“என்னடீ உன் மனசுல நினைச்சிட்டு இருக்க?. கல்யாணம் பார்க்கிற நேரம் ஒரு பொம்பிளைப் பிள்ளை இப்படியா ஏழு மணிக்கு வீடு திரும்புறது. ஃபோன் போட்டாலும் எடுக்கிறது இல்ல. நாளைக்கு எங்கேயாவது வெளியேறு.. அப்ப வச்சிக்கிறேன்.”.. என்று மீனாட்சி பொரிந்து தள்ளினார்..
“சித்தி ரிலாக்ஸ்!!. கொஞ்சம் அமைதியா இருங்க. நான் அவள் கிட்ட பேசுகிறேன். நீங்க அவளுக்கு உள்ளே போய் சாப்பாடு எடுத்து வைங்க.”.. என்று வெங்கட் மீனாட்சியை கஷ்டப்பட்டு உள்ளே அனுப்பி வைத்தான்.
“டேய் அண்ணா எப்படா ஊர்ல இருந்து வந்த?”.. என்ற மீராவோ மெல்ல அவள் காதில் மாட்டி இருந்த கலக்ஸி ஹெட்போனை இரு காதுகளில் இருந்தும் கழட்டி எடுத்தாள்.
“அடிப்பாவி!!.. உங்க அம்மா இவ்வளவு நேரம் கத்துன கத்துல என் காது எல்லாம் இரத்தம். நீ மட்டும் இவ்வளவு நேரம் ஜாலியா பாட்டா கேட்டுட்டு இருந்த!!”.. என்று வெங்கட் கடுப்பாக கேட்க.
“போருக்கு வர்றதுக்கு முன்னாடி வெப்பன் எல்லாம் ரொம்ப முக்கியம் ப்ரோ. நான் எல்லாம் எப்பவும் தயாராதான் வருவேன். என்ன.. எனக்கு பிரியாணி மிச்சம் வச்சு இருக்கியா இல்ல நீயே ஃபுல் கட்டு கட்டிட்டியா.”.. என்று அவள் கேட்க.
“சித்தி இப்படி ஸ்ட்ரிக்டா இருக்கும் போதே நீ இப்படி அவங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுற. உன்னை எல்லாம் லூசுல விட்டால் அவ்வளவு தான். உனக்கு எல்லாம் சித்தி தான்டீ சரியான ஆளு.”.. என்றான் புருவங்களை உயர்த்தி.
“அது இருக்கட்டுன்டா.. கல்யாணி கிட்ட பேசினியா?. இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறந்திடும்னு நினைக்கிறேன். நீ தான்டா தாய் மாமா. நினைவு இருக்கா”.. என்று உற்சாகமாக மீரா நினைவு படுத்த..
“ஐயோ வாயை மூடுடி. எங்க அம்மாவுக்கு மட்டும் நாம கல்யாணி பத்தி பேசுறதைக் கேட்டா அவ்வளவு தான்!! என்னை வீட்ல கூட இனி விட மாட்டாங்க.”.. என்று அவன் பதட்டத்துடன் அவளை நிறுத்த.
“ரொம்ப தான்டா பயப்படுற.. காதல் என்ன அவ்வளவு பெரிய குத்தமா?? சப்போஸ் ஏதாவது அழகான பொண்ணு உன் கிட்ட தேடி வந்து புரபோஸ் பண்ணா என்ன பண்ணுவ?. அப்பவும் இப்படி தான் பிகுபண்ணுவியா??.. இல்ல ஃப்ளாட் ஆகிடுவியா?”.. என்று மீராவோ வினிதாவுக்காக அவன் மனதை ஆழம் பார்த்தாள்.
“அழகான பொண்ணா?”.. என்று அவன் கண்கள் ஒரு நிமிடம் பளிச்சிட.
“நீ சும்மா இரு மீரா!! தேவை இல்லாதது எல்லாம் எதுக்கு பேசுற. ஒரு பொண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத என்னைப் போய் எந்த பொண்ணுக்கு பிடிக்கப் போவுது”.. என்று அவன் சோகமாகச் சொல்ல.
