சூர்ய நாரயணன் தன் வேலை முடிந்து சென்னை வர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தன் வேலையை பாதியிலேயே விட்டு விட்டு அவசர அவசராமக சென்னை விமான நிலையத்தில் இறங்க்கியவர்… நேராக தன் வீடு செல்லாது, சர்வேஷ்வரனின் அலுவலகத்திற்க்கு சென்று விட்டார்…
அன்று அந்த நேரத்தில் சர்வேஷ்வரன் தன் மாமாவை அங்கு எதிர் பார்க்கவில்லை … அவனுக்குமே மாமா சென்ற வேலை முதல்.. அது முடியும் நேரம் வரை அனைத்துமே தெரிந்து இருந்த நிலையில்.
இப்படி தன் வேலையை கூட பாதியில் விட்டு சென்னை வந்து இருக்கிறார் என்றால், அது இவர் மான்சி மீது வைத்து இருக்கும் அக்கறை.. அன்பு ஏதோ ஒன்று தான் காரணம் என்பது சர்வேஷ்வரருக்கு புரித்து தான் இருந்தது…
ஆனால் சர்வா எப்போதும் போல் இவருக்கு பெத்த பெண்ணோடு அந்த பொம்பளையின் பெண் மீது தான் பாசம் அதிகம் என்று நினைக்க தோன்றவில்லை..
காரணம் அவனுமே அதே நிலையில் தான் இருந்தான்.. இரண்டு நாள் முன் தன் மனைவி தன்னிடம் சொல்லாது டிடெட்டீவ் ஏஜென்ஸியை நாடியது பிடிக்காது தான் போனது..
அந்த கோபத்தோடு தன் மாமன் தன்னை அழைத்து பேசிய பேச்சில், இன்னும் அவன் கோபம் கூடி தான் தன் வீடு சென்றான்..
ஆனால் அங்கு சென்ற பின் மான்சி சொன்ன என் சந்தேகமே உன் வீடு ஆட்கள் எனும் போது, நான் எப்படி …? உன்னிடம் சொல்வேன்.. என்றது அவனுக்கு ஏற்கும் படி இருந்ததால், அவன் கோபம் கொஞ்சம் தணிந்தது என்று தான் சொல்ல வேண்டும்..
தன் மனைவி தன்னிடம் சொன்ன விசயத்தில் இது எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை என்று சொன்னாலுமே, அவன் மனது லேசாக இடர தான் செய்தது..
ஒன்று வீடு என்பது ஒரு பாதுகாப்பு என்று தானே சொல்ல வேண்டும்.. ஆனால் மான்சி தனக்கு வந்த அழைப்பு வீட்டு ஆட்கள் செய்து இருப்பார்களோ எனும் சந்தேகப்படுகிறாள் என்றால், அவள் எது போலான சூழ்நிலையில் அவள் இங்கு இருக்கிறாள் என்பது அவனுக்கு புரியவே செய்தது..
கூடவே அவள் படிப்புக்கு மனது அமைதியாக இருப்பது தானே முக்கியம், இது போல் இருந்தால் அவள் எப்படி வெற்றி பெறுவாள்.. என்று யோசனையுடன் தான் அவனின் இரண்டு நாளும் கழிந்தது..
எப்போதும் தங்கள் அறையில் இருக்கும் போது அவள் தன்னை பார்க்கிறாளா..? என்று தான் சர்வேஷ்வரன் அவ்வப்போது மான்சியை தன் வேலையின் நடு நடுவே நிமிர்ந்து பார்ப்பது..
ஆனால் இந்த இரண்டு நாளும் அவள் சாதரணமாக இருக்கிறாளா..? இல்லை டிஸ்டபண்ஸா இருக்கிறாளா..? என்று அறிந்து கொள்ள அவ்வப்போது அவளை நிமிர்ந்து பார்க்கும் போது எல்லாம் அவள் படித்து கொண்டு இருப்பதை பார்த்த பின் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்த பின் தான் …அவனும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்..
அந்த இரண்டு நாளிலும் அழைப்பு வந்தது… டிடெக்டீவ் சொன்னது போல் மான்சி இரண்டு முறை ஏற்றாள் என்றால், மூன்று முறை சர்வேஷ்வரன் ஏற்றான்.. ஆனால் பேசாது அமைதி காத்தான்..
பேசியில் அழைத்தவர்களும் மான்சி சொன்னது போல் எதுவும் பேசாது சிறிது நேரம் கழித்து பேசி அணையவும்..
மான்சி சொன்னது அவனுக்கு ஊர்ஜிதம் ஆகியது.. அதாவது இவள் பெயர் கெடுக்க தான் இந்த வேலை என்பது.. ஆனால் அது யார்..?
இன்று தெரிய தான் இன்று அலுவலகம் எப்போதையும் விட நேரத்துக்கு வந்தது.. தான் வந்த உடன் மாமாவும் வரவும்.. அவரிடம் இதை பற்றி எதுவும் பேசாது சாதரண பேச்சு வார்த்தைகயாக..
