சர்வேஷ்வரனின் பேச்சை கேட்ட அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்… மற்றவர்களோடு, அதாவது பெரியவன் மகேஷ்வரனோடு குடும்ப ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுப்பவன் சர்வா…
அவனா தனியாக போவதை பற்றி பேசுகிறான்.. அவன் பேச்சை கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்..
அனைவரும் செய்வது போல் ஆண்கள் தனி குடுத்தனம் சென்றால், பெண்கள் தான் காரணம் என்பது போல்..
ரேவதி… மான்சியை பார்த்து… “ நான் உன்னை என்னவோ நினைத்தேன்.. ஆனால் நீ பலே கை காரியாக தான் இருக்க..” என்ற அவரின் பேச்சு வனிதாவுக்கு சலங்கை கட்டி விட்டது போல் ஆனது..
“ நான் தான் சொன்னேனே அத்தை .. நீங்க எங்கே என் பேச்சை கேட்டிங்க..” என்ற அவளின் பேச்சை சர்வா முழுவதும் முடிக்க கூட விட வில்லை..
“ இதோ இதுவும் நான் தனியாக போக காரணம்.. நான் அன்னைக்கு வனி மான்சியை என்ன செய்ய பார்த்தா என்று சொல்லியும் நீங்க அவளை எதுவும் செய்யவில்லை..
ஏன் குறைந்த பட்சம் .. இந்த வீட்டு பெரியவர்கள் அவளை கண்டித்து இருந்தால் கூட என் மனது கொஞ்சம் ஆறி இருக்கும்.. ஆனால் நீங்க..?” என்று கேட்டவன் அடுத்து பேசாது தன் தந்தை முகத்தை தான் சர்வேஷ்வரன் பார்த்தான்.
.
மகன் பார்வையில் தலை குனியும் நிலை ஆனது அவன் தந்தை வெங்கடபூபதிக்கு,..
அன்று சர்வா சொன்ன அன்றே துளசி இறந்த செய்தி.. அடுத்த இரண்டு நாள் கழித்து தன் அண்ணனிடம் அவர் பேசினார் தான்..
“ இந்த வனி இப்படி செய்ய நினைத்தாளே அண்ணா.. இதை மட்டும் சர்வா கண்டு பிடிக்கவில்லை என்றால், என்ன ஆகி இருக்கும்.. மான்சியும் இந்த வீட்டு மருமகள் தான்..
அவளுக்கு ஒன்று என்றால், இந்த குடும்பமும் பாதிக்கும்.. இது ஏன் வனிதாவுக்கு புரியவில்லை..” என்று கேட்டதற்க்கு அவர் அண்ணன் அதை பெரியதாக எடுத்து கொள்ளாது..
“ விடு வெங்கடா.. அது தான் எதுவும் நடக்காது சர்வா தான் சமாளித்து விட்டானே…” என்று அண்ணன் பேச்சு அவருக்கு அவ்வளவு உவப்பனதாக தான் இல்லை..
தம்பியின் வருந்திய முகம் பார்த்தவர்.. “ எனக்கும் புரியுது வெங்கடா.. ஆனால் இப்போ வனியை ஏதாவது செய்ய நினைத்தால், படுத்துட்டு எச்சை துப்பினது போல் ஆகி விடும்…
என்றவரின் பேச்சு சர்வாவுன் தந்தைக்கு ஏற்புடையதாக இல்லை தான்.. ஆனால் பெரியவரை எதிர்த்து எப்படி பேசுவது என்று தெரியாது இருக்க..
“ என்ன இருந்தாலும் வனி நம்ம தங்கை மகள் … அவளை ஏதாவது திட்டினா நம்ம பத்து தான் வருத்தப்படுவா…” என்றவரிடம் அடுத்து அதை பற்றி பேசாது..
“ இனி இது போல் நடவாது இருந்தால் பரவாயில்லை… மான்சி அம்மா இறந்ததால் சர்வா அதை மறந்துட்டு இருக்கான்… இல்லேன்னா…” என்று சர்வாவின் தந்தை மகனின் குணம் அறிந்து தான் பேசினார்..
ஆனால் சர்வாவின் பெரியப்பா.. “ நம்ம வீட்டு பைய்யன் அப்படி எல்லாம் நம்மை எதிர்த்து எல்லாம் பேச மாட்டான் விடு..” என்று விட்டார்..
ஆனால் சர்வா எதுவும் பேசாது அவன் செயல்களின் மூலம் செய்து முடித்து இருந்தான்..
வீட்டில் இருந்த அனைவரையும் பேச விடாது அவன் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது…
“ மான்சியும் இந்த வீட்டு மருமகள் தான்.. அந்த நினைப்பு இந்த வீட்டில் யாருக்காவது இருக்கா என்று எனக்கு தெரியல…” என்று சொன்னவன் பின் அவனே..
“ நானும் ரொம்ப யோக்கியம் எல்லாம் கிடையாது… கல்யாணம் ஆன புதியதில் அவள் அம்மாவை வைத்து நான் அவள் மனதை நோக அடித்து இருக்கேன் தான்..
