“தூக்கம் வரும் போது உள்ள வரேன். இப்ப நோ…” என அவன் அழைக்க அழைக்க பிடிவாதமானாள்.
“அழுதியா குறிஞ்சி?…” என்றான் அவளின் முகம் சிவந்து இருப்பதை கண்டு.
“ஆமா, நீங்க ஏன் கடைக்கு போனீங்க?…”
“சொன்னேன்ல வேலை இருந்ததுன்னு…” என்றவன் அவளருகே வந்து அமர்ந்தான்.
எதிரே இருந்த டீப்பாயில் காலை நீட்டி வைத்தவன் நன்றாக தளர்ந்து பின்னால் தலை சாய்ந்துகொண்டான்.
“வேலை இருந்தா போவாங்களா? அதுவும் கல்யாணம் ஆனா மறுநாளே? எனக்கு தெரியும் உங்களுக்கு கோவம் என் மேல…” என்றாள் மீண்டும் கலங்கிய விழிகளுடன்.
“சுபாக்காவும், அம்மாவும் ரொம்ப திட்டிட்டாங்க…”
“ப்ச், இப்ப இதுக்கு ஏன் அழற? எனக்கு வேலை இருந்தது போய்ட்டேன்…” என்றான் அவனும்.
“இதுக்குத்தான் இதுக்குத்தான் நான் முதல்லையே சொன்னேன் வேண்டாம்ன்னு…” என சொல்லிவிட அவளை திரும்பி அழுத்தமாய் பார்த்தவன்,
“இப்படி பேசாதன்னு சொல்றேன்ல. உனக்கு ஏன் புரியலை?…”
“என்ன புரியனும்? நானா நினைச்சது ஒன்னு. நடந்தது ஒன்னு…” என்று சொல்ல அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டவன் இப்போதைக்கு எதையும் அவளுக்கு புரியவைக்க முடியாது என நினைத்து,
“ஓகே அழாத…” என்றான் மெதுவாய்.
“நீங்க கூட இருந்திருந்தா திட்டிருக்கமட்டாங்க தெரியுமா?…”
“நீ என் கூட இருந்தியா?…” என அவளை பார்த்து கேட்க கேட்க,
“ஆனா நான் வீட்டுல தானே இருந்தேன்…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? அப்படி என்ன கோவம் உங்களுக்கு? இப்பவும் உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்….” அவன் சண்டை போடுவானோ என நினைத்திருந்தவள் இவளாக ஆரம்பித்திருந்தாள் வாக்குவாதத்தை.
“நானும் உனக்காக வெய்ட் பண்ணேன் மத்தியானம். நீ ஏன் வரலை?…” என கேட்க,
“அது வந்து தூங்கிட்டேன். அது மிகப்பெரிய தப்புன்னு எல்லாரும் பேசிட்டாங்க. திட்டிட்டாங்க. ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? இனி நான் எப்போ கூப்பிட்டாலும் வரனும். நான் எப்பவும் எங்கயும் இறங்க போனதில்லை. ஆனா உன் விஷயத்துல எல்லாம தலைகீழ். இப்பவும் கூட…” என சொல்ல,
“அவ்வளோ ஹெட்வெய்ட்டா உங்களுக்கு?…” என குறிஞ்சி முறைக்க,
“ஆமா, அது கூடவே பொறந்ததுன்னு வச்சுக்கோ…” என்றவன்,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீ என்ன பேசற?…” என கேட்டான்.
“கூப்பிட்டப்போன்னா? இது எப்படி?…”
“நாம ரெண்டு பேரும் இன்னும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலை குறிஞ்சி. கல்யாணம் ஆகிருக்கு. அவ்வளோ தான். பேச, பழக?…” என அவன் அமைதியாய் எடுத்து சொல்ல,
“ஹ்ம்ம், ஆமா. ஆனா நீங்க அந்நேரம் வர சொன்னதும்…”
“ப்ச், புரியாத உனக்கு? நமக்கு கல்யாணம் ஆகிருச்சு. முதல்ல அதை ஞாபகம் வச்சுக்கோ. எப்போ பாரு ஓனர், ரொட்டிக்கடை, ஆங்க்ரிபேர்ட் இன்னும் எத்தனை வச்சிருக்கியோ? இதை தாண்டி புருஷன்னு நினை…” என்றான் சற்று பொறுமை இழந்து.
