பகுதி 6 “நாம எங்க போய்க்கிட்டு இருக்கோம் முகுந்த்”.. என்று மீரா அவன் தோளில் சாய்ந்தவாறே கேட்க. “ம்.. சொல்றேன். “.. என்றவன் அந்த பெரிய அபார்ட்மெண்டுக்குள் தன் காரை செலுத்தி இருந்தான். அடையாறில் கடற்கரை ஓரமாக இருந்தது அந்த லக்சரி அபார்ட்மெண்ட். நிச்சயம் கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கும் இடம் என்பதை அங்கு இருக்கும் பிரம்மாண்டம் சொல்லி விடும். நான்காம் தளத்தில் இருந்த அவன் வீட்டுக்கு முகுந்த் அழைத்துச் சென்றான். “வெல்கம் மீரா!! இனி இது தான் நம்ம வீடு. இங்க தான் நாம நம்ம வாழ்க்கையை தொடங்கப் போறோம். “.. என்றவன் அவள் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான். மீரா வீடு பெரிய பங்களா தான் என்றாலும் ஐம்பது வருட பழைய கட்டடம் என்பதால் இத்தனை வசதிகள் கொண்டு இராது. ரிமோட் கொண்டே கதவைத் திறக்க, பேன் போட என்று நவீன வசதிகள் அத்தனையும் உட்கொண்டு இருந்தது அந்த அழகிய வீடு. ஆனால் மீராவுக்குத் தான் எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தது. “என்ன மீரா அமைதியா இருக்க. வீடு பிடிச்சு இருக்கான்னு சொல்லவே இல்லையே?”.. என்று அவன் சிறு வருத்தத்துடன் கேட்க. முகுந்தின் வாடிய முகம் அவளை என்னவோ செய்யத் தொடங்கியது. தனக்காகவே அத்தனையும் பார்த்து பார்த்து செய்யும் தன் உயிரானவனின் முகம் வாடிப் போவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கண்ணீர் வழிந்திருந்த தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள்.. மென் புன்னகையை வரவைத்துக் கொண்டாள். “ரொம்ப சூப்பரா இருக்கு முகுந்த். ஐ ரியலி லவ் திஸ் பிளேஸ்”.. என்றாள் சிரித்த முகமாக. “தட்ஸ் மை கேர்ள்”.. என்றான் அவனும் உற்சாகமாக. “முகுந்த் இன்னும் ஒரு மணி நேரத்துல நான் போகனும்!”.. என்றாள் அவள் மெல்லிய குரலில். “ம்.. இது எல்லாம் ரொம்ப கொடுமை மீரா. எல்லாருக்கும் கல்யாணம் ஆன அன்னைக்கு என்ன என்னவோ கிடைக்கும். எனக்கு பாரு உன்கிட்ட இருந்து ஒரு கிஸ் கூட கிடைக்கவில்லை!”.. என்று அவன் கன்னத்தை தடவி ஏக்கத்துடன் சொல்ல. மீராவுக்கு அவன் சொன்ன தொனியில் சிரிப்பு வந்து விட்டது. “சாரி முகுந்த். பேருக்குத் தான் நாம புருஷன் பொண்டாட்டி. எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு அவங்க ஏத்துகிட்ட பிறகு தான் மத்தது எல்லாமே.”.. என்றாள் அவள் தீர்மானமாக. “மீரா.. பாவம் டீ நான்!!”.. என்று அவன் அவளை ஏக்கமாக பார்க்க.. “நோ.. நான் சொன்னா சொன்னது தான்!”.. என்று அவள் எழுந்து கொள்ள.. “ஹேய் பொண்டாட்டி.. கிஸ் தான் கொடுக்க மாட்டேன்னு ஏமாத்திட்ட. போய் ஒரு காஃபியாவது போட்டுக் கொடு.”