“ அக்கா நான் எப்போதும் என் கனவை மறக்க மாட்டேன்.. அதே தான் நான் உனக்கும் சொல்றேன்.. நீயும் உன் படிப்பை பார் அக்கா..” என்று நவீன் சொன்னதுமே தன் படிப்பில் முழு கவனத்தை சொலுத்த ஆரம்பித்து விட்டாள்..
நூலகத்தில் இருந்து கோச்சிங் க்ளாஸ் முடித்து வீட்டுக்கு கிளம்பும் போது அவர்கள் எங்கு இருப்பார்கள்.. என்ற யோசனையில் வீட்டுக்கு கிளம்பும் போது திரும்பவும் அவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த வண்ணம் இருந்தது…
ஆம் வந்த வண்ணம் தான்… இது வரை ஒரு முறை அழைத்தால், திரும்ப அழைக்க குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும்… ஆனால் இம்முறை தொடர்ந்து.. இது அவளுக்கு சரியாக படவில்லை…
தன் தம்பிக்கு சொன்ன நிதானமாக யோசி… அப்போது தான் தெளிவு கிடைக்கும் … அதே போல் யோசித்தவளுக்கு,…
எப்போதில் இருந்து தனக்கு இது போல் அழைப்புகள் வருக்கிறது… திருமணத்திற்க்கு முன்.. இது போல் அழைப்பு வந்தது கிடையாது.. பின்… தன்னை சுற்றி ஏதோ நடப்பது போல் அவளுக்கு சந்தேகம் வந்த அடுத்த நொடி மான்சி அவசரமாக கார் ஓட்டுனரிடம்..
“ அண்ணா காரை நிறுத்துங்க… “ என்று சொல்ல.. மான்சி சொல்லுக்கு ஏற்ப அவரும் காரை நிறுத்தி விட்டார்..
மான்சி காரில் இருந்து இறங்குவதை பார்த்த அந்த ஓட்டுனர்.. “ மேடம் எங்கு போவது என்றாலும் காரிலே போகலாம் மேடம்..” என்று மான்சி காரில் இருந்து இறங்குவதற்க்குள் சொன்னார்..
ஆனாலும் மான்சி அவர் பேச்சை கேட்காது காரை விட்டு இறங்கியவள்.. “ பரவாயில்லை அண்ணா… நான் போகும் இடம் இங்கு இருந்து பக்கம் தான்..” என்று சொன்னவளிடம்..
“ அப்போ நான் இங்கேயே வெயிட் செய்யட்டுமா மேடம்..” என்று கேட்டவரின் குரலில் ஒரு பதட்டம் தென்பட்டது..
“ இல்ல அண்ணா நீங்க வெயிட் பண்ண வேண்டாம்… நான் வர லேட் ஆகும்.. நான் ஊபரோ ஒலாவோ பிடித்து வந்து விடுவேன்..” என்று சொல்லி விட்டு சென்றவளின் பேச்சை கேட்பதை தவிர வேறு வழி இல்லாது போனது அந்த ஓட்டுனருக்கு..
ஆனாலும் எஜமான் விசுவாசத்தோடு சர்வேஷ்வரனுக்கு அழைத்து… சொல்லி விட்டு தான் அங்கிருந்து அவர் காரை எடுத்தார்…
மான்சி காரை விட்டு இறங்கியவள் சென்ற இடம் டிடெக்டீவ் ஏஜென்ஸி… அந்த ஏஜென்ஸியை பற்றி அவள் முன் பின் அறிந்தது இல்லை.. நடந்து வந்தவள் கூகுல் உபயோகத்தால் கிடைத்த முகவரிக்கு வந்தவள்…
அங்கு இருந்தவரிடம் தான் எதற்க்கு வந்தேன் என்ற விசயமான… “ எனக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த வண்ணம் இருக்கிறது.. இது சாதாரணமாக ஒரு பெண் என்ற முறையில் எனக்கு வருதா..?
இல்லை இதில் வேறு ஏதாவது மோட்டீவ் இருக்கா என்று தெரியல..” என்ற சொன்ன மான்சியிடம்..
அந்த டிடெக்டீவாளர் மிக தன்மையாகவே…” ஏன் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வந்தது ..?” என்ற அவரின் கேள்விக்கு மான்சி..
“ ஏன்னா இது போலான அழைப்பு என் திருமணத்திற்க்கு பின் தான் எனக்கு வருகிறது..” என்று அனைத்தையும் முழு விவரத்துடன் சொன்ன மான்சி…
தான் யார் என்றும் தன்னோடான திருமணம் யாரோடு என்பதை சொல்லாது தன் பிரச்சனை மட்டும் சொன்னவளிடம் ..
