குளிர் – 11
காலை எப்பொழுதும் போல முதலில் எழுந்துகொண்டவன் தண்ணீர் குடிக்க வெளியே வர சோபாவின் ஓரத்தில் இருந்த கேரியரை பார்த்தான்.
எடுத்ததுமே உள்ளே உணவும் இருப்பதை பார்த்து கிட்சனுக்கு சென்று திறந்து பார்க்க அதில் முதல்நாள் இரவு உணவு இருந்தது கெட்டுப்போய்.
“குறிஞ்சி நேத்து டின்னர் சாப்பிடலையோ?…” என யோசனையுடன் அதனை வைத்துவிட்டு அறைக்கு வந்து அவளை எழுப்பினான்.
“தூங்கனும், விடுங்க…” என்று அவனின் கையை தட்டிவிட,
“நீ நைட் சாப்பிடலையா குறிஞ்சி?…” என்றவனின் பேச்சில் லேசாய் கண்ணை கசக்கிக்கொண்டு அவனை பார்த்தவள்,
“இல்லை சரியா சாப்பிடலை. அதான் சுபாக்காவை கொண்டு வர சொன்னேன். நீங்க வந்தீங்க. சண்டை. அதான் சாப்பிட மறந்துட்டேன்…” என்று சொல்ல,
“அப்பவே சொல்லிருக்கலாம் தானே? சேர்ந்து சாப்பிட்டிருப்போம். இப்போ வேஸ்ட் ஆகிருச்சு…” என்றதுமே நன்றாக விழித்துவிட்டாள். எங்கே வீட்டில் சொல்லிவிடுவானோ என்று,
“அம்மாட்ட சொல்லிறாதீங்க. ரொம்ப திட்டுவாங்க. கிளீன் பண்ணிடறேன்…” என்றதுமே ‘ஆஹா’ என்று பார்த்தவன்,
“ஓஹ், அப்போ சொல்ல கூடாதுன்னா எனக்கு என்ன தருவ?…” என்றான் கறாராய் முகத்தை வைத்துக்கொண்டு.
“தர என்ன இருக்கு? ஒண்ணுமில்லை. குளிக்க போறேன்…” என்று அவள் எழுந்துகொள்ள,
“ஓஹ் அப்போ சரி இதை கீழே கொண்டு போய் உங்கம்மாட்ட குடுத்துடறேன். நீ பேசிக்கோ…” என்று அவனும் வெளியேற போக பதறிப்போனவள் எழுந்து ஓடிவந்து பின்னிருந்து பிடித்துக்கொண்டாள்.
“போகாதீங்க. போனா அவ்வளோ தான். இன்னைக்கு முழுக்க என்னை வச்சு செய்வாங்க. நேத்தே போதுமன்ற அளவுக்கு வாங்கிட்டேன்…” என்று கெஞ்ச அவளின் கையை அப்படியே இழுத்து முன்னால் தன் இடுப்போடு சேர்த்துக்கொண்டவன்,
“நீ உங்கப்பாவுக்கு பயப்படுவன்னு தெரியும். ஆனா உங்கம்மாவுக்கும் பயப்படுவன்னு இன்னைக்குதான் தெரியும்…” என்று சொல்ல,
“பயப்படாம யாரும் இருக்கமாட்டாங்க. நீங்க போகாதீங்க. ப்ளீஸ். என்ன செய்யனும். சொல்லுங்க…” என்றாள் அலுப்புடன்.
“என் முன்னாடி வா…” என்று அவன் அழைத்ததும் முன்னே வந்து நின்றாள்.
“ரொம்ப எல்லாம் இல்லை. சின்னதா ஒரு ஹக். ரெண்டு கிஸ். நீ போய்ட்டே இருக்கலாம்…” என சொல்ல அவனை முறைத்துவிட்டு,
“அதெல்லாம் முடியாது….” என்றாள் முகம் திருப்பி.
