பின் அவனே நீ மட்டும் அவளை அழைத்து பேசினியா..? இது போல் திருமண பேச்சில் முதல் அடி ஆண் தானே எடுத்து வைக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். அதே எண்ணம் கூட அனிதாவுக்கு இருக்கும் அல்லவா..?
மேலும் அனிதாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பட்சத்தில், அதை வெளிப்படையாக சொல்லும் பெண் தான்.. அந்த தயக்கம் எல்லாம் அவளுக்கு கிடையாது என்று தான் அப்போது அனிதாவை பற்றி அவன் நினைத்தானே ஒழியே..
அவள் அனைத்து எல்லையையுமே கடக்கும் பெண்.. கடந்த பெண் என்று அவன் அனிதாவை பற்றி நினைத்து கூட பார்த்தது கிடையாது…
அவளை பற்றி அறிந்ததும் அவனுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தன.. அவன் நிச்சயம் இது போல் ஒரு செயலை அனிதாவிடம் எதிர் பார்க்கவில்லை என்பதை விட, தன் குடும்பத்து பெண்ணிடம் அவன் எதிர் பார்க்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..
அனிதாவை பற்றி கேள்வி பட்ட உடன் தான் முதல் அதிர்ச்சியில் தான் இப்படி நினைத்து. பின் அடுத்து அவன் பெயர்.. அவன் குடும்பத்தின் பெயர் காப்பற்ற என்ன செய்ய வேண்டும்…? இது தான் அவன் மனது முழுவதும் ஆக்கிரமித்து இருந்தன…
அப்படி இத்தனை மாதம் தான் திருமணம் செய்யும் பெண் அனிதாவிடம் தோன்றாத ஒரு எண்ணம் மான்சியை பார்த்து தோன்றியது..
மான்சி அழகி தான்.. அதில் எள்ளலவும் அவனுக்கு சந்தேகம் கிடையாது.. அழகை பார்த்து மயங்கி விட்டேன் என்று நினைக்க கூட முடியாத அளவுக்கு, இவளோடு அழகியை எல்லாம் அவன் வெளி நாட்டில் பார்த்து இருக்கிறானே…
அதோடு அவனோடு எந்த அளவுக்கும் பழக நினைக்கும் பெண்களையும் தான்.. இவன் தான் அதில் விருப்பம் இல்லாது ஒரே வார்த்தையில்..
“ நோ இன்ரெஸ்டட்டு ..” என்று சொல்லி விடுவான்.. இப்போது என்ன இவளோடு பேச என் மனம் விழைகிறது.. பழக என் இதயம் துடிக்கிறது…
அதற்க்கு மேலும் என்று அவன் நினைக்கும் போதே, எந்திர கதியில் இத்தனை நேரம் மேடையில் நின்றுக் கொண்டு வந்தவர்களுக்கு வணக்கம் செய்து கை தன்னால் வந்தவர்கள் பக்கம் சென்று அவர்களை முறையே மான்சியின் முகம் பார்த்து வந்தவர்களை மான்சிக்கு அறிமுகம் செய்யும் போது எல்லாம், மான்சியின் முகம் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு விருப்பமாக இருந்தது..
அதனால் அவன் மதிக்காதவர்கள் வந்த போதும், மான்சிக்கு முறையாக அறிமுகம் படுத்திக் கொண்டு இருந்தாலுமே, அவன் போக்கு மாறிய விதமும் அவன் மனம் எடைப்போட்டு கொண்டு தான் இருந்தது..
அதை தடை செய்யும் படியாக சூர்ய நாரயணனோடு ஒரு குடும்பம் மேடை ஏறி வந்தது. அவர்கள் வரும் போது கூட சர்வேஷ்வரன் தன் மாமாவின் தொழில் துறை நட்போ என்று தான் மிக சாதரணமாக அவர்களை எதிர் கொண்டான்..
ஆனால் வந்த தம்பதியர்களில் ஆண் மான்சியிடம்.. “ எப்படி இருக்க மான்சி.. அம்மா எங்கே..?” என்று கேட்டதில் மான்சி…
“ நல்..லா இரு…க்கேன்..” என்று மான்யின் திணறலான பதிலில் தான் சர்வேஷ்வரன் முதலில் மான்சியின் பதட்டமான முகத்தை பார்த்தவன், பின் வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்..