“நானும் அப்படித் தான்டா நினைச்சேன். ஆனா உன் பின்னாடியும் ஒரு ஆளு சுத்துவதை நான் பார்த்தேனே”.. என்று மீரா உளறி விட..
“என்னடீ சொல்ற?.. என் பின்னாடி ஒரு பொண்ணா?.. யாரது?”.. என்று வெங்கட் சிறு அதிர்ச்சியுடன் அவள் முன் நின்று சிறு அத்ட்டலுடன் கேட்க.
“அது எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இந்த ஆஞ்சநேயர் மேல எப்படி தான் அந்த பிள்ளைக்கு லவ்வு வந்துச்சோ. இந்தா உன் பேர்ல வந்த மொட்டைக் கடிதாசி. சாரி சாரி சீக்ரெட் அட்மைரர் லெட்டர்!!.”.. என்று வினிதா வெங்கட்டிடம் கொடுக்க வேண்டும் என்று என்றோ ஆசையாக எழுதி வைத்து இருந்த கடிதத்தை நீட்டினாள். அதில் அவள் பெயரை எழுதவில்லை.
“வாட் லவ் லெட்டரா?”.. என்று அதிர்ந்தவனின் பார்வை பெரியவர்கள் யாரும் வருகிறார்களா என்று தான் ஆராய்ந்தது.
“உண்மையிலேயே எனக்கு தான் வந்திருக்கா?”.. என்று அவன் ஆச்சரியமாக கேட்க.
“உனக்கு தான்டா வந்திருக்கு. படிச்சுப் பாரு”.. என்று அவள் நீட்ட
அதை வாங்கிய வெங்கட்டும் வேகமாக வாசித்தான். வினிதா தன் காதலை கவிதையாக அந்த கடிதத்தில் கொட்டி இருந்தாள்.
ஆனால் வெங்க்ட்டோ படித்து முடித்த அடுத்த நொடியே அந்த கடிதத்தைக் கிழித்து விட்டான்.
இந்த முறை அதிர்வது மீராவின் முறையாகிப் போனது. “வெங்கட் உனக்கு என்ன பைத்தியமா??. அந்த பொண்ணு எவ்வளவு ஆசையா இந்த லெட்டரை எழுதிக் கொடுத்து இருக்கா!.. சாரி சாரி அனுப்பி இருக்கா. அதை சரியாகக் கூட படிக்காம இப்படி கிழிச்சிட்டியே”.. என்று மீரா புலம்ப.
“போதும் மீரா நம்ம வீட்ல ஒரு கல்யாணி போதும். இன்னொரு பிரளயத்தை நிச்சயம் இந்த வீடு தாங்காது. எனக்கு அம்மா பார்க்கிற பொண்ணே போதும். நான் கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டியை மட்டும் காதலிச்சுக்கிறேன்”.. என்று வெங்கட் எந்த தடுமாற்றமும் இல்லாமல் சொல்லிச் சென்றான்.
”என்ன இவன்!! எந்த காலத்துல இருக்கான்.”.. என்று மீரா உதடுகள் சொன்னாலும்.. அவள் மனதுக்குள் குற்ற உணர்வு ஒரு பக்கம் வருத்தி எடுத்தது. அவசரப்பட்டு விட்டோமோ. முகுந்த் பற்றி தெரிந்தால் எல்லாரும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ!.
ஆனா கல்யாணி ஒரு வெள்ளைக்காரணை பிடிச்சிட்டது தான் எல்லாருக்கும் ரொம்ப கோபம். ஆனா முகுந்த் சுத்த தமிழ்ப் பையன். மீசை கூட வச்சு இருக்கான். சொத்து பத்துக்கு குறை இல்லை. தங்கமான குணம். இதுக்கு மேல என்ன வேணும். முகுந்தை நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.”.. என்று ஏதேதோ சொல்லி தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.