“உன்னை நான் ஒன்னும் கட்டாயப்படுத்தலையே. தாராளமா போய்க்கோ…” என அவனை தாண்டிக்கொண்டு செல்ல,
“ஹைய்யோ நில்லுங்க…” என்று அவனை பிடித்து நிறுத்தியவள் நிறுத்திய வேகத்தில் அவன் கேட்டதை தந்துவிட்டு பாத்ரூமினுள் ஒளிந்துகொள்ள,
“பொண்டாடிட்ட இதை வாங்கறதுக்கு கூட மிரட்டவேண்டியதா இருக்குது…” என தன் கன்னத்தை வருடிக்கொண்டே வெளியே செல்ல குறிஞ்சியும் குளித்துவிட்டு வந்தாள்.
அப்போது தான் அங்கே கீழே கிடந்த கவரை எடுத்து பார்த்தாள். முதல் நாளே பார்க்க இருந்து பார்க்கமுடியாமல் போய்விட இப்போது அதை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
முதலில் மேரெஜ் சர்டிபிகேட்டை எடுத்து பார்த்தவளுக்கு அத்தனை ஆச்சர்யம். அச்சு அசல் ஒரிஜினல் போலவே இருக்க வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அடுத்ததாக உள்ளிருந்து புகைப்படங்களை எடுத்து பார்த்தவள் அது எங்கே எடுத்தது என்று கூட சரியாக ஞாபகம் இல்லை. மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தவளை தேடி அமர் வந்துவிட,
“இதெல்லாம் எப்படி?…” என்றாள் அவனிடத்தில் போட்டோக்களை காண்பித்து.
“ஹ்ம்ம், பாலோ பண்ணிருக்கானுங்க. இல்லைன்னா அவனுங்க பார்க்கும் போது நாம சேர்ந்து இருந்திருக்கோம்…” என அவளருகே அமர்ந்தான்.
“இது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எடுத்தது. உங்கப்பாவை நீ கூப்பிட வரும் போது. இது மெடிக்கல்ஷாப் போய்ட்டு வந்தப்போ அன்னைக்கு எடுத்தது. இது நீ கேக் வாங்க வந்தப்போ எடுத்தது. இது அந்த நிரஞ்சனா வீட்டாளுங்க கடைக்கு வரன்னைக்கு எடுத்தது…”
இன்னும் சில அவர்களின் வீட்டின் முன்னால் இருக்கும் படி எடுத்திருந்தது. அத்தனையும் அத்தனை நேர்த்தியாக அவர்கள் இருவரும் மட்டும் இருக்கும் விதமாய் படமாக்கப்பட்டிருந்தது.
“இதனால அவங்களுக்கு என்ன யூஸ்? அதுவும் இந்த சர்ட்டிபிகேட்?…” என அவனிடம் காண்பித்தவள்,
“இந்த மாதிரி போட்டோஸ் வச்சு இந்தளவுக்கு பண்ணினவங்க என்ன வேணா செய்வாங்க இல்ல?…” என சொல்லும் பொழுதே அவளின் உடல் நடுங்கியது.
இதை அவனும் யோசித்தானே? திருமணம் ஆகிவிட்டதென போட்டோ, சர்ட்டிபிகேட் அனுப்பியவர்கள் இதை விட அசிங்கமாய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இதை இப்படியே அவன் விட தயாராய் இல்லை. அதற்காகவே ரகுவை விட்டு வேலையை துவங்கி இருந்தான்.
முன்னபின்ன இப்படி எல்லாம் அனுபவப்பட்டிராதவனுக்கு தடுமாற்றமாய் இருந்தது. அதிலும் தான் தலையிட்டிருப்பதை தெரிந்தால் இன்னுமே கேசவன் கோவத்தில் வேறு ஏதாவது என்ன செய்வானோ என்று இருந்தது.
வெறும் வீட்டு பிரச்சனையை வைத்து குறிஞ்சி வரை அவன் இழுத்திருக்க, இனியும் தன் வீட்டு பெண்ணின் பெயரோ, தங்களுக்கு எந்தவித இடைஞ்சலோ வாராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அமர்நாத்.
“என்ன ஒன்னும் சொல்லலை?…” என குறிஞ்சி கேட்க,
“நேத்து அந்த விஷயமா தான் கடைக்கு போனேன்….” என்றவன் முகம் தீவிரமாய் இருந்தது.
“எதுவும் பெரிய பிரச்சனையா? நீங்க ஏன் இவ்வளவு சீரியஸா பேசறீங்க?…” என்றாள் அவனின் கையோடு கை கோர்த்தபடி.
