சூர்ய நாரயணன் துளசியை தனியாக அழைத்து கொண்டு, ஆனால் இவர்களின் கண் பார்வையில் தான் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டனர்…
சூர்ய நாரயணன் தன் சின்ன மகளின் நிலையை சொன்னதும் துளசிக்கும் அதிர்ச்சியே…
“ தான் வாழும் இந்த வாழ்வை நினைத்து நான் அனு தினமும் செத்து கொண்டு இருக்க, அதுவும் வளர்ந்த தன் மகளை பார்க்கும் போது எல்லாம், என் வாழ்க்கையின் பாதிப்பு தன் மகளையும் தொடருமா…? என்று சமீப காலமாக துளசிக்கு இந்த யோசனை தான் அதிகம்..
ஆனால் நல்ல வாழ்க்கை கிடைக்க பெற்றும் பெண் இப்படி தன்னை அழித்துக் கொள்வாளா..? என்று தான் துளசி நினைத்தது..
ஆனால் அதற்க்கு ஏன் தன்னை அழைத்து பேசுகிறார்.. அதுவும் சிறிது தள்ளி இருந்தவர்கள் அனைவரும் யார் என்று துளசிக்கு தெரியும்.. அவர்களும் வந்து இருக்கிறார்களே என்று துளசி நினைக்கும் போதே..
எதற்க்கு என்ற காரணத்தை சூர்ய நாரயணன் துளசியிடம்.. “அவங்க சர்வாவுக்கு மான்சியை திருமணம் செய்ய நினைக்கிறாங்க.. அதுவும் குறித்த முகூர்த்தமான நாளையே…” என்று பேச்சில் துளசிக்கு, இது எப்படி முடியும் என்று தான் நினைத்தார்..
அதை சூர்ய நாரயணனிடம் கேட்டும் விட்டார்..
அதற்க்கு சூர்ய நாரயணன் .. “ வேறு வழி இல்லை துளசி..” என்று சொன்னவர்..
பின் கொஞ்சம் தயங்கிய வாறே… “கொஞ்ச நாளாவே நாம செய்த தப்புக்கு, தண்டனை மான்சிக்கு கிடைக்குமோ என்று பயந்துட்டு இருக்கேன் துளசி…
சர்வா ரொம்ப நல்ல பைய்யன்… அவனை கட்டினால் மான்சி நல்லா இருப்பா என்று சொல்ல முடியாது.. அந்த வீடு அவளுக்கு பல வித சங்கடங்களை கொடுக்கும் தான்..
ஆனால் மான்சிக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்குமா என்ற என் பயத்துக்கு, இந்த முடிவு நமக்கு கொஞ்சம் சாதமகா இருக்கும் என்று தான் தோனுது..” என்று சூர்ய நாரயணன் பேச்சு, துளசிக்கு புரிய தான் செய்தது தான்… அவருக்குமே அந்த பயம் இருக்கிறதே..
ஆனால்.. “ எப்படி அந்த வீட்டில்…” என்று துளசி தயங்கவும்..” எல்லாம் சர்வா பார்த்துப்பான் துளசி..” என்று சொன்னவருக்கு துளசி ஒத்துக் கொண்டார் தான்..
ஆனால் மான்சி.. அதையும் துளசி சொல்லி விட்டார்.. “ மான்சி இதுக்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று..”
“ பேசி பார் துளசி.. அவள் வீட்டில் தானே இருக்கா… நான் நவீனை ஸ்கூல் போய் அவனையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வர்றேன்… நிலமையை சொல்…” என்று இங்கு இருவரும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதை பார்த்த சூர்ய நாரயணனின் இரு மச்சான்களும் அவர்களுக்குள் பொறுமிக் கொண்டு இருந்தனர்..
சூர்ய நாரயணனோடு துளசி தயக்கத்துடன் இவர்கள் அருகில் வரும் போது அங்கு இருந்த ஆண்களும் சரி… பெண்களும் சரி.. தங்கள் முகத்தில் பிடித்த மின்மையை அப்பட்டமாக அவர்கள் காட்டினார்கள்..
