வெங்கட பூபதிக்கு மகனின் பேச்சு செல்லும் பாதை புரிந்தவராக.. “ சர்வா அவசரப்படாதே… பொறுமை.. இது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது..
இதில் நம் குடும்பத்தின் மானமும் அடங்கி இருக்கு.. என்ன புரியுதா..?” என்று கேட்ட தந்தையை இப்போது கை கட்டி கொண்டு..
“ நாளைக்கு என் திருமண கண்டிப்பாக நடந்து ஆக வேண்டும்… சூர்ய நாரயணன் மாமாவின் பெண் என்று தான் நான் எல்லோரிடமும் சொல்லி விட்டேன்.. இப்போ நான் என்ன செய்ய…?
அதோ படுத்திட்டு இருக்காளே அவளையே நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா..?” என்ற கேள்விக்கு வெங்கட பூபதி மட்டும் அல்லாது அங்கு இருந்த அனைவருமே, சூர்ய நாரயணனை தவிர்த்து..
“ சீ..சீ..” என்று தான் ஒரு சேர சொன்னார்கள்..
அந்த சீ.. சீயை கேட்ட சூர்ய நாரயணனுக்கு அப்படி ஒரு அவமானம்.. அவர் தவறு செய்யாதவர் கிடையாது. அவரும் யோக்கியமானவர் கிடையாது தான்..
ஆனால் அனைவரின் முன்னும்.. “ ஆமாம். நான் அப்படி தான்…” என்று தலை நிமிர்ந்து தான் சொல்வார்..
ஆனால் இன்று தன் மகளை பற்றிய பேச்சில், அதுவும் தன் தங்கையும் தன் மகளை அருவெருத்து போல் பேசிய அந்த பேச்சில், இப்போதே செத்து விட்டால் நன்றாக இருக்கும் போல் அவருக்கு தோன்றியது..
ஆனால் அவ்வளவு சீக்கிரம் அவர் இறந்து விடுவாரா என்ன..? அவர் செய்த செயல்களுக்கு என்ன தான் ஆயிரம் காரணம் சொன்னாலும், அவர் செய்துக் கொண்டு இருக்கும் செயல்களுக்கு தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்..
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.. இப்போது சூர்ய நாரயணன் அந்த நிலையில் தான் இருக்கிறார்…
சர்வேஷ்வரன் திரும்பவும் சூர்ய நாரயணனிடம்.. “ ம் சொல்லுங்க மாமா.. அந்த பெண் பெயர்.. வயது.. படிப்பு.. சொல்லுங்க ..” என்று என்னவோ வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்க்கு கேட்கும் கேள்வி போல் தன் மாமனிடம் கேட்டான்..
சூர்ய நாரயணன் சொல்ல வில்லை.. அவன் கேள்விக்கு அமைதியே பதிலாக கொடுத்தவர்.. தன் மச்சான்களையும், தன் தங்கையையுமே பார்த்திருந்தார்..
அவர்கள் முகத்தில் கூட சர்வேஷ்வரனின் இந்த பேச்சி பிடிக்கவில்லை தான்… என்ன செயவது என்று யோசிக்கும் போது, சங்கர பூபதி தன் தம்பியிடம்..
“ நம்ம ஒன்று விட்ட தங்கை சகுந்தலா மகள் இருக்கா அவளை பார்க்கலாமா..?” என்று கேட்டதுமே அனைவரும்..
“ம்ம்.” என்று சந்தோஷமாக ஒற்றுக் கொண்டனர்.. சர்வேஷ்வரனை தவிர..
சர்வேஷ்வர்.. “ நான் எல்லோரிடமும் சூர்ய நாரயணன் மாமா மகள் என்று தான் சொல்லி இருக்கேன்… நாளை நீங்க சொன்னது போல அந்த பெண்ணை கட்டினால், ஏன்..? எதற்க்கு..? என்று கேள்வி வரும்.. என்ன அப்போ உண்மையையா சொல்ல முடியும்..?” என்று தன் இரு புருவம் உயர கேட்டவனுக்கு..
