“ நீங்க அவங்களை எங்கு முதலில் பார்த்திங்க என்று சொல்ல முடியுமா..?” என்ற கேள்விக்கு ஒற்றை கண்ணை மூடியவன் பின்..
“ அது பர்சனல்.. இதோ இப்போ நான் உங்களை எல்லோரையும் அழைத்து பேசியதற்க்கு காரணம், பெண் மாறும் போது நீங்க பாட்டுக்கு கண்ட படி மத்தவங்க முன் என்னை நிறுத்திட கூடாது இல்ல அதுக்காக தான்.
இதோ ஜெனியூனா நான் உங்க எல்லோரையும் கூப்பிட்டு பேசும் போதே, உங்களுக்கு ஆயிரெத்தெட்டு சந்தேகம்.. அது எப்படி..? இது எப்படி..? என்று..” என்று சொல்லி முடித்தவன் மீண்டும் அனைவரையும் பார்த்து கை கூப்பியவன்..
“ இதோடு முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கே தெரியும்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் வரவேற்ப்பு.. அதற்க்கு நான் கொஞ்சமாவது ரெடியாகி நின்றால் தான் மேடத்துக்கு கொஞ்சமாவது நான் மேட்ச் ஆவேன்…
ஏன்னா மேடம் சாதரணமாவே அழகா இருப்பாங்க ….. இப்போ கல்யாண விசேஷ அலங்காரத்தில் இன்னும் ஜொலிப்பாங்க.. போய் நானும் முகத்துக்கு பட்டி டிங்கிரி எல்லாம் போட்டா தான் நான் அவங்க பக்கத்துல சும்மா பார்க்கும் படியாவது இருப்பேன்..” என்றதில் அங்கு இருந்த பெண் நிருபர் ஒருவர்..
“ என்ன சார் இப்படி சொல்றிங்க… உங்க பேட்டின்னா எங்க பத்திரிக்கையில் பெண்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வர ஆசைப்படுவோம்.. உங்க அழகை அருகில் இருந்து பார்க்க வேண்டி… என்று வழிந்தவளிடம்..
“ நன்றி..” என்று சொல்லி விட்டு அனைவரிடம் இருந்தும் மீண்டும் ஒரு முறை விடைப்பெறுவது போலான அந்த காட்சியோடு அவனின் நேரடி ஒலிப்பரப்பு ஒரு முடிவுக்கு வந்தது…
அவனின் அந்த நேரடி ஒலிப்பரப்பை பார்த்த வனிதா ..
“ பார்த்துங்களா பார்த்துங்களா.. “ என்று கத்த அவள் கத்தலில் யாருமே காதில் வாங்காது சர்வா ஏன் அந்த பெண்ணை மணக்க வேண்டும் என்று சொன்னான் என்பது அனைவருக்கும் புரிந்து போனது..
யாருக்கும் பாதிப்பு இல்லாது… யாரை பற்றியும் தவறாக பேச்சு வராது முடித்துக் கொள்ள பார்த்து இருக்கிறான்… என்று..
இங்கு மான்சி அவனின் பேச்சை கேட்டதில் முதலில் அதிர்ந்து போனவள் பின் தன் அன்னை பற்றிய பேசிய பேச்சில் குன்றி போனாள்.. இந்த குன்றல் இதோடு நின்று விடாது.. இது தொடரும் என்பது தெரிந்தே பெண் அழைப்புக்கு தயாராகினாள்…
இங்கு சர்வேஷ்வரன் சொன்னதற்க்கு ஏற்ப உறவு முறை பெண்களை அழைத்து கொண்டு முன்னவே அனிதாவுக்கு பெண் அழைக்க என்று வரிசை தட்டு அனைத்திற்க்கும் ஏற்பாடு செய்து விட்டதால், காலம் தாழ்த்தாது வைதேகி மான்சி வீட்டுக்கு செல்ல தான் தயாராவதற்க்கு முன் தன் ஒரகத்தி ரேவதியை பார்த்து..
“ நீங்களும் வர்றிங்களா அக்கா..?” என்ற வைதேகியின் கேள்விக்கு, ரேவதி அனுமதி வேண்டி தன் கணவன் முகத்தை பார்த்தார்..
அங்கு கிடைத்த ஒப்புதலில்.. “ வர்றேன்..” என்று சொல்லி முறையாக தங்கள் வீட்டின் அடுத்த மருமகளை அழைக்க துளசி வீட்டுக்கு சென்றனர்..
