உன்னைக் காணாது வான்முகில் மட்டும் அல்ல நானும் கரைந்து போகிறேனேடி.
உன் வண்ணம் காணாமல் பார்வை எதற்கு.!! உன் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் உன் உயிர்க் காதலன்!!”
என்று அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை பல முறை படித்து இருப்பாள் மீரா. “ஓ உனக்கு கவிதை எல்லாம் வருமா”.. என்று மனதுக்குள் பூரிப்புடன் எண்ணிக் கொண்டாள். பரிட்சை முடிந்த மறுநாளே அவனை சென்று பார்க்க வேண்டும் என்று தான் எண்ணினாள். ஆனால் பரிட்சை முடிந்த பின் என்ன காரணம் சொல்லி வெளியே செல்வது என்பது பெரிய சிக்கலாக வந்து உதித்தது.
முன்பு என்றால் எந்த விசாரணையும் இன்றி அனுமதி கிடைத்து விடும். ஆனால் இப்போது ஆயிரத்து எட்டு விளக்கம் கொடுக்க வேண்டும். கல்லூரி வாழ்க்கை ஏண்டா முடிந்தது என்று பரிட்சை முடிந்த மறுநாளே யோசிக்கத் தொடங்கி இருந்தாள் மீரா.
நான்கு நாட்களாக அவனை எப்போது சென்று பார்ப்போம் என்ற தவிப்பு இருந்தாலும் தன் உணர்வுகளை அடக்க வேண்டிய நிலையில் இருந்தாள். நான்கு நாட்களாக அவனிடம் இருந்து வேறு எந்த காதல் வரிகளும் வரவில்லை. அழைத்துப் பார்த்தாலும் பதில் இல்லை.
ஏன் முகுந்த் ஃபோன் போட்டால் எடுக்க மாட்டேன் என்கிறான் என்ற கேள்வி வேறு தேவை இல்லாத நிறைய கற்பனைகளைக் கொடுத்தது. தூக்கம் இல்லாமல் அன்று இரவு படுக்கையில் உருண்ட்வள் வீட்டில் ஏதாவது பொய்க் காரணமாவது சொல்லி நாளை காலை முகுந்தனை நேரில் சென்று பார்த்து விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்து அவனை சென்று பார்க்கப் போகிறாள். மனதுக்குள் அப்படி ஒரு பரவசம். அவனுக்கு பிடித்த வண்ணத்தில் புடவை எடுத்து உடுத்திக் கொண்டாள்.
அன்று அவன் செய்த லீலைகள் வேறு நினைவு வந்து அவள் கன்னங்களை சிவக்கச் செய்தது. எதுக்கும் அந்த ரோமியோ கிட்ட இருந்து ஒரு அடி தள்ளியே நின்னுக்கணும்.
“விடுவானா”.. என்று உள்மனம் பெருத்த சந்தேகத்தை எழுப்ப..
“இல்லைன்னா.. அங்க இருந்து அடுத்த நிமிடமே எஸ்கேப் ஆகிடனும்.
ஆனால் எதற்காக நான்கு நாட்களாக ஃபோன் பேசாம இருக்கான்? ஒரு வேளை உடம்பு சரியிலாமல் போய் இருக்குமோ. பாவம் அவனுக்கு என்று யாருமே அவன் அருகில் இல்லை. ஒரு வேளை ஜுரம் வந்திருக்குமா? ச்சே கல்நெஞ்சக்காரியாக இத்தனை நாள் இருந்து விட்டேனே.
மனதுக்குள் தன்னைத் தானே கரித்துக் கொண்டவள் மீனாட்சி முன் சென்று நின்றாள்.
“எங்கடீ கிளம்பிட்ட?”.. என்று அவர் கேட்க.
“அம்மா காலேஜ்ல ஒரு சின்ன வேலை இருக்கு எல்லாரையும் வரச் சொல்லி இருக்காங்க.”.. என்றவள் விறுவிறுவென்று செல்லப் போக.
“வினிதா வருவாளா”.. என்று மீனாட்சி கேட்க.
ஒரு நிமிடம் உள்ளுக்குள் ஆடிப் போனவளுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்றே தெரியவில்லை. “இல்ல அம்மா அவள் தான் லீவு விட்டதுமே சொந்த ஊருக்கு போய் விட்டாளே எப்படி வர முடியும்”.. என்றாள் மீரா.