“ ப்ரைஷ் பண்ணிட்டு வாங்க.. நான் காபி வர வழைக்கிறேன்..” என்று தனக்கு என்று இருந்த ஒய்வு அறைக்கு சூர்ய நாரயணனை அனுப்பியவன்..
அவரிடம் சொன்னது போல் காபியை வர வழைத்தான்.. தனக்கும் சேர்த்தே…
சூர்ய நாரயணனும்.. பரவாயில்லை என்று ஒரு பேச்சுக்கு கூட சொல்லாது சர்வாவின் ஓய்வு அறைக்கு சென்று, தன்னை சுத்தப்படுத்தி வெளி வந்தவரின் முகம் அப்போது தான் கொஞ்சம் தெளிந்தது போல் காணப்பட்டது..
சூர்ய நாரயணன் வெளி வந்த உடன் அவர் பக்கம் ஒரு காபி கப்பை நகர்த்தியவன்.. தனது எடுத்து பருகி கொண்டு இருந்தவனின் யோசனை இங்கு இல்லை என்பது போல் புருவ மத்தியில் ஒரு சுழிப்புடனே காணப்பட்டான்…
சூர்ய நாரயணனும் சர்வாவை பார்த்து கொண்டே காபியை பருகினாரே தவிர வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை..
சிறிது நேரம் கடந்த நிலையில் தான் சர்வா சூர்ய நாரயணன் தன்னையே பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதையே கவனித்தான்..
அவரின் பார்வைக்கு சர்வேஷ்வரன்…
“ என்ன மாமா ..?” என்ற கேள்விக்கு, முதலில் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல நினைத்தார்.. பின் சிறிது யோசித்தவர்..
“ உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா சர்வா..?” என்ற கேள்விக்கு சர்வேஷ்வரன்..
“ எனக்கு இல்ல மான்சிக்கு இருக்கு…” என்றவனின் பதில் சூர்ய நாரயணன் பதட்டம் கொள்ள செய்தது…
“ யார் மீது..?” என்று கேட்ட கேள்விக்கும் சர்வேஷ்வரன்..
“ உங்க இரண்டு மகள் மீதாம்..” என்ற பதிலில் சூர்ய நாரயணன் அமைதி காக்கா..
“ என்ன மாமா சைலண்டா ஆகிட்டிங்க.. அப்போ நீங்களும் அவங்களையே தான் நினைச்சிங்களா..” என்ற கேள்விக்கு, சூர்ய நாரயணன் எதுவும் பேசாது தொடர்ந்து அமைதி காத்தார்..
அதற்க்குள் சூர்ய நாரயணனுக்கு மான்சி அனுகிய டிடென்டீவ் ஏஜென்ஸியிடம் இருந்து அழைப்பு வர..
சூர்ய நாரயணன் தன் அமைதியை கை விட்டவராக பர பரப்பாக.. “ என்னப்பா யார்..? என்று தெரிந்ததா…?” என்று பதட்டத்துடன் கேட்டார்…
“ சார் ஏன் இப்படி பதட்ட படுறிங்க.. யார்..? என்பது தெரிந்து விட்டது.. உங்க மெயிலுக்கு எல்லா தகவல்களையும் அனுப்பி இருக்கிறேன் பாருங்க..” என்று சொன்னவருக்கு பதில் கூட சொல்லாது தன் கை பேசியை அணைத்து விட்டு.
அதே பர பரப்புடன் சர்வேஷ்வரன் எதிரில் இருந்த அவன் கனிணியை காண்பித்து.. தன் மெயில் ஐடியையும் கட கட என்று சொன்னவர்..
“ அனுப்பி விட்டாங்க பார் சர்வா..” என்றவருக்கு ஒரு தலையசைப்புடன் சர்வா அவர் சொன்னதை செய்து..
அவர்கள் அனுப்பி இருந்த தகவல்களை இருவரும் படிக்க ஆரம்பித்தனர்..
அதில் இருந்தது இது தான்..
பெயர் பாஸ்கரன்.. அவன் தான் ஐந்து எண்களில் இருந்து மான்சியை தொடர்ந்து அழைத்தது… என்று அவன் புகைப்படத்தோடு அனுப்பியவர்..
பாஸ்கர் எண்..
குடும்பத்து உறுப்பினர்கள் அவர்களின் பெயர்கள் மற்றும் அவனின் தற்போதைய முகவரி என்று அனைத்தும் ஒன்று விடாது இருந்தன.. கூடவே புகைப்படங்கள் சூர்ய நாரயணன் கை பேசிக்கு வந்து விழுந்தன..
முதலில் பாஸ்கரன் யார்..? என்று சர்வேஷ்வரன் முழித்து இருந்தான்.. அப்படி பட்ட பெயரில் அவனுக்கு ஒருவரும் தெரியவில்லை..
யோசனையுடன் தன் மாமாவை பார்க்க… அவர் பாஸ்கரன் என்ற பெயரையும், அவன் புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தவரின் முகத்தில் குழப்பத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தன..
