நவீனின் தன்மையான பேச்சு, அவனின் அந்த அணுகு முறையில் வைதேகியின் மனது பரவாயில்லை மகன் நல்ல மாதிரியாக தான் இருக்கிறான். அப்போ பெண் என்று நினைக்கும் போதே, துளசி தன் மகளை அனைவரும் இருக்கும் இடத்திற்க்கு அழைத்து வரும் போதே வைதேகிக்கும் சரி …ரேவதிக்கும் சரி… மனது திருப்தி படும் படி தான் பெண்ணின் தோற்றம் இருந்தது.
துளசியின் தோற்றமும் சொல்லும் படி, ஒரு தெய்வீக கலையோடு தான் இருக்கும்.. ஆனால் தன் அண்ணனோடு அப்படி என்று பார்க்கும் போது, அந்த தெய்வீக அழகு வேறு போல் தானே நமக்கு தோன்றும்..
நம் மனது என்ன நினைக்கிறதோ, பிம்பமும் அதை தான் பிரதிபலிக்கும் என்ற சொல்லுக்கு எற்ப.. இன்று தன் வீட்டு மருமகளாக மான்சியை பார்த்தவர்களுக்கு, ஏனோ அப்படி ஒரு திருப்தி..
அதுவும் துளசி சொல்வதற்க்கு முன்னவே அனைவரையும் பார்த்து பொதுவாக விழுந்து வணங்கி விட்டு, கை கூப்பி அவள் நின்ற பாங்கில் வைதேகி தன்னால்..
“ வாம்மா என் பக்கத்தில் வந்து உட்கார்..” என்று அன்புடன் அழைத்தார்..
அந்த அவரின் பேச்சை கேட்டதும் தான் துளசிக்கு கொஞ்சம் நிம்மதி கிட்டியது.. என்ன தான் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நினைத்து, தன் மகள் இந்த கல்யாணத்திற்க்கு சம்மதிக்க வேண்டும் என்று கடவுளை பிராத்தனை செய்து.. இதோ அவளின் இந்த முடிவால், மனது சந்தோஷம் அடைந்தாலும், மனதில் ஓரத்தில் ஒரு பயம் துளசிக்கு இருக்க தான் செய்தது..
அந்த வீட்டில் இருப்பவர்கள் தன் மகளை எப்படி நடத்துவார்கள் என்று.. இப்போது வைதேகியின் பேச்சில் நிம்மதியடைய சூர்ய நாரயணனை பார்த்தாள்..
சூர்ய நாரயணனுக்கும் தன் தங்கையின் பேச்சில் நிம்மதி அடைந்தவராய் அடுத்து அடுத்து ஆக வேண்டிய வேலைகள் கட கட என்று நடைப்பெற்றுக் கொண்டு இருந்தன.
ஏன் என்றால் மாலை திருமண வர வேற்ப்பு இப்போதே மணி ஐந்து முப்பதை காட்ட சர்வேஷ்வரன் நிறைய முறை அழைத்து விட்டான்..
“ இன்னும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிங்க…? நான் மண்டபத்துக்கு வந்து விட்டேன்..” என்று..
பின் அனைத்தும் அவசரமாக நடைப்பெற்றாலும், செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முறையாகவே செய்து பெண்ணை மண்டபத்தின் வாயிலில் நிறுத்தினர்..
மான்சி ஏன் எல்லோரும் வெளியிலேயே நிற்கிறாங்க என்று யோசிக்கும் போதே அவளை ஒட்டினார் போல் யாரோ வந்து நின்றதில், அனிச்சை செயலாக அவள் ஒதுங்கி நின்று விட்டு,..
யார்..? என்று அப்போது தான் பக்க வாட்டில் திரும்பி பார்த்தவளுக்கு, கொஞ்ச நேரம் முன் தொலைக்காட்சி நேரடி ஒலிப்பரப்பில் தன்னை காதலிப்பதாக சொன்ன சர்வேஷ்வரன் நின்று கொண்டு இருப்பதை பார்த்ததும், இப்போது தான் என்ன செய்ய வேண்டும்..? என்று முழித்துக் கொண்டு இருந்தவளின் முகம் பற்றி..
