அதற்க்கு வலுக்கூட்டும் வகையாக சூர்ய நாரயணனையும் துளசியையும் ஜோடியாக பார்க்கும் போது எல்லாம் அவன் வயிறு எரிந்து அடங்கும்…
அதை தன் போதை கூட்டாளியிடமும் சொல்லி ஆதங்கப்பட்டும் இருக்கிறான்..
“ என் கிட்ட இவள் பத்தினி வேஷம் போட்டடா.. இப்போ எங்கு போச்சி அவள் அந்த பத்தினி தன்மை…? நான் கை பிடிக்கும் போதே அப்படி முறைப்பாடா..” என்றதற்க்கு…
அவனை போலவே கயமை கொண்டவர்கள்.. “ நீ ஏன்டா கையை பிடித்த.. அது தான் நீ வேலைக்கு ஆகாதவன் என்று நினச்சிட்டு சூர்ய நாரயணனை பிடிச்சிட்டா போல…” என்று எள்ளி நகையாடியவர்கள்..
பின் மிக சீரியசாக… “ தோ பார் பாஸ்கரா அவங்க மேல வஞ்சம் வெச்சி ஏதாவது செய்யிறேன் என்று மாட்டிக்க போற.. இதில் உன்னோட நம்ம மொத்த பேரும் மாட்டிப்பது போல ஆகி விடும்..
முன்ன ஒரு குழந்தையை தொட்டதற்க்கு உன்னை இந்த கதியில் நிற்க வைத்து இருக்கார்.. வேறு புதுசா செய்து மாட்டிக்க போற ..” என்று சொன்னவர்கள்
அதற்க்கு அவன்.. “ சரி..” என்று தான் ஒத்து கொண்டது..
பின் சர்வேஷ்வரன் மான்சி திருமணம் பற்றிய செய்து மீடியாவில் பார்த்து சர்வேஷ்வரன்.. “ இந்த குட்டி அப்போதே படு சோக்கா இருப்பா மச்சி… அந்த எட்டு வயதிலேயே..*******” என்று அசிங்கமான பேச்சை கேட்டுக் கொன்டு இருந்த பாஸ்கரனின் கூட்டாளிகளின் பார்வை மான்சியின் மீதே நிலைத்து இருந்தது..
“ என்னடா அப்படி பார்க்கிறிங்க…? சூர்ய நாரயணன் வைத்து இருக்கும் துளசியே விட்டு விடு என்று சொன்னிங்க.. இப்போ இந்த சர்வேஷ்வரன் முறையா தாலி கட்டி மனைவி ஆக்கி இருக்கான்.. இப்படி பார்த்து பிரச்சனையில் மாட்டிக்காதிங்கடா…” என்ற பாஸ்கரனின் பேச்சை அவனோடு இருந்தவர்களின் காதில் விழவில்லை.. அந்த அளவுக்கு மான்சியின் அழகு அவர்களை நிலை குலைய செய்து இருந்தது..
பின் ஏதோ திட்டத்தோடு… “ நாம அந்த பெண்ணை சர்வேஷ்வரன் மனைவியா இருக்கும் போது ஏதாவது செய்தா தானே மாட்டிக்குவோம்…” என்றவன்..
பின் தொடர்ந்து.. “ இந்த பெண்ணை அவள் புருஷனே துறத்தி விட்டுட்டா… பின் நாம அவளை நெருங்குவதில் என்ன பிரச்சனை..?” என்று பாஸ்கரனின் கூட்டாளி கேட்டனர்..
பாஸ்கரனுக்கு கொஞ்சம் தயக்கம்.. “ வேண்டாம் டா.. மாட்டினா பிரச்சனை ஆகிட போகுது…” என்று இது வேண்டாம் என்று தான் பாஸ்கரன் முதலில் மறுத்தது..
