மௌனம் எனக்குப் பிடிக்கும்
அது என்னைக் காயப்படுத்தாதவரை…!
மௌனம் அழகுதான் ஆனால்
உன் மௌனமோ என்னை அளச்செய்யும்….!!
மௌனத்திற்கு மொழித் தேவையில்லை
உன் மௌனம் பேசாத பேச்சில்லை…….!!!
என்னை நோகடிக்க நீ கையில்
எடுக்கும் ஆயுதம் மௌனம்….!
உனக்கெதிராய் ஆயுதம் பிரயோகிக்க
எனக்கு ஆசையில்லை…!!
அமைதியை விரும்புகிறேன் அதற்காக
உன் மௌனத்தையே எனக்குப் பரிசாய் அளிக்காதே…!!!
மௌனம் எனக்குப் பிடிக்கும்
அதை நீ கையாளதவரை…!!!!
“ஆளுமா டோலுமா இசாலக்கிடி மாளுமா….” என்ற பாடலின் அலறள், விடியல் உன்னை அழைக்கிறது எனும் விதமாக ஐந்து மணிக்கு அவனை எழுப்ப, அந்த அலறலில் அடித்து பிடித்து எழுந்தவன், ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
பின் இது யாருடைய வேலை என்பதை உணர்ந்து, ‘நாதாரி வேணும்னே சாங்கை மாத்தி வச்சிட்டு போயிருக்கான், போற அவசரத்துல கூட இதை மறக்காம செஞ்சுட்டு போயிருக்கு பாரு கொரில்லா… அவனுக்கு இருக்கு இன்னைக்கு என்று, எப்போதும் அலாரத்திற்கு என்று ஒலிக்கும் ‘ஆத்தி எனை நீ பார்த்தவுடனே’ பாடல் ஒலிக்காமல் போன கடுப்பில் தீபக்கைத் திட்ட ஆரம்பித்தான் சிபி….
நண்பர்கள் யாருமில்லாமல் தனியே வொர்க் அவுட் செய்யவும் சோம்பேறித்தனமாய் இருக்க, அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தன் ரஜாயை இழுத்து மூடினான்….
யாருமில்லா தனிமை மனதிற்குள் ஒரு வெறுமையை உருவாக்க, பட்டென்று மூடிய போர்வையை உதறிவிட்டு எழுந்து அமர்ந்தவனின் முகம் இயலாமையில் கடுகடுத்தது…
ஆகாஷ் தன் பீல்டு விசிட் முடிந்ததும், அவனின் வருட விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட, அவனை அடுத்து தீபக்கிற்கு பீல்டு என்பதால் சிபி மட்டுமே தனியாக இருக்கும்படி ஆனது. இது ஒன்றும் அவனுக்கு புதிது கிடையாது, அடிக்கடி நடப்பது தான்.
ஆனால் இந்த முறை தனிமை மிகவும் பயங்கரமாய் மிரட்டியது. இன்னும் சில நாட்களில் அவனது உயிரானவள் தாயகம் திரும்பி விடுவாள். அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை, மாறாக அவள் என்ன செய்வாளோ என்ற பயத்தைத்தான் கொடுத்திருந்தது.
வித்யாவிடம் பேசியது வரை இப்போதைக்கு அவள் அமைதியாக இருப்பது போலவேத் தோன்றியது. அவள் அவனை விட்டு ஒதுங்குவதற்க்கான காரணம் புரியாமல் தவித்தவன், அது அவனுக்கு புரியும் பொழுது தன்னைத்தானே நொந்துக் கொண்டான்.
அது அவளிடம் ‘I LOVE SOMEBODY’ என்று கூறியதால் வந்த குழப்பம்…. அன்றே அந்த ஒருத்தி வேறு யாருமல்ல… நீதான்டி…. நீதான்….. நான் பைத்தியமானதுக்கு கரணம்’ என்று கூறியிருக்கலாம்.
அன்று அவன் வாயில் எந்த சனி அமர்ந்ததோ…. அவளை கிண்டல் பண்ண வேண்டும் என்று அவன் கொடுத்த விளையாட்டு பேச்சுக்கள், இன்று வினையாகி அவன் முன்னே விடையறியா வினாக்களாய் வந்து பயமுறுத்தின.
மனம் அதனால் வேதனை அடைந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை மாற்றியே ஆகவேண்டும், என்னதான் அவர்கள் வாழ்க்கையில் குழப்ப மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், அதை தெளிவான வெண்மேகமாய் மாற்ற அவனால் முடியும் என்ற நம்பிகையை அவனுக்கு அவனே உருவாக்கிக் கொண்டான்.
ஆனாலும் அவள் யாரிடமும் கேட்காமல் அங்கேயே வேலை செய்யும் முடிவை எடுத்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அவள்மீது கடலளவு காதல் இருந்தாலும், மலையளவு கோபமும் இருந்தது…. அந்த கோபத்தில் அவன் முகம் இறுகி கடினமாக, அதற்கு காரணமானவளை மனதுக்குள் வறுத்து எடுத்தான்.
“என்ன நினைச்சிட்டு இருக்கா அவ மனசுல …. என்னைப்பார்த்தா அவளுக்கு கேனையன் மாதிரி தெரியுது போல, அவ என்ன செஞ்சாலும் நான் அமைதியா போவேன்னு அவளா நினைசிக்கிட்டாளா…..”
“ஏதோ என் மேலையும் தப்பு இருக்கு, அவளை யோசிக்க விடாம அவ கழுத்துல கட்டாயமா தாலியைக் கட்டிட்டோம், அதை அவ ஏத்துக்குறதுக்கு டைம் கொடுக்கணும்னு நினைச்சு ஒதுங்கி இருந்தா….. இவ பாட்டுக்கு என்னென்னமோ செஞ்சிட்டு இருக்கா… இனி அவ இஷ்டத்துக்கு எல்லாம் விட முடியாது….. அவ்வளவு சீக்கிரம் இந்த சிபி தோத்து போயிடமாட்டான்…. அதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு அவளைக் கல்யாணம் பண்ணேன்… அவ விருப்பம் இல்லாம கூட…”
“நோ…. நெவர்…. அவளுக்கு பாவம் பார்த்தது எல்லாம் போதும்…. இனியும் அமைதியா இருந்தா….. அவபாட்டுக்கு அங்க உக்காந்துட்டு என் கைல சரக்கை கொடுத்து தேவதாஸ் ஆக்கிடுவா…. அது நடக்கக் கூடாது, எந்தப் பிரச்சினை வந்தாலும் அவள் என்கூட இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகணும், அவளுக்கு பிடிச்சிருந்தாலும் சரி, பிடிக்கலையென்றாலும் சரி…. அவளுக்கு நான் தான்… நான் மட்டும் தான்…’ என்று நினைத்தாலும் அவன் முகம் இளக மறுத்தது…..
அதனால்தான் அவன் மனைவிக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து அவளின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கணிக்க, அந்த முடிவை எடுத்திருந்தான். என்ன நடந்திருந்தாலும் இனியும் அவளை அவன் விடபோவதில்லை. அவளுடனான இந்த வாழ்கையில் அவன் தோற்கப்போவதுமில்லை, அவளைத் தோற்கவிடப் போவதுமில்லை.
இருவரும் காதல், குடும்பம் எனும் வெற்றிக்கனியை திகட்ட திகட்ட சுவைக்காமல், இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலும் விடப்போவதில்லை.
பார்த்துவிடலாம் அவளா..? இல்லை நானா..? என்று மனதில் தீர்மானமாய் முடிவெடுத்தான். இனி இந்த சிபியின் அதிரடி ஆட்டம் தொடங்கப்போகிறது.
இதில் யார் எதிர்த்து நின்றாலும், அது தன் ஆருயிர் அண்ணனாக இருந்தாலும் சரி, அவளுடனான வாழ்க்கையை நான் வாழத்தான் போகிறேன் என்று தன் மனதுக்குள் உறுதி பூண்டான்.
அஸ்வத்திற்கு அழைத்தவன் சில திட்டங்களை அவனிடம் கூறிவிட்டு போனை வைத்தான்.
மறுமுனையில் அவனது திட்டங்களைக் கேட்ட அஷ்வத்தோ ‘இவன் குருவையே மிஞ்சின சிஷ்யன் ஆகிடுவான் போலையே’ என்று நினைத்துக் கொண்டு, சிபி கூறியதை அட்சரம் பிசராமல் தன் மனைவியிடம் தெரிவிக்கவும் செய்தான். அதுதான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையே… இனி அது தலைப்பு செய்தி போல் உடனுக்குடனே அவன் குடும்பத்தினரின் காதுகளுக்கு சென்றடையும் .