மறுநாள் குளித்து முடித்து தயாராகி வந்தவள் மனதுக்குள் என்ன பொய் சொல்லி மீனாட்சியிடம் அனுமதி கேட்கலாம் என்று தான் ஓடிக் கொண்டு இருந்தது. காலை உணவை முடித்து அவள் சித்தப்பா, பெரியப்பா வேலைக்குச் செல்லும் வரை காத்து இருந்தவள் பாட்டியை தான் நாடிப் போனாள்.
பாட்டி டிவி பார்த்துக் கொண்டு இருக்க.. “என்ன பாட்டி சீரியலா!. நானும் பேசாம சீரியல் தான் பார்க்கணும் போல ரொம்ப போர் அடிக்குது.”.. என்று அவள் சடைத்துக் கொள்ள.
“போர் அடிச்சா பாட்டு கிளாஸ், டெய்லரிங் கிளாஸ்ன்னு இப்படி போ. அதை விட்டுட்டு சீரியல் பார்க்கப் போறேன்னு சொல்ற!”..; என்று பாட்டி கேட்க.
அதற்க்காகத் தானே மீராவும் காத்து இருந்தாள். “எங்க பாட்டி.. உங்க மருமகள் தான் என்னை ஹவுஸ் அரெஸ்ட் ஆக வச்சு இருக்காங்களே. எங்க காலேஜ் பக்கத்துலே ஒரு இடத்தில நல்லா பாட்டு சொல்லி தருகிறாங்க. எனக்கு ரொம்ப ஆசை. நீங்க மட்டும் பெர்மிஷன் வாங்கி கொடுத்தா போதும் ஒரு ஷ்ரேயா கோஷல் மாதிரி பாடி நிறைய அவார்ட் வாங்கி விடுவேன்”.. என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கெத்தாக சொல்ல.
“அது சரி!.அவார்ட் எல்லாம் இருக்கட்டும்.. முதல்ல நீ பாடும் போது நாங்க காதுல பஞ்சு வைக்காம கேட்க முடிந்தாலே போதும்.”.. என்று பாட்டி சொல்ல.. “பாட்டி என்ன ஓவரா தான் கலாய்க்கிறீங்க. இருந்தாலும் எனக்கு அனுமதி வாங்கிக் கொடுக்க போறீங்க என்ற ஒரே காரணத்திற்காக பொறுத்துக்கிறேன்.”.. என்றாள் மீரா.
“வாலு… வா உங்க அம்மா கிட்ட பேசுறேன்”.. என்று அழைத்துச் சென்றார். மீனாட்சியால் மாமியாரை எதிர்த்து பேச முடியவில்லை. வேறு வழியில்லாமல் அனுமதி கொடுத்தாள்
“தேங்க்ஸ் பாட்டி”.. என்று அவர் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சி விட்டு வெளியேறினாள்.
முகுந்தன் ஃப்ளாட்டிற்கு வந்தவள் பெல் அடிக்க.. கவின் தான் கதவைத் திறந்தான். “வாங்க மேடம். உங்களுக்காகத் தான் காத்திட்டு இருந்தேன். சாரை நாம ஹாஸ்பிட்டலுக்குத் தான் கூட்டிப் போகனும் போல”.. என்று அவன் சொல்ல.
பதறிப்போன மீராவோ.. “ஏன் கவின்?.. அவருக்கு என்ன ஆச்சு. நான் நேத்து கிளம்பும் போது கூட நல்லா தானே இருந்தார்!”.. என்று கேட்க..
“எல்லாம் அந்த டிரக் பண்ற வேலை மேடம். அவரு அந்த டிரக்கை குடிச்சப்போ அவருக்கு அதீத சந்தோசம் உண்டாகியிருக்கு. இப்போ அந்த ட்ரக் எஃபெக்ட்ஸ் சுத்தமா போனவுடன் ஒரு வித வெறுமை உண்டாகி விடுது. எல்லாத்தையும் தொலைத்த ஒரு சோர்ந்த உணர்வு.
