இருவருக்கும் ஆண்டு கணக்கில் எல்லாம் காதல் கிடையாது.. அதே போல் பெரியவர்கள் முறைப்படி செய்து வைத்த திருமணம் என்றாலும், அது நடந்த சூழல்..அதுவும் இருவருக்கும் இருக்கும் அந்த உறவில் இடையே நின்ற சூர்ய நாரயணன்.. மான்சியின் தாயின் வாழ்க்கை முறையால் மான்சிக்கு வந்த சங்கடங்கள்..
என்று அத்தனை வேற்றுமைகள் இருந்தும்…. ஒரே நாள் அந்த உறவில் இருவரும் என்ன கண்டார்களோ என்ன உணர்ந்தார்களோ… ஆனால் ஏதோ ஒரு நிறைவை கண்டு இருந்து இருப்பார்கள்.. நான் உனக்கானவன்.. நீ எனக்கானவள்…
அதனால் தான்.. முதல் நாள் உறவை தொடராது.. மான்சியின் மனதுக்கு மதிப்பு கொடுத்து தள்ளி இருந்தானோ.. இல்லை அவள் படிக்கும் போது குழந்தை ஏதாவது வந்து விட்டால், அவள் கனவு கலைந்து விடும் என்று நினைத்தானோ..
ஆனால் ஏதோ ஒன்று இவர்கள் இருவருக்கும் போட்ட அந்த மூன்று முடிச்சி.. அந்த கடவுள் அவிழ முடியாது பலமாக தான் போட்டு விட்டார் போல.
அதனால் தான் இத்தனை சிக்கலையும் இருவரும் ஒரு சேர பிரித்து எடுத்து, இவர்கள் இருவரும் பிரிக்க முடியாது பிணைத்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்…
பத்மாவதிக்கு வனிதா அரஸ்ட் ஆகி அன்றே வெளியில் வந்தால் கூட.. மனது ஆறவில்லை.. இரு அண்ணங்களின் முகத்தை பார்க்க முடியவில்லை..
“ என்ன வளர்த்து இருக்க உன் இரண்டு பெண்களையும்.. தங்கை மகள்கள் என்று தான் எங்க வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர நினைத்தொம்..
முதல் மகளை கொண்டும் வந்தோம்.. அவளை பார்த்தே சின்ன மகளை எடுக்க தான் வேண்டுமா என்று உன் இரண்டு அண்ணிங்களுக்கும் விருப்பம் இல்லாது தான் போயின..
நாங்க தான் வலுக்கட்டயமாக என் தங்கை மகள் தான் இந்த வீட்டு மருமகள் என்று எங்க பெண்டாட்டி வாயை அடைத்து சம்மந்த பேசினோம்..
சர்வா.. நீங்க பார்த்து முடிங்க எறு அவன் வாழ்க்கையை எங்க கையில் தூக்கி கொடுத்தான்..
ஆனால் நடந்தது…? எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்… வயது பெண் எங்கு போகுது எங்கு வருது என்று பார்க்க மாட்டியா..? கண்டிக்க மாட்டியா…? வீட்டில் இதோடு வேறு என்ன வேலை உனக்கு..?
ஸரி அது தான் போனது என்று விட்டால், இப்போ உன் மகள் என்ன காரியம் செய்ய இருந்தா… அந்த பாஸ்கருக்கு சர்வா என்ன தண்டனை கொடுத்தான் தெரியும் தானே…
அதே தண்டனையை வனிதாவுக்கு கொடிக்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்..? பார்த்து நடந்துக்க. இப்போ எல்லாலோருடைய செயலால் சர்வா தனியா போகிறான்…” என்று சொன்ன அண்ணன்மார்கள்..
பின் வனிதாவை பார்த்து.. “ மகிக்கு உன் மேல் கோபம் குறையல.. குறையுமா என்று கூட தெரியல… ஆனால் ஒன்று… நல்லபடியா வாழும் சூழல் அனைத்தும் கொடுத்து..
சமூகத்தில் மதிப்பு மரியாதை.. அந்தஸ்த்து, உறவு முறைகள் என்று எல்லாம் நல்ல படியாக அமைந்தும்.. நீங்கள் செய்த செயலாலேயே உங்க வாழ்க்கையை மூழ்கி விட்டது..
ஆனால் மான்சிக்கும், நவீனுக்கும், படிப்பு.. அது ஒன்று தான் அவங்க கையில் இருக்கும் பிடிப்பு.. அதை வைத்து அவர்களில் அந்த கரை படிந்த வாழ்க்கையில் இருந்து தன்னை மீட்டு எடுத்து கொண்டார்கள்..” என்று சொன்னவரின் பேச்சை அனைவரும் அமைதியாக கேட்க வேண்டியது தான் ஆனதே ஒழிய…
மகளின் வாழ்க்கைக்காக கூட பத்மாவதி தன் அண்ணன்மார்களிடம் வாயை திறந்து பேச முடியவில்லை.. காரணம் அண்ணன்களின் அருகில் நின்று கொண்டு இருந்த அண்ணிமார்களின் முறைப்பில் அமைதியாகி விட்டார்..
ஆனால் போகும் போது சூர்ய நாரயணனை அவரின் இரு மச்சான்களும்…
“ தப்பு தான்.. என் தங்கையின் பிரச்சனை தெரிந்து அவள் ஆசைப்பட்டாள் என்று அவள் உடல் நிலையை பற்றி உங்களிடம் சொல்லாது திருமணம் செய்து வைத்தது தப்பு தான்..
