பத்து நாள்கள் முடிந்திருக்க.. எனக்கு படிக்க விருப்பமில்லையென இரண்டு நாட்களாய் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் தாமரை.
படித்தே ஆகவேண்டும் என தன் முடிவிலிருந்து மாறவில்லை மதியழகன்.
அடுத்த காரணமாக “என் புக்ஸ் அங்க எங்க வீட்டுல இருக்கு, எப்படின்னாலும் நாளைக்கு போக முடியாது.” என்றாள்.
சிரித்தவன்.. “இரண்டு நாள் முன்ன மஞ்சு நம்மளை பார்க்க வந்தாயில்ல? அப்பவே உன்னோடதை எடுத்துட்டு வர சொல்லிட்டேன், எல்லாம் அந்த ரூம்ல இருக்கு..” என்றான்.
எது? எடுத்து வந்தாச்சா? கடவுளே அதை கூட கவனியாமல் இவனின் பின்னோடே சுற்றிக்கொண்டிருக்கிறோம், ஆனால் இவன் தன் படிப்பிலேயே குறியாய் இருக்க்கிறான் என நினைத்து.. “கல்யாணம் முடிஞ்சா எல்லாரும் ஹனிமூன் போவாங்க, நீங்க மட்டும்தான் காலேஜ் போக சொல்றிங்க.” என்றாள் முனகலாக.
“இடையில அதுக்கும்னு எதோ சொன்னியே.? அது என்ன?” என்றான் புரியாதவன்போல்.
சில நொடி யோசித்தவள்.. மதியழகனின் கள்ளச்சிரிப்பை கண்டு எதற்கு சிரிக்கிறான் என சட்டெனப் புரிய.. “உங்களை..” என அடிக்க வந்தாள் வேகமாக.
“அச்சோ அடிபட்ட கால்ல அடிச்சி பழிவாங்கிடாதடி.” என பயந்தவன்போல் பாவனை செய்ய, அவன் மேலிருந்த கோபம் வடிந்திட, அதை காட்டக்கூடாதென முகம் திருப்பினாள்.
தனக்கெதாவது ஆனாலும் படிப்பு உனக்கு கை கொடுக்கும் என்று சொன்னதற்காகவே படிக்கவேக் கூடாதென ஆர்பாட்டம் செய்கிறாள் எனப்புரிந்துதான் இருந்தது மதிக்கு.
ஆனாலும் உண்மையும் அதுதானே? எதிர்பாராத இடியாய் தன் பெற்றோரை பறிகொடுத்ததுபோல், வரும்காலங்களில் எதுவென்றாலும் நடக்கலாம், யார் முடிவு எப்போது என யாருக்கு தெரியும்?
அந்த நேரம் தன்னை நிதானிக்க வைத்தது படிப்புதானே? தன்னை போல தாமரைக்கும் எந்த சூழலையும் சமாளிக்கும் தைரியம் வேண்டும். அதற்கு படிப்பு மிக அவசியம்..
வாழ்க்கை தனக்கு கற்றுக்கொடுத்த பாடத்தின் வேதனையை மறக்க முடியாததன் விளைவாக, தாமரை படித்தே ஆகவேண்டும் என உறுதிகொண்டான்.
திரும்பி நின்றிருந்த தாமரையை தன்புறம் திருப்பியவன்.. “எனக்கு இன்னும் கால் சரியாகலடி. இந்த காலை வச்சிட்டு ஹனிமூன் போனா அதுக்கு பேர் ஹனிமூன் இல்ல. தண்டச்செலவு.” என்றான் சிரிப்போடு.
“என்னை ஹனிமூன் கூட்டிட்டு போறது தண்டச்செலவா?” என உதட்டைப் பிதுக்க, அவளுதட்டைப் பிடித்தவன்.. “நாம ஹனிமூன் போறது தண்டச்செலவில்ல, அங்கையும் உன்னை நெருங்காம இருக்கிறது, கால் வலியை விட பெரிய கொடுமையாயிருக்கும்.” என்றான் ஏக்கமாக.
படிப்பு விசயத்தில் இரண்டு நாளாய் சிடுசிடுப்பாய் இருந்த மதியழகன் பேச்சில் தற்போது காதலிருக்க.. “மாமா.. கரஸ்ல படிக்கிறேனே.” என மீண்டும் ஆரம்பப் புள்ளியில் வந்து நின்றாள் சலுகையாக.
“கொஞ்சம் இறங்கினா போதுமே.” என முறைக்க, “இன்செக்யூர்க்காக என்னை படிக்க சொல்றிங்க, அதுக்காகவே படிக்கமாட்டேன்.” என்றாள் பிடிவாதமாக.
ஓ.. இதுதான் உன் பிரச்சனையா? அப்போ வேற மாதிரிதான் சொல்லனும் என நினைத்து.. “இன்செக்யூர்க்காக மட்டுமில்ல, படிக்கிற புள்ளையை கல்யாணம் செய்துட்டு, டிகிரியை முடிக்க விடாம வாத்தியாரான நானே செய்தேன்னா அதுவே மத்தவங்களுக்கு தவறான முன்னுதாரணமாகிடும். எனக்கும் ரொம்ப உறுத்தலாயிருக்கும்.
அப்புறம் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட எந்த முகத்தை வச்சிக்கிட்டு படிப்பு முக்கியம்னு சொல்வேன்? இன்னும் இரண்டே செமஸ்டர்தானே.. முடிச்சிடேன்.” என்றான் கெஞ்சலாக.
மதி சொல்வது சரியெனப்பட்டாலும்.. “மத்தவங்க என்ன நினைப்பாங்கனுதான் உங்களுக்கு கவலை. என் சந்தோசம் முக்கியமில்லயா?” என்றாள் கடைசி முயற்சியாக.
“படிச்சா உன் சந்தோசம் குறைஞ்சிடமா?”
“ஆமாம் பிடிக்காததை செய்ய சொன்னா?” என மதியை நெருங்கிப் படுத்து அவளின் ப்ளே லிஸ்ட்டை ஆன் செய்து.. “பி. ஜி முடிச்சதுக்கப்புறம் கண்டிப்பா படிக்கமாட்டேன்.” என்றாள்.
தாமரை படிக்க சம்மதித்த்தில் நிம்மதியடைந்தவன்.. “ம்.. சரி, இப்போ மொபைல் பார்க்காம சீக்கிரம் தூங்கு. அப்போதான் காலைல பிரிஸ்க்கா இருக்கும்.” என்றான் சந்தோசமாக.
ஒரு வாரமாய் பழனியப்பனும் தாமரையும் சமையலறையை ஒரு வழிப்படுத்தியிருக்க, மூன்று நாட்களாக காலில் சற்று வலி குறைந்திருக்கவும் மதியழகன் சமைக்க ஆரம்பித்திருந்தான்.
காமாட்சி கொடுத்தனுப்ப கேட்டும் மறுத்துவிட்டான், தாமரை மறுத்தாலும், “எனக்கு இது பெரிய வேலையே இல்லை. சமைச்சா மைண்ட் ரிலாக்ஸாகும்.” என மறுத்துவிட்டான்.
எந்த வேலையும் செய்ய விடாமல் தன்னை தாங்கும் கணவன் பிடிவாதம் செய்வது படிப்பு விசயம் மட்டும்தான். ஆனால் கல்லூரிக்கு சென்றால் தோழிகள் ஒரு வழிப்படுத்திவிடுவார்கள். இதில் மதியும் வேறு அதே கல்லூரியில் வேலை பார்ப்பது தாமரையை இன்னும் சங்கடத்திற்குள்ளாக்கியது.
