ஆறரை மணிக்கு தாமரையை எழுப்ப “ம்ம்..” என சிணுங்கியவாறு தூக்கத்தை தொடர்ந்தாள். “ஹே.. உன் டிரெஸ் எங்க?” என மதி கன்னம் தட்டி சிரிக்க.. பட்டென விழித்தவள் தன்னை ஆராய்ந்து முறைத்தாள் மதியழகனை.
“போங்க..” என நாணித் தலைகவிழ.. “எழுந்து குளி, அத்தை மாமால்லாம் வந்திடுவாங்க, கோவில்க்கு போகனும். போய்ட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக்குவியாம்.” என்றான்.
“அச்சோ ஆமாம்ல? சீக்கிரம் எழுந்து வீட்டை க்ளீன் பண்ண சொல்லி அம்மா நேத்தே சொல்லிவிட்டாங்க.” என வேகமாய் எழ.. “வீட்டை நான் துடைச்சிட்டேன், நீ எழவும் இந்த இதெல்லாம் மிஷின்ல போட்டா வேலை முடிஞ்சது. போய் குளி.” என்றான்.
“என்னை எழுப்பிருக்கலாமில்ல?”
“வீட்டு வேலை செய்யிறது எனக்கு பெரிய விசயமேயில்ல, ஒன்பது வருச பழக்கம். ஃபீல் பண்ணாம போய் குளி.” என்றான் இலகுவாக.
“ம்.” என எழுந்தவள் குளிக்கப்போக, அவளின் பின்னலைப் பிடித்து தன்னருகே இழுத்தவன்.. “நைட்ல அதனை மாமா போடுற. இப்போ மாமா சொல்லமாட்டுக்கிற?” என்றான்.
“அது.” என தாமரை தடுமாற.. “தாத்தா, அத்தை மாமா, இன்னைக்கு விருந்துக்கு வரவங்க முன்னாடிலாம் நீ உரிமையா மாமானு கூப்பிடனும்னு எனக்கு ஆசையா இருக்கு.”
தாமரை முகம் சிவக்க.. “இப்போதைக்கு உன் விருப்பம்போல கூப்பிடு.. இனி மாமான்னு கூப்பிட பழகிக்கோ, இப்போ போய் குளி.” என அனுப்பி வைத்து, காட்டன்களை மிஷினில் போட்டு, சமையலருக்கு அழைத்து பத்து மணிக்கெல்லாம் சமைக்க வந்திடுங்க, சரியா ஒரு மணிக்கு சாப்பாடு ரெடியா இருக்கனும்.” என நினைவுருத்தி.. பக்கத்து அறைக்கு குளிக்க போனான்.
குளித்து வந்தவன், நண்பர்கள் சிலருக்கு விருந்திற்கான அழைப்பை நியாபகப்படுத்தி, தாமரையின் தோழிகளுக்கும் நினைவூட்டினான்.
ஏழு மணிபோல் கதிரேசன் குடும்பத்தினர் வந்திட, “வாங்க மாமா.” என வரவேற்க, “அழகுமாமா.” என ஒட்டிக்கொண்ட மஞ்சரி.. “தாமரை எங்க மாமா?” என்க.. “உள்ள ரெடியாகிட்டிருக்கா.” என்றதும் அக்காளை காண சென்றாள்.
சற்று நேரத்தில் அனைவரும் கோவில் கிளம்பினர். பூஜை முடித்து கிடா வெட்டி அனைவரும் வீட்டிற்கு வர ஒன்பதரை மணியாகியிருந்தது.
சமைப்பவர்களும் வந்திருக்க, எங்கே சமைக்க வேண்டுமென அவர்களுக்கு இடம் காட்டிக்கொண்டிருந்தவனிடம்.. “அம்மா சாப்பிட கூப்பிடறாங்க.” என தாமரை அழைக்க, “எனக்கு பசியில்ல நீங்க சாப்பிடுங்க.” என்றான்.
“எனக்கு பசிக்குது, நீங்க வரலன்னா அம்மா எனக்கு இட்லி போடாது.” என்றாள் தாமரை.
“ப்ச்.. வா.” என அழைத்து போனவன், ஐந்தே நிமிடத்தில் நான்கு இட்லிகளை விழுங்கி எழ.. “அவங்கதான சமைக்கிறாங்க? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மதி, சமைக்கிற இடத்துல நான் பார்த்துக்கிறேன்.” என்றார் காமாட்சி.
“அவங்களை பார்த்துக்க ஆளே தேவையில்லத்தை, எனக்கு தெரிஞ்சவங்கதான். நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் மாடியில இருக்க டேபிள் சேரையெல்லாம் சாப்பிட உக்கார வசதியா அரேன்ஜ் பண்றேன்.” என மாடிக்கு போக, “அழகுமாமா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.” என இணைந்து கொண்டாள் மஞ்சரி.
“ஆமாம்.. அழகு மாமாவோட இருக்கத்தான் வந்தேன்.” என அளவம் காட்டி சந்தோசத்தோடு சென்றாள் மஞ்சரி.
முடியை காய வைக்கிறேன் என அறைக்குள் போன தாமரை மதியம் பனிரண்டு மணிக்கு காமாட்சி எழுப்பவும் எழுந்தாள்.
“சொந்தக்காரங்கள்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க, ரெடியாகு, வரவங்களை சிரிச்ச முகத்தோட வரவேற்கனும்.” என எடுத்துரைத்து வெளியேற.. “நைட் தூங்க விடாம செய்து இப்போ மானமே போச்சு. அப்பாகிட்ட கூட சரியா பேசல.” என மனதில் மதியை கடிந்தபடி தயாராக ஆரம்பித்தாள்.
கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், சொந்தங்கள் என விருந்திற்கு வர, அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றான் மதியழகன்.
பவித்ரா தலைமையில் தாமரையோடு படிக்கும் தோழிகள் வர.. ஆச்சர்யமாய் விழிவிரித்தாள் தாமரை. “விருந்துக்குத்தான் கூப்பிடமாட்ட, வீடு தேடி வந்தவங்களை வான்னு கூட சொல்லமாட்டியா?” என பவித்ரா கோபிக்க.. “சாரி பவி.” என வருந்தினாள்.
“சரி சரி.. ஃபீல் பண்ணாத, நீ கூப்பிடலனா என்ன? அதான் சார் கூப்பிட்டுட்டாரே.” என்றனர் பெருமையாக.
“உண்மையாவா?” என தாமரை சந்தோசிக்க.. “ஆமாம் தாமரை, சார் கூப்பிடவும் எனக்கே ஆச்சர்யம்.” என்றாள் பவித்ரா.
மதியை பெருமையோடு பார்க்க, அவன் ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். சற்று நேரம் தோழிகளோடு பேசியவள், அவர்களை சாப்பிட அனுப்பி வைத்து மஞ்சரியை அழைத்து மதியை அழைத்து வர சொன்னாள்.
“மாமா.. உங்கள தாமரை கூப்பிடறா.” என்றாள் மஞ்சரி.
தாமரையை பார்த்து.. “என்ன?” என புருவம் உயர்த்த.. “வந்து பேண்ட் போடுங்க.” என்றாள்.
சிரிப்போடு அவளிடம் வந்தவன்.. “பரிமாற இதுதான் கம்ஃபர்டபிளா இருக்கும்.” என்றான்.
“ஏற்கனவே ஜொள்ளு விடுவாளுங்க, இதுல கலர் காமிச்சிட்டிருக்கிங்களா?” என மதியின் காலை சுட்டிக்காட்டினாள்.
“ஹே.. அதெல்லாம் அப்போ, இப்போ நமக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல? யாரும் தப்பா பார்க்க மாட்டாங்க.” என மதியழகன் வாதிட..
“இப்போ மாத்துவிங்களா? மாட்டிங்களா?” என தாமரை முறைக்க.. “சரி..” என உள்ளே போனவன் சாட்ஸ் களைந்து லோயருக்கு மாறி வெளியே வந்து.. “இப்போ ஓ.கே வா?” என்க… “ம்.” என தலையசைக்க.. “சரி மேல வா, உன் ஃப்ரண்ட்ஸக்கு பரிமாறு, மத்தவங்களுக்கும் என்ன வேணும்னு கேட்டு கவனி..” என அழைத்துப்போனான்.
இலவசமாய் பாடம் கற்க வரும் ஏழை மாணவர்களின் பெற்றோரையும் அழைத்திருந்தான் விருந்திற்கு. அதில் மனம் நிறைந்தார் பழனியப்பன்.
பரிமாறிய தாமரையிடம்.. “அப்புறம் தாமரை.. மதி சாரை என்னனு கூப்பிடுவ?” என வம்பிளுக்க.. “அவர் உங்களுக்குத்தான் சார். எனக்கு மாமா மகன். மாமன் மகனை மாமானுதான கூப்பிடனும்.” என வெக்கம் வந்தபோதும் பதில் கொடுக்க.. “ஓஹோ..” என சிரித்தார்கள்.
பிறகு மதியிடம்.. “அத்தை பெண்ணுன்றதால கல்யாணமா? இல்ல லவ் மேரேஜா சார்?” என கேட்க..
“தாமரைக்கு என்னை பிடிக்குமான்ற யோசனையிலேயே பத்து வருசமா காதலை சொல்லாமலே இருந்தேன், என் மாமா அவளுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கவும், இந்த மாப்பிள்ளை பிடிக்கல என் மாமாவைத்தான் பிடிச்சிருக்குனு என் அத்தைகிட்ட சொல்லியிருக்கா, எங்கத்தை என்கிட்ட சொல்லவும் இதுதான் சமயம்னு உடனே கல்யாணம் செய்துகிட்டேன்.” என்றான் புன்னகையோடு.
இப்படியாக கல்லூரியில் போல் அல்லாமல், மாணவ மாணவிகளோடு இயல்பாய் உரையாடியதிலும், தானே முன்னிருந்து பரிமாறி உபசரித்ததிலும் பெரு மகிழ்ச்சி கொண்டனர் மாணவ மாணவியர்.
மூன்று மணிபோல் ரகுவரன் குடும்பத்தோடு வர, “வா ரகு.. இதுதான் சாப்பிட வர நேரமா?” என முறைத்தான் மதி. (ரகு.. ரஞ்சித்தை நோட்டமிட்டு மதிக்கு தகவலளிப்பவன்.)
“இவர் யாருங்க? நான் காலேஜ்ல பார்த்ததில்லையே.” என தாமரை கேட்க.. “நான் பெயிண்ட்டடிக்கும் வேலைக்கு போகும்போது என்கிட்ட வேலை கேட்டு வந்தான்.
நான் வேலை செய்த காண்ட்ராக்டர்கிட்ட சேர்த்து விட்டேன், இப்போ இவனே பெரிய காண்ட்ராக்டர் ஆகிட்டான்.” என அறிமுகப் படுத்தினான்.
தாமரை விலகிட.. “என்ன ரகு ஒரு மாதிரி இருக்க? எதாவது நல்ல தகவலா?” என ரகசியமாய் விசாரித்தான் மதியழகன்.
“நல்ல தகவல்தாண்ணா, போன வாரமே எனக்கு தெரியும், உங்க கல்யாண மூடை ஸ்பாயில் பண்ண வேணாமேனு சொல்லல. இங்க வச்சு பேச வேணாம், வீட்டுக்கு போய்ட்டு கால் பண்றேண்ணா.” என்றான்.
“சரி… ஆனா மறந்திடாம கால் பண்ணு.” என்று, பரிமாறினான். ஐந்து மணிபோல் விருந்தினர் அனைவரும் கிளம்பியிருக்க, ஹாலிலுள்ள சோபாவில் சாய்ந்தான் யோசனையோடு.
“ஏன் மாமா டல்லாயிருக்கிங்க? வேலை செய்தது டையர்டா இருக்கா?” என மஞ்சு மதியின் கையை பிடித்து விட, “ம்.. கொஞ்சம் டையர்டா இருக்குடா, ஆனா நீ பிடிச்சி விடனும்னு இல்ல, கொஞ்ச நேரம் படுத்தா சரியாகிடும்.” என்றான்.
“அப்போ உள்ள போய் படு மதி.” என காமாட்சி சொல்ல, மதி தனதறைக்குள் போனான். கதிரேசன் மகளிடம் பேசிக்கொண்டிருக்க.. “மஞ்சு மதியை தொல்லை பண்ணாத.” என்று தன்னோடே நிறுத்திக்கொண்டார் காமாட்சி.
அபிஷேக்கின் கொலை வழக்கு கிளறப்பட்டால் அப்பொழுது உதவிக்கு தேவைப்படுவார்கள் என இன்ஸ்பெக்டர் மித்ரன், மற்றும் காண்ஸ்டபிள் பரமானந்தத்தையும் விருந்திற்கு அழைத்திருந்தான் மதியழகன்.
இருவரும் வராமல் போகவே மித்ரனுக்கு அழைத்தான். “ஒரு கேஸ் விசயமா வெளில வந்துருக்கேன், அதனால் வர முடியவில்லை.” என மித்ரன் சொல்ல, பரமானந்தத்துக்கு அழைத்தான்.
இரண்டு அழைப்பு முடிந்தும் ஏற்கப்படாமல் போகவே, என்ன நல்ல நியூசா இருக்கும்? செத்துருந்தாண்ணா ரகு நிச்சயம் போன் செய்திருப்பானே என்ற யோசனையிலிருக்க, மதிக்கு அழைப்பு வந்தது.
புது நம்பரா? என்ற யோசனையோடு அழைப்பை ஏற்க, பரமானந்தம்தான் அழைத்திருந்தார். “எதுக்கு தம்பி போன் செய்திங்க?” என்றார்.
“நியாபகம் இருக்கு தம்பி, ஆனா என்னால வர முடியாது. அந்த ரஞ்சித்துக்கு என்மேல சந்தேகம் வந்திடுச்சி, என்னை துருவி துருவி கேள்வி கேட்டுட்டிருந்தார், அவர்கூடதான் பேசிட்டிருந்தேன்.” என்றார்.
“சார் நீங்க எங்கயிருக்கிங்க? நான் வரேன்.” என்க, “வேணாம் தம்பி, தப்பு செய்யும்போது மாட்டாம, இப்போ திருந்தினப்புறம் என்னை மாட்ட வச்சிடாதிங்க, தேவையில்லாம எனக்கு போன் செய்யாதிங்க. அது உங்களுக்கும் நல்லதில்ல.” என இணைப்பை துண்டித்தார் பரமானந்தம்.
ரகு அழைக்கும் வரை காத்திருக்க முடியாமல் போக, ரகுவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றவன்.. “அண்ணா.. அந்த ரஞ்சித்தோட பேத்தியை எவனோ கடத்திட்டான், அவனால பாதிக்கப்பட்டவன் எவனாவதுதான் இந்த வேலையை செய்திருப்பான். அந்த பாப்பாக்கு ஒன்பது வயசுதான் ஆகுதாம்.