வைதேகி பதட்டத்துடன்.. “ என்ன வார்த்தை இது சர்வா ஒப்பவில்லை… என்று.. அதுவும் அந்த பெண்ணை கல்யாணம் செய்த பின் இது போல் எல்லாம் பேச கூடாது…
என் கவலை… நீங்க இரண்டு பேரும் எல்லாம் கடமைக்கு என்று செய்வது போல் இருக்கு சர்வா…கல்யாணமும் நம்ம குடும்ப மானம் போக கூடாது என்று கடமைக்கு தான் செய்திக்கிட்டியோ…? என்று தான் பயமா இருக்கு சர்வா… “ என்று அன்னை பேச பேச வைதேகியை அணைத்துக் கொண்டவன்..
“ மாம்.. மாம்.. உங்க சன் தொழிலிலேயே தோற்க்க கூடாது என்று நினைப்பவன்… வாழ்க்கையில் தோத்து போயிடுவேன்னா… கவலையே படாதிங்க..
இப்போ இருந்து பத்து மாசத்தில் நான் உங்களை பாட்டியா பதவி உயர்வு கொடுத்துடுறேன்.. இப்போ ஹாப்பியா..?” என்று சொல்லிக் கொண்டே அன்னையின் தோளை பற்றிக் கொண்டு கார்டனில் பேசிக் கொண்டு இருந்தவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்..
அவர்கள் செல்லவும் தான் அங்கு மறைவில் இருந்த மான்சியால் சுதந்திரமாக மூச்சை இழுத்து விட முடிந்தது…
“ வைதேகி எங்கேன்னு பார்… நேரம் வேறு ஆகுது..” என்று சொன்ன ரேவதி.. அதாவது மான்சியின் பெரிய மாமியார் இவளிடம் சொன்னதால், சர்வா தன் அன்னையோடு முன் பக்கம் சென்றதை பார்த்த மான்சி.. அவர்களை அழைக்க வரும் போது தான்.. சர்வேஷ்வரன்..
வைதேகியிடம்.. “ நான் மான்சியை திருமணம் செய்து கொண்டது உங்க மனதுக்கு ஒப்பவில்லையா…?” என்று கேட்டது…
எப்போதும் மற்றவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கும் பழக்கம் மான்சிக்கு கிடையாது.. இன்னும் கேட்டால் மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காது போவது தான் அவளின் வழக்கம்..
ஆனால் இந்த வார்த்தை தவிர்க்க முடியாது மான்சி கேட்க வேண்டியதாயிற்று…
இப்போது அவர்கள் அருகிலும் செல்ல முடியாது.. திரும்ப போகும் போது பார்த்து விட்டால்.. நான் என்னவோ ஒட்டு கேட்க இவர்கள் பின் வந்தது போல் ஆகி விடுமே என்று அசையாது அப்படியே நின்று விட்டாள்.. .
அவள் நின்றுக் கொண்டு இருந்த இடம் இருட்டாக இருந்ததாலும், அடந்த மரம் பின் அவள் சரியாக வந்த போது தான், சர்வாவின் அந்த பேச்சை கேட்க நேர்ந்ததாலும், அவள் அப்படியே நின்று விட்டாள்..
அவர்கள் அருகில்.. அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் நின்ற போது கூட அவர்கள் பார்வைக்கு, மான்சி படாது போனாள்..
அவர்கள் பேச பேச மூச்சு கூட விடாது என்று இழுத்து பிடித்துக் கொண்டு இருந்தவள் அவர்கள் சென்ற பின் தான் விட்டாள்..
சர்வேஷ்வரன் பேசிய ஒப்பவில்லை என்ற வார்த்தையே அவள் காதில் திரும்ப திரும்ப எதிரொலித்தது…
இப்போது முழுமையாக அவள் தன் வேதனையை கூட அனுபவிக்க முடியாது.. இப்போதே செல்வதா..? இல்லை சிறிது நேரம் கழித்து செல்லலாமா…? என்னை தேடுவாங்களா..? என்று அவள் யோசிக்கும் போதே மகேஷ்வரன்..
