“ மான்சி சும்மா இரு, நான் தான் பேசிட்டு இருக்கேன்ல்.. நீ பேசாது இரு..” என்று மான்சியை அமைதி படுத்த நினைத்தான்..
ஆனால் மான்சி.. “ நான் எதுக்கு சும்மா இருக்கனும்.. நீங்க பேசுவீங்க தான்.. ஆனால் அந்த பேச்சு எனக்கானதோ என் தம்பிக்கானதோவா தான் இருக்கும்..
ஆனால் எ..ன்… அ..ம்..மா..” என்று சொல்லும் போதே மான்சியின் தொண்டை அடைத்து அடுத்து பேச்சு வருவேனா என்று சண்டி தனம் செய்ய..
வனிதா.. “ உன் அம்மா என்னவோ உத்தமி போல் பேசுற…?” என்ற அவள் கேள்வியில் மான்சி அவளை அக்கினி பார்வை பார்த்தவளாக..
“ நான் எப்போ அப்படி சொன்னேன்.. நான் இப்போ சொல்வது உன் அப்பாவை பத்தி.. உன் அப்பாவும் ஒன்னும் உத்தமன் கிடையாது… என் அம்மா உங்க அப்பாவோடு வாழும் போது அவங்க யாருக்கும் துரோகம் செய்யல..
ஏன்னா அப்போ என் அப்பா உயிரோடு இல்ல… ஆனால் உங்க அப்பா… கட்டின பெண்டாட்டிக்கு முடியல.. வெளியில் ஒரு ஆள் தேவை.. அதுவும் பிரச்சனை இல்லாது.. எந்த நாதியும் இல்லாதவ இருந்தா எல்லாத்துக்கும் வசதி…
அந்த சமயத்தில் என் அம்மா.. அவங்க வேலை செய்த வீட்டில் அவங்களுக்கு எவ்வளவோ பிரச்சனை வந்து போது கூட பல்ல கடிச்சிட்டு தான் அங்கே இருந்தாங்க ..
ஆனா பிரச்சனை எனக்கு எனும் போது…” என்று அவள் சொல்லும் போதே அவள் உதடு நடுங்கியது…
அதை அவளாள் நினைத்து பார்க்க கூட முடியவில்லை.. அவளின் குரல் நடுங்கிய பேச்சில், அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் மான்சியை பார்த்தனர் என்றால், நம் வனிதா அந்த சமயத்தில் கூட ஒரு வித ஆர்வத்தோடு..
“ உனக்கு உனக்கு என்ன நடந்து..?” என்று பர பரத்து கேட்ட கேள்வியில், மான்சி இப்போது தன் சுய நினைவுக்கு வந்தவளாக அவளை கேவலமான ஒரு பார்வை பார்த்து..
“ நீ ஆவளோடு எதிர் பார்த்த எதுவும் நடக்கல.. ஆனால்..” என்று அதை எப்படி சொல்வது என்று அவள் தயங்கும் போதே சர்வா இடை மறித்து அது தான் சூர்யா மாமா வந்துட்டாரா..
வீணா அதை பத்தி எல்லாம் நினைக்க வேண்டாம் மான்சி…
நீ அதை விடு..” எனும் போது தான் மான்சி தான் என்ன சொல்ல வந்தோம் என்பதே அவளின் நியாபகத்தில் வந்தது..
அதுவும் கொஞ்ச நேரம் முன் ஒன்றும் இல்ல.. அவர் மனைவி பத்மாவதி பதட்டத்துடன் பேசுவதையே தாங்க முடியாது தாங்கி பிடிப்பவர்..
என் தாய்,,எந்த பிரச்சனையும் இல்லாது முழு ஆரக்கியத்தோடு இருந்த பெண்மணி மனஅழுத்தம் காரணமாக இறந்து விட்டாள்..
அது யாரால்..? காரணம் என்ன..? இது கூட இந்த மனிதன் யோசிக்கவில்லையா..? நான் யோசிக்கிறேனே.. தாய் இறந்ததில் இருந்து அவர்களின் இறப்புக்கு தாங்களும் ஒரு காரணமா…? என்று எங்கள் மனசாட்சி எங்களை குத்துக்கிறதே..
