டு தன்னிடம் விளையாட பார்க்கிறார்கள் என்று நினைத்தவளுக்கு.. இப்போது எல்லாம் வேறு ஏதாவது இருக்குமோ என்ற எண்ணம்..
நவீன் கூட பேசியில் தன் குரலை கேட்ட பின்.. “என்ன அக்கா குரல் டல் அடிக்குது.. மாமாவுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா…?
ஆனால் மாமா என் கிட்ட பேசும் போது நல்ல மாதிரி தானே பேசினார்…” என்ற அவன் பேச்சில்..
“ என்ன மாமா உன் கிட்ட பேசுறாரா..? என்று மான்சி அதிர்ந்து போய் தான் கேட்டாள்.. இந்த செய்தி அவளுக்கு புதியது..
“ என் கிட்ட நீ சொல்லவே இல்ல..?” என்று மான்சி விசாரித்ததில்..
“ என் கிட்ட பேசுவதை பத்தி மாமா உன் கிட்ட சொல்வது இல்லையா…? “ என்று இப்போது அதிர்வது நவீன் முறையானது..
பின்.. “ அக்கா உனக்கும் மாமாவுக்கும் எல்லாம் ஒகே தானே அக்கா.. என் கிட்ட ஏதாவது மறைக்கிறியா…?” என்று தன் குரல் மாறுப்பாட்டிலும், சர்வேஷ்வரம் அவனனிடம் பெசுவதை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிந்ததும் இருவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என்று நவீன் பயப்படுவது அவனின் பதட்டமான குரலில் இருந்தே மான்சிக்கு புரிந்தது..
அவனுக்கும் பொது தேர்வு நெருங்கு கிறது.. அடுத்து நீட்டுக்கு வேறு அவன் தன்னை தயார் படுத்தி கொள்ள வேண்டும் இந்த சமயம்.. தனக்கு வரும் பேசியில் அழைப்பை சொல்லி மேலும் அவனை குழப்பி அடிக்க வேண்டாம் என்று நினைத்த மான்சி…
தன் குரலை சாதாரணமாக மாற்றி கொண்ட மான்சி..
“ அது எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல நவீன்.. நீ ஏன் இந்த அளவுக்கு டென்ஷன் ஆகுற… நான் உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. பதட்டம் பயம் இது வந்தால் நம்மால் ஒழுங்கா சிந்திக்க முடியாது என்று…
நானும் உன் மாமாவும் நல்ல இருக்கேன்.. நான் என் படிப்பை பத்தி யோசிச்சிட்டு இருக்கேன் டா அதனால் தான் உன் மாமாவிடம் கூட ஒழுங்க பேச முடிய மாட்டேங்குது வேரு ஒரு பிரச்சனையும் இல்ல..
என்னை பத்தி நினச்சிட்டு நீ உன் படிப்பை கோட்டை விட்டு விடாதே நவீன் நான் சொல்றது உனக்கு புரியுதா…?”
தன்னை பற்றிய கவலையில், அவன் தன் கனவை சிதைத்து கொள்வானோ என்ற பயத்தில் தன் தம்பியிடம் மான்சி பட பட என்று பேசினாள்…