மான்சியின் பேசியை வாங்கி அதில் ஒரு சிலதை பொருத்தும் முன்.. “ உங்க பேசி கண்காணிப்பதில் உங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லையே.. “ என்று கேட்டதற்கு மான்சியிடம் இருந்து உடனே..
“ இல்லை தாரளமாக ..’ என்று தன் ஒப்புதலை சொன்ன பின் அவர் மான்சியில் பேசியில் ஒரு சிலதை வைத்த பின் திரும்பவும் பேசியை மான்சியிடம் ஒப்படைத்து விட்டு, மான்சியை வழி அனுப்பிய பின் அவர் செய்த முதல் வேலை சூர்ய நாரயணனை அழைத்தது தான்..
மான்சி அவரிடம் தான் யார் என்று தெரியப்படுத்த வில்லை என்றாலும், சூர்ய நாரயணன் கொடுக்கும் வேலையை செய்து கொடுக்கும் அவருக்கு மான்சியை நன்கு தெரிந்து தான் இருந்தது.. மான்சியின் திருமணம் சர்வேஷ்வரோடானது வரை…
கூடவே மான்சி தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதை தெரிந்த பின், அவரும் மான்சியை தெரிந்தது போல் காட்டி கொள்ளாது பேசினாலும், அவளுக்கு உண்டான மரியாதை கொடுத்து தான் பேசி வழி அனுப்பி வைத்தார்..
பின் சூர்ய நாரயணனிடம் சொல்லலாமா என்று ஒரு நிமிடம் யோசித்தார் தான்.. அவரை பற்றி அனைத்தும் தெரிந்த அவர்.. இது சொல்வது தான் நல்லது என்று நினைத்து பேசியில் அழைத்து சொல்லி விட்டார்….
தொழில் விசயமாக பாம்பாயில் இருந்த சூர்ய நாரயணன் இது தெரிந்ததில் இருந்து பயம் கூடியது..
தான் சென்னை போவதற்குள் மான்சி ஏதாவது பிரச்சனையில் மாட்டி கொள்ள போகிறாள் என்று நினைத்து, தன் மருமகன் சர்வேஷ்வரை அழைத்து மான்சி டிடெடீவிடம் சென்றது… சென்ற விசயமும் சொன்னவர்..
கூடவே ..” பார்த்து சர்வா.. நான் சென்னை வர மூன்று நாள் ஆகும்…” என்று சொன்னதோடு விடாது…
“மான்சிக்கு இரவு கூட இது போல் அழைப்பு வந்து இருக்கு.. நீ இதை எப்படி கவனியாது விட்டு விட்ட..?” என்ற சூர்ய நாரயணன் கேள்வியில் சர்வேஷ்வருக்கு சுர் என்று கோபம் ஏறியது தான் ..
இருந்தும் அவரின் வயது.. அவரின் ஸ்தானத்தை கருத்தில் கொண்டு..
“ மாமா மான்சி என் மனைவி .. அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா.. அதன் முதல் பாதிப்பு எனக்கு தான்.. ஏன் என்றால் நான் அவளுக்கு ஊர் அறிய தாலி கட்டி இருக்கேன்.. “ என்று சொல்லி விட்டான்..
என்ன தான் தன் தாய் மாமன்… தனக்கு தொழில் கற்று கொடுத்த குரு என்று ஆயிரம் நினைத்தாலும், அவர் மான்சியை பற்றி பேசும் போது எல்லாம் குறிப்பாக மான்சிக்கு கவலை படும் போது எல்லாம்..
இது மான்சி மீது இருக்கும் அன்பாலா..? இல்லை துளசி மீது இருக்கும் மயக்கத்தாலா…? என்ற எண்ணம் அவனுக்கு தன்னால் வந்து விடுகிறது…
கூடவே மான்சி மீது பாசத்தோடு அந்த பொம்பளை மீது இருக்கும் மயக்கத்தால் தான் இருக்கும்… ஏன் என்றால் இங்கு சொந்த தன் மகள் மீது இல்லாத பாசம்.. அக்கறை எப்படி யாரோவோட மகள் மீது வந்து விடும் என்ற எண்ணம் அவனுக்கு..
மாறும் ஒரு நாள் கண்டிப்பாக அவன் நினைப்பு அனைத்தும் மாறும்…. மாறும் காலமும் அதிக தூரம் இல்லை என்று தெரியாது, கோபத்தில் தன் மாமாவிடம் பேசி விட்டான்..