“ என்ன மாமா உங்களுக்கு யார் என்று தெரியுதா..? என்ற கேள்விக்கு பதில் அளிக்காது சர்வாவை குழப்பத்துடன் பார்த்தார்..
“ என்ன மாமா யார்..? என்று கேட்டவன் பின் ஏதோ யோசனை வந்தவனாக..
“ மான்சி அப்பா வழியில்…” என்ற அவன் கேள்வியை முடிக்க விடாது சூர்ய நாரயணன்..
“ இல்லை..” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தவர் மீது இப்போது சர்வேஷ்வரனுக்கு கோபம் தான் வந்தது..
நான் என்ன மாதிரி டென்ஷனில் இருக்கேன்.. இவர் என்ன என்றால்… இப்போது கோபத்துடனே..
“ அப்போ யார் என்று சொல்லுங்க மாமா..? இல்ல என்றால் எனக்கு தெரிந்த ஐ. ஜீயை வைத்து மூவ் பண்ணிக்கிறேன்.. அது தான் லட்டு மாதிரி எல்லாம் தகவலும் இருக்க.. லாக்கப்பில் இரண்டு தட்டு தட்டினா எல்லாம் சொல்லிட போறான்..’ என்று சொல்லிக் கொண்டே சர்வேஷ்வரன் தன் கை பேசியை எடுப்பதற்க்குள், சூர்ய நாரயணன் அவன் கையை பிடித்து தடுத்தவராக..
“ அவசரப்படாதே.. இது பொறுமையா தான் ஹான்டில் செய்யனும்…. “ என்றவரின் பேச்சில்..
“ எனக்கு நீங்க என்ன சொல்றிங்க என்று புரியல மாமா..’” என்றவனுக்கு சூர்ய நாரயணன் அனைத்தும் புரியும் படி சொல்ல தொடங்கினார்…
“ நான் முதல் முதல்ல துளசியை இந்த பாஸ்கர் வீட்டில் தான் பார்த்தேன்..” என்ற மாமாவின் பேச்சில், முதலில் துளசி யார்..? என்று குழம்பி பின் தெளிந்து… பின் அதிர்ந்து தன் தாய் மாமனை பார்த்தான் சர்வேஷ்வரன்..
“ அவங்க அங்க என்ன செய்துட்டு இருந்தாங்க நீங்க ஏன் அங்கு போனிங்க..?”
“ துளசி அங்கு வீடு வேலை பார்த்துட்டு இருந்தா.. அப்போ மான்சிக்கு எட்டு வயது..” என்று அவன் மாமன் சொல்லும் போதே, சர்வேஷ்வரனுக்கு நெஞ்சத்தில் பாரம் கூடி எதேதோ நினைக்கும் படி ஆனது..
அது கொடுத்த அழுத்தத்தில்.. “ என்ன மாமா…?
சீக்கிரம் சொல்லுங்க… மான்சிக்..கு மா… னு…க்கு அங்…கு எந்த பிரச்சனையும் வரலையே…” என்ற அவனின் கேள்விக்கு சூர்ய நாரய்ணனிடம் இருந்து பதில் இல்லாது போக ஒரு வித திகிலுடன் தான் அவரை பார்த்திருந்தான்…
“ என் பிரண்ட் தட்சாண மூர்த்தியோட தம்பி தான் இந்த பாஸ்கரன்… “ என்று சூர்ய நாரயணன் சொல்லும் போதே சர்வேஷ்வரனின் மனதில் வர வேற்ப்பு அன்று தன் மாமனின் நண்பன் என்று ஒருவர் தன்னை தட்சாண மூர்த்தி என்று தன் மனைவியோடு அறிமுகப்படுத்தியவர் முகமும்…
அவர்களை பார்த்ததும் உடல் பதற தன்னை ஒட்டி நின்ற மான்சியின் உடல் நடுக்கமும்… அவனின் நினைக்வுகு வந்து சூர்ய நாரயணனை வெறித்து பார்த்தான்.. அடுத்து என்ன சொல்ல போகிறாரோ என்று ..
சொன்னார் அவரும் அனைத்தையும் ஒன்று விடாது சொன்னார்.. ஒரு மருமகனிடம் அதுவும் தங்கையின் மகன் என்று மட்டும் அல்லாது தன் மகளாக நினைக்கும் மான்சியின் கணவன் சர்வேஷ்வரன் என்று ஆன போதும் தன் மனதில் இருந்த சங்கடத்தை கொட்டி விட்டார்..
என்ன ஒன்று சூர்ய நாரயணன் அதை சங்கடம் என்று சொன்னார்.. சர்வேஷ்வரன்.. இது உங்க மனதில் இருந்த குப்பைகளின் வெளிப்பாடு என்று பெயர் மாற்றி சொன்னான் அவர் சொன்ன விசயங்களை கேட்டு..
அப்படி என்ன சொன்னார்..என்பதை நமக்கும் தெரிந்தால் தானே அது சங்கடமா..? குப்பையா…? என்று நம்மால் பிரித்து எடுத்து சொல்ல முடியும்..