தன் சங்கடத்தை கணவனிடம் சொல்ல, அதெல்லாம் ஒரு விசயமேயில்லை, கல்லூரிக்குள் நுழைந்தால் நீ யாரோ நான் யாரோ போலதான் இருப்பேன், இரண்டொரு நாள் கஷ்டமா இருக்கும், அப்புறம் பழகிடும் என்று தேற்றி, அவளின் ஸ்கூட்டியையும் எடுத்து வர சொல்லியிருந்தான்.
கதிரேசனின் டிரைவர் ஸ்கூட்டியை எடுத்து வந்து கொடுக்க.. கல்யாணத்துக்கு முன்ன மாதிரியே நீ தனியா போ, நான் தனியா போய்க்கிறேன். அப்போ யாரும் தப்பா பார்க்கமாட்டாங்க. என்றுவிட்டான் மதியழகன்.
இனி கல்லூரிக்கு செல்வதை விட வேறு வழியேயில்லையென நேற்றிரவே தெரிந்திருக்க, வேறு வழியில்லாமல்.. “சரி தூங்கறேன்.” என கோபம்போல் சொல்லி கண்மூடினாள்.
அடுத்தநாள்.. தாமரை குளித்து வெளியே வர, சமையல் முடித்து அடுப்பை துடைத்துக்கொண்டிருந்தான் மதியழகன். “ப்ச் என்னையும் எழுப்பியிருக்கலாமில்ல மாமா.?” என்றாள்.
“எதுக்கு? கிச்சனை நாசம் பண்ணவா?” என்றபடி லன்ச் பேக் செய்ய ஆரம்பித்தான் இருவருக்கும்.
“இதென்ன இரண்டு லன்ச் பாக்ஸ்.? நீங்களும் இன்னைக்கே ஜாயின் பண்றிங்களா?” என்றாள் அதிர்வாக.
“எது.? காலேஜ்க்கு வேஷ்டி போட்டுட்டு வரப்போறிங்களா? நான் ஒத்துக்கமாட்டேன்.” என்றாள் முறைப்பாக.
“காயம் சரியாகும்வரை வேஷ்டிதான் கம்ஃபர்டபிளா இருக்கும். இதுல உனக்கென்ன பிரச்சனை?” என தானும் முறைத்தான்.
“கல்யாணமான பின்ன இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் நாள் போறிங்க, காயம் எப்படி வந்ததுனும் காலேஜ்ல யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனுட்டிங்க, இதுவரை வேஷ்டி போட்டுட்டு காலேஜ்க்கு வந்ததில்லை, புதுசு புதுசா இப்படி பண்ணினா என்னைத்தான் கிண்டல் பண்ணுவாங்க, எப்போ பேண்ட் போட முடியுமோ அப்போ வாங்க, இன்னைக்கு வேணாம்.” என்றாள்.
“சரி நான் வரல, நீ போ.” என்றான்.
“நிஜம்மா.?”
“ம்.. நீ போ, இரண்டு நாள் கழிச்சு நான் வரேன்.” என்றான்.
“ஹப்பா.. இதுக்காவது சம்மதிச்சிங்களே.” என்றபடி சாப்பிட ஆரம்பிக்க, கதிரேசன் அழைக்கவும், சாப்பிடும் வரை தந்தையோடும் அன்னையோடும் பேசியவள்.. “ம்மா எனக்கு டைம் ஆகுது, ஈவ்னிங் கால் பண்றேன்.” என இணைப்பை துண்டித்து, கல்லூரிக்கு தயாராகி கிளம்பினாள் தன் ஸ்கூட்டியில்.
** ** ** ** ** ** **
மாலை ஐந்து மணிக்கெல்லாம் தாமரை வந்திட, பழனியப்பன்.. “வாடா வாடா.. பத்து நாளா வீட்டுல கலகலன்னு இருந்துட்டு, இன்னைக்கு தனியா இருக்க ரொம்ப சிரம்மாகிடுச்சுடா. போய் முகம் கழுவி வா, நான் டீ போடறேன்.” என்றார் ஆசையாக.