ஆனால் நீங்க செய்தது…? உங்களுக்கு ஒரு துணை உடல் ரீதியாக கண்டிப்பா வேண்டும் என்றால், என் தங்கையை அவள் உடல் நலனை காட்டியே விவாகரத்து செய்து இருக்கலாம்..
இல்லை எங்களிடம் வந்து பத்துவின் பிரச்சனையை சொல்லி இருக்கலாம்..”
ஆம் திருமணத்திற்க்கு முன் சூர்ய நாரயணனிற்க்கு பத்மாவதியின் உடல் நிலை தெரியாதது போலவே..
அதன் பின் அவர் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட கூடாது என்ற விவரத்தை சூர்ய நாரயணனும் தன் மச்சான்களிடம் சொல்லவில்லை
..
அதே போல் பத்மாவதியும் அண்ணன்களிடம் சொல்ல முடியாத விசயம் ஆனாலுமே, அன்னை போல் பாசம் காட்டும் அண்ணிகளிடம் சொல்லி இருக்கலாம்.. ஆனால் அவரும் சொல்லாது விட்டு விட்டார்…
குறைந்த பட்சம் துளசி விசயம் தெரிந்து இரண்டு அண்ணன்களும் கோபம் கொண்ட போதாவது பத்மாவதி தன் அண்ணனிடம் சொல்லி இருக்கலாம்..
அனைவரும் அவர் அவர் சூழலுக்கு ஏற்ப உண்மையை மறைத்து அவர்களின் சூழலுக்கு ஏற்ப நிலமையை கைய்யாண்டு கொண்டனர்..
ஆனால் அவர் அவர் சூழலுக்கு பலியாக பார்த்தது மான்சியும் நவீனும் தான்… சமூகத்தில் அவர்களுக்கு கிடைத்த பெயர்… வேறு..
ஆனால் சமூகம் அவர்களை சாட்டிய அந்த குற்றசாட்டே அவர்களை இவர்கள் முன் தாங்கள் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற வேகத்தை கூட்டியது….
மான்சியை தவறாக பேசியவர்களே ஏன் மற்றவர்களை விடுங்கள்.. சர்வேஷ்வரனே மான்சியை பிடித்து இருந்தாலுமே, அவள் அன்னையை வைத்து அவளை தவறாக தானே பேசினான்…
பின் மான்சியின் நடத்தை, அவளின் அமைதி.. யார் வம்புக்கும் செல்லாது… இருக்கும் அவளின் செயல். அனைத்தும் பார்த்து சர்வேஷ்வரனுக்கு பிடித்தது போலவே சர்வேஷ்வரனின் வீட்டில் இருப்பர்கள் அனைவருக்குமே பிடித்து விட்டது..
ஆனால் அவர்களுக்கு பிடிக்கும் நேரம் மான்சி அந்த வீட்டில் இல்லாது தனியாக போய் விட்டாள்…
போய் விட்டாள் என்பதை விட தன் மகன் அழைத்து சென்று விட்டான் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
தனி குடித்தனம் சென்ற அந்த நாளை மான்சியாலும் சரி.. சர்வேஷ்வரனாலும் சரி மறக்கவே முடியாது..
மான்சி அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்வை இடும் போது… சர்வா..
“ ஏய் மாசி… அந்த வீட்டோட இது சின்ன வீடு தான்..” என்று வீட்டின் அளவை வைத்து தான் சர்வா சொன்னான்…
ஆனால் அந்த சின்ன வீடு என்பது உங்கள் வாயில் இருந்து கூட வர கூடாது என்று அவன் வாய் மீதே இரண்டு வைத்து விட்டாள் அவள்…
“ இல்ல இந்த வீட்டை இப்படி ஆசையா பார்க்கிறியே அதனால் தான்..” என்று தன் உதட்டில் அவள் அடித்ததால் பட்ட காயத்தை அவன் விரும்பும் வகையில் அவளிடம் ஒத்தடம் வாங்கிய பின் கேட்டான்…
“ இது எனக்கான வீடு… இதில் என் தம்பியும் நானும்… சுதந்திரம இருப்போம்.. இனி எங்களை யாரும் தப்பா பார்க்க மாட்டாங்க.. பேச மாட்டாங்க…” என்று கண்களில் கனவு மின்ன சொல்லிக் கொம்டு இருக்கும் போது நவீனும் அக்காவின் கை பற்றிக் கொண்டு அவள் மகிழ்ச்சியில் பங்கு கொண்டான்..
அடுத்து அவளின் கனவை நோக்கி அவளின் பயணம் தொடர்ந்தது… ஆம் தேர்வில் அவள் வெற்றி பெற்றாள்… பயிற்ச்சிக்காக முசோலின் சென்றவள் அதிலும் நல்ல முறையில் தேறி.. காஞ்சிப்புரம் மாவட்டத்திற்க்கு கலெக்ட்டர் என்ற பதவியோடு அவள் பொறுபேற்ற போது.. அனைவரின் பார்வையும் அவள் மீது மரியாதையாக நோக்கியது…
நவீனும் அவன் நீட் தேர்வில் வெற்றி பெற்று இப்போது மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டில் இருக்கிறான்.. அனைத்திற்க்கு உற்ற துணையாக இருப்பது சர்வேஷ்வரனே..
வாழ்க்கையில் பிறப்பு நமக்கு எப்படி அமைந்ததோ… அது நம் கையில் இல்லை.. ஆனால் நாம் வாழும் வாழ்க்கையும், வாழ போகும் வாழ்க்கையும் நம் கையில் தான் இருக்கிறது…