ஆனால் அதற்க்கு அவர்கள்.. “ உன்னால் முடியாது என்பதால் தானே வேண்டாம் என்று சொல்ற.. அந்த பெண்ணை அந்த வயதிலேயே அப்படி பண்ணவன் தானே..” என்று சொல்லவும்..
“ அய்யோ நான் ஒன்னும் பண்ணலடா .. அதுக்குள் தான் அந்த சூர்ய நாரயணன் வந்து எல்லாம் கெடுத்ததோடு என்னை ஒன்னுத்துக்கும் வக்கு இல்லாதவனாக ஆக்கி விட்டானே..” என்று சொல்லிக் கொண்டு தன்னை குனிந்து பார்த்து கொண்டான்…
அவனின் செயலில் அவனை சுற்றி இருந்தவர்கள் சிரித்து விட்டனர்..
“ பின் சரி புலம்பாதே… சரி அன்னைக்கு ஒன்னும் நடக்கல.. ஆனா அந்த பெண்ணிடம் நீ ஒன்னும் செய்யல..” என்று கேட்டதற்க்கு ஒரு கோணல் சிரிப்பை சிரித்துக் கொண்டு ஒரு இளி இளித்து வைத்தான்..
“ அப்புறம் என்ன..?” என்று சொன்னவர்கள்… “ இதோ பார் பாஸ்கரா முறையா கல்யாணம் செய்து ஒழுங்கு முறையா இருந்தவளோட பெண்ணையே கல்யாணம் செய்தாலே அந்த பெண் மீது சந்தேகம் வந்தால் துறத்தி விடுவார்கள்..
இந்த மான்சி பெண் ஒரு வைப்பாட்டியோட பெண்.. ஆட்டமெட்டிக்கா.. அம்மா போல தானே பெண் இருக்கும் என்ற தாட் இருக்கும்… அதுவும் அந்த சூர்ய நாரயணன் பெண் எடுத்த இடத்தில் தான் இந்த பெண் போய் இருக்கு… எனும் போது … அந்த பெண்ணை அந்த வீட்டில் இருந்து வெளியில் அனுப்பி வைக்க நாம ரொம்ப மெனகெட எல்லாம் தேவையில்லை…
அந்த பெண் செல்லுக்கு அவ்வப்போது அழைத்தாலே போதும்.. அதுவும் நையிட் அவள் அவன் புருஷன் கூட இருக்கும் சமயத்தில் கண்டிப்பாக ஒரு முறையாவது அழைத்து விடனும்..” என்று அவர்கள் போட்ட அனைத்து திட்டத்தையும். அதில் இருந்த ஒருவனை தனக்கு கீழ் கொண்டு வந்து விசாரிக்கும் விதமாக விசாரித்து தெரிந்து கொண்ட பின்..
அந்த பாஸ்கரனை மட்டும் அல்லாது மொத்த பேரையும் தூக்க வேண்டும்… என்ற ஆத்திரம் என்பதை விட வெறி என்று சொல்லலாம்..
அது எப்படி மான்சியை..? அதை நினைக்க நினைக்க அவனால் தன்னையே கட்டு படுத்த முடியவில்லை.. இருந்தும் பொறுமை காத்தான்.
அவர்களை கூண்டோடு தூக்கவதிலும் சரி… தன் கஸ்டடியில் இருந்தவன் சொன்ன..
அந்த வயதில் மொத்தமாக இல்லை என்றாலும், என்று பாஸ்கரன் சொன்ன பேச்சில், மான்சியை அவன் என்ன மாதிரி துன்புறுத்தி இருப்பான்…? அதை நினைக்க கூட அவனால் முடியவில்லை…
ஆனால் கேட்க வேண்டும் .. கண்டிப்பாக கேட்க வேண்டும்… அவளின் தேர்வு முடியும் வரை காத்து கொண்டு இருந்தான்..