“என்ன குறிஞ்சி, பயமா இருக்கா?…” என்று அவளின் கையோடு அழுத்தி பிடித்தவன்,
“கொஞ்சம் சீரியஸ்ன்னு தான் நினைக்கிறேன். பார்த்துக்கலாம். விடு. ஆமா உனக்கு என் முகமாற்றம் எல்லாம் தெரியுதா என்ன?…” என பேச்சை மாற்றிய அவன் சிரிப்புடன் கேட்க,
“உங்க முகத்துல அதிகமா நான் பார்த்தது கோவம், இல்லைன்னா எரிச்சல். அதுவும் இல்லைன்னா இருவத்தி நாலு மணி நேரமும் இந்த வீட்டை தோள்ல தூக்கியே வச்சிருக்கறது மாதிரி சீரியஸா இருக்கறது. அதான் கண்டுபிடிச்சேன்…”
“அவ்வளோ தானா? வேற எந்த எக்ஸ்ப்ரெஷனும் என் முகத்துல தெரியலையா என்ன?…” என்று அவளின் நெற்றியோடு முட்ட,
“ஹ்ம்ம், ஹ்ம்ம்…” என்று முணங்கியவள்,
“இப்ப இதுக்கு என்ன பண்ண? போட்டோஸ் எல்லாம் வச்சு வேற ஒன்னும் பண்ணிடமாட்டாங்க தானே?…” என கேட்க,
“அதெல்லாம் பார்த்துக்கலாம். ஓகே, வேலையை பார்ப்போம்…” என்றவன் அவளின் கையில் இருந்த போட்டோ, சான்றிதழ் இரண்டையும் அதே கவரில் போட்டு பத்திரப்படுத்தினான்.
“என்ன பண்ண போறீங்க?…” என குறிஞ்சியும் நிற்க,
“ஹ்ம்ம், இதை என்ன பன்றதுன்னு அப்பறம் பார்ப்போம். இப்போ வீட்டு வேலை பார்க்க போறோம்…” என்றவன்,
“வா எழுந்ததும் என்ன பண்ணனும்னு சொல்லிடறேன்…” என ஆரம்பிக்க குறிஞ்சி பார்த்த பார்வையில் அனல் தெறித்தது.
“நான் என்ன வொர்க்கிங் ஸ்டாஃபா?…” என கேட்க,
“இது நம்ம வீடு குறிஞ்சி. உங்கம்மா இப்படித்தான் சொல்றாங்களா என்ன?…” என கேட்க அவள் அமைதியாக நின்றாள்.
“வா சேர்ந்து தான பார்க்க போறோம்…” என்றவன் முதலில் பெட் கவரை மாற்றினான்.
“பெட் கவர் டெய்லி மாத்திடனும். இதை மிஷின்ல போடு. நான் வேற விரிக்கறேன்…” என்று சொல்லி அவளை ஒவ்வொன்றாய் செய்ய வைத்தான்.
“வீடு சின்னதா இருந்தா கிளீன் பண்ண எவ்வளவு ஈஸியா இருக்கும்?…” என்று கேட்டுக்கொண்டே வாய் ஓயாமல் புலம்பியபடி அவள் செய்ய அமரின் முகத்தில் ஒரு கண்டிப்பும், சிறு புன்னகையுமே.
“உன்னால முடியும் குறிஞ்சி. டூ இட்…” என்று சொல்லி சொல்லியே அவளுக்கு ஒவ்வொன்றாய் பழக்கினான்.
ஆளுக்கொரு பகுதியை பிரித்து சுத்தம் செய்ய மூக்கால் அழுதுகொண்டே செய்தவள்,
“இதான் டெய்லியா?…” என கேட்க ‘ஆமாம்’ என தலையசைத்தவன்,
“இதெல்லாம் முடிச்சுட்டு தான் கடைக்கு போவேன். நீ எழுந்ததுல இருந்து என்ன பண்ணுவ?…” என்றான் பேச்சினூடே அவளுக்கும் களைப்பு தெரியாமல் இருக்குமே என்று பேசிக்கொண்டே செய்தான்.
