மற்றெரு மனமோ, ‘ஏண்டீ மூனு வருசம் அவனை நீ கண்டுக்கல,
இந்த ஒரு மாசம் உன்னைகண்டுக்காம விட்டதுக்கு இந்தப் பாடா’
என்று அவளையே வசைபாட,… ‘இது ஒன்னு
கண்டநேரத்துல வந்து என்ட்ரி கொடுத்துட்டு’ என
அது தலையைத் தட்டி உள்ளே அனுப்பி விட்டு
மீண்டும் சிபியையேப் பார்த்தாள். அவனும் அவளைத்தான்
பார்த்துக் கொண்டிருந்தான்.சிந்தனை மட்டும் வேறு எங்கோ….?
‘இப்படி லோ நெக் டீ- ஷர்ட், பெர்முடாஷ் போட்டு
அவனுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்துட்டுஇருக்கேன்,
இந்தப் பக்கி என்னைப் பார்க்காம எதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கோ…
ச்சே’என்று மீண்டும் அவனைத் திட்டியவள்,
இப்போ நேரடியாக முறைக்க, அதற்குள் தீப்க்கிடம்
இருந்து அவனுக்குப் போன்வந்த்திருந்தது…
போன் அலறலில் சுயத்திற்கு வந்தவன், ஷானவி தன்னை
முறைப்பதைபார்த்துக் குழம்பியவன், ‘மனசுக்குள்ள
கவுண்டர் கொடுக்குறதா நினைச்சு வெளியேஉளறிட்டமோ..?
என்று யோசித்துப் பார்த்தான்… இல்லையே வாயைத் திறக்கவேஇல்லையே….
இது வேறதுக்கோ…’ என்று சமாதானம் ஆனவன்
போனைப் பார்க்க அதுஅடித்து ஓய்ந்திருந்தது.
பிறகு இவனே அவனை அழைக்க.. ஒரே ரிங்கில் எடுத்தவன், “ஏண்டா போன் எடுக்கஇவ்வளவு நேரம், உன் மங்கியோட ஒரே ரொமான்ஸா… நான் போன் பண்ணி டிஸ்டர்ப்பண்ணிட்டேனா…? என்று நேரம் காலம் தெரியாமல் எரிச்சல் செய்ய…
“டேய்… என்று கெட்ட வார்தைகளில் கண்டபடித் திட்டிய சிபி, “
என்னைப் பார்த்தா உனக்குஎப்படித் தெரியுது…
என்ன…? நீ ஜாலியா இருக்கேனு நக்கல் பண்றியோ….?
இரு இருஇப்போ
போன் செஞ்சி வித்திக்கிட்ட உன்னைப் பத்தி
எல்லாத்தையும் போட்டுக் கொடுக்குறேன்.”எனத் தன் கடுப்பை அவனிடம் காட்ட,
“தெய்வமே…. தெய்வமே… நீங்க நல்லா இருங்க… ஏதோ உங்க புண்ணித்துல நான்பொழச்சுப் போனதா
இருக்கட்டும்… இப்படி அடிமடியிலேயே கை வைக்காதீங்க…”பயந்தபடியே தீபக் அலற,
இங்கு சிபியோ வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருதான்… “
டேய் உன் காமெடிக்கு அளவேஇல்லையா… ஹா… ஹா…
இந்த பயம் பயக்குற, அடி ரொம்ப பலமோ…? என்று சிரித்துவிட்டு,
“சரி அதை விடு என்னாச்சு..? எப்போ கிளம்புறீங்க…?
நாளைக்கு மார்னிங் இங்கஇருக்க மாதிரி வந்துடுங்க… என்ன…?” என்றதும்..