அதுவும் இத்தனை பேர் சூழ இருக்க …என்று அவள் மனது நினைக்கும் போதே கண்ணீரோடு தன்னை சுற்றி பார்வையை சுழற்றியவளின் பார்வைக்கு நேர் எதிராக மகேஷ்வரன் தெரிந்தான்..
அவன் யார் என்று அப்போது மான்சிக்கு தெரியவில்லை.. ஏன் என்றால் தன் மாமியார்.. மச்சினச்சி மருத்துவமனையில் இருக்கும் போது..
அதுவும் அவர்களுக்கு துணையாக அவன் மனைவி வனிதா… “ என்னை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க..” என்று அவள் அவனை அழைக்கும் போது..
“ நடு ராத்திரி கூட பப்பில் இருந்து தனியே கார் ஓட்டிட்டு வீட்டுக்கு வருவியே… இப்போ பகல்.. பக்கத்தில் இருக்கும் நம்ம ஆஸ்பிட்டலுக்கு நான் துணைக்கு வரனுமா…?” என்று மகேஷ்ரன் தன் மனைவியிடம் கேட்கவா முடியும்..?
மகேஷ்வரன் போல் ஒரு சில ஆண்கள் மனைவியின் அட்டகாசத்தை அடக்க முடியாததா ..? இல்லை வீட்டில் இதனால் அமைதி கெட கூடாது என்று நினைத்தா..? ஏதோ ஒரு காரணத்திற்க்காக மனைவியின் செயல்கள் பிடிக்காது போனாலும், அதை பெரிது படுத்தாது… அவர்கள் வழிக்கே சென்று விடும் சாதுவான கணவன்மார்களும் இங்கு இருக்க தான் செய்கிறார்கள்..
ஆனால் அந்த மனைவிமார்கள் ஒன்றை புரிந்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதனை…
நம் மகேஷ்வரன் சாது கணவனாக வனிதா அழைத்ததிற்க்கு வீண் விவாதம் செய்யாது.. தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்..
அழைத்து சென்றவள் தன் புகுந்த வீட்டின் மீது இருக்கும் கோபத்தில்.. “ தன் அம்மா தங்கையின் உடல் நிலை இப்படி இருக்கு.. நீங்க என் கூட இருந்தா எனக்கு தைரியமா இருக்கும்.. “ என்று தன் கணவனை சர்வேஷ்வரன் திருமணத்திற்க்கு போக விடாது திட்டம் இட்டு பேசிக் கொண்டு நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தாள்…
மகேஷ்வரனுக்கு அது தெரிந்து தான் இருந்தது.. இருந்தும் அமைதி காத்தான்.. அவனுக்குமே திருமண வர வேற்ப்பில் கலந்து கொள்ள அந்த அளவுக்கு விருப்பம் இல்லை..
பத்மா அத்தை மீது சர்வேஷ்வரனோடு, மகேஷ்வரனுக்கு பாசம் அதிகம்.. அதனால் தான் வனிதா செய்வதை பெரிது படுத்தாது விட்டு கொடுத்து கொண்டு செல்கிறான்.. ஆனால் விட்டு கொடுக்கும் விசயத்தை பொறுத்தும் ஒரு சிலது இருக்கிறது தானே..
அனைத்திலும் தன் அத்தைக்காக விட்டு கொடுத்து போன மகேஷ்வரன், ஒரு நாள் தன் அத்தை அவன் காலில் விழுந்தும்…
“ நீங்க உங்க பெண்ணை கூட்டிட்டு போகலாம்..” என்று சொல்லுவான் என்று அவனிடமே சொன்னால் கூட அவன் நம்பி இருப்பானோ என்னவோ… அப்போது நானா..? என்று தான் அவன் கேட்டு சிரித்து இருப்பான்..அந்த அளவுக்கு அவனுக்கு தன் பத்மாவதி அத்தை மீது பாசம்..
அந்த பாசத்தில் தன் அத்தை இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருத்தரை பார்க்க முடியாது .. வனிதா பேச்சை கேட்டுக் கொண்டு மருத்துவனையிலேயே இரவை கழித்து விட்டான்..
தன் செயல் வெற்றி அடைந்த களிப்பில் மறு நாளும் வனிதா அதே பாணியை தொடர..