.. என்றான் உத்தரவாக.. “ம்.. அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது.” என்றவள் அடுப்படி நோக்கி சென்றாள். நல்லவேளை மீராவுக்கு காப்பி போட்டு பழக்கம் இருந்ததால் தடுமாற்றம் இல்லாமல் செய்யத் துவங்கி இருந்தாள். ஒரு அடுப்பில் வெந்நீர் வைத்து மறு அடுப்பில் பாலைக் காய வைத்து இருந்தாள். புடவையை அவள் இடுப்பில் இழுத்து சொருகி இருக்க.. சட்டென அவள் வெண்ணிற இடுப்பில் உஷ்ணம் பரவ அவள் திடுக்கிட்டு திரும்பினாள். முகுந்த் தான் அவள் முன்னால் நின்று இருந்தான். இடையைத் தவற விட்டவன் இப்போது அவளை மொத்தமாக இழுத்து அணைத்து அவள் தோளில் முகம் புதைத்து கொண்டான். அவன் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் சின்ன சின்ன முத்தங்கள் பதிக்க. அவன் ஒரு கரம் அவள் கைகளை இறுகப் பற்றி சிறை எடுத்துக் கொண்டது. அவன் மறுகரமோ அவள் இடையில் அழுந்த பதிந்து கொள்ள.. மீராவோ தன்னவனின் அத்துமீறலில் திணறிப் போனாள். அவன் தொடுகையில் கிறங்கிப் போனாள் பெண்ணவள்.. அதை சம்மதமாக எண்ணியவனின் கரம் அவள் இடையில் இருந்து மெல்ல ஊர்ந்து முன்னேறத் துவங்கி இருந்தது. இத்தனை நேரமும் அவன் தொடுகையில் சிலையாகி நின்றவளுக்கு.. மூளையில் அலாரம் அடிக்க.. சட்டென அவன் கரத்தை தட்டி விட்டபடி அவனிடம் இருந்து விலகி கொண்டாள். முகுந்த் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம். “மீரா.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?”.. என்று அவன் ஏமாற்றத்துடன் கேட்க.. “நம்பிக்கை இல்லாம தான் உன் தாலியை சுமந்து கிட்டு இருக்கேனா?”.. என்று அவள் கேட்க. “அப்புறம் ஏண்டி என்ன வதைக்கிற?.. நான் உன் புருசன் தான.. எனக்கு ஒரு முத்தம் கொடுக்கிற உரிமை கூட இல்லையா??”.. என்று அவன் சிறு கோபத்துடன் கேட்க. “யார் இல்லைன்னு சொன்னா?.. இன்னும் கொஞ்ச நாள் மட்டும் பொறுத்துக்கோங்க. என் எக்சாம் இன்னும் பத்து நாட்களில் முடிஞ்சிடும். அதுக்கு அப்புறம் எங்க பாட்டி கிட்ட நம்ம விஷயத்தை பக்குவமா சொல்லனும். அவங்க நிச்சயம் நம்மளை புரிஞ்சிக்குவாங்க. எங்க அப்பா அம்மாவையும் சமாதானப்படுத்தி.. நம்மளை சேர்த்து வச்சு விடுவாங்க. அதுக்கு அப்புறம் நாம திரும்ப முறைப்படி திருமணம் செய்து.. அப்புறம் தான் இது எல்லாம்.”.. என்று சொல்லி முடிக்கும் போதே அவளுக்கு மூச்சிறைத்து விட.. “சொல்றதுக்குகே உனக்கு மூச்சு வாங்குது. இது எல்லாம் நடக்கிறதுக்குள்ள.. நான் நிச்சயம் கிழவன் ஆகிவிடுவேன்.”.. என்று அவன் சடைப்புடன் சொல்ல.. பாலும் பொங்கி இருந்தது. சரி நல்ல பிள்ளையா.. வெளியே வெயிட் பண்ணுங்க காஃபி போட்டு வரேன் “.. என்று அவள் சொல்ல.. அவ்னோ அவளையே ஏக்கத்தோடு பார்த்து இருக்க.. “,பிளீஸ் முகுந்த் “.. என்று அவள் அவனை அங்கிருந்து தள்ளி தான் அனுப்பி வைத்தாள். காஃபி போட்டுக் கொண்டு வந்தவள் .. “ம்.. குடிச்சுப் பார்த்து சொல்லுங்க எப்படி இருக்குன்னு”.. என்று ஆசையுடன் நீட்ட.. முகுந்தனும் வேண்டா வெறுப்பாய் ஒரு மிடர் எடுத்து பருகியவன்.. “காப்பியும் உன்னை மாதிரியே ஆறிப் போய்டுச்சு. எனக்கு எல்லாமே சுடச் சுட தான் பிடிக்கும்!!”