நீங்க இருக்கும் போது அவரு மனசுல ஒரு திருப்தி ஏற்பட்டு ஒரு உற்சாகம் கிடைக்குது என்று நினைக்கிறேன். நேத்து நீங்க போன பிறகு ரொம்ப டல் ஆகிட்டார். அவரால் தூங்கவும் முடியவில்லை. டாக்டர் கொடுத்த ஸ்லீப்பிங் பில்ஸ் கொடுத்தும் அவரால் தூங்கவே முடியவில்லை.
ரூம்லயே சுத்தி சுத்தி நடக்க ஆரம்பிச்சு விட்டார். அவரோட பதற்ற அளவு ரொம்ப கூடிருச்சு. அவரோட மென்டல் ஸ்ட்ரெஸ் குறைய வேண்டும் என்றால் அவர் நல்லா தூங்கனும் என்று டாக்டர் ரொம்ப கண்டிப்பா சொல்லி இருக்கார். அவரால இனி இயல்பா தூங்க முடியும் என்று நம்பிக்கை எனக்கு இல்ல.
ஹாஸ்பிட்டல் போய் டிரிப் மூலமா தூக்க மருந்து கொடுத்தா தான் அவரால தூங்க முடியும்னு தோணுது.”.. என்று கவின் சோகமாக சொல்ல.
உற்சாகமாக வந்த மீராவுக்கோ இப்போது முகம் வாடிப் போனது. “இப்ப அவரு எங்க இருக்கார் கவின்?”.. என்றாள் வேதனையை உள்ளுக்குள் அடக்கியபடி.
“குளிச்சிட்டு இருக்கார் மேடம்!!”
“எனக்கு இன்னைக்கு ஒரு நாள் டயம் கொடுங்க கவின். இன்னைக்கு எப்படியாவது அவர் மனசை ரிலாகஸ் பண்ண வச்சு தூங்க வைக்கப் பார்க்கிறேன். அப்படி என்னால முடியலைன்னா.. நாளைக்கு நீங்க சொன்ன மாதிரி ஹாஸ்பிட்டலில் சேர்த்து வேற ட்ரீட்மென்ட் கொடுக்கலாம்”.. என்றாள்.
“ம்.. ஒகே மேடம். அப்போ நான் கிளம்புறேன்!”.. என்று கவின் செல்ல.. மீரா கதவை அடைத்து உள்ளே வந்தாள்.
முகுந்தனும் அப்போது தான் தன் ஈரத்தலையை உலர்த்தியபடி குளியல் அறையில் இருந்து வெளியே வந்தான். அவன் கண்களுக்கு அடியில் இருந்த கருவளையமும், சோர்ந்த முகமும் கவின் சொன்னது உண்மை தான் என்று அடித்துக் கூறியது.
“ஹாய் மீரா.. எப்ப வந்த”.. என்றவனின் முகம் தன் வலிகளை மறைத்து மென்மையாக மலர்ந்தது.
அவன் மட்டும் நேற்று இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து இருக்க.. அவள் அவனைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் எட்டு மணி நேரம் தூங்கி வந்து இருக்கிறாள். என்று யோசிக்கும் போதே அவளுக்கு குற்ற உணர்வாகிப் போனது.
“என்ன முகுந்த் தூங்கவே இல்லையா?”.. என்று அவன் கன்னத்தை மென்மையாக வருடிக் கொடுத்தபடி கேட்டாள்.
அவள் கரத்தை மென்மையாகப் பற்றி மெல்ல அதில் இதழ் பதித்தவன். “அதான் நீ வந்துட்டில எல்லாம் சரியாகி விடும்” என்றான்.
“பெட் டயம் ஸ்டோரிஸா!! ஏய் நான் என்ன சின்ன குழந்தையா?”.. என்று அவன் மெல்லிய புன்னகையுடன் கேட்க.