சூர்ய நாரயணன் தான்.. “ மான்சி கிட்ட பேசனும்.. பேசிட்டு சொல்றேன்..” என்று அவர் அனைவரையும் பார்த்து பொதுவாக சொன்னார்..
அதற்க்கு உண்டான பதில் சர்வேஷ்வரனிடம் இருந்து …” பேசுங்க மாமா… இந்த எந்த பதில் என்றாலும் எனக்கு ஓகே தான்..” என்று சொன்னவன் தன் கையில் இருக்கும் கை கடிக்காரத்தில் நேரத்தை பார்த்தவன்..
“ இப்போ பன்னிரெண்டு நாற்பது.. நான்கு மணிக்கு பிரஸ் மீட்டிங்குக்கு சொல்லி இருக்கேன்.. உங்க முடிவு நான்கு மணிக்குள் சொன்னா நல்லது..
ஏன்னா அதுக்கு ஏத்தது போல் பிரஸ் மீட்டிங்கில் பேச வசதியா இருக்கும்…” என்று சர்வேஷ்வரன் எந்த முடிவும், என்னை பாதிக்காது.. பாதிப்பு உங்களுக்கு தான் என்பது போல் தான் சர்வேஷ்வரன் பேச்சு இருந்தது..
சூர்ய நாரயணன்.. “ சரி..” என்பதாக தலையாட்டினார்..
யாரும் துளசி பக்கம் பார்க்க கூட இல்லை. இதை சூர்ய நாரயணனும் கவனித்தார் எனும் போது, துளசி அதை உணராமல் இருப்பாரா என்ன…?
பூபதி குடும்பத்தினர் சூர்ய நாரயணனிடம் மட்டும் விடைப்பெற்று, சீக்கிரம் எந்த பதிலானாலும் சொல்லுங்க, என்று போகும் போது சொல்லி விட்டு சென்று விட்டனர்..
துளசி நேராக தன் வீட்டுக்கு சென்றார் என்றால், சூர்ய நாரயணன் நவீன் படிக்கும் பள்ளிக்கு சென்றார்…அங்கு அவரை பார்த்த அந்த பள்ளியின் நிர்வாகிக்கு அவர் யார் என்று தெரிந்து இருந்ததால்,
“ என்ன சார் நவீனை பார்க்கனுமா..” என்று கேட்டு நேரத்தை விரையம் ஆக்காது நவீனை அழைத்து வர சொல்லி விட்டார்…
நவீனோ தன்னை பார்க்க ஏன் இவர் பள்ளிக்கே வந்து இருக்கார் என்று யோசனையுடன் நடந்து வந்தவன், மனதில் திடிர் என்று அம்மாவுக்கு ஏதாவது உடம்புக்கு என்று நினைக்கும் போதே அவன் மனது பதறி போய் விட்டது..
என்ன தான் தன் அம்மாவின் செயல்கள் மூலம் அவரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாலுமே, நவீனுக்கு அம்மா மீது பாசம் தான்.. அதுவும் இப்போது பதினெழு வயது துவக்கத்தில் இருப்பவனுக்கு, ஆண் துணை இல்லாது,
அதுவும் இளமை அழகு இருக்கும் அம்மா, என்ன..? என்ன…? பிரச்சனைகளை சந்தித்து இருப்பாரோ.. அதன் பின் இந்த முடிவா..? என்று அவன் சரியான பாதையில் யோசித்தான் தான்.
ஆனால் தன் அக்கா மான்சி எனும் போது, இவரின் இந்த செயலால் அக்கா வாழ்க்கையும் அல்லவா பாதிக்கப்படும்.. ஏன் இதை அம்மா நினைத்து பார்க்கவில்லை.. . என்று வளர்ந்தும் வளராத பருவத்தில் இருக்கும் நவீன் இது போல் எல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தாலும் , அந்த நேரத்தில் தன் பள்ளியில் சூர்ய நாரயணனை பார்த்ததும் ஓடி போய் அவர் அருகில் மூச்சு வாங்க நின்றவன்..