.. என்றவனின் பார்வை அவள் இதழ்களில் பதிந்து இருக்க.. “ஐஸ் கிரீம் எப்படி.. அதுவும் சூடா தான் சாப்பிடுவீங்களா?”.. என்று அவள் நக்கலாக கேட்டு உதட்டைக் கடித்து கொள்ள. “ஓவரா பேசுற டீ!!.. கட்டின புருஷன் என்ற நினைப்பே உனக்கு இல்ல” “சரி சரி.. எனக்கு உங்க ஃபீலிங்ஸ் எல்லாம் புரியுது. என் செல்லம் இல்ல. இன்னும் பத்து நாள் தான்.” என்று அவள் கெஞ்சுதலாக சொல்ல. “ஃபைன். உனக்கு எக்ஸாம் என்ற ஒரே காரணத்திற்காக உன்ன சும்மா விடுறேன். ஆனா நீ தினமும் இங்க வந்துடனும். இல்ல நான் உங்க வீட்டுக்கு வந்துடுவேன்.”.. என்று அவன் மிரட்டலாக சொல்ல. “அய்யோ முகுந்த்.. பிளீஸ் அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க”.. என்றவள் முகமோ பயத்தில் நடுங்கி விட. “சரி நான் உங்க வீட்டுக்கு வராம இருக்கணும் என்றால் நீ எனக்கு என்ன தருவ?”.. என்று அவன் இப்போது அதிகாரமாக கேட்க.. “வேனும்னா இன்னொரு காஃபி போட்டுத் தரட்டுமா?”.. என்று அவள் குறும்புடன் கேட்க.. அவன் எரித்து விடுவது போல் அவளை முறைக்க.. “ஒகே ஒகே .. என்ன வேணும் சொல்லுங்க”.. என்றாள் மீரா.. “கிஸ் “.. என்றான் அவளையே மோகத்துடன் பார்த்த படி அதைத் தான் அவன் கேட்பான் என்று அவள் யூகித்து இருந்தாலும்.. “வாட் !! நோ வே!!”.. என்று அவள் கால்கள் தானாக பின்னால் செல்ல . அவனோ “அப்ப நான் உங்க வீட்டுக்கு வந்து கலாட்டா பண்ணுவேன். வசதி எப்படி!”.. என்று அவன் உதட்டோரம் வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு கேட்க.. “பிளீஸ் முகுந்த்.. அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க. சரி நான் கிஸ் பண்றேன். பட் கன்னத்துல தான் “.. என்றாள் மீரா வேறு வழியில்லாமல். “பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.”.. என்றவன் அவளுக்கு அவன் கன்னத்தை காட்ட.. மீராவும் தயக்கத்துடன் அவன் அருகில் நெருங்கி நின்றாள். கூச்சம் அவளைக் கொன்றது. “என்னால முடியல முகுந்த்”.. என்றாள் கெஞ்சலாக. விடுவானா அவன். “கூச்சமா இருக்கா. ?” “ம்.. ஆமாண்டா”.. என்றாள் அவளும் சினுங்கலாக “சரி.. அப்ப நீ கண்ணை மூடிக்கோ நானே உன்ன கிஸ் பண்றேன்.”.. என்றான் காப்பவன் போல. ”வேணாம் வேணாம். நானே பண்றேன். என்றவள் அவன் கன்னம் அருகில் சென்று தன் இதழ்களை ஒற்ற.. அந்த கள்வனோ அடுத்த நொடியே அவன் முகத்தை திருப்பி அவள் இதழ்களை உரசி நின்றான். மீரா சுதாரிக்கும் முன் அவள் இதழ்களை திருடி முத்த காவியம் ஒன்று எழுதத் துவங்கி இருந்தான் அவன். அவர்களின் முதல் முத்தம். முகுந்தன் உலகையே மறந்து அவளைக் கட்டி அணைத்து இருந்தான். மீரா சுதாரித்து அவனை விலக்க போராடினாள். அவனோ முதல் முறையாக கிடைத்த அமுதத்தின் ருசியில் தன்னை மறந்து அனுபவித்துக் கொண்டு இருந்தான். பொறுமை இழந்த மீராவோ தன் முழு பலம் கொண்டு அவன் நெஞ்சில் கை வைத்து சோஃபாவில் தள்ளி விட்டாள். தன் புறங்கையால் அவள் இதழ்களை அழுந்த துடைத்துக் கொண்டவள்.. “இது பேர் தான் கன்னத்துல கிஸ் பண்றதா”.. என்று அவள் எரிமலையாய் மாறி அவனை முறைக்க.. அவனுக்கோ சிரிப்பு தான் வந்தது. “கொஞ்சம் லொகேஷன் மாறிடுச்சு. அவ்வளவு தான்.!”