“ என்னை பின் பொறுமையாவே பார்த்து கொள்ளலாம்.. ஹனி .. இப்போ நம்ம முன் இருக்கிறவங்களை முதலில் பார்..” என்ற அவனின் பேச்சில் கட்டளை போல் தான் மான்சிக்கு தெரிந்தது..
ஆனால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் மான்சியிடம் ஏதோ ரகசியம் பேசுவது போலான பிம்பம் தான் அனைவருக்கும் தெரிந்தது..
ஏன் என்றால், சர்வேஷ்வரன் மான்சியிடம் பேசும் போது தன் கட்டளையான பேச்சை குரலில் காண்பித்தானே தவிர.. முகம் முழுவதும் புன்னகை பூக்க.. (Clonazepam) பார்த்த அனைவருக்கும், காதலர்கள் நெடுநாள் பிரிந்து பின் பார்த்தால் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியுமே, அந்த மகிழ்ச்சி தான் சர்வேஷ்வரனின் முகத்தில் தெரிந்தது…
சத்தியமாக மான்சிக்கு இதற்க்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று கூட தெரியாது. இன்னும் முழித்து நின்றாள்.. அவளுக்கு இந்த கேமிரா.. இது போக நடிப்பு எல்லாம் பழக்கம் இல்லாதது…
இன்னும் கேட்டால், மற்றவர்களின் பார்வை படும் படி கூட அவள் அநாவசியமாக நிற்க மாட்டாள்.. சின்ன வயதில் ஒரு சில அனுபவங்கள் அவளை அது போல் அனைவரிடமும் இருந்தும் தள்ளி நிற்க செய்தது…
மான்சியின் இந்த முகம் பாவனையில்… “ இந்த கல்யாணம் உன் வாழ்க்கை முறைக்கு ஒத்துக் கொள்ளாதுன்னா முன்னவே சொல்லி இருக்கிறதுக்கு என்ன…?” என்ற கேள்வி கோபத்துடன் அவனிடம் இருந்து வெளிப்படவும்…
அவன் பேசுவது மான்சிக்கு சுத்தமாக விளங்காது.. அதே முழித்துக் கொண்டு இருக்கவும், சர்வேஷ்வரனுக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் காட்டுப்பாட்டையும் மீறி வெளிப்பட்டு விடுமோ என்று நினைத்து அவளிடம் பேசாது தங்களையே பார்த்துக் கொண்டு இருந்த தன் தாய் மாமன் சூர்ய நாரயணனை பார்த்தான்..
சூர்ய நாரயணனுக்கு தன் மருமகனின் பார்வைக்கு உண்டான அர்த்தம் தெரிந்தாலுமே, மான்சியிடம் தான் எப்படி சொல்வது என்று தெரியாது அவருமே மான்சிக்கு அருகில் செல்லாது தயங்கினார்..
இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த நவீன் தன் அக்காவின் அருகில் விரைந்து சென்றவன்.. மான்சியின் காதில் என்ன சொன்னானோ… அதன் பின் மான்சி சிரித்த முகத்துடன் எதிரில் இருப்பவர்களை பார்த்ததோடு சர்வேஷ்வரன் அவள் அருகில்நெருங்கி நின்றதும் எட்டி நில்லாது, அதே சிரிப்பை முகத்தை விட்டு அகலாது பார்த்துக் கொண்டாள்..
