புன்னகையோடு மதி அவனறைக்குள் உடை மாற்ற செல்ல.. “தப்புதான்டிம்மா, படிக்கிற புள்ளையாச்சேனு உன்னையெல்லாம் சொகுசா வளர்த்தினேன் பாரு.. நான்தான் தப்பு.” என்றார் பொய் கோபத்தோடு.
“அப்பா வரலையா?” என்றாள் ஆவலாய்.
“வராம இருப்பாரா? உன் தாத்தாகிட்ட பேசிட்டிருக்கார்.” என்க.. தந்தையை காண சென்றாள் ஆவலோடு.
“அப்பா..” என கட்டிக்கொண்டு மௌனக்கண்ணீர் வடிக்க.. “ஹே.. தாமர.. எதுக்குடா அழற?” என மகளின் முதுகை தடவிக்கொடுக்க.. “பிடிச்சிருந்தும் அடுத்தவனிற்கு தன்னை விட்டுக்கொடுக்க இருந்தவனை என்னவென்று சொல்வதென.. “சும்மா சும்மா திட்டிட்டே இருக்காங்க.” என்றாள் முனகலாக.
“யாரு?” என கதிரேசன் பதற.. “ப்ச் ப்பா.. அவங்கயில்ல, அம்மா..” என்றாள் பிணக்கோடு.
“என்ன திட்டினா? எதுக்கு திட்டினா?”
அங்கு வந்த காமாட்சி.. “நான் திட்டினேன், அதுக்கு உன் மக என்ன சொன்னானு அதையும் கேளுங்க.” என முறைக்க..
தாமரை.. “உண்மையை சொன்னேன்.” என்றாள் அழுகை கலந்த சிரிப்போடு.
பிறகு எதற்கு திட்டினேன் என்றும், அதற்கு தாமரை சொன்ன பதிலையும் சொல்ல, “இப்போ வேலை செய்யலன்னா தாமரை சொன்னா? மெதுவா பழகிக்கிறேனுதான சொன்னா?” என மகளை பெருமையாய் அணைக்க, மதி தயாராகி வரவும்.. “சீக்கிரம் போய் தலை பின்னி, பூ வச்சிட்டு வா. பூ டைனிங் டேபிள் மேல இருக்கு.” என்றனுப்பினார் காமாட்சி.
“பார்டா.. தொடமாட்டியா என்னை?” என மெச்சியவாறு கிளம்பினான்.
** ** ** ** **
“அழகு மாமா..” என ஆவலோடு வந்தவள்.. தாமரையை கட்டிக்கொள்ள, “கூப்பிட்டது என்னை.. கட்டிக்கிட்டது அங்கயா?” என மதி முறைக்க.. “இதோ இப்போ உங்களை கட்டிக்கிறேன்.” என மதியை கட்டிக்கொண்டவள் சிறிது நேரத்திலேயே விடுவித்து..
“ஏன் தாமரை கண்ணெல்லாம் சிவந்திருக்கு?” என்க.. தாமரை தடுமாற.. “ஏய் வாய மூடுடி.” என காமாட்சி அதட்ட, பிறகு தாத்தாவிடம் நலம் விசாரித்து.. வழக்கம்போல் மதியிடம் வந்தமர்ந்தாள்.
“தாமரை.. ஜடையை பிரிச்சி முடியை காய வை.” என்க, தாமரை அப்பணியினை செய்ய தனதறைக்கு சென்றாள்.
“மாமா தாமரை ரொம்ப படுத்தினாளா?”
“ஹே.. இதென்ன பெரிய மனுஷியாட்டம் விசாரிப்பெல்லாம் பலம்மா இருக்கு?”
“ஆமாம் ஆமாம்.. டீ வைக்கிறேனு காலைல ஒன்னு வச்சா பாரு.. அதை குடிச்சி முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடிருக்கே.. ரொம்ப கொடுமையாதான் இருந்தது.” என்றான் பாவமாக.
“இல்லையே.. தாமரை டீ நல்லாதான வைப்பா? சொல்லப்போனா சமையல்ல அவளுக்கு டீ காபி மட்டும்தான் நல்லா செய்ய வரும்?ஒரு வேளை உங்க மேல இருக்கிற பயத்துல சொதப்பிட்டாளோ?” என்றாள் யோசனையாக.