இவருக்கு அது போல் எதுவும் இல்லையா…? மன சாட்சி ஒன்று இருந்தால் தானே குத்த… சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக ஆக்கி கொண்ட உயர்ந்த மனிதன் அல்லவா இந்த பெரிய மனிதர்..
அதை அனைவரும் முன்னும் சொல்லவும் செய்தாள்… “ நாதி இல்லாது இருப்பவங்களுக்கு ஒரு அண்ணனா இருந்து கூட நீங்க எங்க அம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கலாம்..
இல்லேன்னா .. உங்க மனைவி உடல் நலம் இல்லாதவங்க தானே.. வீட்டை பார்த்துக்கும் ஒரு ஆளா வேலைக்காரியாக கூட நீங்க எங்க அம்மாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்கலாம்..
ஆனால் நீங்க உங்க மனைவி முடியாத செயலுக்கு சப்டியூட்டாக எங்க அம்மாவை யூஸ் செய்துட்டிங்க..’ என்றவரின் பேச்சில் வனிதா மீண்டும் எதோ பேச வர..
அவளை பேச விடாது…” நீ சொன்னது போல எங்க அம்மா நல்லவங்க இல்ல தான்.. அதே போல் உங்க அப்பாவும் நல்லவங்க இல்ல… அதோட நீ…. நீ என்ன என்ன செய்ய நினைத்த..” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தட்சணா மூர்த்தியோடு இரு காவலர்கள் அங்கு வந்தனர்..
காவலர்கள் எதற்க்கு என்று யோசித்து கொண்டே சர்வா தன் மனைவியை பார்க்க அவளோ அந்த வீட்டில் இருப்பவர்களின் யார் முகத்தையும் பாராது..
தட்சணா மூர்த்தியின் அருகில் சென்றவள்.. “ என்ன அங்கிள் எல்லாம் நான் சொன்னது போல் தானே..” என்று கேட்க..
“நீ சொன்னது போல் செய்து விட்டேன் மா.. ஆனால் அவங்க பண பலத்தின் முன்னும் செல்வாக்கு முன்னும் போன வேகத்துக்கு வெளியில் கூட்டிட்டு வந்து விடுவாங்க..” என்று சொன்னவரின் பேச்சை மான்சியும் ஏற்றுக் கொண்டாள் தான்..
“ ம் தெரியும்.. அது எனக்கும் தெரியும் அங்கிள்.. ஆனால் நான் மண் புழு கிடையாது…
மண்ணிலேயே புதைந்து போக.. மண் புழு கூட மண்ணுக்கு உரமாக தான் ஆகிறது..
நான் ஒரு மனிஷி… என்னை என்ன செய்தாலும், ஏன் என்று கேட்க மாட்டாங்க என்று நினைத்து கொண்டு இருக்காங்க… இல்ல எனக்கு நானே கேட்பேன்.. என்று தெரிந்தால் எனக்கு அது போதும் அங்கிள்..” என்று பேசிக் கொண்டு இருந்த மான்சியை பார்க்க தட்சணா மூர்த்திக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது..
சிறுமியாக தான் பார்த்த பெண்ணா…? தன் தம்பியின் செயலால் தன்னை பார்த்து கூட அவள் மிரண்ட போது எல்லாம் சின்ன பெண் பயப்படுகிறாள் என்று தான் அவர் அப்போது நினைத்தது..
ஆனால் தன் தம்பியின் சுய ரூபம் தெரிந்த பின்.. அதை நினைக்கும் போது அவரும் ஒரு பெண்ணின் தந்தை என்ற வகையில் தன் தம்பியே ஆனாலும் அவர் பாஸ்கரனை மன்னிக்க தயாராக இல்லை..
அதனால் தான் சூர்ய நாரயணனோடு சேர்ந்து பாஸ்கரனுக்கு நல்ல பாடத்தை புகட்டினர்.. ஆனால் பின் நடந்தது.. சூர்ய நாரயணன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பார் என்று இவர் அனுப்ப..
அவர் கொடுத்த அடைக்கலம் எப்படி பட்டது என்று தெரிந்த பின்.. அது எப்படி பேச கேட்க.. இருவரும் சிறிய வயதில் இருப்பவர்கள் இல்லையே..