“ உண்மையை சொல்லி விடலாம் ..” என்றா சொல்வார்கள்..
இதே பெண் வெளி பெண் இருந்தால், ப்ரஸ் மீட்டிங் வைத்தே சொல்லி இருப்பார்கள்.. ஆனால் ஒன்றுக்குள் ஒன்று எனும் போது, ஒரே குடும்பத்தில் இருப்பவர்களின் மானம் போனால் அது தங்களுக்கு தானே இழுக்கு என்று நினைத்து அமைதியாகி விட்டனர்..
ஆனால் வெங்கட பூபதி.. “ இப்போ நீ சொல்ற பெண் கூட உங்க மாமாவுக்கு பிறக்கல.. அது தெரியும் தானே…?” என்ற கேள்விக்கு,
“ம் தெரியும்.. ஆனால் மாமா ஒரு பிரஸ் மீட்டிங்கில் அவளும் என் மகள் தான் என்று சொல்லி இருக்கார்.. நாளை பெண் மாறி, அந்த பெண்.. இந்த பெண்ணாக இருந்தால், அதனால் கேள்வி என் முன் விழுந்தால் , அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும்..
இப்போது மாமா நீங்க சொல்லுங்க.. அந்த பெண்ணை பற்றி… நீங்க விவரம் சொன்னா தான் அவளை பற்றி விசாரிக்க சொல்ல வசதியாக இருக்கும்.. நமக்கு நேரம் மிக குறைவா இருக்கு…” என்று சர்வேஷ்வரனின் தீவிரமான பேச்சில், சூர்ய நாரயணன்..
“ மான்சி.. இருபத்திரெண்டு வயது.. போன வருடம் தான் பி.எஸ்ஸி முடித்து இப்போ ஐ.ஏ. எஸ் நுழைவு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கா..” என்று சூர்ய நாரயணன் அவளை பற்றி சொன்ன தகவல் அவனுக்கு பரவாயில்லை எனும் படியாக இருந்ததால்,
சூர்ய நாரயணன் சொன்ன தகவலை தான் எப்போதும் நாடும் டிடெக்டீவ் ஏஜென்ஸியிடம் சொன்ன சர்வேஷ்வரன்..
“ தெரியும் தானே திலீப் என் மாமாவோட அந்த குடும்பத்து பெண்.. ஆமாம் ஆமாம் முக்கியமா அந்த பெண்ணுக்கு லவ்.. இல்ல வேறு ஏதாவது இருக்கா என்று பார்..
ரொம்ப ரொம்ப முக்கியம் அவர் கேரைட் எனக்கு தெரியனும்.. சீக்கிரம் மூன்று மணி நேரத்திற்க்குள் இந்த தகவல் எல்லாம் எனக்கு தெரியனும்…
அந்த பெண் பிறந்தது… வசிப்பது சென்னை என்பதால், ,உங்களுக்கு தகவல் சேகரிப்பதில் கஷ்டம் இருக்காது… “ என்று சொல்லி விட்டு பேசியை அணைத்த சர்வேஷ்வரன் அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டான்..
அவனின் இந்த பேச்சு அனைத்துமே அனைவரின் முன்னும் தான் நடந்தது…யாராலும் அவனின் இந்த பேச்சை எதிர்த்து ஒன்றும் பேச முடியவில்லை..
இந்த திருமணம் பேச்சு எடுத்ததும் சர்வேஷ்வரன் எந்த எதிர்ப்பும் காட்டாது ஒத்துக் கொண்டான்.. அது சொந்தம் என்பதினாலும், தன் தங்கை பத்மாவதியை நினைத்துமே என்று வெங்கட பூபதிக்கு தெரியும்..
இது வரை மகனை பற்றி எந்த ஒரு குறையும் மற்றவர்கள் சொல்லாது தான் வளர்ந்தான்.. இதோ இருக்கிறான்.. இப்படி அவனை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனின் இந்த செயலை மறுப்பது என்று அனைவரும் சங்கடத்துடன் தான் நடப்பதை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும் படி ஆனது..