“நீ ரொம்ப கவலைப்படாத, நல்லாத்தான் வச்சிருந்தா, நான் சும்மா சொன்னேன்.” என்க, பிறகுதான் மஞ்சரியின் முகம் இயல்பானது.
பலகாரத்தோடு இட்லி நாட்டுக்கோழி என காலை உணவு உண்டு கொண்டிருக்க, அவளின் அழகுமாமாவும், தாத்தாவும் தன் வீட்டில் விருந்துண்பது மஞ்சரிக்கு அதீத சந்தோசத்தைக் கொடுக்க, அனைவரிடமும் தொணதொணத்தவாறு உணவுண்டு பள்ளிக்கு கிளம்பினாள் மஞ்சரி.
“மதி அந்த ரூம்ல இருக்க உன்னோட சாட்ஸ், டீ சர்ட்லாம் தாமரை ரூம்ல வச்சிருக்கேன், போய் ரெஸ்ட் எடு.” என காமாட்சி சொல்ல, தாமரை அறைக்குள் போனான் மதி.
“ம்மா, காலைல சீக்கிரம் எழுந்தது டையர்டா இருக்கு, நான் தூங்க போலாம்னு பார்த்தா அவங்களை அனுப்பி வச்சிட்டிங்க.” என தாமரை முனுமுனுக்க..
“ஏன் அந்த கட்டில்ல இரண்டு பேர் தூங்க முடியாதா?” என முறைத்து.. “உன் வீட்டுல நீ எப்படி வேணா இருந்துக்கோ, இங்க நான் சொல்றமாதிரிதான் இருக்கனும். போய் மதிக்கு தேவையானதை பக்கத்துலயிருந்த கவனி.”
உண்மையில் தாமரைக்கு தூக்கம் வர, தனதறைக்கு வந்தாள்.
“ஏய் உன் ரூம்ன்னா கதவை தட்டாம உள்ள வருவியா?” என சிரிப்போடு கேட்டவாறு தொடை வரை ஏறியிருந்த சாட்சை இடுப்புக்கு ஏற்றினான்.
“நான்தான் தெரியாம வந்துட்டேன், நீங்க திரும்ப வேண்டியதுதான? அப்படியே போடுவிங்களா?” என முறைக்க..
இதற்கு என்ன பதில் சொல்வாள்? “எனக்கு தூங்கனும்.” என்று கட்டிலேறியவள் சுவற்றை ஒட்டியவாறு படுத்து கண்மூடினாள்.
கதவை தாழிட்டு அருகே படுத்து, அவளின் முடிக்குள் கை நுழைத்தவன், “முடி இன்னும் காயல போல, டிரையர் போட்டு விடறேன், எழுந்துக்கோ.” என்றான் மெல்லிய குரலில்.
“இப்படியே காய்ஞ்சிடும்.” என கேசத்தை பரப்பிவிட, அவளை தன்புறம் திருப்பியவன்.. “எக்கேடோ கெட்டுப்போனெல்லாம் விட்டுருக்கமாட்டேன்.” என்றான்.
சில நொடி கழித்தே, காலையில் பேசியதற்கு பதிலுரைக்கிறான் என்பது புரிய.. “என்ன செய்திருப்பிங்க?” என விட்ட சண்டையை தொடர்ந்தாள்.
“உன்னை கட்டிக்கிட்டவன் நல்லா பார்த்துக்கலைன்னா அவனுக்கு தகுந்த பாடம் கத்து கொடுத்திருப்பேன்.”
“அதுக்கு நான் உயிரோட இருக்கனுமே.” என்றாள் வெம்பியபடி.
“தாமரை..” என அணைத்தவன்.. “சரி.. எல்லா தப்பும் என்மேலதான். உன்னை பொண்ணு கேட்டுருக்கனும். கண்டவனையும் பார்க்க விட்டுருக்க கூடாது.” என்றான் மன்னிப்பு கோரும் குரலில்.