அவர்கள் வாழ்வு அவர்கள் முடிவு என்று ஒதுங்கி விட்டார்.. பின் மான்சி நவீனை பார்க்க செல்லும் போது எல்லாம் மான்சியின் கண்ணில் தெரிந்த பயத்தை பார்த்தவர்..
தன்னை பார்த்தால் மான்சிக்கு வேண்டாத நினைவுகள் தான் வரும்.. அவள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்து பின் அங்கு செல்வதையே விட்டு விட்டார்..
நீண்ட ஆண்டுகளுக்கு பின் மான்சி சர்வேஷ்வரனோட திருமண செய்தியை கேட்ட பின்.. அவர் அடைந்த நிம்மதிக்கு அளவே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்…
அந்த பெண் இனியாவது ஒரு கவுரவமான வாழ்க்கை வாழட்டும் என்று நினைக்க.. அதற்க்கும் பங்கம் வருவது போல் தன் தம்பியின் செயலிலேயே ஆடி விட்டவர்..
அடுத்து சூர்ய நாரயணனின் மகளும் மான்சிக்கு தீங்கு செய்ய நினைத்ததை கேட்ட பின் அவரால் சும்மா இருக்க முடியவில்லை..
மான்சியோடு அவர் தனித்து பேச.. அப்போது தான் அவளுக்கு வனிதா செய்த செயல்கள் தெரிய வந்தது… தன் அன்னை இறந்த இரண்டாம் நாளே பார்க்கலாம் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று தான் இத்தனை நாள் அமைதி காத்தாள்..
ஆனால் பாஸ்கரை மட்டும் தண்டித்து வனிதாவை விட்டதில், அவளுக்கு அவ்வளவு கோபம்… தன் பின் தொடர்வது அவளுக்கு தெரியாது.. பாஸ்கர் விசயத்தின் மூலம் தான் வனிதாவின் செயல் வெளி வந்தது..
அந்த கை பேசி அழைப்பு வராத பட்சத்தில்.. வனிதா திட்டம் நிறைவேறி இருந்தால், அதை நினைக்க நினைக்க அவள் மனது ஆற வில்லை…
விட கூடாது.. அவளை பொறுத்த வரை இப்போது செய்த பாஸ்கரன் செயலை விட வனிதா செய்தது தான் பெரியது..
பாஸ்கரை தண்டித்தவர்கள் வனிதாவை ஏன் விட்டனர்..
ஆம் பாஸ்கரை கஞ்சா கேஸில் ஜாமினில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு சர்வா அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டவன்..
வனிதவின் செய்லால் மான்சியின் பாதுகாப்புக்கு என்று இரண்டு பேரை ஏற்பாடு செய்து விட்டான்…
ஆனால் மான்சிக்கு இது நிறந்தர தீர்வாக தெரியவில்லை… தன்னை செய்தால் பிரச்சனை இல்லை என்று நினைப்பவர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்க..
தட்சணா மூர்த்தி நான் செய்கிறேன்.. குறைந்த பட்சம் வனிதாவுக்கு பயத்தையாவது காட்டுக்கிறேன் என்று இதோ காவல் அதிகாரி வந்து வனிதாவை மான்சி செய்த புகாரின் பெயரில், அரஸ்ட் செய்து தான் அழைத்து சென்றார்கள்..
உடனே பணமும் செல்வாக்கும் வேலை செய்து வனிதா வெளியே வந்து விட்டாள் தான்..
ஆனால் அவளை அரஸ்ட் செய்த அந்த செயலில் வனிதா உண்மையிலேயே ஆடி போய் விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்…
மான்சியின் செயலுக்கு பத்மாவதி ஏதோ திட்ட வர.. சர்வா அவரை அடக்கி விட்டார்..
சர்வாவே மான்சி இப்படி செய்வாள் என்று நினைக்கவில்லை… இது வரை அமைதியாக இருந்தவளா என்று தான் பார்த்தான்..
அதை அவளிடமே கேட்கவும் செய்தான்.. “ அப்போ எனக்கு சின்ன வயசு..” என்று அவள் ஆரம்பிக்கும் போதே சர்வாவின் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது…