தட்சாண மூர்த்தியும் நானும் பள்ளி காலம் முதலே நட்பில் தான் இருந்துட்டு இருந்தோம்… அவங்க வீடு வில்லிவாக்கத்தில் இருந்தது…
அப்போ நான் அங்கு ஒரு வீடு வாங்க போன போது, இங்கு தானே தட்சாண மூர்த்தி இருக்கிறான் என்று அவன் வீட்டுக்கு போன போது தான் நான் துளசியையும், அவளின் எட்டு வயது மகள் மான்சி அப்புறம் மூன்று வயது குழந்தை நவீனை பார்த்தது..
நான் அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது வீட்டுக்குள் இருந்து ஒரே சத்தம்.. உள்ளே போகலாமா..? வேண்டாமா..? என்று யோசிக்கும் போது என் பின் பக்கம் முதுகை தட்டி விட்டு முன் பக்கம் வந்து நின்றான்..
தட்சணா..
“ என்ன இதுக்கே பயந்து வெளியே ஒட பார்க்குறியா…?” என்று சொல்லி கொண்டே அவன் என்னை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான்…
வீட்டில் சத்தம் போடுவது தட்சாண மூர்த்தியின் மனைவி என்று நான் நினைக்க..ஆனால் அங்கு சின்ன பெண்ணாக நின்று கொண்டு இருந்த மான்சியை சத்தம் இட்டு கொண்டு இருந்தது பாஸ்கரனின் மனைவி ராஜி..
அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான் பாஸ்கரன்….” என்ற மாமனின் பேச்சில்.. சர்வேஷ்வரனுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது..
குழந்தையாக இருந்த மான்சியை ஏன் திட்ட வேண்டும்.. தட்சணா மூர்த்தி வீட்டில் தானே மான்சி அம்மா வேலை பார்த்ததாக மாமா சொன்னார்.. அங்கு எப்படி பாஸ்கர்.. அதுவும் மனைவியோடு, என்று யோசித்தவன் அதை தன் மாமனிடம் கேட்கவில்லை ..
இருந்தும் சூர்ய நாரயணனே சொன்னார்.. “ உனக்கு குழப்பமா இருக்கும் சர்வா.. பாஸ்கர் அங்கு எப்படி என்று…
தட்சணா மூர்த்தியின் தம்பி தான் இந்த பாஸ்கர்… இரண்டு பேரும் அவங்க மூதையார் வைத்த வீட்டில் தான் இருந்தனர்…
ஆனால் பாஸ்கர் தட்சணா மூர்த்திக்கு எதிர் பதம் என்று தான் சொல்ல வேண்டும்…
மான்சி அவங்க கழிப்பறையை உபயோகித்தால் என்று தான் அன்னைக்கு அந்த பொம்பளை குழந்தையை சத்தம் போட்டுட்டு இருந்தா..” என்று மாமன் சொல்ல கேட்டதும் சர்வேஷ்வரனுக்கு அய்யோ என்று ஆனது..
ஒரு குழந்தையை திட்டுக்கிறார்கள் என்றது இவன் வேறு என்ன என்னவோ தான் நினைத்து விட்டான்..
பசிக்கு ஸ்நாக்ஸ் எடுத்து இருக்கலாம். இல்லை அங்கு இருந்த விளையாட்டு பொம்மை எடுத்து விளையாடி இருக்கலாம்..அதற்க்கு திட்டுவதா..? என்று அதற்க்கே அவன் அப்படி நினைக்க..
ஆனால் இங்கு குழந்தை அவர்களின் கழிவறையை உபயோகித்து விட்டாள் என்று திட்டுவதா..?
“ஏன்ன பொம்பளை மாமா..” என்று தன் மாமனிடம் சர்வேஷ்வரன் கேட்கவும் செய்தான்..
“ நீ இதுக்கே இப்படி சொல்றியே இன்னும் இருக்கு… அந்த பொம்பளையே மேல் என்று பாஸ்கரன் நடந்து கொண்டான்..
துளசி எங்க எல்லோருக்கும் காபி எடுத்துட்டு வந்து கொடுக்கும் போது அவள் கை பிடித்து தொட்டு .. இதுக்கு மேல என்னால சொல்ல முடியல சர்வா..
அதுவும் நான் இருக்கேன்.. அது கூட பார்க்காது .. கை பிடிக்கிறான்.. நான் போகும் போது தட்சணா மூர்த்தி கிட்ட சொல்லிட்டு தான் போனேன்.. அதுக்கு நான் பார்த்துக்குறேன் என்று சொன்னான்..
ஆனால் நான் அடுத்து அவங்களை பார்க்கும் போது எல்லாம் நான் பார்க்கும் படி தான் ஆகி விட்டது..” என்ற இந்த வார்த்தை ஏனோ சர்வேஷ்வரனுக்கு பிடிக்கவில்லை..