இவன் பேச்சில் சமாதாமடைய முடியாமல் போக.. “விடுங்க.” என வெம்பித் திரும்பினாள்.
“என் மனசெல்லாம் நீ மட்டுமே நிறைஞ்சிருந்த போதும், நீ பார்க்கலன்னா பேசலன்னா என்னாகிடும்? போடி சரிதானு திமிறாதான் இருந்தேன்..”
“நான் உங்க மனசுல இருந்தேனா?” என தாமரை நம்பாத பார்வை பார்க்க..
“உண்மையைதான் சொல்றேன்.. நீ பெரிய பொண்ணானப்போதான் உன்னை விரும்பறேனு எனக்கே தெரிய வந்தது. அதுக்கப்புறம் நீ என்னோட பேசுறதை நிறுத்திட்ட, அப்போயிருந்து இப்போ பதினைஞ்சு நாள் முன்ன வரைக்கும் என்னை உனக்கு சுத்தமா பிடிக்காதுன்ற மாதிரிதான் உன்னோட பிகேவியர் இருக்கும்.
நீ என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சதும் கல்யாணமே வேணாம்னு இருந்தேன், ஆனாலும் மாமா உனக்கு வேறயிடத்துல மாப்பிள்ளை பார்த்தப்போ, மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்தது.
அப்பவும் உன்னை கேட்க கூடிய சூழல்ல நான் இல்ல, கேட்டுருந்தாலும் நீ சம்மதிப்பியான்ற சந்தேகம் வேற.. என்னை என்ன பண்ண சொல்ற?” என்றான்.
“என்ன பொல்லாத சூழல்? எதிரி வீட்டு பொண்ணாயிருந்தாலும் காதலிச்சிட்டா எத்தனை பிரச்சனையை சந்திச்சி காதலியை கைப்பிடிக்கிறாங்க.?
நான் சம்மதிக்கிறனா இல்லையான்றதெல்லாம் அடுத்தது. முதல்ல எனக்கு தெரியப்படுத்தனும்ல? ஏன் செய்யல?
என் மனசு உங்களை நினைக்க ஆரம்பிச்ச அடுத்த நாளே என் விருப்பத்தை வெளிப்படுத்திட்டேன், நான் சொல்லும்போது கூட நாம ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லதான? நீங்க என்ன சொல்விங்களோனா யோசிச்சேன்?
ஆனா நீங்க அப்படியா? நான் பெரிய பொண்ணானப்போல இருந்து விரும்பியிருக்கிங்க.. இத்தனை வருசம் அதை மறைச்சது மட்டுமில்லாம, என்னை கல்யாணத்துக்கு அப்பா வற்புறுத்தும்போது கூட எப்படி உங்களால விலகியிருக்க முடிஞ்சது?
கல்யாணமும் நான் கேட்டு நடந்தது. காலைல நடந்ததும் நான் கேட்டதால..” என மதிக்கு முதுகாட்டி படுத்தாள் ஆற்றாமையோடு.
கல்யாணம் நீ கேட்டதாலதான்.. ஒத்துக்கிறேன்.. ஆனா காலைல நடந்தது நீ கேக்கலன்னாலும் நடந்திருக்கும். படிப்பு முடியட்டுமேனுதான் யோசிச்சேன் தவிர, வேற ஒரு காரணமும் இல்ல.
நேத்தெல்லாம் உன்கிட்டயிருந்து தள்ளியிருக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதுவும் நீ கட்டியிருந்த சாரி.. இப்போ போல இல்லன்னாலும், கொஞ்சம் விலகித்தான் இருந்தது. எப்படி மூச்சு முட்டினது தெரியுமா? நானும் மனுசன்தான்டி..” என்றான் இறுகிய அணைப்போடு.
பிறகுதான் தாமரை தன் சாரியைப் பார்க்க, அது மதி சொன்னதுபோல கொஞ்சமாய் விலகயிருக்கவில்லை, மாறாக மொத்தமாய் காணவில்லையென்பது உரைக்கவே, எப்படி அகற்றினான் என பெரிதாய் அதிர்ந்தவள்.. விரிந்திருந்த கேசத்தை அவசரமாய் முன்னே போட்டு முறைத்தாள் மதியழகனை.
“பார்டா..” என மெச்சியவன்.. “பின் போட்டுருந்த சாரியையே உனக்கு தெரியாம கழட்ட தெரிஞ்சவனுக்கு இதை விலக்க முடியாதா?” என அவளின் கேசத்தை விலக்குவது போல் பாவனை செய்தான் வசீகர சிரிப்போடு.
மதியின் கையை தடுத்தவாறு சாரி எங்கே எனத் தேட, அது மதியின் உடலுக்கு அடியில் இருக்க, “கொடுங்க.” என கவிழ்ந்து படுத்தாள் தாள முடியாத வெக்கத்தோடு.
“அப்போ என் கண்ணைப் பார்த்து கேளுங்க.” என்றான் குறும்போடு.
தலையணையால் உடலை மறைத்தவாறு எழுந்தவள், நைட்டியை எடுத்துக்கொண்டு பாத்ரூம்போய் மாற்றி வர, “இதை கழட்ட முடியாதா? அவ்வளோ பாதுகாப்பான டிரெஸ்ஸா இது?” என்றான் கண்ணிமைத்து.
பதிலளிக்க முடியாமல் தடுமாறியவள்.. “எனக்கு தூங்கனும்.” என்றாள்.
தாமரை படுக்க.. மெல்லிய அணைப்போடு இவனும் கண்மூடினான்.
** ** ** **
மதியம் மீன், இறால், மட்டன் சிக்கன் என அத்தனை பதார்த்தம் இருக்க, “எதுக்கத்தை இத்தனை செய்து கஷ்டப்படுறிங்க? எல்லாத்தையும் ஒரே நேரத்துல சாப்பிட முடியுமா? மாப்பிள்ளைனு நினைக்காம உங்கண்ணன் மகன்ற நினைப்போட ஃப்ரீயா இருங்க.” என போதித்தபடி உணவுண்டான்.
சற்று நேரம் பேசியிருந்த பின்னே, “ஈவ்னிங் மஞ்சு வந்ததும் நாங்க கிளம்பறோம் மாமா.” என்றான்.
“ஒரு வாரம் லீவ் போட்டுருக்கயில்ல மதி? இரண்டு நாள் இருங்களேன்.” என்றார் கதிரேசன்.
“தாத்தா இன்னைக்கே குலதெய்வ கோவிலுக்கு போக சொன்னார், கோவில் போய் வந்துட்டு பந்தல் கிடா வெட்டிக்கலாம்னு நான்தான் நாளைக்கு போய்க்கலாம்னுட்டேன். எல்லாரும் வந்திடுங்க.”
இப்படியெல்லாம் கூட்டத்தை கூட்டுபவன் அல்ல மதி என்பதால் கதிரேசன் முகம் ஆச்சர்யம் கொள்ள.. “அப்பாம்மா இறப்புக்கு அப்புறம் நான் பண்ற முதல் பூஜை, காலேஜ்லயும் இன்வைட் பண்ணியிருக்கேன்.” என்றான் இன்முகத்தோடு.
அஞ்சு கிடாவுக்கும், சிக்கன் ஐம்பது கிலோக்கும் சொல்லியிருக்கேன். என் வாழ்க்கையில இப்படிலாம் நடக்கும்னு நானே நினைச்சதில்ல, அப்பாம்மா இறப்புக்கப்புறம் நான் கடவுளை கும்பிடலன்னாலும், எங்கப்பா செய்த புண்ணியம் கடவுள் எனக்கு பக்கபலமா இருந்திருக்கார். அதனாலதான் என் பொக்கிஷம் என் கைக்கே கிடைச்சிருக்கு.” என தாமரையை பெருமையோடு பார்த்தவன்..
“அதை கொண்டாடத்தான் இந்த கறி விருந்து.” என்றான் நிறைந்த சந்தோசத்தோடு.
இப்படி வார்த்தை, பாசத்தை விட பெண்ணை பெற்றவனுக்கு வேறென்ன வேண்டும் என்ற பெருமையோடு.. “மதி..” என கட்டியணைத்தார் கதிரேசன்.