“ஆஹா, அவள் எல்லாம் போகலில்லை. அப்புறம் நீ மட்டும் எதுக்குடீ போகப் போற. சும்மா வீட்ல இரு. இன்னைக்கு வெங்கட் பெங்களூர்ல இருந்து வருகிறானாம். உங்க பெரியம்மா பிரியாணி, பாயசம் என்று த்டபுடல் பண்ணி விடுவாங்க. நீயும் போய் ஒத்தாசை பண்ணு”.. என்று மீனாட்சி சொல்ல.
“அம்மா கொஞ்சம் பேருக்கு மட்டும் புராஜக்ட் கரெக்சனுக்கு வரச் சொல்லி இருக்காங்க. நான் போகலைன்னா பெரிய பிரச்சனை ஆயிடும்.”.. என்று சொன்னவள் மீனாட்சி தடுக்கும் முன் வெளியேறி விட்டாள்.
“ஏய் பார்த்து போடி. மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திடு!”.. என்ற மீனாட்சியின் குரல் காற்றில் தான் கரைந்து போனது.
மீரா தன் உயிர்க் காதலனை காண எங்கு செல்லாம் என்று யோசித்தாள். மாலை என்றால் விளையாட என்று மைதானத்திற்கு போவான். அவன் வீடு எங்கு என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவன் அலுவலகம் எங்கு என்று அவளுக்கு தெரியாதே. கே கே நகரில் அவன் அலுவலகம் இருப்பதாக ஒரு முறை சொல்லி இருக்கிறான்.
எங்கு? என்ன தொழில் என்று ஒரு விவரமும் அவள் கேட்டது இல்லை. அவன் ஃபோனும் சுவிட்ச்ட் ஆஃப். அவனைப் பார்க்க வேண்டும் என்றால் அவன் வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். அங்கும் அவன் இருப்பானா என்று தெரியாது.
“கடவுளே அவன் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டும்”.. என்று வேண்டிக் கொண்டே அவன் வீட்டிற்குச் சென்றாள். அவனுடன் அவளை ஏற்கனவே அங்கிருந்த செக்யூரிட்டிகள் பார்த்து இருந்ததால் யாரும் அவளைப் புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கவில்லை.
இருந்தாலும் அவளுக்குத் தான் என்னவோ போல் இருந்தது. ஒரு ஆண் மகன் தனியாக வசிக்கும் வீட்டிற்கு அவள் மட்டும் தனியாகச் செல்வது சிறு சங்கோஜத்தையும் குற்ற உணர்வையும் கொடுத்தது. அவன் கட்டிய தாலி அவள் கழுத்தில் ஆடிக் கொண்டிருந்தாலும் அவளைப் பொறுத்த வரையில், அவள் வீட்டில் விஷயம் தெரிந்து அவள் முடிவை ஏற்றுக் கொள்கிறார்களோ அன்று தான் அவர்கள் மனம் ஒத்த தம்பதிகள் ஆவார்கள்.
வீட்டு வாயில் வரை வந்தவளுக்கு சிறு தயக்கம். துணிந்து கதவை அவள் தட்டப் போக..
“வீட்ல யாரும் இல்ல”.. என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க.. மீரா சிறு அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள். ஒரு பணிப்பெண் கையில் துடப்பத்துடன் நின்று கொண்டு இருந்தாள்.
“சார் இப்போ இங்க இல்ல!” என்றாள் அவள்.
“ஓ.. ஆபிஸ் போய் விட்டாரா”.. என்று மீரா கேட்க..
“ஆபிஸா.. நீ வேறே. ஒரு வாரம் சார் வீட்டுக்கே வரல அவருக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம். என்ன ஏதுன்னு தெரியல. அவர் மேனேஜர் வந்து கதவைத் திறந்து விட்டு இன்னைக்கு தான் சுத்தம் செய்யச் சொன்னார்.”.. என்று சொல்லிக் கொண்டே இருக்க.. மீராவுக்கோ அவள் அவனுக்கு விபத்து என்று சொன்னதைத் தவிர எதுவுமே அவள் மூளைக்குள் ஏறவில்லை.