“காயம் நல்லாகும் வரை காலேஜ்க்கு வரவேணாம்னு சொன்னேன் தாத்தா, என்கிட்ட சரினுட்டு, நான் போனப்புறம் கிளம்பி வந்துட்டார்.” என்றாள் கோபமாக.
“மதி பத்து நாள் வீட்டுல இருந்ததே உலக அதிசயம்டா, பிள்ளைகளுக்கு பாடமெடுக்காம அவனால இருக்கவே முடியாது. காயம் நல்லாகும் வரை போகவேணாம்னு நானும்தான் சொன்னேன், கேட்டாதான? அவன் அப்படித்தான். நீ போய் கைகால் கழுவிட்டு வா.” என்றார்.
“நான் வந்து டீ போடறேன் தாத்தா, நீங்க உக்காருங்க.” என தனதறைக்கு சென்று உடைமாற்றி வந்தவள், டீ வைத்து, குடித்து மதியின் வருகைக்காக காத்திருந்தாள்.
“உங்களை..” என முறைத்து, “வரமாட்டனுதான சொன்னிங்க? எதுக்கு வந்திங்க? அதுவும் வேஷ்டியோட.?”
“ஆல்ரெடி நிறைய லீவ் போட்டாச்சு தாமரை, அதுவுமில்லாம என்னைக்கானாலும் ஜாயின் பண்ணிதான ஆகனும்? அதோட நீ போய் நான் வரலன்னா இன்னும் அதிகமா கிண்டல் பண்ணுவாங்க. அதான் வந்துட்டேன். இன்னைக்கொரு நாள்தான் கஷ்டமா இருந்திருக்கும், இனி இதுவே பழகிடும்.” என்றான் தன்மையாக.
தாமரை அமைதியாக.. “டீ கிடைக்குமா?” என்று முகம் கழுவ போனவன் வர, டீ யை நீட்டினாள்.
வாங்கியவன்.. “ம்.. இப்படி பக்கத்துல உக்காரு.” என தனதருகே அமர்த்திக்கொள்ள, தாமரையின் முகம் பல பாவனையை காண்பிக்க.. “என்னாச்சு?” என்றான் கனிவாக.
“இல்லயில்ல.. அதெல்லாம் இல்ல.” என அவசரமாய் மறுக்க.. நிம்மதியானவன்.. “அப்புறமென்ன?” என்றான்.
“புது குடும்ப இஸ்திரி, இன்னைக்கு என்னென வீட்டு வேலை முடிச்சிட்டு காலேஜ்க்கு வந்தனு பவி கேக்கவும், எனக்கு டக்குனு பெய் சொல்ல வரல..
என்ன வேலை செய்தேனு சொல்ல தடுமாறினேனா.? அதுலயே நான் ஒரு வேலையும் செய்யலனு தெரிஞ்சிக்கிட்டா.
சரி அது போகட்டும், இன்னைக்கு என்ன லன்ச்னு கேட்டாங்க. அதுவும் தெரியல. அப்போ சார் சமையல்தானா? மகாராணி அம்மா வீட்டுல மாதிரியே நிம்மதியா தூங்கி எழுந்து ஜாலியா காலேஜ் வந்தியாக்கும்னு பவி ஒரே கிண்டல். எல்லாரும் என்னையே பார்த்தாங்க. ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சி.” என குரலிறங்கி சொன்னவள்.. “அதனால.” என்றாள்.
மதியழகன்.. “அதனால?” என்றான் ஆர்வமாக.
“அதனால.. இனி என்ன லன்ச் பேக் பண்றிங்கனு என்கிட்ட காலைலயே சொல்லிடுங்க.” என்றாள் சிரிப்போடு.