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?…”
“ரகசியம் பேசனும்னா ரெண்டு பேருக்கு நடுவுல பேசனும். நீ தான் சுபாக்கான்னு ஊருக்கே கேட்கிற மாதிரி பேசுவியே?…” என சொல்ல,
“கேட்டும் பேசாம இருந்தீங்களா? கோவம் வரலை?…”
“நான் கோவப்பட்டு நீயும் மதிச்சிருவ…” என்றவன்,
“முதல்ல நான் சொன்னதை புரிஞ்சிக்கோ…” என்றான்.
“நான் ஒன்னும் மறக்கலை. புருஷன்னு எல்லாம் ஞாபகம் இருக்குது…” என சொல்ல,
“என்ன ஞாபகம் இருக்குது?…” என்றான் லேசான சிரிப்போடு.
“இந்த முல்லைவனம் தான் இனி குறிஞ்சிக்குன்னு ஞாபகம் இருக்குது…”
“அப்போ கூட உனக்கு என் ஞாபகம் இல்லை. முல்லை வனமும், முல்லை பூவும் தான் ஞாபகம்…” என்றவன்,
“ஏன் மத்தியானம் நான் கூப்பிட்டதும் வரலை?…” என்றான் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து.
“நீங்க கூப்பிட்டது அப்படி. வீட்டுல அத்தனை சொந்தக்காரங்க இருக்கறப்போ நான் அங்க வந்தா? அது. நீங்க கூப்பிட்டிருக்க கூடாது…”
“நீ என் வொய்ப் தானே? உன்னோட இருக்கனும்னு கூப்பிட்டேன். அதுல என்ன தப்பு? கூப்பிடத்தான் செய்வேன்…”
“ஆனா எல்லாரும் இருக்கறப்போ?…”
“குறிஞ்சி, குறிஞ்சி. உன்கூட பேசி பேசி டயர்ட் ஆகறேன். உன்னை மேலே கூப்பிட்டா அதான் ரீசனா இருக்கனுமா?…”
“அப்பறம்?…”
“அதுவே ரீசனா இருந்தாலும் என்ன தப்பு?…” என சொல்லவும் குறிஞ்சிக்கு என்னடா இது என்றானது.
“ஆனா உன்கூட பேசத்தான் கூப்பிட்டேன். உன்கிட்ட ஒன்னு காண்பிக்க. ஆனா நீ திருதிருன்னு முழிச்சுட்டு நின்னது. கொஞ்சம் விளையாடி பார்க்க தோணுச்சு…” என சொல்ல,
“என்னை பார்த்தா என்ன பாப்பா மாதிரி தோணுதா? விளையாட? ஆமா நீங்க விளையாடுவீங்களா?…” என்று நன்றாக திரும்பி சம்மணமிட்டு அமர்ந்து கேட்க அவனும் அமர்ந்த நிலையில் இருந்தே தலையசைத்தான்.
“நம்பவே முடியலை…” என சொல்ல,
“நம்புவ. நம்பாம எங்க போவ?…” என்றவனின் பேச்சின் பின்னால் எதுவோ ஒளிந்திருப்பதை போல தோன்ற அவனின் பார்வையும் மாற சட்டென பேச்சை மாற்றினாள்.
“என்ன பேச வர சொன்னீங்க?…” என கேட்கவும் எழுந்துகொண்டவன்,
“உள்ள வா. காமிக்கறேன்…” என்று செல்ல அவனின் பின்னேயே சென்றாள்.
“லைட் ஆஃப் பண்ணிட்டு வா. ஏன் கிட்சன் டோர் திறந்திருக்குது? எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு வா…” என சொல்ல,
“சரியான ரூல்ஸ் ஓனர்…” என அவனுக்கு கேட்கும் படியே முணுமுணுத்து செல்ல,
“ஹ்ம்ம், இவ எதுக்கு பயப்படறதில்ல…” என தலையசைத்தபடி அந்த கவரை வெளியில் எடுத்தான்.
குறிஞ்சியும் சாப்பாட்டை மறந்து என்ன என்னும் ஆவர்த்தில் சென்று அவனருகே அமர்ந்துகொள்ள,
“இதை காமிக்க தான் கூப்பிட்டேன். நீ வரலை. எனக்கும் கோவம் அத்தனை ஈஸியா போய்ட்டேனான்னு. அதான் நானும் திரும்ப வரலை…”
“அப்போ கோவம் இருந்திருக்குது…”
“ஆமா, சில விஷயங்கள் மாத்திக்க முடியாது குறிஞ்சி. அது என்னோட நேச்சர்…” என சொல்லிவிட்டு,
“நீ இதை கேட்ட தானே? பாரு…” என அவளிடம் நீட்டினான்.
