சர்வா அந்த பதட்டமான சூழ்நிலையிலும் நல்ல வேலை தங்கள் அறைக்கு வந்த பின் தான் கேட்டோம் என்று ஆசுவாசம் அடைந்தான்…
மான்சி என்ன சொல்ல போகிறாள் என்பதை சர்வா ஒரளவுக்கு அனுமானித்து தான் இருந்தான்.. பாஸ்கரன் மான்சியை பெரியதாக செய்யவில்லை என்றாலும், ஏதோ செய்து இருக்கிறான் என்பது அவன் கணிப்பு..
அந்த கணிப்பில் அவன் இதுவா..? அதுவா..? என்று யோசித்து வைத்து இருக்க… ஆனால் மான்சி சொன்ன…
“அப்போ நான் அவனை ஒன்றுமே செய்ய முடியல.. அவன் என்னை என்ன செய்ய சொல்றான் என்று கூட புரியவில்லை..” என்று மான்சி சொல்லும் போதே..
‘ இவளை அவன் என்ன செய்ய சொல்லி கேட்டு இருப்பான்…? அவன் தான் இவளை .. என்று சர்வா யோசிக்கும் போதே..
மான்சி சொன்ன ..” என் கையை அவன் **** அங்கு அங்கு கொண்டு போய் வைப்பான்… முதல்ல எனக்கு சுத்தமா தெரியல பின்..” என்று சொல்ல முடியாது அவள் உதடு நடுங்க பேசிக் கொண்டு போனவளை… மேலும் பேச விடாது அவள் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்ட சர்வா..
“ வேண்டாம் டா.. நீ ஒன்றும் சொல்லாதே.. ஒன்றுமே எனக்கு தெரிய வேண்டாம்..” என்று அவன் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கி விட்டது..
எதற்க்கும் கலங்காதவன் சர்வேஷ்வரன்.. நாளை திருமணம் இன்று மணப்பெண்ணுக்கு கருக்கலைப்பு எத்தனை முறையோ நடந்து இருக்கிறது என்று தெரிந்த பின் கூட கலங்காது அடுத்து என்ன என்று யோசித்தவன் தான் அவன்..
ஆனால் தன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அழும் தன் மனைவிக்கு என்ன சொல்வது என்று கூட தெரியாது என்பதை விட அவள் அனுபவித்த அந்த வேதனை..
அதுவும் அந்த வயதில்.. தான் ஒரு ஆணாக பிறந்ததை நினைத்தே சீ என்று ஆகி போனது.. அப்படி அவனே அவள் பட்ட வேதனையை ஜீரணித்து கொள்ள முடியாது கண் கலங்கி கொண்டு இருக்கும் போது, அவன் எப்படி தன் மனைவிக்கு தைரியத்தையும் ஆறுதலையும் கொடுக்க முடியும்…?
தன்னை மார்பில் புதைத்து கொண்டவன் .. “ நினைக்க வேண்டாம் என்று சொல்லோடு வேறு எதுவும் சொல்லது இருந்ததில் மான்சியின் மனம் ஒரு நிமிடம் கலங்கி போய் விட்டது..
இவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா..? என்னை பார்த்து அருவெறுப்பு இப்படி ஏதாவது படுவானா…?
சொந்த அத்தை மகளை பற்றி கேள்வி பட்டதும் தூக்கி எரிந்து விட்டான்.. ஒழுக்கம் குடும்ப மானம் என்று திருமணம் ஆன புதியதில் தன்னிடம் இதை பற்றி தான் நிறைய முறை பேசி இருக்கிறான்..
தன்னை இப்படி செய்ய சொன்னான் என்று தெரிந்ததும்.. நான் கரை படிந்தவள் என்று நினைத்து விட்டானோ…
மனது என்பது ஒரு ராட்டிணம் போல்.. அது நினைவுக்கு ஏற்ப சுழலும் என்பது போல் தான் அவள் மனது நொடிக்கு கண்ட படி சுழண்டு கொண்டு இருந்தது…
அவனோடு வாழ்ந்தது ஒரு நாள் தான் .. ஆனால் அதை மனதில் ஒராயிரம் முறை நினைத்து இருப்பாள் என்பது அவள் மட்டும் அறிந்த ரகசியம் அல்லவா..?