“அவள் கண்கள் கலங்கிப் போக “ஆக்சிடென்ட்டா?.. அவருக்கு என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கார்?”.. என்று மீரா பதட்டமாக கேட்க.
“தெரியலையே மா!!. நீ யாரு?.. நீ சாருக்கு உறவா?”.. என்று அந்த பெண் அவளை சற்று விசித்திரமாக பார்க்க.. மற்ற நேரங்களில் என்றால் மீராவுக்கு அந்த பார்வை உறுத்தி இருக்கும்.
ஆனால் இப்போது அதை எல்லாம் அவளுக்கு யோசிக்கக் கூட முடிய வில்லை. “அவரை எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க?”.. என்று அவள் விழிகளில் கண்ணீருடன் கேட்க…
அந்த பெண்ணுக்கே மீராவின் முகத்தைப் பார்த்து பாவமாகத் தோன்றி விட.. “சாருக்கு ஒன்னும் ஆயிருக்காது கண்ணு. நீ பயப்படாத. பக்கத்துல கிருஷ்ணா ஹாஸ்பிடல்ல தான் சேர்த்து இருந்தாங்க.”.. என்று சொல்ல
“ரொம்ப தேங்க்ஸ் அக்கா”.. என்றவள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் கீழே இறங்கி வந்து இருந்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையையும் எட்டி இருந்தாள்.
அவள் அவன் பெயரைச் சொல்லி ரிசப்ஷனில் விசாரித்து விட்டு அவன் அறை நோக்கி ஓடினாள்.
அங்கு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த முகுந்தன் கைகளில் டிரிப் ஏறிக் கொண்டு இருந்தது. அவன் அருகில் ஒரு இளைஞன் மட்டும் அமர்ந்து இருந்தான்.
பதட்டத்துடன் உள்ளே சென்றவள் அவனுக்கு எதுவும் காயம் பட்டு இருக்கிறதா என்று தான் ஆராய்ந்தாள். தலையில் ஒரு சின்ன கட்டு இருந்தது. முகுந்த் என்று அவள் கண்ணீருடன் அவனை மெல்லிய குரலில் அழைத்தாள்.
“சாருக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் கொடுத்து இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்து விடுவார்.” என்றான் அந்த இளைஞன்.
“அவருக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு? வேற எதுவும் ஆபத்து இல்லையே?”.. என்ற மீரா உயிரைக் கையில் பிடித்து கொண்டு அவன் பதிலுக்காக காத்து இருந்தாள்.
“என்ன சார் சொல்றீங்க”.. என்று மீரா மருண்ட விழிகளுடன் கேட்க..
“ஆமா மேடம்.. சார் பெரிய கண்டத்துல இருந்து தப்பி இருக்காங்க. என் பெயர் கவின். நீங்க கவின் என்றே கூப்பிடலாம். சார் நாலு நாளாக மீரா மீரான்னு உங்க பெயரைத் தான் சொல்லிட்டே இருந்தாங்க.”.. என்று அவன் சொல்ல.
மீரா கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டன.
“ஆமா மேடம் நீங்க சார் ஒய்ஃப் என்று எனக்குத் தெரியும். சார் சொல்லி இருக்காங்க.”.. என்று மெல்லிய புன்னகையுடன் சொல்ல.
அவளும் பதிலுக்கு லேசாக இதழ்களை விரித்தவள். “கவின்.. முகுந்துக்கு என்ன ஆச்சு?.. தெளிவா சொல்லுங்க ஒரே பதட்டமாக இருக்கு”.. என்றாள் மீரா.
“மேடம்.. நாலு நாளுக்கு முன்னாடி சார் ஒரு பிசினஸ் பார்ட்டிக்கு போய் இருந்தாங்க. அவருக்கு எப்பவும் அவர் பைக் தான் பிடிக்கும். அதனால் பார்ட்டிக்கு அவர் தன் பைக்கிலேயே போய் விட்டார். சாருக்கு எப்பவுமே குடிக்கிற பழக்கம் கிடையாது.
