இதில் இவள் தங்கை வேறு இன்னும் மூன்று மாதத்தில் இங்கு வர போகிறாள்.. அவள் என்ன…? என்ன…? எல்லாம் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறாளோ.. என்று நினைத்துக் கொண்டு இருந்தான்… அனைத்தும் மனதில் தான்…
பத்மாவதி தன் மகள் நின்ற கோலத்தில் தன் அண்ணன்கள் உட்பட தலை குனிந்து இருப்பதை காண சகிக்காது..
“ என்ன வனி இது… ரூமில் இது போல போடுற சரி.. இப்படி அனைவரும், அதுவும் வேலையாட்கள் இருக்கும் இடத்தில் கூட நீ இப்படி தான் வரனுமா..?” என்று கேட்டு விட்டார்.
அதற்க்கு வனிதா.. “ நானாவது வீட்டோட இந்த ட்ரஸ் போட்டுட்டு இருக்கேன்.. ஆனா இப்போ நீ இங்கு வந்து இருக்கேன்னா, அப்போ அவரு அந்த பொம்பளை வீட்டுக்கு போய் இருப்பார்
அதோட விட்டா கூட பரவாயில்ல.. என்னவோ அவள் தான் தாலி கட்டிய பெண்டாட்டி போல எந்த விழா என்றாலும் அவளை இழுத்துட்டு அலையுறார்…” என்று சூடாக கேட்டவள்.
பின் தன் தாயின் உடல் வாகை குறிப்பு காட்டி.. “ உங்க மேலயும் கொஞ்சம் தப்பு இருக்க மாம்… அந்த பொம்பளை பார்.. இன்னும் சின்ன பெண் போல சிக்குன்னு, அவள் பெண்ணுக்கு அக்கா போலவே இருக்கா.. ஆனா நீங்க…?” என்று சொல்லி பத்மாவதியின் ஊதிய உடல் வாகை குறிப்பிட்டு உதட்டு பிதிக்கிய வனிதாவின் இந்த பேச்சை அங்கு இருப்பவர்கள் யாரும் ரசிக்கவில்லை..
சர்வேஷ்வர் தான் .. “ என்ன பேச்சு வனி இது ..?” என்று அதட்டினான்.
தன் பெரியப்பா மகன் மகேஷ்வரனை திருமணம் செய்து இருந்தாலும், சிறுவயது முதலே தெரிந்த அத்தை மகள். அதோடு தன்னோடு இரண்டு வயது சிறியவள் வனிதா என்பதால், சர்வா எப்போதும் வனிதாவை பெயர் வைத்து தான் அழைப்பான்.
அதே போல் அந்த வீட்டில் சர்வேஷ்வரனுக்கு தான் வனிதா கொஞ்சம் அடங்கியும் போவாள்.. ஆனால் இந்த முறை..
“ நான் ஒன்றும் உங்க அம்மாவை பேசலேயே.. என் அம்மாவை அதுவும் உண்மையை தானே பேசினேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தி சர்வா முன் வந்து பேசியதில், கோபத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்த சர்வா, அவள் நின்று இருந்த கோலத்தில் சங்கடத்துடன் தலை குனிந்தவன்..
“ என் அம்மாவை பத்தி பேசிட்டு நீ இங்கு இருந்துடுவீயா…?” என்று கத்தி விட்டு பாதி சாப்பாட்ட்டிலேயே எழுந்து போனவன் பின்னால் அவனின் அம்மா வைதேகி…
“ சர்வா..சர்வா..” என்று அழைத்துக் கொண்டு அவன் பின் செல்லவும், சர்வா கொஞ்சம் தயங்கி நின்று விட்டு தன் அன்னையை பார்த்தவன்..
“கவலை படாதிங்க.. வெளியில் சாப்பிட்டு தான் ஆபிசுக்கு போவேன்..” என்று தன் அம்மா என்ன சொல்ல வந்தார்களோ.. அதற்க்கு உண்டான பதிலை கொடுத்து விட்டு அவன் செல்லவும், வைதேகி கொஞ்சம் நிம்மதி அடைந்தவராக அனைவரும் அமர்ந்து இருந்த இடம் நோக்கி சென்றார்..
அவர் போகும் போது வனிதா பத்மாவதியிடம்… “ பார்த்திங்களா…? நான் அவங்க அம்மாவை பத்தி ஒன்றும் சொல்ல கூட இல்ல.. சொன்னா நான் இந்த வீட்டில் இருக்க முடியாதாம்..
ஆனால் உங்களை பாருங்க.. அங்கு உங்க வாழ்க்கையை பங்கு போட்டுட்டு அவர் மச்சான் வாழும் போதும் கூட, இங்கு அவர் தங்கைக்கு எந்த பிரச்சனையும் இல்லாது எல்லாம் சுமுகமா தான் போயிட்டு இருக்கு…” என்று பேசி விட்டு செல்லும் வனிதாவை பார்க்க பார்க்க வைதேகிக்கு அவ்வளவு வெருப்பு தான்..
ஆனால் அதை காட்டாது மற்றவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு பரிமாறிக் கொண்டு இருந்த வைதேகியின், முகத்தில் ஒரு இறுக்கம் இருந்த வண்ணம் இருந்தது.
இந்த இறுக்கம் வைதேகிக்கு இன்று வந்தது கிடையாது.. பதினான்கு வருடம் முன் வந்தது.., வெங்கட பூபதி வைதேகிக்கு சொந்த அத்தை மகன் தான்..