தன்னை கேளாது தன்னை அவன் தொடவில்லை என்றாலும், தன் விருப்பம் இல்லாது அந்த நிகழ்வு நடக்கவில்லை என்பது அவள் உணர்ந்தது தானே..
பின் வரும் நாளில் ஒரிரு இரு முறை தன்னை தன் அன்னையோடு தொடர்பு படுத்தி பேசும் போது துடித்தாள் தான்..
ஆனால் அதன் பின் அது போல் எந்த பேச்சும் அவனிடம் இல்லாது தான் கேட்காது தனக்கு என்ன வேண்டும் என்று பார்த்து செய்ததோ.. இல்லை பார்க்க அவன் நன்றாக இருப்பதில் வயது கோலாரில் வரும் ஆசையோ.. இல்லை தாலி கயிற்றின் மாயமோ…
ஏதோ ஒன்று… ஆனால் இப்போது எல்லாம் மான்சிக்கு சர்வாவை பிடித்து தான் இருக்கிறது… அதுவும் மிகவுமே..
அதுவும் தன் அன்னை இறப்பில் தன் அன்னையின் உடலுக்கு செய்த மரியாதை.. எந்த இடத்திலும் சூர்ய நாரயணனை நிற்க வைக்காது துளசியின் இறுதி யாத்திரையை ஒரு மருமகனாக.. செய்ய வேண்டிய முறையை செய்தது..
அனைத்தும் பார்த்து அவளுக்கு அவன் மீது அவளுக்கு ஒரு வித தாக்கம் உருவானது உண்மை…
அதனால் தான் தன் தாயிடம் கூட சொல்லாத ஒரு நாள் பாஸ்கரன் அந்த வீட்டில் இல்லாததை பார்த்து…
“ அம்மா அந்த அங்கிள் இனி வர மாட்டாரா..?” என்றதற்க்கு துளசி சொன்ன இல்லை என்ற பதிலில்..
“ ஐய் ஜாலி..” என்று மான்சி குதிக்க..
துளசி அலண்டு போனவளாக.. “ என்ன என்ன ஜாலி.. அவன் உன்னை என்ன பண்ணான்.. என்ன செய்தான்.. “ என்று பதறி கேட்க..
முழுவதும் சொல்லாது ஒரு சிலது தான் அந்த வயதிலேயே மான்சி சொன்னாள்.. சொல்ல கூடாது என்பது எல்லாம் கிடையாது..
ஆனால் சொல்ல தெரியவில்லையா..? இல்லை சொன்னால் தன்னை அடிப்பாங்களா.. என்று ஏதோ ஒன்று அவளை தன் தாயிடமே முழுவதும் சொல்ல விடாது தடுத்தது என்பது மட்டும் நிச்சயம்..
ஆனால் சர்வாவிடம்.. சொல்ல கூச்சம் கிடையாது.. எந்த வித தயக்கமும் அவளுக்கு ஏற்படவில்லை..
ஏன் அவன் தன் கணவன் இதை சொன்னால் தன் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் கூட இல்லாது தான் அனைத்தும் சொல்ல பேச்சாய் ஆரம்பித்து விட்டாள்..
என்ன ஒன்று முழுவதும் அவன் சொல்ல விடவில்லை.. இவளும் சுற்றி வளைத்து பேசாது முக்கியமான விசயத்தை போட்டு உடைத்ததில் தான் அவன் மனது தாளாது..
“ வேண்டாம் சொல்லாதே சொல்லாதே..” என்று மட்டும் சொல்லிக் கொண்டு இருந்தவனின் இதயத்துடிப்பு மட்டும் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தவளின் சேவியில் கேட்டு கொண்டு இருக்கும் போது தான் மான்சியின் நினைப்பு எங்கு எங்கோ சென்று விட்டது..