ஆனா அன்னைக்கு அந்த பார்ட்டியில் சார் குடிச்ச கூல் ட்ரிங்க்ஸில் அவரோட பிசினஸ் எதிரிங்க நிறைய போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருக்காங்க. நம்ம சார் அதைத் தெரியாம குடிச்சிட்டு பைக் ஓட்டி இருக்கார். பாதி வழியிலேயே அவருக்கு கண்ணைக் கட்டிருச்சு. எந்த சாமி புண்ணியமோ அவர் எதிர்ல லாரி எதுவும் வரலை.
வண்டியில இருந்து சுயநினைவு இல்லாம கீழே விழுந்து இருக்கார். நல்ல நேரத்துக்கு அந்நேரம் எதுவும் வண்டி அவர் அருகில் வரவில்லை. அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க தான் அவரைக் காப்பாத்தி மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்க”..
“டாக்டர் என்ன சொன்னாங்க கவின். அவருக்கு தலையில் ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்தாச்சா?.. அவருக்கு வேற ஒன்னும் ஆபத்து இல்லையே?”.. என்று மீரா கேட்க.
“இல்ல மேடம் கீழே விழுந்ததில் சாருக்கு தலையில் லேசான அடி தான். ஆனால்..”.
“ஆனா என்ன கவின்??”.. என்று மீரா படபடக்க..
“சார் உடம்பில் அந்த டிரக் எறினதால அவருக்கு கொஞ்சம் சைட் எஃபெக்ட்ஸ் உண்டாகிடுச்சு.”
சைட் எஃபெக்ட்ஸா??
“ஆமா மேடம். நாலு நாளாக சார் தூங்கவே இல்லை. அவருக்கு இன்சோம்னியா தாக்கிடுச்சு. அதாவது தூக்கமே சுத்தமா வராது. சாருக்கு வேற யாருமே சொந்தம் என்று இல்லையா.. தூங்கவும் முடியாம சைக்காலஜிக்கலா ரொம்ப டெப்ரஷனுக்கு போய் விட்டார்.
நான் உங்களைக் கூட்டி வரட்டுமான்னு கேட்டதுக்கு சார் உங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டார்.”
. “அய்யோ கவின்.. ஏன் அப்படி பண்ணீங்க. என்கிட்ட சொல்லி இருக்கலாமே. இப்ப அவருக்கு எப்படி இருக்கு. எப்ப கண் முழிப்பார்?” என்று மீரா தவிப்புடன் கேட்டாள்.
“இப்போ பரவாயில்லை மேடம். டாக்டர் இன்னைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லிட்டார். என்ன இங்கயாச்சும் சாரைப் பார்த்துக்க ஆள் இருக்காங்க. வீட்டுக்கு போனா சார் மட்டும் தனியா இருக்கணும். ஆபிஸில் வேறு சார் ஒர்க்கை நான் தான் பார்க்க வேண்டி இருக்கு.”.. என்று கவின் யோசனையாகச் சொல்ல.
“தட்ஸ் ஒகே கவின். ஐ வில் டேக் கேர் ஆப் முகுந்த்.”.. என்றாள் மீரா உறுதியாக.
“மேடம் உங்க வீட்ல”.. என்று கவின் இழுக்க.
“நான் எங்க வீட்ல ஏதாவது சாக்கு சொல்லி சமாளிச்சுக்குவேன். நீங்க ஆபிஸ் ஒர்க் முடிச்சிட்டு நைட் மட்டும் வந்து முகுந்தைப் பார்த்துக்கோங்க.”
. “ரொம்ப தேங்க்ஸ் மேம். டாக்டர்.. முகுந்த் சார் கண் முழிச்சதும் வீட்டுக்கு போகச் சொல்லி விட்டார்”.. என்று கவின் சொல்ல.
“எனக்கு எதுக்கு தேங்க்ஸ். இது என் கடமை. சரி நான் டாக்டர் கிட்ட பேசலாமா?”.. என்று மீரா கேட்க.
“ஓ.. பேசலாமே!!.. ஆனா டாக்டர் இப்ப தான் ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வேற கிளினிக் பார்க்கப் போய் இருக்கார். வர ஏழு மணி ஆயிடுமாம்”.. என்று கவின் சிறு தயக்கத்துடன் சொல்ல.