“ இந்த பக்கம் தான் போனா..” என்ற பேச்சும்..
“ இந்த இருட்டில் எங்கு போனா..?” என்ற வைதேகியின் பேச்சும் காதில் விழுந்தன…
அவர்கள் தன் அருகில் வருவதற்க்கு முன் இவள் அவர்களை நோக்கி விரைந்து போய் அவர்கள் முன் நிற்கவும்..
மகேஷ்வரன் மான்சியை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் என்றால், வைதேகி.. “ என்னம்மா எங்க என்னை தேடிட்டு இருந்தே… அக்கா சொன்னாங்க நான் தான் உன்னை கூப்பிட அனுப்பினேன் என்று… நான் இந்த பக்கம் சர்வாவுடன் பேசிட்டு இருந்தேன் மான்சி.. “ என்று சொல்லவும் மான்சி பதில் அளிக்காது அமைதியாக இருப்பதை பார்த்து வைதேகி என்ன நினைத்தாரோ ..
“ சரிம்மா வா நேரம் ஆகுது..” என்று சொல்லி மருமகளை அழைத்துக் கொண்டு சென்ற வைதேகியின் பின் சென்ற மகேஷ்வரனின் பார்வை முழுவதும் மான்சியின் மீதே நிலை பெற்று இருந்தன..
வீட்டுக்குள் வந்தவளை இப்போது சர்வேஷ்வரன் அவள் முகத்தையே கூர்ந்து பார்க்க, மான்சிக்கு அவள் அவளாகவே இருக்க முடியவில்லை..
மகேஷ்வரனை மான்சி பார்க்கவில்லை என்றாலுமே, அவன் தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதை அவளாள் உணர முடிந்தது…
இதோ இப்போது இவன் தன்னை நேர்க் கொண்டு தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதால், தன் முகத்தையே கவனத்துடன் வைத்துக் கொண்டு இருப்பதே அவளுக்கு,ஒரு அயர்வை தந்தது…
என்ன இது..? இதே போல் இருந்தால் எப்படி நான் நானாக இருக்க முடியும்.. என்பது போல் யோசிக்கும் போதே, திரும்பவும் அவளை வைதேகி கீழ் தளத்தில் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்து சென்றார்…
அது வரையும் கூடவே சர்வா.. மகியின் பார்வை மான்சியை தொடர்ந்ததால், வைதேகி அழைத்து போகும் போது அப்பாடா என்று இருந்த அவளின் மனம்.. அந்த அறைக்குள் போனதும் ஒரு புடவையை கொடுத்து விட்டு, அங்கு இருக்கும் குளியல் அறையை காட்டியவர்…
“ குளித்து விட்டு, இந்த புடவையை கட்டிக்க மான்சி… புடவை கட்ட தெரியும் தானே…?” என்று கேட்ட வைதேகிக்கு..
“ தெரியும்…” என்று மான்சி தலையாட்டவும்..
“ சரி குளித்து விட்டு புடவை கட்டிட்டி இரு…நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்.. அங்கு கீதா வேறு.. மாம் மாம் என்று என்னை ஏலம் விட்டுட்டு இருக்கா…. அவளுக்கு எதுக்கு என்றாலும் நான் வேண்டும்..” என்று சலிப்போடு வைதேகி பேசுவது போல் இருந்தாலும், முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது..
பின் இருக்காதா…? மகள் வாழ்க்கையை பற்றி அவருக்கு கவலை கிடையாது.. நேற்றில் இருந்து அனிதாவை பற்றி தெரிந்ததில் இருந்து மகன் வாழ்க்கை பற்றி கவலை பட்டுக் கொண்டு இருந்தவர்…
சர்வேஷ்வரன் மான்சியை திருமணம் செய்ய முடிவு செய்த போதும் கூட.. அவன் வாழ்க்கை என்ன ஆகுமோ..? என்ற கவலை தான்…
அதுவும், இருவரும் இரு வேறு துருவங்களாக இருக்க.. இவன் குடும்ப கவுரவதுக்காக இவன் மகிழ்ச்சியை தொலைத்து விட்டானோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவரிடம்..