ஆனால் உன் துடிப்புக்கு அர்த்தமே இல்லை என்பது போல்.. உடல் குலுங்கியவனின் அதிர்வில்.. இவள் அதிர்ந்து போய் அன்னாந்து மான்சி சர்வா முகத்தை பார்க்க முயலும் போது..
சர்வாவின் கண்ணீர் துளி மான்சியின் கன்னத்தில் பட்டு அது ஈரம் உணரும் போது தான் மான்சி தன் உணர்வுக்கு வந்து இப்போது அவள் அவனை அணைத்துக் கொண்டு..
“ விடு ஈசா… விடு… மறந்துடு மறந்துடு.. நானும் அதை மறந்துடுறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ..” என்று சொல்லி இவள் வேதனையை அவன் மறக்க இவள் அவனுக்கு ஆறுதல் வழங்கி கொண்டு இருந்தாள்..
சிறிது நேரம் கழித்து தன்னை நிலப்படுத்திக் கொண்ட பின் தன் உள்ளங்கையில் அவன் முகத்தை வைத்து கொண்டு..
“ நீ மறந்து விட்ட தானே.. நீ மறந்து விட்ட தானே..” என்று அவள் கண்ணை பார்த்து அவன் கேட்கும் போதே மீண்டும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுக்க ஆரம்பிக்க..
ஓருவரின் அழுகை மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியுமா..? கொடுக்க முடியும்.. இதோ தான் பட்ட வேதனையை நினைக்கும் போதே, வேதனையில் இவன் கண்களில் இருந்து வரும் அந்த கண்ணீர் எனக்காக.. எனக்காக மட்டுமே… என்று நினைக்க நினைக்க மான்சியின் முகம் கொஞ்சம் புன்னகையை பூசிக் கொண்டது…
முன் போல் தன் கண்ணீரை துடைக்காது சிரித்த முகத்துடன் தன்னை பார்த்து கொண்டு இருந்தவனுக்கு என்ன தோன்றியதோ தன் மிக அருகில் இருந்த அவள் முகத்தை இன்னும் அருகில் கொண்டு வரும் போது…
அகள் முகம் ஒரு வித எதிர் பார்ப்போடு தன் கண்ணை மூடிக் கொண்டாள்.. ஆனால் சிறிது நேரம் சென்ற பின் கூட தான் நினைத்தது நடவாது போகவும் கண்ணை திறந்து பார்த்த உடன் ஒரு கேலி சிரிப்போடு.. அவள் நெற்றி மீது தன் நெற்றிக் கொண்டு முட்டியவன்..
பின் அதே நிலையை தொடர்ந்த வண்ணம்.. “ முடியாது டா.. இப்போ நீ எதிர் பார்ப்பதை என்னால் கொடுக்க முடியாதுடா … ஒரு பாட்டு இருக்கே அது என்ன..?
ஆ தொட தொட தொட மாட்டேன் தொட்டால் நானும் விட மாட்டேன்.. அந்த நிலையில் தான்டா நான் இப்போ இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் தம்பி வந்துடுவான்..
அதோடு இல்லாது இத்தனை நாள் அவனை இதே அறையில் படுக்க வைத்து கொண்டு இன்று வேறு அறை கொடுத்தால்,,
அவன் சின்ன பையனும் இல்ல.. அதே சமயம் வளர்ந்த முழுமையான ஆணும் இல்ல.. இந்த வயதில் நாம் ரொம்ப பார்த்து நடந்து கொள்ளனும்…
இன்னும் இரண்டே நாள் தான்.. நாம நம்ம புது வீட்டுக்கு போயிடலாம்.. அங்கு உன் தம்பிக்கு ஒரு தனி ரூம்.. நமக்கு நமக்கு..” என்று சொல்லிக் கொண்டவனின் காதல் மொழி…
தொடாது பேச்சால் மட்டுமே.. ஒரு அழகிய நிறைவான தாம்பத்திய உறவை கொடுக்க முடியுமா..? முடியும் என்பது போல் தான் தன் பேச்சால் மட்டுமே மான்சியை வெட்கப்படுத்தி கொண்டு இருந்தான்…