“எழுந்ததும் ப்ரெஷ் பண்ணிட்டு வந்து அம்மா குடுக்கற காபி குடிப்பேன். அங்க கிட்சன்ல எதாச்சும் ஹெல்ப் பண்ணுவேன். அப்பறம் குளிச்சுட்டு இன்ஸ்ட்யூட் கிளம்பிருவேன். வந்து சாப்பிட்டு டிவி பார்த்துட்டு தூங்கிருவேன்….”
“வாவ் வெரிகுட்…” என அவனும் சில்லாகிக்க,
“நக்கல் பன்றீங்க…” என்றாள்.
“சமைப்பியா? டீ எல்லாம் நல்லா போடுவ போல?…” என்றான்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?…”
“தெரிஞ்சுக்கனும்னா தானாவே தெரிஞ்சிரும். நீ சொல்லு…” என்றான்.
அவனின் முகத்தில் என்னவோ ஒளிந்திருப்பதை போல ஒரு பிரம்மை எழுந்ததும் அவனை ஊன்றி பார்த்தாள். ஆனாலும் வழக்கம் போல ஒன்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
“ஹ்ம்ம், ஏதோ ஒன்னு ரெண்டு சமைப்பேன். ஆனா வேணுன்னே தான் சமைக்கமாட்டேன். எங்கம்மாவை இப்படித்தான் எங்கப்பா ஆக்கிட்டாங்க. நானும் அப்படி ஆக கூடாதுன்னு வேணும்னே சமைக்க கத்துக்கலை…” என சொல்லவும் அவனின் முகமே மாறிவிட்டது.
அவனுக்கு தெரியுமே அவளின் கனவுகள் எல்லாம். கொஞ்சம் வலித்தது தான். அமர் அமைதியாகிவிட நன்றாக பேசிக்கொண்டு இருந்தவனின் திடீர் மௌனம் கண்டு அவனை பார்த்தவள்,
“சமைக்கவும் கத்துக்கனுமா நான்?…” என்றாள் குறிஞ்சி.
“உங்கக்காவுக்கு எல்லாம் தெரியுது. நீ எப்படி எஸ் ஆனன்னு யோசிக்கறேன்…” என்றான் அவளிடத்தில்.
“அம்மா அக்காவுக்கு கல்யாணம் செய்யனும்னதும் ரொம்ப ஸ்பெஷல் கேர் எடுத்து எல்லாம் கத்து குடுத்தாங்க. நான் முன்ன இருந்தே தப்பிச்சுடுவேன். சுபாக்கா படிச்சு முடிச்சு வீட்டுல தான் இருந்தா. மாட்டிக்கிட்டா. நான் காலேஜ் முடியவும் வேலை. இப்ப அன்-எக்ஸ்பெக்டடா மேரெஜ். இதுல எங்க கத்துக்க?…”
கதை போல குறிஞ்சி சொல்ல அவளின் வாழ்வியலை அனுபவித்து வாழ்ந்ததன் மகிழ்ச்சி அந்த பேச்சில் தெரிந்தது.
“அவ்வளோ தானே? முடிஞ்சதா? முதல்லையே சொல்லிருந்தா குளிக்காம கிளீன் பண்ணிருந்திருப்பேன்….” என சொல்ல,
“துடைக்கனுமே?…” என்றான் வேக்வம் கிளீனரை எடுத்து வந்து.
“நல்ல வேலை மாப் போடனும்னு சொல்லலை…” என்றவள் அதனை பார்க்க அதற்குள் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்துவிட்டது. நம்பரை பார்த்தவன் யோசனையுடன்,
“குறிஞ்சி, இரு பேசிட்டு வரேன்….” என்று மொபைலை எடுத்துக்கொண்டு தனியே ஜிம் ரூமிற்கு வந்தான்.
ரகு அழைத்திருக்க த்ரெட்மில்லில் சாய்ந்து நின்றான் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க ரகுண்ணே…” என்று ஆரம்பிக்க,
“தம்பி நீங்க சொல்லுத மாதிரித்தான். விசயம் பெருசு. தல குடுத்தா மீள முடியாது. அந்தாளும் எதுக்கும் துணிஞ்சவன் போல. என்னன்னு பக்கத்து வீடுன்னு பழக்கமா இருந்தீங்களோ? சரியான ஒண்ணா நம்பர் ப்ராடுப்பய…” என்று தான் விசாரித்தவற்றை சொல்ல அமருக்கு அத்தனை அதிர்ச்சி.