“ சீப்பை ஒளித்து வைத்து கொண்டால், கல்யாணம் நிற்காது வனி… உனக்கு இன்னும் சர்வாவை பற்றி சரியா தெரியாது நடந்து கொள்கிறாய்.. நாளை பெரிய பிரச்சனை வந்தால் அப்போ தெரியும்.. உனக்கு…” என்று சொன்னவனின் பேச்சை அப்போதே வனிதா காது கொடுத்து கேட்டுக் கொண்டு இருந்தால், நன்றாக இருந்து இருக்கும்..
இவள் சொல்லி திருந்தும் ரகம் கிடையாது..பட்டா தான் புரியும் என்று அவள் முகபாவனையிலேயே புரிந்துக் கொண்ட மகேஷ்வரன்..
“ முகூர்த்தம் நேரம் ஆகுது.. நான் கிளம்புக்கிறேன்..” என்று சொல்லி விட்டு.. இதோ தாலி கட்டும் நேரம் தான் அவன் மண்டபத்திற்க்கு வந்தது..
என்ன தான் துளசி சூர்ய நாரயணனை விட்டு தள்ளி தள்ளி போனாலுமே.. அதை கவனித்துக் கொண்டு இருந்த மகேஷ்வரனுக்கு கோபம் இன்னும் ஏறத்தான் செய்தது..
இப்போது தன் தம்பி அந்த பொம்பளையை பார்த்து பேசிய பேச்சில் அவன் மனது கொஞ்சம் சமாதானம் ஆகி அது தந்த மகிழ்ச்சியில் அவன் சிரித்தான்..
அந்த நேரம் தான் மான்சி தலை நிமிர்ந்து அவமானத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தது சிரித்து கொண்டு இருக்கும் மகேஷ்வரனின் முகத்தை தான்.. யார்..? என்று தெரியாது .. இன்னும் அவமானம் படும் படி போய் பதை பதைத்து தன் தம்பியின் முகத்தை பார்த்தாள்..
அவன் முகத்தில் தெரிந்த அவமானத்தில் இதற்க்கு தானே வேண்டாம் என்று சொன்னது… இதோ ஆரம்பம் ஆகி விட்டது ..தன் தாயின் வாழ்க்கை முறையை பற்றி பேசுவது.. இது தொடரும்.. அவளுக்கு தெரியும் ..
தெரிந்தே தான் மான்சி சர்வேஷ்வரன் வீட்டுக்கு சென்றது.. அங்கும் அனைத்தும் முறையாக மணமக்களுக்கு செய்ய கூடிய முறையை செய்துக் கொண்டு இருந்தனர்.. பெண் வீட்டு சார்பாக ஒருவரும் இல்லாது..
தன்னை பார்த்து கேலியாக சிரித்த இளைஞனும் அதே வீட்டில், அதுவும் உரிமையுடன் வளைய வருவதை பார்த்த மான்சி.. இவன் யார் …? என்று அவள் மனது யோசனை செய்யும் போதே ..
பால் பழம் சாப்பிட அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த சர்வேஷ்வரன்.. “அவன் என் அண்ணன்..” என்று அவள் கேட்காது அவள் முக பாவனையை பார்த்தே அவளிடம் சொன்னான்..
இவன் நம்மையே தான் பார்த்துக் கொண்டு இருக்கிறானா..? என்று நினைத்துக் கொண்டே வீட்டை சுற்றி பார்ப்பது போல் பார்வையை சுழல விட்ட மான்சி, எதார்த்தமாக பார்ப்பது போல் சர்வேஷ்வரனை பார்த்தாள்..
பார்த்ததில் தெரிந்தது.. அவன் அவள் பக்கமே திரும்பி அவளை கவனித்துக் கொண்டு இருப்பது.. தான் பார்ப்பதை அவன் பார்த்து விட்ட பின், இப்போது நான் பார்ப்பதா…? இல்லை முகத்தை திருப்பி கொள்ள வேண்டுமா..? என்று அவள் யோசனை செய்துக் கொண்டு இருக்கும் போதே…
சர்வேஷ்வரன்… “ இப்போ சொல்வது தான் மான்சி.. எனக்கு இந்த திருட்டு தனம் எல்லாம் பிடிக்காது…” என்ற அவனின் பேச்சில், இப்போ ஏன் இதை என் கிட்ட சொல்றான் என்பது போல் இப்போது அவனை பார்ப்பதா..? இல்லை வேண்டாமா..? என்ற தயக்கம் எல்லாம் இல்லாது அவனை யோசனையுடன் நேருக்கு நேர் அவன் முகம் பார்த்தாள்..