அப்போது சர்வேஷ்வரனுக்கு ஒன்று உரைத்தது.. அது மான்சியை பழி சொல்லி அந்த வீட்டை விட்டு அனுப்புவதில் ரொம்ப எல்லாம் சிரம பட வேண்டியது இல்லை என்ற அந்த வார்த்தை… அவளின் தாய் வாழ்க்கையே அவளுக்கு அந்த பெயரை வாங்கி கொடுத்து விடும் என்றதற்க்கு ஏற்ப தானே…
தானும் அப்படி பேசியது.. அதே போல… நேற்று கூட தன் அன்னை, பெரியம்மா மான்சி சாப்பிட்டு சென்றதை உறுதி செய்த பின்…
கொஞ்ச தயங்கினாலுமே… “ சர்வா நான் சொல்றேன் என்று தப்பா எடுத்து கொள்ளாதே… நான் உன் நல்லதுக்கு தான் சொல்வேன்..” என்று ஒரு பொடி வைத்து பேச்சை ஆரம்பித்த பெரியம்மா இடை இடையே தன்னை அன்னையையும் ஒரு பார்வை பார்த்த வாறு…
“ அது என்ன எப்போ பார்த்தாலும் மான்சிக்கு போன் வருது… மான்சிக்கு அம்மா தம்பி மட்டும் தான் உறவு என்று.. அம்மா கூட சரியான பேச்சு வார்த்தை இல்ல போல..
அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கு தான்.. தம்பியோடு மட்டும் தான் பேசுவது போல.. சரி அவன் சின்ன பைய்யான்… தான் விட்டு விடலாம்… ஆனால் அவள் ஸ்கூலில் இருக்கும் நேரத்தில் கூட இவள் செல்லுக்கு அழைப்பு வருது என்றால், யாரிடம் இவள் பேசுகிறாள்..?” என்று பேசியவர்..
தான் ஏதோனும் சொல்ல கூடும் என்று தன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவரின் முகத்தை சர்வேஷ்வரனும் பார்த்தானே ஒழிய வாய் திறந்து எதுவும் பேசாது இருந்தான்..
பின் சர்வாவின் பெரியம்மாவே..” திரும்பவும் நான் சொல்றேன் என்று தப்பா எடுத்துகாதே சர்வா… அவள் அம்மா மாதிரி..” என்று பேசிக் கொண்டு இருந்தர் சர்வேஷ்வரனின் முக மாற்றத்தை பார்த்து அமைதியாக போனவரிடம்..
அப்போது தான் எங்கோ பார்ட்டிக்கு போவது போல் உடையணிந்து கொண்டு சாப்பிட அமர்ந்த வனிதாவையும், அவள் உடையையும் மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து வைத்த சர்வா…
இப்போது ..” நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது பெரியம்மா…” என்று சொன்னவன்…
தன் எதிரில் அமர்ந்து இவ்வளவு நேரமும் சாப்பிடுவதாக பெயர் செய்து கொண்டு அமர்ந்திருந்த தன் அத்தை பத்மாவதியை காண்பித்து…
“ பத்து அத்தை எப்படி பெரியம்மா…?” என்று கேட்டவன்.. அவர் பெரியம்மா அதற்க்கு பதில் அளிக்கும் முன்னவே,…
“ எனக்கு தெரிந்து நல்லவங்க தான் எல்லா வகையிலுமே.. ஆனால் அவங்க பெண்கள்..? என்று கேட்டவன்.. அதற்க்கு எந்த பதிலும் சொல்லாது பாதி சாப்பாட்டில் எழுபவனை அனைவரும் கோபத்துடன் பார்த்தனர்..
அந்த சமயம் சாப்பிட வந்த அவனின் அப்பா, பெரியப்பாவையும் சேர்த்து..
சர்வேஷ்வரின் பெரியப்பா..” என்ன சர்வா… என்ன பேச்சு இது…? திறமையானவன்.. நல்லவன்… நம்ம குடும்பத்தை இன்னும் முன்னுக்கு கொண்டு வருபவன் என்று என் மகனோடு உன்னை கொண்டாடியதுக்கு பேசுற பேச்சா இது..?” என்று கண்கள் கலங்கி கொண்டு இருந்த தன் தங்கையை கை பிடித்த வாறு தன் தம்பி மகனை கடிந்தார்..