ஆனால் சூர்ய நாரயணனால் அப்படி இருக்க முடியாது.. தன் மகளின் தவறுக்கு, தன் வளப்பு மகளை பலி கொடுக்க அவர் விரும்பவில்லை..
சர்வேஷ்வரன் நல்லவன் தான்.. அதில் அவருக்கு சிறிதும் சந்தேகம் கிடையாது.. ஆனால் அவன் மான்சியை விரும்பி பெண் கேட்டு இருந்தால், சூர்ய நாரயணன் கண்டிப்பாக மகிழ்ந்து தான் போய் இருப்பார்..
ஆனால் வேறு வழி இல்லாது சூழ்நிலையை சமாளிக்க, இது போல் மான்சியை இவன் மணப்பதில் அவருக்கு துளியும் விருப்பம் கிடையாது. அதோடு மான்சி அந்த வீட்டுக்கு போனால், அவளை மரியாதையாக நடத்த மாட்டார்கள் என்பது அவருக்கு நிச்சயமே.. .
அதோடு தன் மனைவியின் தாய் வீடு எனும் போது, பல வித சங்கடங்களை அனைவரும் எதிர் கொள்ள நேரிடும் என்று அவருக்கு தெரிந்ததால், சர்வேஷ்வரன் பக்கத்தில் சென்று அமர்ந்த சூர்ய நாரயணன்…
“ இது சரிப்படாது சர்வா… அதோடு மான்சி இதுக்கு ஒத்துக்க மாட்டாள்.. உண்மை நிலையை நீ கொஞ்சம் புரிந்து கொள்ளனும் சர்வா ” என்ற தன் மாமனின் பேச்சில் அவர் முகத்தை பார்த்த சர்வேஷ்வரன்..
“ ம் அப்போ சரி..” என்று சொல்லி அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்த சர்வேஷ்வரன்..
தன் பெரியப்பா அப்பாவை பார்த்து.. “ ப்ரஸ் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுங்க.. “ என்ற அவனின் பேச்சில் குடும்ப உறுப்பினர் மொத்த பேரும் அதிர்ந்து போய் அவனை பார்த்தனர்..
“ என்ன பார்க்கிறிங்க.. நாளை திருமணம் நடக்காது.. அது எதனால் என்று சொல்ல வேண்டும் தானே.. இல்லை என்றால், அவன் அவன் இஷ்டப்படி பேசுவான் எழுதுவான்.. அதுவும் என்னை பற்றி.. அதை தவிர்க்க பிரஸ் மீட்டிங் வைத்து தானே ஆக வேண்டும்..” என்ற அவனின் பேச்சும் வாஸ்தவமானது தான்..
ஆனால் என்ன சொல்வான்…? என்று தெரிந்துக் கொள்ள வெங்கட பூபதி.. “ என்ன சொல்ல போற சர்வா..?” என்ற அவரின் கேள்விக்கு.
“ உண்மையை தான்..” என்ற ஒற்றை வரியில் சர்வேஷ்வரன் பதில் அளித்தான்..
பூபதி குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்.. எப்படி இதற்க்கு ஒத்துக் கொள்வர்.. தங்கையின் குடும்பம் மானம்.. அதோடு அந்த குடும்பத்தின் மூத்த பெண் தன் வீட்டில் மூத்த மருமகளாக இருக்கும் போது, அனிதாவின் விசயம் வெளியில் தெரிந்தால், வனிதா எப்படியோ என்ற கேள்வி தானே அனைவரின் மனதிலும் தோன்றும்..
அதை சங்கர பூபதி சர்வேஷ்வரனிடம் கேட்க. அதற்க்கு சர்வேஷ்வரன்.. “ கண்டிப்பா வனி எப்படியோ என்று தான் எல்லோரும் பேசுவாங்க..” என்று சொன்னான்.