தானும் சிரித்தவன்.. “அடிப்பாவி.. எதோ சமைக்க கத்துக்கப்போறேன்னு சபதமிடுவன்னு பார்த்தா.. உன்ன..” என சேர்த்தணைத்து, “ம்.. என் பொண்டாட்டி உத்தரவுபடி என்ன சமைக்கிறேனு சொல்லிட்டா போச்சு.. இப்போதைக்கு நீ ஒழுங்கா படிச்சினா போதும், உனக்கு என்ன வேணுமோ நானே சமைச்சி தரேன்..” என்றான் மகிழ்வோடு.
ஒரு வாரம் கடந்திருக்க.. கல்லூரிக்கு சென்று வந்த மதியழகன் குளித்து வர, நான்கு முறை அழைப்பு வந்தது என மொபைலை நீட்டினாள் தாமரை.
வாங்கியவன்.. “ரகுவரனா?” என்ற யோசனையோடு அழைப்பை ஏற்றான்.
“அண்ணா அந்த ரஞ்சித் சூசைட் பண்ணிக்கிட்டானாம்.” என்றான் சந்தோசத்தோடு.
“ஓ..” என்றவன் முகம் இறுகவே.. “மாமா என்னாச்சு?” என்றாள் பதட்டமாக.
“அண்ணா.. உள்ள எல்லா பார்ட்சும் போய்டுச்சி. எவ்வளோ செலவு செய்தாலும் அதிக பட்சம் மூனு, இல்ல நாலு மாசம்தான் உங்க உயிரை இழுத்து வைக்க முடியுமாம். அதுக்குள்ள ஐம்மபது அறுபது லட்சத்தை புடுங்கிடுவானுங்க, எப்படியும் போற உயிர்தான்.. இங்கன்னா பணத்தை வாரி கொடுத்தும் அநாதையாதான் சாகனும்.
வீட்டுக்கு வந்தா உயிர் போகும்போது உங்க பக்கத்துல எல்லாரும் இருப்போம்னு பணத்துக்கு கணக்கு பார்த்துட்டு பொண்ணு சொன்னதை தாங்க முடியாம அன்னைக்கு நைட்டே சூசைட் பண்ணிக்கிட்டானாம்.” என்றான்.
“அதெல்லாம் நமக்கு தேவையில்லாதது ரகு, அவன் செத்துட்டான். அதோட விடு. நான் அப்புறம் பேசறேன்.” என இணைப்பை துண்டித்தான் மதியழகன்.
“என்னாச்சு மாமா? யாரையாவது கடத்திட்டாங்களா? கால் காயம் இப்போதான் ஆறுனுச்சி..” என்றாள் பதட்டத்தோடு.
“இல்லயில்ல.. அதெல்லாம் இல்ல, வா தாத்தாகிட்ட போலாம்.” என மனைவியோடு பழனிப்பனிடம் வந்தான்.
“இந்தா கவிதாப்பொண்ணு.. என்ன ஒரு வாரமா ஆளையேக் காணோம்? அந்த தெருவோடவே வியாபரம் ஆகிடுதா?” என்றார் பழனியப்பன்.
“இனி தினமும் என் பேத்திக்கு பூ வந்திடனும்னு உன் பேரன் கல்யாணத்தன்னைக்கே நீ சொன்னது மறக்கல தாத்தா.. வியாபாரம் செய்தா இங்குட்டு வராம போய்டுவேனோ? ஒரு வாரமா உடம்புக்கு முடியல தாத்தா.. அதான் வரல. இந்தா.” என பூவை கொடுத்துவிட்டு கவிதா செல்ல.. “தாத்தா அந்த பூவை எடுத்துட்டு உள்ள வா.” என்றான்.
பழனியப்பன் உள்ளே வர.. “அந்த பூவை அப்பாம்மா படத்துக்கு போடு.” என்றான்.
“மதி, இது தாமரைக்குனு வாங்கினேன்.. பைரவனுக்கு வேணும்னா சாமந்தி வாங்கி போட்டுக்கலாம்.” என மறுக்க.. “ஒரு சந்தோசமான விசயம்.. நீ போடு தாத்தா சொல்றேன்.” என்றான்.