.. என்று அவன் சிரிக்க. “பிராடு பிராடு.. என்று குஷனை அவன் மேல் எறிந்தவள்.. “.. தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து செல்லப் போக.. “மீரா காலேஜ் முடிஞ்சதும் நாளைக்கு இங்க வர்ற !”.. என்று அவன் அதிகாரமாக சொல்ல. “முடியாது. நான் எக்ஸாம் முடியுற வரை வரமாட்டேன். வந்தா நீ எதாவது பண்ணி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற. அப்புறம் எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்தா இந்த நினைப்பு தான் வரும்.”.. என்று அவள் சொல்ல.. முகுந்தனுக்கோ சிரிப்பு வந்து விட்டது. “சரி ஒரு பத்து நாள் கஷ்டப் பட்டு பொறுத்துக்கிறேன். பட் எக்ஸாம் முடிஞ்சதும் வந்திடனும்.”.. என்று சொல்லி அனுப்பி வைத்தான். “ம் நிச்சயமா!.. லவ் யூ பை!”.. என்று அவள் சிட்டாக பறந்து செல்ல.. அவனுக்கோ அவளைப் பார்க்காமல் எப்படி பத்து நாட்கள் இருப்பது என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது. உண்மையில் மீராவுக்கும் அதே நினைப்பு தான். அவனைப் பார்க்காமல் எப்படி இத்தனை நாட்கள் இருப்பது என்று தெரியவில்லை. அன்று வீடு திரும்பியவள் முகுந்த் கட்டிய தாலியை மறைக்க ஹை நெக் கொண்ட உடுப்புகளாகத் தேடி எடுத்து போட்டாள். வீட்டில் இருப்பவர்கள் அவளிடம் சாதாரணமாய் பேசினாலும்.. அவளுக்குத் தான் வித்தியாசமாக இருந்தது. குற்ற உணர்வு இம்சித்தது. படிப்பில் போராடி கவனத்தை செலுத்தினாள். ஒரு வழியாக எல்லா பரிட்சைகளையம் நல்லபடியாக எழுதி முடித்தாள். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் சென்று இருந்தன. முகுந்திடம் இருந்து முதல் பத்து நாட்கள் குறுஞ் செய்திகள் வந்து கொண்டு இருந்தன. அத்தனை அழகான காதல் வரிகள். அதை வாசிக்கும் போதே.. மீராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போகும். காதல் மன்னன் என்று பூரித்துக் கொள்வாள். ஆனால் பெரிதாக எதுவும் பதில் அனுப்ப மாட்டாள். “நன்றி. நான் படிக்கணும்”.. என்று சுருக்கமாக முடித்துக் கொள்வாள். ஆனால் இப்போது நான்கு நாட்களாக அவனிடம் இருந்து எந்த செய்திகளும் வரவில்லை. அவள் அவன் எண்ணுக்கு அழைத்தாலும் பதில் இல்லை. பதறிப் போனாள் அவள். மறுநாள் காலை கல்லூரியில் எதோ வேலை இருப்பதாக வீட்டில் பொய் சொல்லி விட்டு அவள் நேராக சென்றது என்னவோ முகுந்தைப் பார்க்கத் தான். ஆனால் அவள் அப்போது அறியவில்லை.. அவள் வாழ்வே அன்று தான் திசைமாறி போகப் போகிறது என்று. தொடரும். இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.