ஆனால் அவள் நடத்தை..” என்று தன் பேச்சை நிறுத்திய சர்வா அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு..
“ அவள் பேச்சில், அவள் உடையில் அவள் நடத்தையில் ஏதாவது குறை பார்த்து இருக்கிங்களா…?” என்று கேட்டவனுக்கு வனிதாவை தவிர அனைவரும் இல்லை என்று தான் தலையை ஆட்டினர்…
“ அப்போ ஏன் இவளை இந்த வீட்டு மருமகளா நீங்க நடத்தல…?” என்ற அவனின் கேள்விக்கு இப்போது அவன் பெரியம்மா மட்டும்..
“ என்ன சர்வா நீ பாட்டுக்கு பேசிட்டே போற அவளுக்கு இந்த வீட்டில் என்ன குறை..?” என்று கேட்க..
சர்வா.. “ எல்லாம் அவளுக்கு இங்கு குறையாக தான் நடந்துட்டு இருக்கு.. அவளை எல்லோரும் துளசியின் மகளா தான் பார்க்கிறிங்கலே தவிர.. என்னோட மனைவியா யாரும் பார்க்கவில்லை…
“ அவன் பேச்சில் அவன் அன்னை பதறி போனவராக.. “ என்ன சர்வா என்ன என்னவோ பேசுற..?” என்று கேட்டதற்க்கு..
“ ஆமா மா… துளசி மகளா மட்டும் தான் பார்க்கிறிங்க .. அதனால் தான் அவள் அம்மா இறந்த அன்னைக்கு கூட, அவள் பக்கத்தில் நின்னு அவளுக்கு ஆறுதல் தராது.. எதோ மூன்றாம் மனிதரை போல் ஒதுங்கி நின்னுட்டு போயிட்டிங்க..
அதே போல்… இங்கு வந்த இரண்டு நாள் அக்காவும் சரி. தம்பியும் சரி… மதியம் உணவை எடுத்துக்கவே இல்ல…யாரோ நம்ம வீட்டில் இருந்தால் கூட அவங்களை விட்டு விட்டு எப்படி சாப்பிட என்று நீங்க யோசித்து இருக்கிங்க..
நம்ம வீட்டு வேலையாள் ஒருவங்க வீட்டில் இறப்பு.. அவர் இரண்டு நாளில் சாப்பிடாது நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்த போது நீங்க அவங்க கிட்ட என்ன சொன்னிங்க..
“ சாப்பிடு.. சாப்பிட்டாது இருந்தா போனவங்க வந்துட போறாங்களா என்று.. கேட்டு அவங்களை நம்ம வீட்டில் நீங்க சாப்பிட வைச்சிங்க… ஆனா மான்சியும், அவள் தம்பியும் இங்கு சரியா சாப்பிடாது இருந்து இருக்காங்க..
அதுவும் அதோடு தேர்வுக்கு போய் இருக்கா.. மருமகள் என்று வேண்டாம்.. ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது நீங்க அவங்களை நடத்தி இருக்கலாம்..” என்று சர்வா சொல்ல..
அனைவரும் வாய் திறவது ஒரு வித குற்றவுணர்ச்சியோடு தான் வனிதா தவிர அனைவரும் பார்த்தனர்..
வனிதா அப்போது கூட விடாது.. “ நீ தனியா போக எல்லோர் மீதும் பழி சுமத்த பார்க்கிறியா..?” என்று கேட்க..
கோவத்துடன் எழுந்து அவள் அருகில் சென்றவனை அனைவரும் தடுத்து நிறுத்தினர்.. மான்சியோ அவன் கையை கெட்டியாக பற்றியவளாக..
“ வேண்டாம் ஈஷ்வர் .. நீங்க ஒன்றும் அவங்களை செய்யாதிங்க.. அவங்க மீது கை வைத்தா பிரச்சனை நம்ம மீது திரும்பி விடும்..” என்ற மனைவின் அழைப்பும், தன் கை பற்றலும் ஒரு ஆச்சரியத்தோடு பார்த்தவன் ..
அவள் பேச்சை கவனிக்க மறந்து விட்டான்.. ஆனால் பத்மா மான்சி சொன்னதில் பிரச்சனை நம்ம மீது திரும்பி விடும் என்ற வார்த்தையில்..
முதல் முறை அவள் முகத்தை பார்த்து.. “ நீ என்ன என்ன சொல்ற..” என்று முகத்தில் வியர்வை வடிய அவளை பார்த்து கேட்டார்..
உடனே பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சூர்ய நாரயணன் பதட்டத்துடன் மனைவியின் அருகில் வந்தவர்..
“ பத்தும்மா நீ ஏன் பதட்ட படுற… உன் உடம்புக்கு ஒத்துக்காது.. மான்சி என்ன செய்ய போறா.. அவள் ஒன்றும் செய்யலடா..” என்று மனைவியை சமாதானம் படுத்திக் கொண்டு இருந்தவரின் சேவியில்..