ஒரு நிமிடம் சூர்ய நாரயணன் பக்கம் இருந்து எந்த சத்தமும் இல்லை.. தான் பேசியது அதிகமோ என்று நினைத்த சர்வேஷ்வரன் தான்…
“ மாமா… மாமா…” என்ற அவன் அழைப்பில்…
“ ம் இருக்கேன் சர்வா..” என்ற அவரின் இருக்கேன் என்ற பதில் எதை குறிக்கிறது என்று தெரியாது சர்வேஷ்வரன் குழம்பி போனான்…
பின் சூர்ய நாரயணன் பேசிய .. “ தெரியும் சர்வா… உன்னை சார்ந்தவங்களுக்கு எதுவும் ஆக நீ விட மாட்ட என்பது…
அந்த நம்பிக்கையில் தான் அவ்வளவு சிக்கல் உள்ள உறவு முறையிலும், நான் உனக்கு மான்சியை கட்டி வைத்தேன்.. இல்லை என்றால் நீ என்ன தான் சொன்னாலும் நான் இந்த திருமணத்திற்க்கு ஒத்து கொண்டு இருக்க மாட்டேன்…” என்ற அவரின் பேச்சில் சர்வாவின் குறைந்திருந்த கோபம்.. சுர் என்று ஏறியதில்..
“ சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்… அதே நம்பிக்கையை இப்போதும் வைங்க நான் எல்லாம் பார்த்து கொள்கிறேன்..” என்று சொல்லி விட்டு பேசியை அணைத்தவன்… வீட்டை நோக்கி சென்றான்…
அவன் வீடு வந்த நேரம் அனைவரும் ஹாலில் காத்து கொண்டு இருந்தனர்…
இது வரை குழு குழுவாக பிரிந்து பேசிக் கொண்டு இருந்த.. அதாவது அனிதா.. வனிதா.. பத்மாவதியோடு அவரின் இரண்டு அண்ணிகள்..
சர்வாவின் அப்பாவோடு .. அவனின் பெரியப்பா மகி என்று அவர் அவர் பேசிக் கொண்டு இருக்க..
சர்வேஷ்வரனை பார்த்ததும்.. இது வரை மெல்ல தன் தங்கை அனிதாவின் காதில் மட்டும்…
“ அவள் என்னவோ இன்று ட்ரைவரை அனுப்பிட்டு எங்கோ போய் இருக்கா போல எங்கு போய் இருப்பா…?” என்று மெல்ல கிசு கிசுக்க..
அனிதாவுக்கு இது என்ன.. “ ஏதாவது பர்சனல் வேலை இருக்கும்.. இது என்ன பேச்சு என்று கேட்டாள்…
“ இல்ல இங்கு வந்ததில் இருந்து இது போல் நடந்தது இல்ல.. அதான்..” என்று சொன்ன வனிதாவின் பேச்சை அனிதா நம்பும் படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
ஏன் என்றால் அவளுக்கு உடல் நிலை சரியில்லாத போதே வீட்டில் அடைந்து கிடப்பது நரக வேதனையாக இருந்தது..
இவள் தனிப்பட்டு வெளியில் போக மாட்டாள் என்றால் அது எப்படி என்று தான் நினைத்தாள்..
அந்த நேரத்தில் தான் சர்வேஷ்வரன் வீட்டுக்குள் நுழைந்தது..
இப்போது வனிதா யாரும் கேட்காத வண்ணம் பேசிய பேச்சை அனைவரும் கேட்கும் படி..
“ அத்தை உங்க கிட்டவாவது உங்க மருமகள் எங்கு போனேன் என்று சொல்லிட்டு போனாளா..? என்ற கே வனிதாவின் கேள்விக்கு பதி சர்வேஷ்வரனிடம் இருந்து வந்தது…
“ மாமியாரோடு கணவனிடம் சொன்னால் நல்லது என்று என் கிட்ட சொன்னா வனி…” என்று சொன்ன சர்வா.. பின் தன் அண்ணன் மகேஷ்வரனை பார்த்து..
“ மகி உன் கிட்ட வனி சொல்லிட்டு போறா..? என்று கேட்டுக் கொண்டே வனியையும் ஒரு பார்வை பார்த்து கொண்டு மாடியில் நின்று கோன்டு இருந்த மான்சியின் பார்வை மொத்தமும் வனிதா அனிதா மேலேயே நிலைப்பெற்று இருந்தது..
தனக்கு வரும் பேசிக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இருக்குமோ என்று..
ஆனால் டிடெக்டீவ் சொன்ன தகவளின் படி, இதை செய்தவரின் நபர் இவர் என்று கை காட்டிய இடம் யாருமே எதிர் பார்க்காத நபராக இருந்தது…