பருந்து கிட்ட இருந்து தப்பித்து கழுகு கிட்ட மாட்டினது போல் .. ஆனா இவர் அவர் விருப்படி படி சொல்ல போகிறார் என்று மனது ஏளனமாக எண்ணிக் கொண்டு இருக்கும் போது..
சூர்ய நாரயணன்.. “ எனக்கு தெரியும் சர்வா.. நான் செய்தது ரொம்ப ரொம்ப பெரிய தப்பு என்று.. ஆனால் அந்த தப்பை நான் தெரியாது செய்தேன் எல்லாம் சொல்ல மாட்டேன்.. தெரிந்தே என் தேவைக்கு செய்தேன்..
துளசி பிரச்சனையை நான் எனக்கு சாதகமா பயன் படுத்திக் கொண்டேன்…
“ ஒரு நாள் மதியம் திரும்பவும் எனக்கு வில்லிவாக்கம் போகும் வேலை ஒன்று இருந்தது..” என்ற சூர்ய நாரயணன் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய சர்வேஷ்வரன்..
“ வேலை இருந்ததா.. இல்லை அந்த வீட்டுக்கு போக வேலை இருப்பது போல் சொல்றிங்ககளா மாமா..” என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டு விட்டான்..
இதோ இப்போது மான்சிக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு துடிக்கிறதே… இன்னும் கேட்டால் என் திருமணம் சந்தர்ப்ப வசத்தால் நடந்தது தான்..
ஆனால் அது தான் என் வாழ்க்கை என்று நான் முடிவு செய்ததால் தானே இதோ மான்சிக்காக என் நெஞ்சு பதறுது..
ஆனால் இவருக்கும் அத்தைக்கும் நடந்த திருமணம் அப்படி இல்லையே.. அதுவும் அத்தை… கட்டுனா இவரை தான் கட்டுவேன்.. இல்லை கல்யாணமே வேண்டாம் என்று சொன்னவங்களுக்கு இவர் செய்தது என்ன…?
இவரை பற்றி தெரிந்ததில் இருந்து கேட்க நினைத்த கேள்வியை இன்று கேட்டு விட்டான்..
“ உங்களுக்கு அத்தை நியாபகத்தில் வரவே இல்லையா மாமா..?” என்று..
ஆனால் அவர் அதற்க்கு சொன்ன பதில்.. “ வந்தது.. அதனால் தான்..” என்றவரின் பேச்சை எதில் சேர்த்து கொள்வது என்று தெரியாது முறைக்க மட்டும் தான் அவனால் முடிந்தது..
பின் முடிவு செய்து விட்டான் இவர் செய்த செயல்களுக்கு இவர் ஏதாவது சப்பை கட்டு தான் கட்டுவார்.. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தான் கேட்போமே என்று முடிவு செய்த பின் அவன் வாய் திறக்கவில்லை..
சூர்ய நாரயணன் எண்ணம் முழுவதும்.. பதினைந்து வருடத்திற்க்கு முன் சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
அவர் ஞாயிறு அன்று மதியம் நேரம் தான் அவர் அந்த வீட்டுக்கு சென்றார்… ஒரு டாக்குமெண்ஸ் அவரிடம் இருந்தது.. அதை வாங்க தான் அன்று சென்றார்..
அவர் சென்ற போது வீடே அமைதியாக இருந்தது… வீட்டுக்குள் போகும் போதே என்னடா அன்று வீட்டுக்கு வெளியில் அவ்வளவு சத்தம் கேட்டது.. இப்போ என்ன ஆள் இருக்கும் அரவமே கேட்கல என்று நினைத்து கொண்டே சென்றவர்..
ஒரு வேலை வீட்டில் ஆட்கள் இல்லையோ… என்று நினைத்து கொண்டே தட்சணா மூர்த்திக்கு அழைப்பு விடுத்தார்..
அவர் சொன்னது நாங்க குடும்பமா வெளியில் இருக்கேன்.. வீட்டில் என் தம்பி இருக்கான்.. காலிங்க் பெல் அடி அவன் திறப்பான்.. என்று சொன்னதுமே..அடித்தார் அடுத்தார் அடித்து கொண்டே இருந்தார் ..கதவு தான் திறப்பதாக இல்லை..
சூர்ய நாரயணன் திரும்பவும் நண்பனுக்கு அழைப்பு விடுக்க.. அவர் பாஸ்கரின் கை பேசி எண்ணையும் வீட்டு எண்ணையும் சேர்த்தே தான் கொடுத்தார்..
வெளியில் இருந்து அழைப்பு விடுக்க பேசியின் சத்தம் வீட்டுக்குள் இருந்து வந்தது.. சரி இருக்கிறார் என்று நினைத்து இருக்க.. அந்த பேசியை எடுத்தால் தானே நான் உங்க வீட்டுக்கு வெளியில் இருக்கேன் என்று பேச…
சரி லேண்ட் நம்பருக்கு அவன் முயற்சி செய்ய அதுவும் எடுக்க படாது போகவும், என்ன இது சரி வீட்டுக்கு போய் விடலாம் என்று கூட சூர்ய நாரயணன் முடிவு எடுத்து விட்டார்..
