நான் சொல்ல வரும் வார்த்தைகள் யாவும்
வாய்த் திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறொருவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைத்தட்டல்கள் பெற்றுவிடுகின்றன…!
விழுந்ததும் குழந்தைக்காய் நீளும்
என் கரங்களை முந்தியபடி
வேறோர் கரம் தொட்டு தூக்கித்
தோலடனைத்துக் கொள்கிறது….!!
என்காதலை சொல்ல தக்க வரிகளைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில்
வீரியமாய் வந்து விழுகின்றன
விரோதியின் கவிதை….!!!
“டேய் மச்சான் ஊர்ல இருக்கும் போது மிலிட்டரி சரக்குமிலிட்டரி சரக்குனு அடிச்சுக்குவானுங்களே, அப்படி என்ன அதுல இருக்குனு நினைச்சிருக்கேன்… ஆனா இப்போதாண்டா தெரியுது…. மிலிட்டரி சரக்குனாலே ஒரிஜினல் சரக்குனு….” என்று தன்கையில் இருந்த க்ளாசை வாயில் சரித்துக் கொண்டான் தீபக்.
“நீ ஏண்டா பேச மாட்ட…. உனக்கு என்ன கஷ்டம், என்னை மாதிரியா, மேரேஜ் ஆனதும் பொண்டாட்டிக் கூட நாலு நாள் ஹனிமூன் கூட போக விடாமல் யார்மேலையோ இருக்குற கடுப்புல என்னை பழிவாங்கிட்டான்டா இந்தப் பாவி… ஏன் இதையெல்லாம் நீ கேட்கமாட்டியா…”– தீபக்.
“ஒரு புள்ள பூச்சிய அடிக்கிற பாவம் எனக்கெதுக்குனு யோசிச்சேன்.. ஆனா அவன் யோசிக்கல, சரிவிடுடா… விடுடா….. நம்ம பிரண்டதானே..”
“ம்ப்ச்….. என்ன சிபி…. மறுபடியும் மறுபடியும் அதேவா…. நீ அவளோட நல்லதுக்குத்தான் பண்ண… அது அவளுக்கு இப்போ நல்லா புரிஞ்சிருக்கும்….. நீ பஸ்ட் அப்படி யோசிக்கிறதை நிறுத்து…. ஆனாலும் நீயும் அவளை கேட்காம உன்னோட ஆசையை அவகிட்ட திணிச்சது தப்புத் தானே… நீயும் யோசிடா…. அவ பெங்களூர் வந்து படிச்சதே உனக்காகத்தான்…. அவளுக்கு பிடிக்கலைனாலும் உனக்காக உன்னோட ஆர்மி ஆசையை அவ ஏத்துக்கிட்டா தானே…… ஆனா நீ என்ன பண்ண…..”
பனி பொழியும்…