“என்ன இது?…” என்று குறிஞ்சி வாங்க,
“நம்மோட மேரெஜ் சர்டிபிகேட், நம்ம போட்டோஸ்…” என சொல்ல அவனை முறைத்தாள். அவன் அன்று சொல்லியது ஞாபகம் வந்தது.
“இதை சொல்லி மிரட்டி தான என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?…” என,
“ஆமா, அதுக்கென்ன?…” என்றான் சாவகாசமாய்.
“கொஞ்சம் கூட குத்தலை இல்ல?…”
“ம்ஹூம் இல்லை…” என்றவன் அவளின் தோளில் கைபோட்டு தன்னருகே இழுத்துக்கொள்ள,
“ப்ச் விடுங்க. நேத்தும் இப்படித்தான் பேசவிடாம பண்ணினீங்க. இன்னைக்கு…” என்று அவனை தள்ளிவிட்டு எழுந்து அறையின் வெளியே சென்று ஹாலில் நின்றுகொண்டாள்.
“குறிஞ்சி, வா இங்க. போட்டோஸ் எதுவும் பாரக்கலையா?…” என்றான் அமர்நாத் அவளின் பின்னே வந்து கதவருகே சாய்ந்துகொண்டு மெல்லிய புன்னகையுடன்.
“சிரிக்காதீங்க. இந்த சிரிப்பு தான் நேத்து என்னை அப்படியே ஸ்டாப் பண்ணிடுச்சு. ஒரு நிமிஷம் நான் அசந்தேன். நீங்க…” என்று நிறுத்த,
“நான்?…” என்றான் இன்னும் அதே புன்னகையுடன்.
“நேத்தும் இப்படித்தான் தாலி கட்டும் போது புகையை போட்டு கண்ணை மறைச்சு நான் என்ன, ஏதுன்னு பார்க்கறதுக்குள்ள கட்டி முடிச்சுட்டீங்க…”
“என்ன கண்ணை மறைச்சா? இதெல்லாம் அடுக்காது…” என்றவன் புன்னகை சற்று சத்தத்துடன் வர,
“ஆமா, தாலி சுத்தி வந்து எல்லாரும் அட்சதை எடுக்கறது, அதை தொட்டு கும்பிட்டதுன்னு நான் எதையுமே பார்க்கலை. இதெல்லாம் பார்க்கனும்னு நினைச்சேன்…”
“ஓஹ் காட்…” என்று அவன் நெற்றியை பிடிக்க,
“நைட்லயும் அப்படித்தான் பேசனும்னேன், விடலை. பக்கத்துல நோ சொன்னேன். கேட்கலை. கேட்காம வந்து…”
“ஹ்ம்ம், வந்து?…” என்று அவளை நோக்கி எட்டு வைத்து வந்தான்.
“இப்பவும் கிட்ட வரீங்க? நானும் உங்க மேல கோவமா தான் இருக்கேன். தூரமா நில்லுங்க. நேத்தும் நான் என்ன நினைக்கறேன்னு என்னை பேசவே விடலை…”
“ஓகே, ஓகே. ஆனா நீ தூரமா அங்க நின்னு இவ்வளோ சத்தமா பேசினா ஜன்னல் வழியா வெளில எல்லாருக்கும் கேட்கும். சண்டை போடறோம்னு எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க குறிஞ்சி, பரவாயில்லையா?…” என திறந்திருந்த ஜன்னலை காண்பித்து சொல்ல,
“அட ஆமால…” என கேட்டுக்கொண்டே ஜன்னலை அடைக்க சென்றாள்.
அதன் அருகே நின்றுகொண்டிருந்தவன் அவள் நெருங்கி வந்ததுமே ஒற்றை கையால் தூக்கி தோளில் போட்டுக்கொண்டான். அவள் அவனின் கைகளில் துள்ள ஒற்றை கையால் அறையின் கதவை அடைக்க,
“இதுக்குத்தான் பக்கத்துல வர கூடாதுன்னு நினைச்சேன். எங்க வீட்டுல எல்லாரும் உங்களை போய் ரொம்ப நல்லவருன்னு வீணை வாசிக்கிறாங்க. கடுப்பாகுது…” என சொல்ல,
“நானும் கூட இப்போ வீணை தான் வாசிக்கிறேன்…” என்றவன் அவளின் இடையோடு தன் முகம் கொண்டு உரச அவனை நன்றாக கிள்ளியவள் துள்ளி இறங்கிவிட தலையை கோதியபடி அவளை பார்த்து புன்னகையை சிந்தினான்.