“ம் ஓகேம்மா.. நீ டென்ஷன் பண்ணிக்காதே…” என்று வந்தவர் சொல்லிக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கவும், மான்சி ஒரு நிம்மதி பெரும் மூச்சை விட்டாள்..
பின் தான் தன்னையே கவனித்துக் கொண்டு இருந்த சர்வேஷ்வரனை அப்போது தான் கருத்தில் கொண்டு தன் முக பாவனையை மாற்றிக் கொண்டு, அவள் சாதரணமாக மற்றவர்களை எதிர் கொண்டதில் சர்வேஷ்வரன் தன் மாமா சூர்ய நாரயணனோடு பேசிக் கொண்டு செல்லும் தம்பதியர்களில் குறிப்பாக அந்த ஆணை பார்த்தவன் இது கவனிக்க பட ஒன்று என்று மனதில் குறித்துக் கொண்டான்…
இப்படி மணமகளுக்கே உரிய பூரிப்பில் சிறிது நேரம் அவன் மனது துள்ளினாலும். பின் மீண்டவனாக அடுத்து தன்னை சுற்றி கவனிப்பதிலும், வந்தவர்களை வர வேற்பதிலும் அன்றைய அவனின் கல்யாண வர வேற்ப்பு முடிந்தது என்றால்,
மான்சிக்கு இது தனக்கான இடம் கிடையாது. இங்கு நான் பொருந்த மாட்டேன்.. கண்டிப்பாக இந்த வாழ்க்கை தனக்கு நல்லது செய்யவில்லை என்றாலும், தீயது செய்யாது இருந்தால் போதும் என்று அவள் மனது நினைக்கும் போதே …
இந்த வாழ்வில் இருக்கும் கொஞ்ச நஞ்ச என் நிம்மதியும் கெடும் என்று தான் அவள் உள் மனது அவளுக்கு கொல்லிக் கொண்டே இருந்தது…
அதுவும் சூர்ய நாரயணனோடு கடைசியில் வந்தவரை பார்த்ததில் சிறு வயது நியாபகமும் கண் முன் வலம் வர.. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் நாம் மேடையிலேயே விழுந்து விடுவோமோ என்ற பயம் வேறு வந்து விட்டது..
அதுவும் மேடையில் நாம் வீழ்ந்தால், என் அம்மாவின் வாழ்க்கை முறைக்கு, என் மயக்கத்தை வேறு விதமாக தான் எடுத்துக் கொள்ளும்..
இதோ அனிதா இது போல் ஒரு விசயத்தை செய்து இருக்கிறாள்.. ஆனால் பெண் மாறியதில் அனிதா மீது தவறு இருக்குமோ என்று கூட யாரும் அவள் மீது சிறு சந்தேகம் கூட கொள்ளவில்லையே..
அதுக்கு காரணம் அவள் அம்மாவின் தாலி கட்டிய வாழ்க்கை.. அந்த வாழ்க்கை எனக்கு வேண்டும் என்று தம்பியின் ஆசையில் தானே நான் இங்கு வந்து நிற்க்கிறேன்…
அதுவும் அவன் மனதில் இது போல் சங்கடம் எல்லாம் இல்லாது இருந்தால் தான் அவன் படிப்பில் கவனத்தை செலுத்த முடியும் என்று நினைத்து தான்.. இதோ இந்த வாழ்வை ஏற்றுக் கொள்கிறேன்..
இதோ இந்த வாழ்க்கையில் நான் இன்னும் காலடி எடுத்துக் கூட வைக்க வில்லை.. அதற்க்குள்ளே என் பிரச்சனை ஆரம்பித்து விட்டது.. இதோ மற்றவர்களின் அந்த பார்வை..
அதிலும் தன் பக்கத்தில் நிற்பவனை அப்படி ஏதோ தேவ தூதனை போல் பார்த்து விட்டு, தன்னை பார்க்கும் போது அந்த பார்வை மாறிய விதம்.. இவனுக்கு இவளா…? என்பது போல் இப்போது ஏளனத்தோடு வேறு ஏதோ சேர்ந்து தெரிவதில், மான்சி நொந்து போய் விட்டாள்.
இதே மன நிலை எனக்கு நீடித்தால், தன் தம்பியின் கனவு நிறை வேற்ற தன் கனவை சிதைப்பதோடு, இது போல் பார்வையில் என்னை நானே வெறுத்து விடும் சூழ்நிலைக்கும் நான் ஆளாகி விடுவது நிச்சயம்.. மாற்ற வேண்டும் நான் என் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்..