சர்வேஷ்வரன் சொன்ன.. “ பத்து மாதத்தில் நீங்க பாட்டியா ஆகிடுவிங்க..” என்ற வார்த்தையில் அந்த தாயின் மனது ஒரு தெளிவுக்கு வந்து விட்டது… தன் மகன் வாழ்க்கையிலும் ஜெயித்து விடுவான் என்று..
ஆனால் அவருக்குமே தெரியவில்லை பாரேன்.. குடும்ப வாழ்க்கை வெற்றியடைய இருவரும் நினைக்க வேண்டும் என்பதும்.. அதுவும் தாம்பத்தியத்துக்கு மனைவியின் சம்மதமும் வேண்டும் என்பதையும் தான்..
வைதேகி மனதில் இருந்த மகிழ்ச்சியில் மான்சியின் முகம் பாராது வேலை பளூவில் அவளிடம் புடவையை கொடுத்து விட்டு, பக்கத்து அறையில் தயாராகி கொண்டு இருந்த தன் மகளை கவனிக்க சென்று விட்டார்..
ஆனால் கையில் புடவையை வைத்துக் கொண்டு இருந்த மான்சியின் முகத்தில் தான் கலவரம் பூசிக் கொண்டது.. இப்போது எது நடப்பதற்க்கு உண்டான சடங்கு இது என்று தெரியாத அளவுக்கு மான்சி பேதை கிடையாது…
திருமணம் செய்து கொண்ட பின், இதற்க்கு தயங்குவது முறையும் கிடையாது தான்.. ஆனால் அவ்வளவு பழக்கம் இல்லாத ஒருவனிடம்.. அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலையில் தன் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாதவனோடு எப்படி…?
டைம் கேட்கலாம் தான்.. ஆனால் ஒத்துக் கொள்வானா..? அது தான் தன் தாயிடம் வாக்கு கொடுத்து இருக்கிறானே… பத்து மாதத்தில் குழந்தை என்று.. இது என்ன மேனி பேக்சரிங்கா.. தயாரித்து கொடுக்க..என்று மனமானது அது பாட்டுக்கு நினைத்துக் கொண்டு இருந்தாலும்,
வைதேகி சொன்னது போல் குளித்து முடித்து அவர்கள் கொடுத்த வெண்பட்டு சேலையை அணிந்து கொண்டு, அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு..
மேலும், தன் மனது யோசிக்கும் பாதையில் அவள் கவனம் சென்று கொண்டு இருந்த போது தான் மீண்டும் வைதேகி மான்சியில் இருந்த அறைக்கு வந்தார்..
வந்தவர் அழகோடு புடவையை கச்சிதமாக அணிந்துக் கொண்டு இருந்த மருமகளின் கன்னத்தை தொட்டு திருஷ்ட்டி கழித்தவர்..
“ அழகா இருக்கே மான்சி… புடவையும் அழகா கட்டி இருக்க.. என் மகள் இருக்காளே.. அவளுக்கு எதுவும் ஒழுங்காவே செய்ய தெரியாது… எல்லாத்துக்கும் நான் வேண்டும்..
நான் செய்தாலும், இது இப்படி இருக்கு .. அது அப்படி இருக்கு.. என்று ஏதாவது குறை சொல்லுவா…” என்று மருமகளிடம் பேசிக் கொண்டே இருந்தவரின் பேச்சை தடை செய்வது போல் ரேவதி அங்கு வந்தவர்..
“ வைதேகி நேரமாகிடுச்சி பார்… ஐய்யர் குறித்த நேரம் போயிட போகுது.. சர்வா அவன் ரூமுக்கு போய் விட்டான் என்று.