ஆலம் சுற்றியதும் சர்வேஷ்வரன் மான்சியின் கையை பற்றும் போது, தன்னால் அவள் உடலுக்குள் ஒரு அதிர்வு வந்தாலுமே, அதை அப்போது உணராது சர்வேஷ்வரனோடு அந்த பிரம்மாண்ட மண்டப்பதிற்க்கு இருவரும் ஒரு சேர வலது காலை எடுத்து வைத்து உள் நுழைந்தனர்…
சர்வேஷ்வரன் நவீனை மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே மான்சியோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டாலுமே, அங்கு நிலவும் சூழ்நிலைகளையும் அவன் மனது கிரகித்துக் கொண்டும் தான் இருந்தது…
அவன் கிரகித்ததில் தன் மாமா சூர்ய நாரயணன் மான்சியிடம் பேச தயங்குவதும், அதே போல் மான்சியின் அம்மா துளசியும் மான்சியிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் நவீனிடம் சொல்லியே அனைத்தும் மான்சியின் காதுக்கு வருவதும்..
நவீன் கூட தன் அம்மா அவனிடம் பேசும் போது ஒரு வித இறுக்கத்துடன் கேட்பதும், ஆனால் அதை தன் அக்கா மான்சியிடம் சொல்லும் போது மட்டும் முகம் முழுவதும் புன்னகையின் பூரிப்போடு சொல்வதும்.. என்று அனைத்தையுமே சர்வேஷ்வரன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்…
அதே போல் சூர்ய நாரயணன் துளசியின் அருகில் போய் நின்று திருமண சடங்குகளை செய்யும் போது எல்லாம், துளசி கூடிய மட்டும் அவரை விட்டு தள்ளி தள்ளி நிற்பதும் அவன் கண்ணுக்கு தெரிந்தது தான்..
அதே போல் வந்த உறவுகளில், சில நட்பில் சிலர் சூர்ய நாரயணனையும் துளசியையும் பார்த்து குசு குசு என்று பேசிக் கொள்வதும், இடை இடையே மான்சியை ஒரு மாதிரியான பார்வையை பார்ப்பதையுமே பார்த்தவன்,. திரும்பி நாளை தன் மனைவியாக வரப்போகும் மான்சியை அப்போது தன் அவன் உன்னிப்பாக கவனித்தான்..
அதுவும் நேரில் பார்த்தது இதோ இப்போது மான்சியோடு ஆலம் சுற்ற அவள் பக்கத்தில் போய் அவன் நின்ற போது தான்.. .அப்போது கூட அவள் திகைத்த தோற்றத்தில் மற்றவர்களின் கேள்விக்கு ஆளாக நேரிடுமோ என்று அவளை கண்டிக்க தான் அவளை பார்த்து பேசினான் என்பதை விட, அவளிடமான அவனின் பேச்சு முதலில் கண்டிப்பில் தான் ஆரம்பித்தது..
இதோ இப்போது வரை அந்த கண்டிப்பான பேச்சோடு தான் நின்று விட்டது. பின் அவனை சுற்றி நிகழும் நிகழ்விகளை கவனிக்க ஆரம்பித்தான்..
அதுவும் மான்சியின் மற்ற உறவுகளை கவனித்தவன் மான்சியை கவனிக்கவில்லை என்பது தான் உண்மை.. அவனுக்கு இந்த திருமணம் மற்றவர்களுக்கு எந்த வித சந்தேகமும் ஏற்படாத வரையில் நடந்து முடிய வேண்டும்.. அதில் தான் அவனின் முழு கவனமும் இருந்ததே தவிர..
தனக்கு மனைவியாக வருபவளின் எழில் வடிவத்தையோ, அவளின் அழகையோ பார்த்து ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை..
ஆனால் மற்றவர்கள் மான்சியை பார்க்கும் அந்த மரியாதையற்ற பார்வையில் திரும்பி யோசனையுடன் தன் வருங்கால மனைவியின் முகத்தை கவனித்த சர்வேஷ்வரனால், அவன் கண்ணை அவள் முகத்தை விட்டு அகல சிறிது நேரம் பிடித்தது…
அடுத்து சர்வேஷ்வரனின் கண்கள் அவள் மேனியில் பயணப்பட்ட இடங்களை எழுத்தால் சொல்ல முடியாத அங்கங்களை பார்த்த போதே, அவனுள் எழும் உணர்வு என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவன் டீன் ஏஜில் இருப்பவன் அல்லவே..