“ அது தான் பெரியப்பா.. நீங்க சொன்னது ஒரு வகையில் சரி தான்.. இதே நான் இருக்கும் சொத்தை அழித்து கொண்டு, ஊரை சுற்றி கொண்டு இருந்தா இந்த வீட்டில் எனக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது எனக்கு நல்லாவே தெரியும்..” என்றவனின் பேச்சில்..
இப்போது சர்வேஷ்வரன் தந்தை.. “ இப்போ என்ன சொல்ல வர்ற சர்வா.. ? புரியும் படி சொல்..?” என்று அதட்டினார்…”
“ அதாவது எனக்கு உண்டான மரியாதை என் நடத்தையில் தான் இருக்கு… அதாவது நீங்க எனக்கு அப்பா.. நான் இந்த குடும்பத்து மகன் என்பதில் இல்லை… நான் எப்படி..? அது தான்..
அப்படி பார்த்தால், மான்சி எப்படி என்று எனக்கு நல்லாவே தெரியும்.. அனிதா எப்படி என்று உங்க எல்லோருக்கும் தெரியும்.. அடுத்து..” என்று சொன்னவன் வனிதாவை ஒரு பார்வை பார்த்து வைக்க..
அந்த பார்வையை கவனித்த பத்மாவதி .. “ நீ இப்படி மாறுவே என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை சர்வா.. அனிதா.. செய்தது தப்பு தான் நான் இல்லேன்னு சொல்ல வரல.. ஆனா நீ இப்போ எதுக்கு வனிதாவை அப்படி பார்த்து சந்தேகப்படுவது போல் பேசுற..
அவள் வயதில் உன்னோட சின்னவளா இருந்தாலுமே, உனக்கு அண்ணி.. இந்த வீட்டின் மூத்த மருமகள்.. இது போல் பேசுவது நல்லதிற்க்கு இல்ல…” என்று குரல் கம்ம பேசியவரின் முகத்தை பார்க்க சர்வேஷ்வரனுக்கும் வருத்தமாக இருந்தது தான்..
என்ன இருந்தாலுமே, தன் பாசமான அத்தை அல்லவா.. ஆனாலும் அனைவரையும் பேச விட்டு.. அதுவும் மான்சியை பற்றி தவறாக படுவது போல் பேசிய பேச்சில் அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு..
அதுவும் இந்த பேச்சுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தது வனிதா என்பது அவன் அறிந்தது தான்.. பத்மாவதி அத்தைக்கு இதில் பங்கு இல்லை என்றாலுமே, மான்சியை பற்றி தவறாக படும் படி தன் மகள் கதை பின்னும் போது அதை கேட்டுக் கொண்டு அமைதியாக தானே இருந்தார்..
ஆனால் இப்போது தன் மகளை பேச கூட இல்லை ஒரு பார்வை பார்த்தேன்.. வாழ்க்கை பாழக போகிறது என்று இவ்வளவு பதட்டம் படுகிறாரே.. அது போல தானே மற்றவர்களின் பெண்ணும்..
அதுவும் வனிதாவை பற்றி கேட்டதில்..தெரிந்து கொண்ட விசயத்தில். முதலில் மான்சி விசயம் முடியட்டும் என்று இருந்தவனுக்கு, தன்னை வீட்டில் இருந்தவர்களோடு மோத விட்டு தன்னை கிண்டலான ஒரு பார்வை பார்த்து கொண்டு இருந்த வனிதாவை பார்த்தவன்..
அவள் செய்து கொண்டு இருப்பதை.. மான்சியை செய்ய நினைத்ததை சொல்ல ஆரம்பித்தான்…