“ஓ.. பரவாயில்லை. நீங்க நல்லா எல்லா விவரமும் கேட்டுட்டீங்க தானே”..என்று மீரா கேட்க
“ஆமா ஆமா.. எல்லா மாத்திரை விவரம், டயட் விவரம் எல்லாம் தெளிவா கேட்டுக்கிட்டேன். டிஸ்சார்ஜ் சும்மரிலையும் நர்ஸ் எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்து விட்டாங்க.”.. என்று கவின் முடிக்கும் போதே சிறு முனகல் சத்தம் கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்க்க.. முகுந்த் தான் தலையில் கையை வைத்தபடி வலியில் முனங்கிக் கொண்டு இருந்தான்.
அடுத்த நொடியே மீரா அவன் அருகில் ஓடிச் சென்றாள். அவன் அருகில் குனிந்தவள்.. “முகுந்த் எப்படி இருக்கீங்க”.. என்று அவள் பதட்டத்துடன் கேட்க…
அவள் குரலைக் கேட்டதும் மெல்ல கண் விழித்தவன் “மீரா வந்துட்டியா!!”.. என்றவனின் இதழ்கள் லேசாக விரிந்து கொண்டன..
“ஹவ் ஆர் யூ முகுந்த்?” என்று அவள் கண்களில் வழியத் துடித்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்த படி மீரா கேட்க..
“ஏய் மீரா.. எதுக்கு கண்ணீர்? ஐ ஆம் பெட்டர் நவ். ஆனா மீரா.. எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் அட்மாஸ்பியரே பிடிக்கவில்லை. எனக்கு உடனே வீட்டுக்கு போகனும். ப்ளீஸ் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா என்று முகுந்தன் அவள் கரத்தைப் பிடித்துக் கெஞ்ச.
மீரா மனம் உருகி விட்டது. “டாக்டர் போகச் சொல்லி விட்டாங்க முகுந்த். நாம இப்பவே போகலாம்.”.. என்று அவள் கைத்தாங்கலாக அவனை கட்டிலில் அமர வைத்தாள்.
அதே நேரம் நர்ஸ் வந்து டிரிப்பை நிறுத்தி, வென்ஃப்ளானை அகற்றி டேப்பையும் ஒட்டி விட்டாள்.
கவின் நீங்க காரை ஹாஸ்பிட்டல் முன் பக்கமாக கொண்டு வரச் சொல்லுங்க. நான் முகுந்தைக் கூட்டி வரேன். ஆமா, பில் எல்லாம் கட்டியாச்சா?”.. என்று மீரா கேட்க.
“மேடம்.. இது நம்ம சார் ஹாஸ்பிட்டல் தான்”.. என்று கவின் சொல்ல.
மீராவுக்கு சங்கடமாகப் போனது. முகுந்த் மருத்துவமனை எல்லாம் வைத்து இருக்கிறான் என்று சந்தோஷம் தோன்றாமல் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்வு தான் முதன்மையாக இருந்தது.
“ஓ.. சரி அப்ப நாம போகலாம். முகுந்த். கார் வரை நடந்திடலாமா?”.. என்று மீரா அக்கறையுடன் கேட்க..
“நீ கொஞ்சம் சப்போர்ட் பண்ணா போதும் மீரா. ஐ கேன் மேனேஜ்”.. என்று முகுந்த் சொல்ல.
“ஒகே நீங்க ரெண்டு பேரும் லிஃப்ட் மூலமா கீழே போங்க. நான் லக்கேஜ் எடுத்துட்டு இதோ கீழே வந்துடறேன்.” என்று கவின் சென்று விட்டான்.
“மெல்ல எழுந்திருங்க முகுந்த்.”.. என்று மீரா முகுந்துக்கு உதவ..
அவனும் மெல்ல நின்றவன் தனக்கு ஆதரவாக மீரா தோளில் கை போட்டுக் கொண்டான். இத்தனை நாட்கள் தனிமையில் உறுகிப் போனவனுக்கு மீராவைப் பார்த்ததில் பாதி நோய் விட்டுச் சென்றது போல இருந்தது. அவனால் இயல்பாக நடக்க முடிந்தாலும் மீராவை விட்டு விலக மனம் இல்லாமல் அவளுடன் ஒட்டிக் கொண்டான்.
இருவருமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அப்போதும் அவளை விட்டு விலக முகுந்தனுக்கு மனம் வரவில்லை. அவள் மடியிலேயே மழலையாக படுத்துக் கொண்டான். “என்னை விட்டு போய் விடாதே மீரா”.. என்று அவள் கரத்தையும் இறுக பற்றிக் கொண்டான்.
கவின் முன்னால் அமர்ந்து இருக்கும் போது முகுந்த் இப்படி நடந்து கொள்கிறானே என்று கூச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் மீரா மனம் உருகி விட்டது. அவனுக்கு அவள் மேல் இத்தனை காதலா. இந்த அளவு அவள் பிரிவைத் தாங்க முடியாமல் துடித்துப் போகிறானே. இப்படி ஒரு கணவன் கிடைக்க அவள் ஏதோ புண்ணியம் தான் செய்து இருக்க வேண்டும் என்று பூரித்துப் போனாள்.
அப்போது அவர்கள் வீடும் வந்து விட.. அனைத்து பொருட்களையும் உள்ளே வந்து வைத்த கவின்.. “மேடம் நான் அப்போ ஒரு ஏழு மணி போல வர்ற வரை சாரைப் பார்த்துக்கோங்க.”.. என்றவன் விடை பெற்றுச் சென்றான்.
“முகுந்த் நீங்க குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு லஞ்ச் ரெடி பண்றேன்”.. என்று கட்டாயபடுத்தி அவனை அனுப்பி வைத்தாள் மீரா.
முதல் வேலையாக அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள், பத்திய சாப்பாடு வகைகள் என்று அனைத்தையும் பாடம் செய்து வைத்துக் கொண்டாள்.
பருப்பு ரசம் வைத்து வெண்டைக்காயை மட்டும் வதக்கி வைத்தாள். காரம் இல்லாத உணவாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து சமைத்து வைத்தாள்.
குளித்து வந்தவன்.. மீராவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான். அவனது அந்த எதிர்பாராத அணைப்பில் அவள் அதிர்ந்து விட..
“ஏய் சண்டைக்கோழி.. உன்னை இப்படி கட்டிப் பிடிக்கணும் என்று எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா?”.. என்றவனின் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் பதிய..
ஷாக் அடித்தது போல் விலகி கொண்டாள் மீரா..
முகுந்தன் முகத்தில் ஏமாற்றம்.
“முகுந்த்.. என்ன இது. முதல்ல உங்க உடம்பு குணம் ஆகணும். நானே உங்களுக்கு இப்படி விபத்து ஆயிடுச்சேன்னு எவ்வளவு வருத்தமா இருக்கேன் தெரியுமா. உங்க தலையில் உள்ள கட்டைப் பார்த்தாலே எனக்கு பதறுது.
எதுக்கும் ஒரு எம்ஆர்ஐ எடுத்து பார்த்து விடலாமா?”.. என்று மீரா கேட்க.
“எல்லா ஸ்பெசலிஸ்டும் பார்த்துட்டாங்க மீரா. ஒரு பிரச்சனையும் இல்லை. நீ இப்படி என்னை விட்டு விலகுறது தாண்டி வலிக்குது. நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். ப்ளீஸ் என் கைவளையத்துக்கு உள்ளேயே இரு”.. என்று அவன் கெஞ்சலாக சொல்ல.. அவன் பார்வையில் உண்மையான பிரிதலின் வலி தெரிந்தது.
“யாரும் இல்லாம அனாதையா வாழ்ந்தவன்டீ நான்.. ஒரு ஃப்ரெண்டா நினைச்சு என் கூட இரு”.. என்று அவன் கெஞ்சுத்லாக கேட்க.
“ஒகே.. நாம ரெண்டு பேரும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அதைத் தாண்டி வேற எந்த நினைப்பும் உனக்கு வரக் கூடாது.”.. என்று மீரா உத்திரவாதம் கேட்க..
“நிச்சயமா!!”.. என்று சொன்னவனோ மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
மீராவின் வைராக்கியம் ஜெயிக்குமா அல்லது முகுந்தனின் கனவு ஈடேறுமா?
அடுத்த பகுதியில் காண்போம் நட்புகளே.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.