மான்சியை டிடெக்டீவ் கொடுத்த தகவல் அறிக்கையில் இணைத்து இருந்த புகைப்படத்தை பார்த்து தான் அவள் தோற்றமே அவன் கண்ணில் விழுந்தது..
பார்த்த அளவில் அழகாக இருக்கிறாள்.. அவ்வளவு தான் அவன் நினைத்தது… புகைப்படத்தில் பார்த்த போதே அவள் நல்ல நிறம் என்று தெரிந்தது.. நிறம் இல்லை என்றால் கூட, அவன் கவலை பட்டு இருக்க மாட்டான் தான்..
அவன் புகைப்படத்தை கூட பார்த்தது தன்னோடு ஒரளவுக்காகவது நன்றாக இருந்தால் தானே நன்றாக இருக்கும்.. காதல் திருமணம் என்றால் நம்புவார்கள்.. ஏன் என்றால் இப்போதைய காதல் அழகானவர்களுக்கு மட்டும் தான் என்பது போல் தானே வெளி பிம்பம் உருவகப்படுத்தி இருக்கிறது..
பின் அடுத்து அவன் இந்த திருமணத்திற்க்கு பேச வேண்டியது செய்ய வேண்டியது என்று அவன் மனம் அதை திட்ட மிடவே சரியாக இருக்கும் போது, மான்சியை பற்றியே யோசிக்காத போது, அவளின் அழகு எப்படி அவனின் நினைவுக்கு வரும்..
ஆனால் இப்போது… இந்த நொடி.. அதுவும் அவன் தேர்ந்தெடுத்த உடை.. நகையில் தன் பக்கத்தில், அந்த நேரத்தில் மான்சியை பார்த்ததும் அவனுக்குள் எழும் அந்த உணர்வினை இனம் கண்டுக் கொண்டவனுக்கு என்ன இது நானா..? என்பது போல் அவனுக்கு அவனே அடக்கி கொண்டாலுமே, அவன் கண்கள் அவளை அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டு, அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டு தான் இருந்தது…
அப்படி அடிக்கடி மான்சியை சர்வேஷ்வரன் திரும்பி பார்த்ததில் அவன் கவனித்தது.. மற்றவர்களின் பார்வைக்கு ஒரு வித சங்கடத்துடன் தலை குனிவதும். பின் போட்டோ கிராபர் இரு முறை..
“ மேடம் முகத்தை நிமிர்த்தி பாருங்க..” என்று சொல்லும் போது மட்டும் நிமிர்ந்து பார்ப்பதும்.. என்ற அவளின் செயலை கவனித்துக் கொண்டு இருந்த சர்வேஷ்வரனின் மனதில் மான்சியை பற்றிய எண்ணம் மட்டுமே முழுமையாக நிறைந்து போய் இருந்தன..
சிறு வயது முதல் பார்த்த அவனின் அத்தை மற்றும் தாய் மாமன் மகளான அனிதாவை அவன் திருமணம் செய்ய கேட்ட போது..
“ம் சரி..” என்று ஒத்துக் கொண்டான்..தன் திருமணம் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்க வேண்டும்.. பெரியவர்கள் அனிதாவை தேர்வு செய்து இருக்கிறார்கள்..
மூன்று வருடம் முன் தன் அண்ணன் மகேஷ்வரன் திருமணத்தில் அவன் அனிதாவை பார்த்து இருக்கிறான்.. தோற்றம் குறை சொல்லும் படி இல்லை.. பின் என்ன..? அது தான் அவன் அனிதாவை பற்றி நினைத்தது…
திருமணம் முடிவு செய்த பின் அவளோடு பேச வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை.. சில சமயம் அனிதா ஏன் நம்மை அழைக்கவில்லை.. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ..? என்று ஜெர்மனியில் ஒரே ஒரு முறை மட்டும் நினைத்தான்..