“தெரிஞ்ச பயலுகள வச்சு காதும் காதும் வச்ச மாதிரி விசாரிச்சாச்சு. அந்த காலேஜ் பசங்க மேலையும் அம்புட்டு நல்ல பேச்சு இல்ல. இப்ப தோணுதது ஒத்த வார்த்தை தான். நம்ம குறிஞ்சி புள்ள எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சிருக்குது…” என்று சொல்ல அமர்நாத்திற்கு கோபம் பெருகியது.
வந்த ஆத்திரத்தில் ரகு இன்னும் சொல்லியவற்றை கேட்டவன் வாய்க்கு வந்த அத்தனை கெட்டவார்த்தைகளையும் உபயோகித்து திட்டியவன்,
“அண்ணே, ரொம்ப நன்றி. இதை பொறுமையா தான் டீல் பண்ணனும். கடைக்கு வரேன் யோசிப்போம்…” என்று சொல்லி முடித்தான்.
“அட கடவுளே? இப்ப நீங்க என்ன பேசினீங்க?…” என வந்து நின்றாள் குறிஞ்சி.
“நீ எப்போ வந்த?…” என்றான் அமர்நாத் தன் மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு.
“இப்போதான், கொஞ்சம் முன்னாடி. இதை எப்படி ஆப்பரேட் பண்ணன்னு தெரியலை. கேட்கலாம்ன்னு வந்தேன்…” என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க அவளின் முகபாவனையில் சிரித்துவிட்டவன்,
“அதான் கேட்டுட்டியே. திரும்ப கேட்கனுமா?…” என்றதும் அவனை முறைக்க,
“ஆமா பீப்ல திட்டினேன். இதுல என்ன இருக்குது?…” என்றான் வெகு இலகுவான குரலில்.
“என்ன வேர்ட் அது? கடவுளே!! இப்படிலாம் பேசுவீங்களா நீங்க?…” என்றாள் மீண்டும் அதிர்விலிருந்து வெளியே வராமல்.
“நீ என்னை மனுஷனா நினைக்கவே மாட்டியா? நான் என்ன பண்ணினாலும் இதெல்லாம் பேசுவீங்களா? செய்வீங்களான்னு ஷாக் ஆகிட்டே இருக்க? இந்த ஷாக்கை குறை…” என சொல்ல இன்னுமே அதே பார்வை தான குறிஞ்சியினிடத்தில்.
“குறிஞ்சி, இதெல்லாம் சாதாரணம். கோவம் வந்தா எக்ஸ்ட்ரீம்க்கும் பேசுவேன். இது ஒரு விஷயமா?…” என்றவன் அவளின் இரு கன்னத்தையும் தன் ஒரு கையால் பற்றி இழுத்து,
“நான்னு இல்லை, எல்லாருக்குமே கோவத்துல வரத்தான் செய்யும். இப்ப கோவமா இருந்தேன். அதான் பேசிட்டேன். ஆமா நீ என்ன நினைக்கிற என்னைப்பத்தி? எனக்கு எதுவுமே தெரியாதுன்னா?…” என கேட்க,
“ஆஹா, இனியும் அப்படி உங்களை சொல்லுவேனா? நீங்க என்னவும் பண்ணுங்க. ஆனா எனக்கு தான் ஷாக் மேல ஷாக். ஓனர்க்கு வாய் ஜாஸ்தி தான்…”
“அதை நீ சொல்ற…” என்று அவளை மீண்டும் தன்னருகே இழுக்க,
“வீட்டை நீங்களே சுத்தம் பண்ணுங்க…” என்று டிமிக்கி குடுக்க பார்த்தாள்.
“ஒழுங்கா வேலையை பாரு. ஒரு நாள் தான் சொல்லித்தருவேன்…” என்று அவளை தலையில் தட்டி அவளை கூட்டிக்கொண்டு ஹாலுக்கு சென்றான்.
“நீங்க இப்படிலாம் பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை…” என்று மீண்டும் ஆரம்பிக்க,