“ நான் பண்ணுவேன்.. பண்ணுவேன் என்ன பண்ணுவேன்.. பண்ணிட்டேன் என்று சொன்னால் சரியாக இருக்கும்.. “ என்று ஒரு வித ஆளுமையுடன் பேசியவளின் பேச்சை சர்வாவே வியந்து பார்த்தான் என்றால், மற்றவர்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ…
இப்போது சர்வாவின் தந்தை.. “ நீ என்னம்மா சொல்ற..” என்று கேட்க..
“ நீங்க உங்க தங்கை மகள் என்று அவங்க செய்ததை விட்டு விடலாம்..” என்று வனிதாவை கை காட்டி சொன்னவள்..
இப்போது தன் கணவன் பக்கம் பார்வையை செலுத்தி.. “ நீங்க உங்க அத்தை மகள்.. அண்ணி குடும்ப மானம் என்று நினைத்து பாஸ்கருக்கு மட்டும் தண்டனை கொடுத்து வீட்டு, வீட்டு ஆளை விட்டு விடலாம்.. ஆனால் நான்.. அதுவும் என் கனவு… என் தேர்வு அடுத்து தான் என் இலக்கு எனும் போது…
அதை செய்ய விடாது.. அதுவும் எது போல.. நான்கு தடியன்களை.. அவங்க கூட பப்புல கஞ்சா.. என்று எல்லாம் கெட்ட பழக்கத்தை வைத்து இருக்கிற.. அவங்க ஆண் நண்பர்களை வைத்து… “
ஆண் நண்பர்கள் என்று மான்சி சொல்லும் போதே வனிதாவை கேவலமான ஒரு பார்வை செலுத்திய மான்சி…
“ கடத்தி இரண்டு நாள் வைத்து பின் என்ன அனுப்புவதா ப்ளான்.. அந்த ப்ளான் எதுக்கு.. சொல்லுங்க எதுக்கு…? சரி என்னை பயம் முறுத்த.. இல்லை என்னை எக்ஸாம் எழுத விடாது செய்ய என்று சொன்னாலும்..
போதைக்கு அடிமையா இருக்கிறவங்க கூட நாளு நாள்.. என்னால் நல்ல படியா இருக்க முடியுமா…? சொல்லுங்க.. இல்ல அது தான் இவங்களோட ப்ளானேவா… இல்ல எல்லோரும் இவங்களை மாதிரியே கெட்டு அலைய சொல்றாங்களா…?” என்று மான்சி சொல்லும் போதே வனிதா அவளை அடிக்க கை ஒங்கி விட்டாள்..
ஆனால் அடிக்க விடாது சர்வா அவள் கையை பற்றி கொள்ள.. வனிதா வெறிக் கொண்டவள் போல..
“ விடு சர்வா விடு.. என்ன அவள் விட்டா பேசிட்டே போறா.. யாரும் இல்லாத அனாதை நாய்… எது செய்தாலும் கேட்க ஆள் இல்லாதவள் எனும் போதே..
சூர்ய நாரயணன்..” வனி போதும் வாயை மூடு..” என்று இது வரை அமைதியாக இருந்தவர் அவளின் இந்த பேச்சில் மகளை அதட்டினார்..
எப்போதும் சூர்ய நாரயணனை பார்த்தால் பேசாது தலை குனிந்து போய் விடும் மான்சி இப்போது அவரை நேர்க்கொண்டு பார்த்தவளாக..
“ இவ்வளவு நேரமும் எப்படி இருந்திங்களோ இப்போவும் அப்படியே இருந்தா நல்லா இருக்கும்..” என்று தன் கையை வாய் மீது மூடி சைகையில் செய்து காட்டியவளின் செய்கையை பார்த்து சூர்ய நாரயணன் விக்கித்து நின்று விட்டார் என்றால்.
அந்த வீட்டின் இரண்டு பூபதிகளும்.. “ என்ன இது பேச்சு.. அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை…” என்று மான்சியை கண்டிக்கவும்..
அவளுக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ.. அது தான் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்து சீண்டி கொண்டு இருந்தால், ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்களின் அனைத்து சீண்டல்களுக்கும் சேர்த்து வைத்து பதில் கொடுப்பார்கள் என்ற சொல்லுக்கு ஏற்ப..
மான்சி இப்போது தன் இரண்டு மாமனார்களையும் பார்த்து.. “ இதோ இது தான் பிரச்சனை.. வீட்டு மருமகள்களுக்கு ஒரு நியாயம்.. அதே மருமகன்.. அவன் என்ன செய்தாலும், அந்த மாப்பிள்ளை மரியாதை போகாது பார்ப்பதால் தான்..
இது போல் ஆளுங்க அவங்க மனம் போல் ஆட்டம் போட்டுட்டு நானும் பெரிய மனதன் தான் என்று வெள்ளையும் சொள்ளையுமா சுத்திட்டு இருக்காங்க..” என்று சூர்ய நாரயணனை காட்டி சொன்னவளை சர்வேஷ்வரன்…