“ஆமா.. சின்ன குழந்தை தான். நீங்க இப்போ தூங்கியே ஆகணும். எது உங்க பெட் ரூம்” என்று அவளே அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
“பால் வேண்டாமா?”.. என்று கேட்டவன் இதழ்களுக்குகள் மெல்லிய கேலிப் புன்னகை.
“பால் எதுக்கு?”.. என்று அவள் புரியாமல் கேட்க..
“இல்ல நமக்கு கல்யாணம் ஆகி இன்னைக்கு தான சேர்ந்து பெட் ரூமுக்கு போறோம்”.. என்று அவன் சிறு நக்கலுடன் சொல்ல.
ஷாக் அடித்தது போல் திரும்பியவள்.. “ஓ.. இந்த நினைப்பு எல்லாம் வேற உங்களுக்கு இருக்கா.. எனக்கு கராத்தே தெரியும். என் மேல உங்க சுண்டு விரல் பட்டுச்சு அவ்வளவு தான்!”.. என்று அவள் கண்களை உருட்டியபடி மிரட்ட..
“ஆத்தி பயமா இருக்கு!!.. கண்ணை உருட்டாத தாயே.. கெட்ட கனவா வரப்போகுது.”.. என்று அவன் பயந்தது போல் நடிக்க..
“சரி படுங்க. நான் தட்டிக் கொடுக்கட்டுமா தாலாட்டு பாடட்டும்மா?”.. என்று மீரா கேட்க..
“மீரா.. எனக்கு பட்ட பகல்ல தூங்கி பழக்கம் இல்ல. அதுவும் இல்லாம என்னால தூங்க முடியல மீரா. எனக்கு எப்படி சொல்றது என்று தெரியல. ஒரு மாதிரி நரக வேதனையா இருக்கு. மனசு எல்லாம் ஒரு மாதிரி பரபரன்னு இருக்கு. என் மனசு என் கட்டுப்பாட்டில் இல்ல. சில நேரம் டெப்ரஷனுக்கு போறேன். சில நேரம் ஆன்சைட்டிக்கு போறேன்.”.. என்று அவன் சொல்லச் சொல்ல.. மீரா துடித்துப் போனாள்.
உனக்கு என் வலி புரியாது மீரா. ஊரே கண் அயர்ந்து தூங்குற நேரம் நான் மட்டும் அப்படியே கண்ணைக் கூட முடியாம துடிச்சிட்டு இருக்கேன். அப்படியே தலையே வெடிச்சு விடும் போல் இருக்கு. இப்படி ஒரு துயரை அனுபவிக்கிறதுக்குப் பதிலா பேசாம அந்த போதை மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டா என்ன அப்படின்னு கூட மனசுக்குள்ள தோணுது மீரா”.. என்று அவன் சொல்ல…
மீராவோ சிலையாக நின்று விட்டாள்.
“முகுந்த்.. என்ன வார்த்தை பேசுறீங்க. அது விஷம் முகுந்த்!!. நம்ம வாழ்க்கையையே சீரழிச்சிடும்.”
“இப்ப மட்டும் என்ன??. நான் ஒரு வாரம் வேலைக்கு போகல. என்னை நடைப் பினமா ஆக்கிட்டான் அந்த ராஸ்கல். இந்த மாத்திரையை போட்டதுக்குப் பதிலா ஒரு விஷ மாத்திரையைப் போட்டு இருந்தா கூட.. இந்நேரம் நிம்மதியா நான் போய்ச் சேர்ந்து இருப்பேன்!!”.. என்று அவன் முடிக்க வில்லை. மீரா அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள்.
“என்ன வார்த்தை டா பேசுற.. உன்னையே நம்பி, நீ கட்டின தாலியை ஆசையா சுமந்துகிட்டு இருக்கும் நான் உன் கண்ணுக்கு தெரியலையா? எனக்கு நீ வேணும் டா!!.. என்று அவன் நெஞ்சில் சாய்ந்தவள்.. “ப்ளீஸ் முகுந்த்.. த்யவு செய்து இனி இப்படி எல்லாம் பேசாத!”.. என்று அவள் அழுது விட..