“இப்படிலாம் பண்ணாதீங்க உங்க மூஞ்சிக்கு சுத்தமா செட் ஆகலை. இது புதுசா இருக்குது. உங்களை அப்படியே பார்த்துட்டு இப்படி பார்க்க…”
“என்னை எப்போ நீ பார்த்த?…” என்றவன் மீண்டும் அவளை தனக்குள் இழுத்துக்கொள்ள,
“ப்ளீஸ்…” என்றாள் அவனிடமிருந்து விலகமுடியாமல்.
“இந்த ப்ளீஸ்க்கு இன்னைக்கு ஃபுல்லா வெய்ட் பண்ணேன் குறிஞ்சி. இப்போ தான் சொல்ற…” என சொல்லியவன்,
“நேத்து நான் அத்தனை சொல்லியும் என்னை புரிஞ்சுக்க கூட நீ முயற்சி பண்ணலைன்னு ஒரு எரிச்சல். இப்பவும் நீ இப்படியே பண்ணிட்டிருக்க? என்ன செய்யனும்னு நினைக்கிற குறிஞ்சி? ரெண்டு பேரும் சேர்ந்து வாழத்தான் கல்யாணம் பண்ணிருக்கோம். இப்பவும் ஏட்டிக்கு போட்டு பண்ணிட்டு…”
“சரி சொல்லு, என்ன பேசனும்? இப்போ பேசு…” என விலகி படுத்தவன் அவளை பார்க்க குறிஞ்சிக்கு என்ன பேச நினைத்தோம் என்பதே மறந்து போனது.
கொஞ்சம் அதிகப்படியாகத்தான் நடந்துகொண்டோமோ என தோன்ற சுபா சொல்லியவையும் மனதில் வலம் வர அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“பேசலையா?…” என்ற அமர்நாத்திடம்,
“எனக்கு தெரியலை. அக்சப்ட் பண்ணிக்கவும் தோணுது. ஆனாலும் என்னவோ முரண்டுது. எனக்கு தெரியலை. நீங்க வர வரைக்கும் சண்டை போட கூடாதுன்னு நினைச்சுட்டுதான் இருந்தேன். ஆனா உங்கள பார்த்ததும் எனக்கு…”
“சண்டை போடனும்னு நினைச்சியா?…” என கேட்க பாவமாய் தலையசைத்தாள்.
“சரி தூங்கு…” என்று அவன் சொல்லவுமே சப்பென்று ஆனது குறிஞ்சிக்கு.
“என்ன?…” என கேட்க,
“உன்னை தூங்குன்னு சொன்னேன். நீ எதுக்கு பயந்துட்டு என்கிட்டே வரலையோ அது எதுவும் இல்லைன்னு சொன்னேன்….” என்று சொல்ல அவனுக்கு என்ன பதில் சொல்லவென்றே தெரியாமல் எழுந்தமர்ந்தாள்.
“ஹ்ம்ம், நான் கோவமா சொல்லலை. நிஜமா உன் கூட இருக்கனும்னு தோணுது. ஆனா வேற எதுவும் தோணலை. ரெண்டு பேருக்குமே சில கருத்து முரண்பாடுகள் இருக்குது தான். ஆனா அதையே நினைச்சுட்டு இருக்க வேண்டாமேன்னு நினைச்சேன்…” என்ற அமர்,
“நிறைய கல்யாணம் காதல்ல ஆரம்பிக்கலை. பிடித்தம்ன்ற பிடிமானத்துல தான் ஆரம்பிக்குது குறிஞ்சி. நம்மோடதும் கூட. உன் எதிர்பார்ப்பு புரியுது. ஆனாலும் இப்படித்தான் நான்…” என்றவன் பெருமூச்சுடன்,
“நேத்தே சொல்லிட்டேன் உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்னு. நம்ம வாழ்க்கையை நாம எப்படி கொண்டு போறோம்ன்றதுல தான் நம்ம வாழ்க்கையோட வெற்றி இருக்குது. அதுக்கு நான் மட்டும் ஸ்டெப் எடுத்தா போதாது…”
கண்ணை மூடிக்கொண்டே அவன் சொல்லிவிட்டு அமைதியாகிவிட அந்த பேச்சுக்களை எல்லாம் மெல்ல மனதிற்குள் வாங்கிக்கொண்டு இருந்தாள் அவள்.