“ இப்போ வீட்டை சுற்றி பார்ப்பது போல் என்னை பார்த்தியே அதை தான் சொல்றேன்… நான் உன் கணவன்… என்னை பார்க்க நினைத்தால், திரும்பி என்னை நேருக்கு நேர் பார்..
பேச நினைத்தால் பேசு.. ஏதாவது கேட்க நினைத்தால் கேள்.. புரியுதா…? எனக்கு எது என்றாலும் நேர்மை வேண்டும் புரியுதா…?” என்று சொன்னவன்.. அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லையா இருந்து இருக்கும்..
ஆனால் சர்வேஷ்வரன் அதோடு விடாது… “ உன் பிறப்பு எப்படியோ… ஆனால் இனி..” என்று அவன் பேச்சை முடிக்க விடாத மான்சி..
“ பிறப்பு என்றால் எதை சொல்றிங்க நீங்க… என் பிறப்புக்கு காரணமானவரையா..? இல்லை எனக்கு உயிர் கொடுத்தவங்களையா…? “ என்று சர்வேஷ்வரன் இப்போது சொன்ன எது என்றால் என்னை நேராக பார்க்கலாம்…
எது என்றாலும் என்னிடம் பேசலாம். எதை என்றாலும் என்னிடம் கேட்கலாம்..” என்று அனைத்தையுமே அவன் சொன்ன மறு நொடி அவனிடம் செய்து காட்டிக் கொண்டு இருந்தாள் மான்சி..
மான்சியின் பேச்சில்… அதாவது அவனை பார்த்து கேட்ட கேள்வியில் கேட்ட விதத்தில் சர்வேஷ்வரன் முதலில் அதிர்ந்தாலும்.. பின் அவள் கேள்வி கேட்ட தோரணையில் அவளை ரசித்தே..
“ இரண்டையும் தான்…” என்று சொன்னவனுக்கு பதிலாக மான்சி…
“ என் பிறப்புக்கு காரணமானவர் இப்போது இல்லை.. அதாவது என் அப்பா கணேஷ் பிரபாகர் இப்போது உயிரோடு இல்லை..
நான் பிறக்கும் போது என் அம்மா அவங்க மனைவியா இருந்தாங்க… என் தம்பி பிறக்கும் போதும்… அதனால் தந்தை வழியில் என் பிறப்பு சரியானது தான்..
தாய் வழி எனும் போது, நீங்க எல்லோர் முன்னும் மண்டபத்தின் வாசலி வைத்து சொன்னிங்களே… என் அம்மா சின்ன வயது கிடையாது கட்டாயப்படுத்த என்று.. அதே போல் தான் அவரும்..” என்று சூர்ய நாரயணன் நின்றுக் கொண்டு இருந்த இடத்தை கை காட்டி சொன்ன மான்சி…
“ அப்படி பார்த்தால் என் பிறப்போடு அவருக்கு பிறந்த பிறப்பும் தானே அதில் அடக்கம்..” என்ற மான்சியின் பேச்சுக்கு, சர்வேஷ்வரன் பதில் சொல்ல முடியாது திகைத்து போய் தான் அவளை பார்த்தான்..
எத்தனையோ தொழில் முறை பேச்சுக்களை சாதரணமாக பேசி விட்டு வருபவன்.. இன்று ஒரு சிறு பெண்ணின் உண்மை பேச்சுக்கு அவனால் பதில் கொடுக்க முடியவில்லை…
சர்வேஷ்வரனின் மெளனம் மான்சியை இன்னும் பேச தூண்டியது..
“ கால் கேல்.. அதாவது விபாச்சாரிக்கு குழந்தை பிறந்தால் கூட, அதன் தந்தை ஒருவனாக தான் இருக்க முடியும்…” என்ற அவள் தொடர் பேச்சில், சர்வேஷ்வரன் இன்னும் அதிர்ந்து போய் மான்சியை பார்த்தானே தவிர… அவளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாது, தன் மனைவியின் உண்மை தன்மையான பேச்சை அவன் மனது உள்வாங்கிக் கொண்டு இருக்கும் போதே..
தன்னை காட்டி காட்டி மான்சி சர்வேஷ்வரனிடம் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை, கவனித்த சூர்ய நாரயணன் பதறி அவர்கள் அருகில் விரைந்து வந்தார்…