பழனியப்பன் மகன் மருமகள் படத்திற்கு போட்டு விளக்கேற்றி வணங்க.. தானும் வணங்கியவன்.. “நம்ம அம்மாவை கொன்னவன் இன்னைக்கு செத்துட்டான் தாத்தா..” என எப்படி செத்தான் என்றதையும் விளக்கினான்.
“பண்ணின பாவம் உடம்பெல்லாம் சீக்காகியிருக்கு, பெத்த புள்ளையே செலவு பண்ண கணக்கு பார்த்திருக்கா, இதைவிட தண்டனை வேற என்ன இருந்திடப்போகுது? ஒரு குடும்பத்தை சிதைச்சவன் குடும்பம் எப்படி ஈடேறும்?” என மருகினாலும்.. மகன் செத்த துக்கம் மறையும் முன்னவே இப்படி கேட்டிருக்கானே? எந்தளவுக்கு மனவேதனை அடைஞ்சிருந்தா உயிரை மாய்ச்சிருக்கும் என மருமகளை நினைத்து கலங்கினார் பழனியப்பன்.
இதற்கே கண்கலங்குகிறார். ரஞ்ஜித் அடித்துத்தான் மகன் இறந்தான் என்றது தெரிந்தால் தாத்தா உயிர் அன்னைக்கே போயிருக்கும் என நினைத்தவனின் கண்களும் தந்தையை நினைத்து கலங்கிட.. “மாமா அழாதிங்க.” என்றவளின் குரலில் தெளிந்து சோபாவில் அமர்ந்தான்.
அன்னைக்கு என் அப்பா உயிரை காவுகொடுத்து உனக்கு கிடைச்ச பணம்.. இன்னைக்கு உன் உயிரை காப்பாத்த உதவுச்சாடா ஈனப்பிறவியே..
அன்னைக்கு என் அப்பாவை அடிச்சி உடம்பை ரணமாக்கின, அதுக்குத்தான் எழுந்துக்கவே முடியாதளவுக்கு சீக்குல படுத்து வலியை அனுபவிச்ச..
என் அம்மாவை வரவைக்க சொன்னதும் மனசளவுல என் அப்பா எப்படி துடிச்சிருப்பார்? மன வலின்னா என்னனு இப்போ தெரிஞ்சதாடா.? என்று மதியின் ஆழ்மனதினுள் கணன்று கொண்டிருந்த ஆத்திரம் சற்று மட்டுப்பட்டது.
ஆகினும் பணத்திற்கு ஆசைப்பட்டு எப்படியிருந்த குடும்பத்தை எப்படி சிதைச்சான்? எங்கப்பாம்மா நல்ல சோறு கூட சாப்பிடாம என்னை படிக்க வச்சாங்கடா.. அவங்களை பார்த்துக்க எனக்கு கொடுப்பினையில்லாம பண்ணிட்டியே என நினைக்க ஆற்றாமையில் முகம் சிவந்தது மதிக்கு.
“அழாதய்யா.” என பழனியப்பன் தேற்ற.. “ம்கூம்..” என தன்னை சரி செய்து.. ரஞ்சித் இறப்பை சொன்னால் தாத்தா சந்தோசமடைவார் என்று சொல்ல நினைத்து, இப்போ நாமளே அழுது தாத்தாவை கஷ்டப்படுத்துறோமே என சூழலை மாற்ற நினைத்தாலும் எண்ணம் அன்றைய நாளிலேயே சுழன்று கொண்டிருக்க..
“யாரையும் கொலை பண்ணக்கூடாதுனு அன்னைக்கு அப்பாம்மா மேல சத்தியம் செய்ய சொன்னப்போ கூட மனசேயில்லாமத்தான் செய்தேன் தாத்தா.