“அம்மாவுக்கு அம்மாவுக்கு ஒன்றும் ஒன்றும் இல்லையே..?” என்று நவீன் திக்கி திணறி கேட்டதில் இருந்தே, அவன் எதை நினைத்து பயந்து இருக்கிறான் என்று உணர்ந்து கொண்ட சூர்ய நாரயணன்..
“ அம்மாவுக்கு ஒன்றும். இல்ல நவீன்.. நான் முக்கியமான விசயம் உன்னிடமும் உன் அக்காவிடமும் பேசனும்.. அது தான் உன்னை வீட்டுக்கு அழைத்து போக வந்தேன்.” என்று சூர்ய நாரயணன் அந்த சூழ்நிலையிலும், நீண்ட நாட்களுக்கு பின் நவீன் தன்னிடம் பேசிய இந்த பேச்சில் கொஞ்சம் மகிழ்ந்து போய் தான் அவனிடம் பேசினார்..
“முக்கியமான விசயமா..?” என்று மனதில் தோன்றினாலும், அவரோடு சென்றான்.. வழியில் தான் அவனுக்கு இன்று இவருடைய மகளுக்கு திருமணம்.. இவர் என்ன இங்கு..? அங்கு ஏதாவது பிரச்சனையா..? ஆனால் அதற்க்கு ஏன் நம்மிடம் பேச வேண்டும்…?
நவீனுக்கு சின்ன வயது என்றாலும், அவன் யோசனை பல சமயம் சரியாக இருக்கும். அதே போல் தான் அவன் நடத்தையில் எப்போதும், ஒரு பெரிய மனிதனின் தோரணையே காணப்படும்..
தந்தை இல்லை. தாயின் வாழ்வும் சொல்லி கொள்ளும் படி இல்லை.. அக்கா.. இவனோடு ஐந்து வயது பெரியவள் தான்.. இருந்தும் தன் அக்காவை நான் தான் நல்ல படியாக பார்த்து கொள்ள வேண்டும்.. என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ பதிந்து விட்டது..
அதுவும் அவன் பன்னிரெண்டவது வயதில், தன் அக்காவோடு வெளியில் எங்காவது போகும் போது, தன் அக்காவை யாராவது வேறு மாதிரி பார்த்தால் போதும், அந்த பார்வையின் பேதத்தை சட்டென்று இனம் கண்டு கொண்டு, அவர்களை பார்த்து அந்த வயதிலேயே அவன் அப்படி முறைப்பான்..
பின் தன் அக்காவின் கை பற்றி நான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையாக தான் அவன் செயல்கள் பெரிய மனிதன் போல காணப்படும்.. என் அக்காவுக்கு நான் பாதுகாப்பு என்று தான் அவனின் செயல்கள் அனைத்தும் இருக்கும்..
அந்த பெரிய மனிதனின் தோரணை வெளியில் மட்டும் அல்லாது, அவன் யோசனையிலும் இருப்பதால் தான், நவீனுக்கு சட்டென்று விளங்கி விட்டது..
திருமணத்தில் ஏதோ பிரச்சனை என்று.. ஆனால் ஏன் தன்னிடம் அதுவும் தன் அக்காவோடு பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னாரே என்று வழி முழுவதும் நவீனுக்கு இதோ யோசனை தான்..
இருவரும் வீட்டுக்கு வர.. துளசி அதற்க்குள் மான்சியிடம் விசயம் சொல்லி விட்டார் போல..
“ என்ன விளையாடுறிங்களா..?” என்று அவளின் சத்தம் இவர்கள் வாசலை தொடும் போதே கேட்டது…
நவீன் ஏன் மான்சி இப்படி சத்தம் போடுகிறாள்.. இவள் இது போல் எல்லாம் கத்த மாட்டாளே.. என்று நினைத்து, நவீன் நடக்காது அவன் அக்காவின் அருகில் ஓடி போய் அவள் கை பற்றியவன்..