அவள் நிலை புரிந்தவன் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான். “ஐ ஆம் சாரி டீ.. நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது”.. என்று அவ்னும் அவளை இறுக்கி தன் அன்பை வெளிப்படுத்தினான்.
அவள் விசும்பல் நிற்க.. முகுந்தன் பிடி தளர்ந்தது. தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட மீரா.. “முகுந்த் போதையை மாத்திரை மட்டும் இல்ல பெண்ணாலும் ஐ மீன் என்னாலும் கொடுக்க முடியும்.”.. என்றாள் தன் முகத்தைத் தாழ்த்தியபடி
“என்ன மீரா சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல”.. என்றான் அவன்.
தலை நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள்.. “லெட்ஸ் டூ இட் முகுந்த். எஸ் நாம நம்ம வாழ்க்கையைத் துவங்கி விடலாம்”.. என்று அவள் சொல்ல.
“ஹேய் பேபி.. எதுக்கு டீ இந்த திடீர் மனமாற்றம்?”.. என்று அவன் அவள் தலையை வருடியபடி கேட்க.
“இந்த தாம்பத்தியம் உங்களுக்கான வைத்தியம் முகுந்த். என்ன ஒரு மாசம் கழிச்சு நடக்கப் போறது இன்னைக்கு நடக்க போவுது. அவ்வளவு தான்.!!. நாம கணவன் மனைவி தான். இதில் ஒன்னும் தப்பு இல்லை!”.. என்றாள் உறுதியாக.
“வேண்டாம் மீரா.. நீ என்ன சமாதானம் சொன்னாலும்.. என்று அவன் முடிக்கும் முன் முதல் முறையாக அவன் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி இருந்தாள் மீரா.
அவனுக்கு இன்ப அதிர்ச்சி. ஆனாலும் அவள் முழு மனமாக அவனை நாடவில்லை என்பது உறுத்த.. அவளை விலக்கத் தான் நினைத்தான்..
ஆனால் அவள் இதழ்களின் சுவையை உணரத் துவங்கியவனுக்கு எங்கனம் விலக மனம் வரும்?
அவள் தொடங்கியதை அவன் தொடர்ந்தான். அவன் கரம் அவள் உடலில் உரிமையுடன் பயணிக்கத் தொடங்கியது. மீராவோ எந்த எதிர்ப்பையும் வைக்கவில்லை. அவனோ தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் முன்னேறத் துவங்கி இருந்தான்.
அவளை தன் இரு கைகளில் அள்ளியவன் அவன் படுக்கையில் கிடத்தினான். மீரா மனதில் குற்ற உணர்வு குத்திக் கிழித்தாலும்.. என் முகுந்தனுக்காக என்று தன் மனதை அடக்கி கொண்டாள்.
அவனோ பெண்ணின் வனப்புகள் ஏற்றிய போதையில் கிறங்கி அவளை மொத்தமாக தனதாக்கும் வேட்டையைத் துவங்கி இருந்தான். அவன் அணைப்பில் அவள் கிறங்கினாலும்.. அவளால் லயிக்க முடியவில்லை. அவன் மட்டுமே செயல்பட.. “மீரா.. ஆர் யூ ஒகே. உனக்கு வேண்டாம்னா சொல்லு. நிறுத்திடலாம்.”.. என்று அவன் சட்டென விலகிக் கொள்ள.
“நான் அப்படி சொன்னேனா”.. என்றவள் அவனை தன்னோடு இழுத்துக் கொள்ள.. அதற்கு மேல் நடந்தது எல்லாம் கட்டில் யுத்தம் மட்டுமே.
பெண்மையை வென்ற களைப்பில் அவன் அயர்ந்து உறங்கத் துவங்கி இருந்தான். அவன் ஆழ்ந்த தூக்கம் அவளுக்கு பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் அவள் அறியவில்லை அவள் தான் இனி தன் தூக்கத்தை மொத்தமாக தொலைக்கப் போகிறாள் என்று..
தொடரும்
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.