சரி போகும் போது கடைசியாக ஒரு முறை முயற்சி என்று நினைத்து தான் பாஸ்கரின் செல்லுக்கு அழைத்தது..
கடைசி அணையும் முன் அதை எடுக்க ஒரு அறையில் இருந்து நடந்து வந்த பாஸ்கரை க்ரீல் கேட் வழியாக சூர்ய நாரயணன் பார்த்து விட்டார்..
பேசி அணைந்து விடவும் பாஸ்கர் அவசரமாக வந்த அறைக்கு திரும்ப செல்ல பார்த்தவரை சூர்ய நாரயணம் சத்தம் போட்டு அழைக்கவும்..
பாஸ்கரும் வாசல் பக்கம் பார்க்க.. அங்கு சூர்ய நாரயணன் நின்று இருப்பதை பார்த்து.. பாஸ்கரின் முகத்தில் லேசாக பதட்டம் தென்பட்டது..
தான் வந்த அறையை ஒரு பார்வை பார்த்த வாறு சூர்ய நாரயணன் அருகில் வந்த பாஸ்கர்..
கதவு திறவாது.. “ அண்ணா வீட்டில் இல்ல சார்… அண்ணா மட்டும் இல்ல.. வீட்டில் யாரும் இல்ல..” என்று அந்த யாருமே என்று சொல்லும் போது அந்த வார்த்தைக்கு, அவன் அழுத்ததை கூட்டினான்..”
சூர்ய் நாரயணனுக்கு வீட்டை திறக்காது இது போல் அவன் பேசும் பேச்சில் அவ்வளவு கோபம் எழுந்தன…
அவர் எப்போதும் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் எல்லாம் பார்க்க மாட்டார்.. ஆனால் அன்று பாஸ்கர் தன்னை நடத்திய விதத்தில்..
“ உங்க இடம் ஒன்று விற்காது இருக்கிறது.. பணம் ரொம்ப தேவை என்று உன் அண்ணன் சொன்னான்.. அதை நான் வாங்கலாம் என்று தான் அதன் பத்திரம் வாங்க வந்தேன்.. “ என்று அவர் சொல்லி முடிக்கும் முன் ஜீ பூம்பா என்பது போல் கதவு சட்டென்று திறந்து விட்டது..
அவனை கீழ் பார்வை பார்த்து கொண்டே சூர்ய நாரயணன் அந்த வீட்டின் ஹாலுக்குள் நுழைந்தார்..
பாஸ்கரின் முகத்தில் ஏன் இந்த பதட்டம் என்று அவன் முகத்தையும் இடை இடையே பார்த்தவருக்கு ஏதோ தவறாக மனதில் பட்டது…
அதனால் அவசர அவசரமா ஒரு அறைக்கு சென்று கையில் பத்திரத்தோடு ஓடி வந்தவன்.. அதை தன்னிடம் கொடுத்து விட்டு..
“ இது தான் சார்..” என்றவனின் பேச்சை காதில் வாங்காது பொறுமையாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒன்று ஒன்றாக பார்த்து கொண்டு வந்த சூர்ய நாரயணனிடம் ..
“ எல்லாம் சரியா தான் சார் இருக்கு.. இது எல்லாம் பொறுமையா உங்க வீட்டில் போய் பார்க்கலாமே சார்..” என்று தன்னை அங்கு இருந்து அவன் அனுப்ப அவசர்ப்படுத்து கிறான் என்பது வரை சூர்ய நாரயணனுக்கு புரிந்தது..
ஆனால் ஏன்.. ? என்று அவர் யோசிக்கும் வேளயில் பாஸ்கர் வந்த அறையில் இருந்த மெல்ல ஒரு முனகல் சத்தம் கேட்கவும் சூர்ய நாரயணனுக்கு பதட்டம் வந்தது..
கூடவே அன்று துளசியின் கையை இவன் பிடித்ததும்.. சத்தம் வந்த அறைக்கு சூர்ய நாரயணன் செல்ல பார்க்க அவரை செல்ல விடாது பாஸ்கரன் தடுக்க..
அவனை ஒரே தள்ளாக தள்ளி விட்டு அந்த அறைக்கு சென்றவர் பார்த்த அந்த கோலத்தில். அந்த இடத்தில் துளசி இருந்து இருந்தால் கூட அவர் அந்த அளவுக்கு பதறி இருக்க மாட்டார்.
ஆனால் குழந்தை எட்டு வயதே ஆன ஒரு குழந்தையின் உடம்பின் மேல் ஒட்டு துணி இல்லாது அவள் இருந்த கோலத்தை பார்த்தவருக்கு மயக்கம் வரும் போல் ஆனது…
ஆனால் அந்த நிலையிலும் அவர் ஒன்றை கவனித்தார்.. தான் நேரம் கடந்து வரவில்லை என்பதை..