அஸ்வத் நினைத்ததை விட வேகமாய் அந்த செய்தி பரவ, அடுத்த அரை மணி நேரத்தில் சரணிடம் இருந்து போன் வந்தது. முதலில் எடுக்கவா வேண்டாமா என யோசித்தவன், பின் ஒரு முடிவுடன் எடுத்து காதுக்கு கொடுத்தான்.
“.சரண்… சொல்லுப்பா…. இவ்ளோ சீக்கிரம் உன் காலை எதிர்பார்க்கல… ஹாஹா…. மதி தீயா வேலை செஞ்சிருக்கான்னு தெரியுது….”
“என்னய்யா கிண்டலா… அவனுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுத்துட்டீங்க அஸ்வத்… அதான் இப்படி பண்ணிட்டு இருக்கான். இளா அண்ணி நிலாகிட்ட சொன்னதெல்லாம் உண்மையா, அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. இப்போ எதுக்கு அந்த டீம்ல ஜாயின் பண்றானாம்..”
“எதுக்கு அவனுக்கு இந்த கோபம் அஸ்வத், நான் கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறான், என்ன விசயம், தெளிவா எங்கிட்ட சொல்லுங்க…” என படபடவென இடையில் பேச முயற்சித்த அஸ்வத்தைத் தடுத்து, சிபியின் செயலில் உண்டான கோபத்தில் கொட்டி தீர்த்தான் சரண்.
“ஹேய் சரண்….. பர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகுப்பா, நீ வேற ஏன்ப்பா….. எனக்கே இன்னும் சரியா தெரியல, அவன்கிட்ட பேசும்போது இப்போ ஒரு ஆபர் வருது, போகலாம்னு யோசிக்குறேன்… அப்படின்னு சொன்னான்…. நான் எதுவும் சொல்லல, எது செஞ்சாலும் யோசிச்சு செய் என்று மட்டும் சொன்னேன்….”
“நீயே யோசிச்சு பாரு அவன் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டான்… அவனையும் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு சரண்…. இந்த மூணு வருஷத்துல அவன் ரொம்ப அனுபவிச்சிட்டான்…. இதுக்கு மேல வேண்டாம்…”- அஸ்வத்
“அஸ்வத் நாங்க யாரும் அவனை ஒதுக்கல, அவனா ஒதுங்கிட்டான்… எனக்கு ரெண்டு பேரும் வேற வேற இல்ல…. அவங்க நிம்மதியா இருந்தா என்னைவிட யாரும் அதிகமா சந்தோசப்பட மாட்டாங்க…. இவங்க இப்படி இருக்குறதுதான், எனக்கு கஷ்டமா இருக்கு..” – சரண்
“இங்க பாரு சரண்… ஆர்மில இதெல்லாம் சகஜம் தான். வாலண்டியரா பேர் கொடுக்காம இருந்தா பிரச்சினை இல்லை… இவன் இன்னும் கொடுக்கல… சோ நோ ப்ராப்ளம்… பார்த்துக்கலாம்… ஆனா அங்க போயிட்டா அடுத்த டூ யேர் ஊரு, குடும்பம் இதைப்பத்தியெல்லாம் நினைக்க முடியாது….” – அஸ்வத்
“என்ன அஸ்வத் இது, இனி இவன் புதுசா ஒன்னை ஆரம்பிப்பான் போலயே, ஏற்கனவே ஒன்னு இன்னும் முடிவு தெரியாம இருக்கு, இதுல சாருக்கு வெட்டி ரோசமும், கோபமும் மட்டும் வந்திடும். அவ வர்ர நேரத்துல இவன் ஏன் இந்த வேலையை செய்றான்.”
“ரெண்டும் வந்தாதானே பேசி ஒரு முடிவு எடுக்க முடியும். அவளோ பேசவே மாட்டேங்குறா, இவன் பேச ஆரம்பிச்சாலே போனை வச்சுடுறான்… வீட்ல பெரியவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்கனு ரெண்டு பேருமே புரிஞ்சிக்கிறது இல்ல…”