மிக நெருங்கிய சொந்தம்.. மிகவும் பிடித்து தான் வெங்கட பூபதி வைதேகியை திருமணம் செய்து கொண்டது.. பின் தான் தன் நாத்தநாரான பத்மாவதிக்கு சூர்ய நாரயணனை கொடுக்க வேண்டும் என்ற பேச்சு தன் புகுந்த வீட்டில் பேசினார்கள்…
வைதேகிக்கும் பத்மாவதியை மிகவும் பிடித்தம் தான்.. தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பாள்.. பார்க்கவும் குறை சொல்ல முடியாத அழகு.. என்ன ஒன்று அவ்வப்போது சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொள்வாள்..
பணம் நிறைந்த வீட்டில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்பதால், அது ஒரு குறையா என்பது போல் தான் புகுந்த வீட்டில் தன் அண்ணனோடு தன்னை பேச தூது அனுப்பிய போது..
தன் அண்ணன் சூர்ய நாரயணன் சொன்ன.. “ கொஞ்சம் யோசிக்க விடும்மா..?” என்று சொல்லும் போது தன் நாத்தனாருக்கு என்ன குறை என்று தன் அண்ணனிடம் சண்டை போட்டாள்..
“ சரி சரி.. குறை ஒன்றும் இல்லை தான்.. ஆனால் கொஞ்சம் யோசிக்க விடும்மா..?” என்று இரு நாள் அவகாசம் சொல்லி அனுப்பிய தன்னை இந்த வீட்டில் அன்று என்ன பேச்சு பேசினார்கள்..
அதுவும் தன் கணவன்.. “ என் தங்கைக்கு என்ன குறை என்று உன் அண்ணன் இரண்டு நாள் பொருத்து சொல்கிறேன் என்று சொல்றார்.. என் தங்கை என்ன அப்படி கீழ் இறங்கி போய் விட்டாள்..” என்று அந்த திருமண பேச்சை அதோடு நின்று விடும் போல் இருந்ததை பத்மாவதி சொன்ன..
“ அவருக்கு என்னை மணம் முடித்து கொடுப்பது என்றால் கொடுங்க.. இல்லேன்னா இனி என் திருமண பேச்சையே இந்த வீட்டில் எடுக்க கூடாது…” என்று திட்ட வட்டமாக சொல்லி விட்ட பின், சூர்ய நாரயணன் கேட்ட அந்த இரண்டு நாள் அவகாசத்திற்க்காக பூபதி குடும்பம் காத்து கொண்டு இருந்தனர்..
பின் தன் அண்ணன் நல்ல பதிலாக .. “ நானே பத்துவை திருமணம் செய்து கொள்கிறேன்..” என்று வீட்டில் வந்து சொல்லவும், சூர்ய நாரயணனை தலையில் வைத்து கொண்டாடி தீர்த்தனர்.
அந்த கொண்டாடல் இன்றும் அவருக்கு இந்த வீட்டில் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.. அவர் வந்து விட்டால் போதும், இன்னும் மாப்பிள்ளை விருந்து நடக்க தான் செய்கிறது..
நம் பழக்கம் தான் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஒரு நீதி.. மருமகனுக்கு என்று ஒரு நீதி உள்ளதே.. தவறு செய்த மருமகன் சூர்ய நாரயணனை நேரில் ஒன்றும் பேசாது… அவர் தங்கை இந்த வீட்டின் மருமகள் ஆன தன்னிடம் தானே இது போல் எல்லா பேச்சும் நடைப்பெறும்..
இதோ இப்போது பேசி விட்டு செல்கிறாளே வனிதா இது போலான பேச்சுக்கள் வைதேகி நிறையவே கேட்டு விட்டாள்..
அதுவும் பதினான்கு வருடம் முன் தன் மாமியார் இருந்த போது, நான் எங்கள் அறைக்குள் போகும் போதே காதே கூசும் அளவுக்கு..
“ என் மகள் அங்கு தன் புருஷனை சக்காளத்திக்கு மொத்தமா கொடுத்து விட்டு தனியே படுத்துட்டு இருக்கா..
ஆனா நீ பத்து மணி ஆனா போதும்.. கதவை இழுத்து மூடிக்கிறது.. புருஷன் கூட இருக்கும் போது தன் அண்ணிய பத்தி கொஞ்சம் நினச்சா அந்த தாழ்ப்பாளை போட தோனுமா…? யாரு எக்கேடு கெட்டா எனக்கு என்ன..? எனக்கு என் சுகம்.. அப்படி என்ன அலச்சலோ..” என்று தன் மாமியார் பேசும் போது தன் மகன் அப்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்த பதினைந்து வயது மகன்.. அப்போது இது போல் பேசிய பேச்சுல் கூசி போய் அறைக்கு செல்லாது இருந்தால்,
கணவன் முறைத்து கொள்ள.. வைதேகி இருக்கும் நிலையை சொன்ன பின், ஒன்று தனக்கு கணவனாக தன் அன்னையிடம் இது பற்றி பேச முடியாது தான்.. ஆனால் மறை முகமாக கண்டித்து இருக்கலாம்..
சரி அதை தான் செய்யவில்லை.. தன் மனதை புரிந்து தன்னை தனியே இருக்க விட்டு இருக்கலாம்..
அதை விடுத்து.. “ தன் மகள் வாழ்க்கை போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் வீட்டு பெரியவர்கள் அப்படி தான் பேசுவாங்க.. அதுக்குன்னு நீ என்னை விட்டு தள்ளி இருப்பியா…?” என்று கேட்டு விட்டு..
“ எப்போதும் போல் பத்து மணிக்கு அறைக்கு வர பார்..” என்று சொன்ன கணவனின் பேச்சை ஒரு மனைவியாக வைதேகி கேட்க தான் வேண்டி தான் இருந்தது.. வெங்கட பூபதிக்கு அப்போது எல்லாம் வாரத்துக்கு இரண்டு நாளாவது அவருக்கு தன் மனைவி வேண்டும்..