மற்றவர்களின் பார்வை என்ன…? பேச்சு கூட என் மனதை பாதிக்க கூடாது என்று நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை.. ஒரு சில வார்த்தைகள்.. அதுவும் ஒரு சிலரோட வார்த்தைகள் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போல் இருக்கும் என்று…
இப்படி இந்த ஜோடி மண மக்கள் இருவேறு மன நிலையில் வர வேற்ப்பு முடிந்து.. அதே போல் தான் மறு நாளும் மான்சிக்கு மட்டும் அல்லாது துளசிக்கும் சில சங்கடத்தோடு தான் அந்த திருமண வைபோகம் ஒரு முடிவுக்கு வந்தது..
ஆனால் இதற்க்கு எதிர் பதமாக சர்வேஷ்வரனின் தங்கை கீதாஞ்சலி விக்ரம் வர வேற்ப்பு இருவரின் காதல் பார்வை பரி மாற்றத்திலும், மெல்லிய தேக தீண்டலான கை பற்றல்.. மாலையில் நடுவில் விக்ரம் கீதாஞ்சலியின் இடை மீது தெரியாது கை படுவது போல் தொடுவது…
பின் கீதாஞ்சலியின் முறைப்பில் ஒரு கண் சிமிட்டலோடு நல்ல பிள்ளை போல்.. வந்தவர்களை வர வேற்ப்பது என்று மிக சந்தோஷமான மன நிலையில் அந்த ஜோடியின் வர வேற்ப்பு ஒரு முடிவுக்கு வந்தன..
இதில் மான்சிக்கு மகிழ்ச்சி தரும் விசயம் ஒன்று இருந்தது என்றால், அது நவீன் சிரித்த முகத்தோடு அந்த மண்டபத்தை சுற்றிக் கொண்டு வந்ததும் பெரும்பாலான திருமண வேலைகளை செய்ததும் தான்..
அதுவும் சர்வேஷ்வரனின் அப்பாவும், பெரியப்பாவும் நவீனிடம் ஏதோ சொல்வதும், அதற்க்கு நவீன் தலையை தலையை ஆட்டுவது பின்..
அவர்கள் சொன்ன வேலைக்காக வெளியில் ஓடி போய் பின் வந்து என்று அவன் பம்பரமாக சுற்றிக் கொண்டு இருந்தவன்..
சரியாக தாலிக்கட்டும் நேரம் மேடைக்கு ஓடி வந்தவன் தன் அக்கா பின் பக்கம் நின்றுக் கொண்டவன்… சர்வேஷ்வரன் அந்த தாலியை கையில் எடுக்கும் வேளயில், நவீனின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்துக் கொண்டே தான் மான்சி சர்வேஷ்வரனின் தாலியை வாங்கிக் கொண்டாள்..
சர்வேஷ்வரனும் தாலியை கட்டும் போது மான்சியின் முகத்தை தான் பார்த்தான்.. மான்சி தன்னை பார்க்காது அவள் பார்வை சென்ற திசையையும் பார்த்த வண்ணம் தான் அவனும் மான்சிக்கு தாலியை கட்டியது..
நவீனின் முகத்தில் வந்து போன பாவனை அவன் கண்ணில் வழிந்த கண்ணீர்… சர்வேஷ்வரனும் அதை கவனித்தான் தான்..
அதை பார்த்த சர்வேஷ்வரன் கண்களுக்கு , அது அக்கா தம்பியின் பாசமாக மட்டும் தான் தெரிந்தது…
ஓ அக்கா மீது ரொம்ப பாசம் போல்.. பின் அம்மா அப்படி இருந்தால், ஒரு பையன் அக்கா மீது தானே பாசத்தை காட்ட முடியும்.. அவன் நினைத்தது இது தான்…
ஒரு சிலதோடு மகிமை அது இருப்பவர்களுக்கு தெரியாது.. இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.. அந்த தாலியின் மூன்று முடிச்சியின் மகிமை சிறு பைய்யனான நவீனுக்கு தெரிந்து இருக்கிறது.. அதே போல் சர்வேஷ்வரனுக்கும் தெரிந்து இருந்தால் நன்றாக இருக்கும் பார்க்கலாம்..