இங்கு வனிதா இந்த திருமணத்திற்க்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாதது போல் தன் அறையில் போய் அடங்கி கொண்டாள்..
அவளை யாரும் வா என்றும் அழைக்காது அனைத்தும் சரியாகவே நடந்து கொண்டு இருந்தன.. சூர்ய நாரயணன் இந்த இடைப்பட்ட நேரத்தில் தங்கள் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவி தன் மகளை பார்த்தார்..
மனைவிக்கு அனைத்தையும் சொன்னவர் சர்வேஷ்வர் தொலைக்காட்சியில் பேசியதையும் சேர்த்து சொன்னதால், சூழ்நிலை உணர்ந்தார் தான்.
எனினும் அனைத்தும் தன்னை விட்டு போவது போல்.. அவர் உணர்ந்தார்.. அதில் தவறும் கிடையாது.. முதலில் தன் கணவனை துளசிக்கு மொத்தமாக வாரி கொடுத்து விட்டார்..
ஆம் மொத்தமாக என்று தான் சொல்ல வேண்டும்.. இதோ அடுத்து தன் தாய் வீட்டை அவள் மகளுக்கு கொடுக்கிறாள்.. முன்னதும் சூழ்நிலை.. பின்னதும் சூழ்நிலை.. என்ன காசு பணம் இருந்தும் என்ன பயன்…?
தன் கணவன்.. தன் தாய் வீடு என்று இல்லாது போன பின் என்று ஒரு விரக்த்தி புன்னகை சிந்தியவள் கண் மூடியவளின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே…
சூர்ய நாரயணன்.. “ எனக்கு வேறு வழி தெரியல பத்து..” என்ற அவரின் பேச்சில் கண் முழித்து அவரை பார்த்தவள்..
“ ஆமாம்.. ஆமாம் நடந்து முடிந்த எல்லாத்துக்கும் வேறு வழி இல்லாது தான் நடந்து முடிந்தது.. இதோ நடப்பதும், வேறு வழி இல்லாது தான் நடக்க போகிறது…” என்று மனைவியின் பேச்சில்..
“ பத்து நீ சொல்லி தான்..” என்று ஏதோ பேச்சை ஆரம்பித்தவரின் பேச்சை கை கொண்டு தடுத்து விட்டவள்..
“ எல்லாத்துக்கும் ஒரு சாக்கு… இதே என் நிலையில் நீங்கள் இருந்து, உங்க நிலையில் நான் இருந்து நான் அப்படி நடந்துக் கொன்டு இருந்து இருந்தால், எனக்கு இந்த சமூகம் வேறு பெயர் வைத்து இருக்கும்..
ஆனால் நீங்க இன்னும் பெரிய மனித தோரணையில் தான் இன்னை வரைக்கும் சமூகத்துக்கு முன்னாடி சுத்திட்டு இருக்கிங்க.. இதோ தொடுப்பில் மகளையும் எங்க வீட்டுக்குள் அழைத்து வந்து விட்டிங்க..” என்ற பத்மாவதியின் பேச்சை அமைதியாக குற்ற உணர்வோடு கேட்டுக் கொண்டு இருந்த சூர்ய நாரயணன்..
பத்மாவதி கடைசியாக உபயோகித்த தொடுப்பு என்ற வார்த்தையில்..
“ பத்து என்ன பேச்சு இது அசிங்கமா..தொடுப்புன்னு.. உடம்பு சரியில்லேன்னு கம்முன்னு இருக்கேன்..” என்ற சூர்ய நாரயணன் பேச்சில்..
பத்மாவதி.. “ அதே உடம்பு சரியில்லாததால் தான் நானும் கம்முன்னு இருக்க வேண்டியதாக ஆகிடுச்சி.. சரி சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் பெண் அழைப்பு ஆரம்பித்து விடுவாங்க.. சொந்த குடும்பத்தை தான் அம்போன்னு விட்டு விட்டிங்க.. அந்த குடும்பத்து பெண்ணையாவது கரையேத்துங்க..” என்ற பத்மாவதியின் பேச்சில்..
“ ஏன் பத்து இப்படி சொல்ற.. நான் நம்ப குடும்பத்தை பார்த்து கொள்ளவில்லையா..?” என்ற கேள்வியில்..