“ பின் ஏன் உண்மையை சொல்ல போறேன் என்று சொல்ற.. இதில் நம் குடும்ப மானமும் தானே அடங்கி இருக்கு..” என்று சர்வேஷ்வரனின் பெரியப்பா அவனுக்கு விளக்க..
“ எனக்கு நீங்க சொல்லனும் என்று இல்ல பெரியப்பா.. எல்லாம் தெரியும் தான்.. எல்லாம் தெரிந்தும் நான் ஏன் உண்மையை சொல்றேன் என்றால், சொல்லவில்லை என்றால் என்னை பத்தி பேசுவாங்க.. பெரியப்பா கிட்ட சொல்ல கூடாது தான்.. .
அனிதா மாமா பெண்.. இவனை பற்றி ஏதோ தெரிந்து தான் கல்யாணத்தை நிறுத்தி இருக்கு. ஏதோ என்ன எனக்கு ஆண்மை இல்லை என்று கூட அப்பட்டமா எழுதுவாங்க.. அதுக்கு முன்ன நினைப்பது பரவாயில்லை தானே..” என்ற அவனின் பேச்சில், அனைவரும் ஆமாம் என்று தான் தலையாட்ட வேண்டியது ஆனது..
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த சூர்ய நாரயணன், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்..அனைத்தும் அவர் கை மீறி போவது போல் அவர் உணர்ந்தார்..
நடந்ததில் ஒன்று நல்லதாக இடையில் மருத்துவர் வந்து.. “ பத்மாவதி ஸ்டெபில்..” என்று சொன்னது..
அடுத்து அனிதாவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்னது தான்…
இந்த நேரத்திற்க்குள் சர்வேஷ்வரன் மான்சியை பற்றிய விவரம் அனைத்தையுமே, தீலிபன் அவனே நேராக மருத்துவமனைக்கு வந்து அவன் திரட்டிய தகவல்களை அவனிடம் சேர்ப்பித்து விட்டான்..
இன்று அவள் அணிந்து இருந்த மஞ்சள், கருப்பு கலந்த சுடியில், அண்ணா நூலகத்தின் வாயில் வருவது போல் ஒரு புகைப்படத்தோடு அவள் படித்த பள்ளி, அவள் எடுத்த மதிப்பெண்களில் இருந்து முழு விவரங்களும் தெளிவாக அதில் இருந்தது..
அனைத்தும் அவனுக்கு திருப்தியாக இருந்தது… அதுவும் மான்சிக்கு இது வரை காதலன் இல்லை என்பதே சர்வேஷ்வரனுக்கு போதுமானதாக இருந்ததால், சூர்ய நாரயணன் பக்கம் பார்வையை செலுத்தியவன்..
“ அவங்களை எங்கே வர சொல்லலாம் மாமா…?” என்ற மான்சி மணப்பதில் சர்வேஷ்வரன் ஆரம்பித்த முதல் பேச்சு வார்த்தையிலேயே சூர்ய நாரயணன்..
“ வீட்டுக்கு தானே போகனும்.. நீ என்ன எங்கு வரனும் என்று கேட்கிற..?” என்ற கேள்வியில்,
வெங்கட பூபதி.. “ அந்த வீட்டுக்கு எல்லாம் என் மகன் போக மாட்டான் மாப்பிள்ளை .. புரியுதா..? எங்க யாருக்கும் இதில் துளியும் விருப்பம் இல்லை..
ஆனால் என்ன செய்ய வேறு வழியும் இல்லாது தான் அந்த பெண்ணை சர்வா மணக்க சம்மதிப்பது. வேறு வழியில்லாது தான் இது..
அதற்க்கு என்று அந்த வீட்டுக்கு எல்லாம் போக முடியுமா..?” என்ற தந்தையின் பேச்சுக்கு சர்வேஷ்வரன் பதில் அளிக்காது அமைதியாக இருப்பதிலேயே, அவனுக்கும் இந்த எண்ணம் தான் என்பதை சூர்ய நாரயணன் புரிந்து கொண்டார்..