“ என்ன அக்கா என்ன பிரச்சனை..?” என்று மான்சியிடம் கேட்டு கொண்டே, தன் அன்னையை நவீன் முறைத்தான்.. பிரச்சனை என்ன என்று தெரியாமலேயே..
பின் சூர்ய நாரயணன் அனைத்தும் நவீனிடம் சொன்னார்.. சொல்லி விட்டு.. “ முடிவு நீங்க இரண்டு பேரும் பேசி தான் எடுக்கனும்,.. எது என்றாலும் பரவாயில்லை..” என்று சூர்ய நாரயணன் மான்சி நவீன் முகத்தை பார்த்து சொன்னார்..
மான்சியோ சூர்ய நாரயணனை பார்த்தாலே தலையை குனிந்து கொள்பவள், இன்று அவரை நேருக்கு நேர் பார்த்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள்..
நவீன் தன் அக்கா சத்தம் போடவும், அவளுக்கு ஏதோ பிரச்சனையான விசயம் தான் பேசுகிறார்கள் என்று நினைத்து தான் அவன் தன் தாயைய் முறைத்தது..
ஆனால் சூர்ய நாரயணான் விசயம் இது தான் என்று சொல்லவும், அவன் பல விதத்திலும் யோசனை செய்து பார்த்தவன்..
சூர்ய நாரயணனிடம் .. “ நான் எங்க அக்காவிடம் பேசிட்டு சொல்றேன்..” என்று சொல்லி மான்சியின் கை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றவனிடம்..
மான்சி.. “ இதுல பேச என்ன இருக்குடா…? வேண்டாம்.. அவ்வளவு தான்..” என்று தன் தம்பியிடம் பேசிக் கொண்டே அவனோடு நடந்து சென்றாள்…
தன் அறைக்கு அழைத்து சென்ற நவீன், தன் அக்காவை நேருக்கு நேர் பார்த்தவன்.. “ அக்கா நான் ரொம்ப பெரிய பேச்சு பேசுறேன் எல்லாம் நினைக்க வேண்டாம்..
நான் இது வரை உங்களிடம் இது போலான விசயம் பேசினது கிடையாது.. ஆனால் இரண்டு வருடமா நான் இதை என் மனதில் யோசிக்காத நாள் இல்லை..” என்று சொன்னவன் தொடர்ந்து..
“ அக்கா உங்களுக்கு கல்யாணம் செய்துக்க வேண்டாம்.. இப்படியே இருந்து விடலாம். அது போல் எண்ணம் இருக்கா அக்கா..?” என்ற நவீனின் கேள்வியில் மான்சி..
“ இப்போ அந்த பேச்சு எதுக்குடா…? முதல்ல அவர் கிட்ட வேண்டாம் போய் சொல்லி விடலாம்.. அவர் நிலையும் சரியில்லை.. நாம் உடனே சொன்னா தான் அவர் வேறு ஏதாவது வழி செய்யலாம் ..” என்று இருக்கும் நிலமையின் தீவிரம் மான்சிக்கும் தெரிந்ததால், தன் ஒப்புதல் இன்மையை சொல்லி விட்டால், வேறு வழி தேடலாமே என்று மான்சி நவீனை அவசரப்படுத்தினாள்..
ஆனால் நவீன் திட்ட வட்டமாக “ இந்த விசயத்தை இப்போ பேசினால் தான் அக்கா உண்டு.. இல்லை என்றால் எப்போவும் உன் கல்யாணம் விசயம் பேச முடியாது போய் விடும்..
எனக்கு தெரியும்.. நான் சின்ன பையன்.. இது போல் பெரிய விசயம் எல்லாம் பேசும் வயது இல்லை தான்… ஆனால் என் அக்கா நல்லதுக்காக நான் தான் பேசி ஆக வேண்டும்..
சொல்லுங்க அக்கா.. கல்யாணமே செய்துக்க கூடாது என்று அது போல் முடிவு ஏதாவது நீங்க எடுத்து இருக்கிங்களா..?” என்று நவீன் கேட்டான்..