“ நான் இல்லேன்னு சொல்லவில்லை.. ஆனால் இன்னும் ஒரு குடும்பத்தையும் நீங்க பார்த்து கொண்டதால், நம்ம பெண்களிடம் எதற்க்கும் வாய் திறவாது போய் விட்டது.. முதலில் உங்க கணவனை பாருங்க.. பின் என்னை பாருங்க என்று அவங்க சொல்லும் போது நான் என்ன சொல்ல.. .
சொல்லட்டா.. எல்லாம் சொல்லட்டா பெத்த பெண்களிடம் சொல்ல கூடியதா..? சொல்லுங்க..” என்ற மனைவியின் பேச்சில், சூர்ய நாரயணனால் வாய் அடைத்து போய் விட்டார்..
பின் இவ்வளவு பேசிய பேச்சுக்கு பத்மாவதிக்கு கொஞ்சம் மூச்சு வாங்கவும் கலைப்பில் கண் மூடிக் கொண்டாள்.. இனி பேசி என்ன பிரயோசனம்..? என்றதாலும் இருக்கலாம்..
அப்போது சூர்ய நாரயணனின் கை பேசிக்கு அழைப்பு வர அவர் கை பேசிக்கு வைதேகி தான் அழைத்தது…
“ நான் அங்கு போறேன் அண்ணா.. நாங்க போகும் போது நீங்க அங்கே இருந்தா நல்லா இருக்கும்..” என்றதில் தயங்கிய வாறு தன் மனைவியின் முகத்தை பார்த்த வாறே..
“ நான் இப்போ ஆஸ்பிட்டலில் தான் இருக்கேன்மா. நீங்க போறதுக்குள் அங்கு போயிடுவேன்.. நீ கவலை படாதே..” என்று சொன்னவர்..
பின்.. “ யார்..? யார்..? போவது..?” என்ற சூர்ய நாரயணன் கேள்விக்கு,
“ நான் ரேவதி அக்கா.. அப்புறம் பெரியம்மா..” என்று இன்னும் நிறைய பெயரை அவர் தங்கை வைதேகி சொல்லிக் கொண்டு போனாலும், நானும் ரேவதி அக்காவும் என்றதில் சூர்ய நாரயணனுக்கு கொஞ்சம் நிம்மதி ஆயிற்று..
“ சரிம்மா சந்தோஷம்.. “ என்று சொல்லி பேசியை அணைத்து விட்டவர் தன் மனைவியின் முகம் பார்த்தார்..
அவள் கண் முழிக்காது இருக்கவும்.. சோர்வில் தூங்குகிறாள் என்று நினைத்து கிளம்பி போனவரின் முதுகை கண் திறந்து பார்த்த பத்மாவதியின் முகம் அப்போது அவ்வளவு சோகத்தை பூசிக் கொண்டு இருந்தது…
பத்மாவதியால் கண்ணை தான் மூட முடியும்.. காதை.. அது பாட்டுக்கு கணவன் பேசுவது காதில் விழுந்த வண்ணம் தானே இருந்தது…
அதுவும் தன் சின்ன அண்ணியோடு பெரிய அண்ணியும் பெண் அழைக்க போகிறார்கள் என்று தெரிந்ததில், இதே அவர்கள் கூட பிறந்தவர்களுக்கு என் நிலை வந்து இருந்தால், அந்த வீட்டுக்கு அவர்கள் போவார்களா..? என்ன தான் இருந்தாலும் நான் நாத்தனார் தானே…
யாருக்கும் மன நிறைவு இல்லாது ஒரு வித சங்கடத்தோடு தான் பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது…
வைதேகி சொன்னது போல் அவர்கள் எல்லாம் துளசியின் வீட்டுக்கு செல்லும் முன்பாக சூர்ய நாரயணன் அங்கு வந்து விட்டார்..
வந்தவர் பெரியவர் என்ற முறையில் சபையில் நிற்க வேண்டிய வேலை மட்டும் தான் அவர் செய்யும் படி இருந்தது..
ஏன் என்றால் மற்ற அனைத்தையுமே நவீன் செய்து முடித்து விட்டு இருந்தான். எப்போதும் அந்த வயதிற்க்கு உரிய துடுக்கு தனத்தோடு இல்லாது ஒரு இறுக்கத்தோடு இருப்பவன் இன்று தன் சகோதரியின் திருமணத்திற்க்கு மனது நிறைது இருந்ததால், அவன் முகம் தன்னால் பொலிவு பெற்று வந்தவர்களை வா என்று அழைத்த அந்த பாங்கில் பூபதி குடும்பத்தினர் கொஞ்சம் குளிர்ந்து தான் போய் விட்டனர்…