“ அப்படி என்றால், இந்த கல்யாண பேச்சு வார்த்தையே வேண்டாம் என்று தான் நான் சொல்வேன்.. இது அந்த பெண்ணுக்கு மட்டும் இல்ல.. உங்க மகன் சர்வா வாழ்க்கையும் தான் அதில் அடங்கி இருக்கு.. மதிப்பு இல்லாத இடத்தில் கல்யாண பேச்சு வேண்டாமே..” என்று தந்தை மகன் இருவரையும் பார்த்து தான் சூர்ய நாரயணன் பொதுவாக சொன்னார்..
சூர்ய நாரயணனின் இந்த பேச்சுக்கு வெங்கட பூபதி அமைதி காத்தார்.. அவருக்குமே இதில் துளியும் விருப்பம் இல்லையே, வேறு ஏதாவது செய்யலாம் என்று இருக்க..
சர்வேஷ்வரன் “ ஒன்று உண்மையை சொல்லனும்.. இல்ல அந்த பெண்ணை நாளை மணக்கனும்.. இந்த இரண்டு வழி தான் மாமா.. என்னை பொறுத்த வரை முதல் சொன்னது செய்தால் தான் எனக்குமே நிம்மதி..
இரண்டாவது செய்வது என் மானமும் நம் குடும்ப மானமும் காப்பற்ற தான்.. அந்த பெண்ணை மணந்து அதற்க்கு அடுத்து என் மானம் எப்போது, எந்த விதமா போகும் என்று கண் காணித்துக் கொண்டு இருப்பதற்க்கு உண்மையை சொல்வது தான் எனக்கும் நல்லதாக இருக்கும் ..” என்ற அவன் பேச்சில் சூர்ய நாரயணன் தான் சர்வேஷ்வரனின் வழிக்கு வர வேண்டியதாக ஆயிற்று..
இவர்களை விட்டு சிறிது தள்ளி நின்று கொண்டு சூர்ய நாரயணன் துளசியிடம்..
“ ம் பக்கத்தில் இருக்கும் அந்த கோயிலுக்கு வாம்மா.. இல்ல என் உடம்புக்கு எல்லாம் ஒன்றும் இல்ல..” என்று சூர்ய நாரயணன் பேச..
அந்த பக்கம் என்ன பேசினார்களோ… அதற்க்கு சூர்ய நாரயணன்.. “ கல்யாணம் வேலையா…?” என்று இழுத்து நிறுத்தியவர்.. “ அது பத்தி தான்மா உன் கிட்ட பேசனும்…” என்று சொன்னவர் பின்..
“ மான்சி வந்து விட்டாளா…? சாப்பிட்டாளா..?” என்ற அவரின் உரையாடலை, பூபதி குடும்பத்தினர் அனைவரின் காதிலும் விழுந்தது.. பல்லை கடித்துக் கொண்டு . தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தனர்..
என்ன ஒரு பேச்சு.. இது போல் தன் தங்கையிடம் பேசி இருப்பாரா..? தன் பெண்களை பற்றி தான் விசாரித்து இருப்பாரா..? விசாரித்து அறிந்து இருந்தால், ஏன் இங்கு இருக்க போகிறோம் என்று பத்மாவதியின் இரு அண்ணன்களும் நினைத்தாலும், எதுவும் பேசாது சூர்ய நாரயணன் சொன்ன கோயிலுக்கு, அவரோடு தான் பூபதியின் குடும்ப உறுப்பினர் மொத்த பேரும் போக வேண்டியதாக ஆயிற்று..
அந்த கோயில் துளசி வீட்டுக்கு மிக பக்கம் போல்.. அதனால் துளசி இவர்களுக்கு முன் அந்த கோயிலுக்கு வந்து விட்டார்..
அதையும் இரு அண்ணன்களும் அந்த பொம்பளை அலைய கூடாதுன்னு சந்திக்கிற இடம் கூட, அவளுக்கு வசதியா சொல்லி இருக்கிறார் பார் என்று தான் நினைத்துக் கொண்டனர்.