அமரின் பேச்சும், அதை புரிந்து குறிஞ்சி அதை ஏற்பதும் அந்த நொடி சுலபமாக இருந்தாலும் வாழ்க்கையின் நடைமுறைகள் அவர்களை அவரவர் குண இயல்புகளை தாண்டி செயலாற்றவிடுமா?
அதன் பின் எந்த பேச்சும் அமரிடம் இருந்து வராமல் போக வெகுநேரம் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் தானும் படுத்துக்கொள்ள உறக்கம் தான் வந்தபாடில்லை.
அவளுக்கு தெரிந்தது என்னென்னவோ நினைத்து தானும் நிறைய சிக்கல்களை உருவாக்கி கொள்கிறோம் என்று. முதன் முறையாய் அமர்நாத்தை சற்று நல்லவிதமாய் பார்க்க முயன்றாள்.
அவனின் முகம் பார்த்து படுத்திருந்தவள் தயக்கத்தை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு அவனின் கன்னத்தை ஒற்றை விரலில் சுரண்ட,
“தூங்கலையா நீ?…” என்றான் திரும்பி பார்த்து.
“தூக்கம் வரலை…”
“அப்போ ஹால்ல போய் டிவி பாரு…” என்று சொல்ல,
“இதுக்கு நான் கீழேயே இருந்திருப்பேன்…” என்று வெடுக்கென்று அவளின் கோபம் எதனால் என உணர்ந்தவனின் முகம் சிரிப்பில் நின்றது.
“உன் வாயை மூடவே மாட்டியா நீ?…” என சொல்லி அவளை நெருங்கி அணைத்துக்கொண்டான்.
“ஒன்னும் வேண்டாம்..”
“நிஜமாவா?…” அமர்நாத்தின் முகம் புன்னகையில் மலர குறிஞ்சிக்கும் கோவம் குறைந்து சிரிப்பு தான். லேசாய் வெட்கமும் கூட.
“பார்ரா, உனக்கு வெட்கப்பட கூட தெரியுமா?…” என கேலி பேச,
“நான் ஒன்னும் வெட்கப்படலை…” என்றாள் வேண்டுமென்றே.
“ஆஹாங், எங்க பார்ப்போம்…” என்று முகம் நிமிர்த்த,
“வேண்டாம் வேண்டாம்…” என அவனின் கையை தட்டிவிட்டாள்.
“உனக்கு அப்ஜெக்ஷன் இல்லையே?…” என்று கேட்டவன் நெற்றியில் முத்தம் பதிக்க அவனின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“நிமிர்ந்து பாரேன் குறிஞ்சி. இவ்வளவு நேரம் சண்டைக்கு மட்டும் வரிஞ்சுகட்டிட்டு அத்தனை கேட்ட…”
“ஆமா, சண்டை போடுவேன். போட்டுட்டே இருப்பேன்…”
“ம்ஹூம், பார்ப்போம். என்னவோ பேசனும்னு சொன்னியே. என்னன்னு சொல்லு…” என அமர் கேட்க,
“நீங்க நேத்து பேசின மாதிரி இன்னைக்கும் பேச கூடாது…”
“நேத்து என்ன பேசினேன்?…” என்றான் குறும்புடன் அவளை தன்னிஷ்டத்திற்கு வளைத்தபடி.
“அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா நேத்து பேசின பேச்சு பேசவே கூடாது…” என மிரட்டியவளின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவனின் இதழ்கள் தன்னுடைய பேச்சுக்களை வர்ணனைகளுடன் ஆரம்பித்தது.
எதிர்பார்ப்புகளை கொண்டு எதிர்காலத்தை பிண்ணியிருந்தவள் அவள். எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி அமைவதை எதிர்காலமாய் மாற்றிக்கொள்ள நினைக்கும் அவன். இன்னும் முரண்பாடுகள் முற்றுபெறவில்லை. ஆனாலும் எதிர்கொள்ள தயாராய்.
பார்வைகள் புதிதாய் ஸ்பரிசங்கள் புதிதாய்
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன