மஞ்சுவின் விசேசம் முடிந்து இருபது நாள் முடிந்திருந்தது. ‘ஆச்சி.. மஞ்சுவோட விசேசம் இருந்ததால தாமரையை பார்க்க வர வேணாம்னு சொல்லியிருந்தேன்.. இன்னைக்கு கால் பண்ணி வர வெள்ளிகிழமை தாமரையை பார்க்க வரவான்னு கேட்டாங்க.. நானும் வர சொல்லிட்டேன்..” என்றார்.
‘என்னங்க.. மதிகிட்ட கலந்துக்காம எதுக்கு வர சொன்னிங்க” என்றார் தவிப்பாக.
‘நீ ஆசைப்படுறது வேஸ்ட் ஆச்சி, கண்டிப்பா மதி தாமரையை கட்டிக்க மாட்டான்.. அவனுக்கு பிடிக்காம என் பொண்ணை கட்டிக் கொடுக்குறதுல எனக்கும் விருப்பமில்ல. நடக்காத ஒன்னை நினைச்சிட்டு நல்ல வரணை தள்ளிபோடறது முட்டாள்தனம்.”
காமாட்சி முகம் வேதனையை காட்ட, “வெள்ளிக்கிழமைதான் வரன்னுருக்காங்க, அழைக்கிற முறைக்கு நாளைக்கு வேணா வீட்டுக்கு போய் சொல்லிட்டு வரலாம்..”
கணவன் சொல்வதுபோல மதி தாமரையை திருமணம் செய்ய ஒப்புக்கொள்வது ஆகாத காரியம்தான், அவனை நம்பி வரும் நல்ல வரணை நிராகரிக்கும் துணிவும் வரவில்லை ஆதலால் அரைகுறை மனதோடு சம்மதித்தார் காமாட்சி.
கதிரேசன்.. “தாமரையை கூப்பிடு, அதுகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்.”
தாமரையை அழைத்து விபரம் சொல்ல, “மேல படிக்கிறேனேப்பா. இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?”
பையன் ரொம்ப நல்ல மாதிரி தாமரை, இந்த காலத்துல அப்பாம்மா பேச்சு கேட்டு கல்யாணம் செய்துக்கிற பசங்க ரொம்ப குறைவாகிட்டாங்க, நீயும் அக்காவும பார்த்து சொன்னா ஓ.கேப்பானு சொல்லியிருக்கானாம். அவங்கக்கா மேல ரொம்ப பாசமா இருப்பானாம். இப்படி பசங்கதான் கட்டினவளையும் மதிப்பாங்க.
“இல்லைங்க, சாயங்காலம் போலாம். இப்போ போனா அரிபரியா இரண்டு வார்த்தை பேசிட்டு காலேஜ்க்கு ஓடிடுவான். சாயங்காலம்னா ஆறஅமர பேசலாம்.” என்றார் காமாட்சி.
அன்று மாலை கதிரேசனும் காமாட்சியும் மதி வீட்டிற்கு வந்தனர். மதியழகன் அவனறையில் இருக்க, “வா காமாட்சி..” என கண்கலங்கினார் பழனியப்பன்.
“அப்பா ஏன் அழறிங்க? உடம்புக்கேதும் முடியலையா?” என காமாட்சி தவிக்க, அத்தையின் குரலில் வெளியே வந்தான் மதியழகன்.
தான் நேற்று அழுததை சொல்லிடுவார் என்றே அவசரமாக வெளியே வந்தான்.
“மனசே சரியில்லம்மா.” என ஆரம்பிக்க, “தாத்தா.. இப்போ மனசுக்கு என்ன? அப்பாவை பார்க்க வந்த பொண்ணுகிட்ட குறை சொல்ற அளவுக்கு என்ன குறை வச்சேன் உனக்கு?” என வேண்டுமென்றே கோபம் காட்டினான்.
நடந்ததை சொல்லக் கூடாதென்பதற்காகத்தான் இப்படி பேசுகிறான் எனப்புரிந்த பழனியப்பன்.. “என் மகன் இருக்கும்போது கூட இத்தன சொகுசாவும், பதிவிசாவும் சாப்பிட்டதில்லையேய்யா, உன்னை குறை சொல்ல என்ன இருக்கு?” என பெருமையோடு சொல்லி.. பேத்திகளை விசாரித்தார்.
“நல்லா இருக்காங்கப்பா.” என காமாட்சி சொல்ல.. கதிரேசன் உள்ள வாங்க மாமா, மதிகிட்டயும் உங்ககிட்டயும் முக்கியமான விசயம் பேசனும்.” என்றார்.
பழனியப்பன் உள்ளே வர, இவர்களும் வந்தமர்ந்தனர். மதியழகன் தண்ணீர் கொடுக்க.. “என்ன மதி ஒரு மாதிரி இருக்க? உடம்பேது சரியில்லையா?” என்றபடி தண்ணீர் வாங்கினார்.
“நேத்து நோட்ஸ் எடுத்ததுல தூங்க லேட்டாகிடுச்சி. அதான் கொஞ்சம் டல்லா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல டியூஷன் பசங்க வந்திடுவாங்க, என்ன விசயமாத்தை வந்திங்க?” என்றான் இயல்போடு.
கதிரேசன்.. “தாமரையை பொண்ணு கேக்குறாங்க மதி, உன்கிட்டயும் மாமாகிட்டயும் சொல்லலாம்னு வந்தோம்.” என்றார்.
“ஏம்மா.. படிக்கிற புள்ளைக்கு இப்போ எதுக்கு கல்யாணம்?” என அங்கலாய்த்தார் பழனியப்பன்.
“நல்ல குடும்பம், மாப்பிள்ளை கவர்மண்ட் வேலைல இருக்கான். எந்த கெட்ட பழக்கமுமில்ல, பையனோட அப்பா தொழில்முறையில எனக்கு தெரிஞ்சவன், ஜாதகமும் பொருந்தி வந்திருக்கு.. அதான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தேன்.” என்றார் கதிரேசன்.
காமாட்சி மதியையே பார்த்திருக்க, முகத்தில் ஏதும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் மதியழகன். பேரன் மனதில் என்ன இருக்கிறது என்றறியாமல் மகளிடம் பெண் கேட்க தயக்கம் உண்டாக, தாமரையின் திருமணப்பேச்சிற்கு என்ன சொல்வதென புரியாமல் பழனியப்பனும் அமைதியே காத்தார்.
காமாட்சி.. “என்ன மதி? இரண்டு பேரும் ஒன்னும் சொல்லமாட்றிங்க?” என்றார் தவிப்போடு.
“உங்க பொண்ணுக்கு சம்மதமாத்தை?”
“எங்க முடிவுதான் மதி.. அவ என்ன சொல்லப்போறா?” என்க.. அமைதியானான்.
“வர வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரதா சொல்லியிருக்காங்க மதி.” என்றார் கதிரேசன்.
மதியழகன்.. “ஜாதகம் பார்த்தாச்சு, வெல் செட்டில்ட் பையன்றதால உங்களுக்கும் பிடிச்சிருக்கு, வெள்ளிக்கிழமை வராங்க, நான் வந்து கலந்துக்கனும்.. அவ்வளோதானத்தை..” என கேட்டவாறு எழ..
“அவதான் உங்க பேச்சை கேட்பாளே.. அப்புறமென்ன அத்தை.?” என்றவன்.. கதிரேசனிடம் “கொஞ்சம் வேலையிருக்கு மாமா..” என கோபமில்லாமல் சொல்லி அறைக்குள் சென்றான்.
** ** **
வெள்ளிகிழமையும் வர.. ஏழு மணிக்கெல்லாம் பெண் பார்க்க வந்திருந்தனர் சூர்யா குடும்பத்தினர்.
“வா ரவி.” என அதிர்வோடு நண்பனை வரவேற்க, “சாரிடா, ஈவ்னிங்தான் வரதாயிருந்தோம், சூர்யாக்கு ஒன்பது மணிக்கு கிளம்பியாகனுமாம், வரதுக்கு நைட் ஆகிடும்னான். உன்கிட்ட சொன்னா தடல்புடலா செய்யனும்னு தங்கச்சியை படுத்துவ,
நமக்குள்ள என்னனு கிளம்பிட்டேன்.” என்றார் ரவி.
“என் குடும்பத்துல முக்கியமானவங்க இல்லாம எப்படி ரவி.? முக்கியமா என் மச்சினன் மகன் இருக்கனும்ல? அவன்கிட்ட ஈவ்னிங் வரதா சொல்லியிருந்தேன், இப்போ தப்பா நினைப்பான்.” என்றார் ஆற்றாமையோடு.
“ஓ.. இப்படியொன்னு இருக்கா? சரி இப்போ போன் செய்து வர சொல்லு, நாங்க காத்திருக்கோம்.” என்றார்.
காலை வேலையில் மதியின் வீட்டு வேலைகளை நினைத்தவர்.. “ப்ச்.. அப்படிலாம் வரமாட்டான், வரவும் முடியாது.” என வருந்தி.. “சரி விடு.” என.. சூர்யாவைப் பார்த்தவர்.. “உக்காருப்பா, உக்காரும்மா.” என்றார் பெண்களிடம்.
சூர்யா, அவனின் பெற்றோர், அக்கா என நான்கு பேர்தான் வந்திருந்தனர். நால்வரும் அமர.. “ஆச்சி, போய் தாமரையை ரெடி பண்ணு.” என்றார்.
மதியிடம் மாலை என்று சொல்லி, இப்படி செய்கிறோமே என காமாட்சிக்கு மனதேயில்லை. இப்படியா சொல்லாமல் வருவார்கள் என்ற கோபத்தோடே தாமரை அறைக்கு சென்றார்.
மகளிடம் விசயத்தை விளக்கி அவசரப்படுத்த, “ம்மா, என்னால அவசர அவசரமா குளிக்க முடியாது.” என கடுப்பாக சொல்லி, முகம் கழுவி, பின்னலிட்டு, அணிந்திருந்த சுடிதாரோடே வெளியே வந்தாள்.
“எல்லாருக்கும் டீ கொடும்மா.” என்றார் கதிரேசன். இவர்கள் வைத்ததுதான் சட்டமா? என முன்னறிவிப்பின்றி வந்தவர்கள் மீது கோபம் வர, யாரையும் பாராமல் இறுகிய முகத்தோடு டீ யை நீட்டினாள்.
எந்த ஒப்பனையுமில்லாத தாமரையின் பாந்தமான அழகு சூர்யபிரகாசிற்கு மிகவும் பிடித்திட ‘எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என உடனே முடிவை தெரிவித்து,
தாமரையிடமும்.. “உங்களுக்கும் பிடிச்சிருக்கானு இப்போ சொல்லைன்னாலும் நைட்குள்ள சொல்லிடுங்க, நாள் கணக்கா அவஸ்த்தை பட வச்சிடாதிங்க.” என்றான். இன்முகத்தோடு.
அங்கிருக்க முடியாமல் தாமரை உள்ளே சென்றிட, “என் மகனுக்கு தாமரையை ரொம்ப பிடிச்சிடுச்சிடா, ஏமாத்திடாம நல்ல பதிலா சொல்லு.” என சூர்யாவின் தந்தையும் அன்பு கட்டளையிட்டு விடைபெற்றனர்.
விடுமுறை என்பதால் வழக்கம்போல் எட்டரை மணிக்கு எழுந்த மஞ்சுவிற்கு அப்பொழுதுதான் பெண் பார்க்கும் படலம் முடிந்ததென தெரிய.. “என்னை ஏன் எழுப்பல? அழகு மாமா வந்தாங்களா?” என்றாள்.
“அவ என்னை மாமனாவே நினைக்கிறதில்ல, இதுல வெக்கம் வந்துட்டாலும்..” என சத்தமாகவே சொன்னவன், “இன்னைக்கு மதியம் வந்துட்டு போக நேரமிருக்காது, காலேஜ்லயே சாப்பிட்டுக்குறேன் தாத்தா. கதவை திறந்து வச்சிட்டு தூங்கிடாத.” என வழக்கம்போல் சொல்லி கிளம்பினான்.
“ஏன்யா.. சாப்பிடாமலே கிளம்பிட்ட?” என்க.. “எடுத்துக்கிட்டேன் தாத்தா, அங்க போய் சாப்பிட்டுக்குவேன்.” என கிளம்பினான்.
தாமர பேச்செடுத்தாலே திட்டுவான், இன்னைக்கென்ன கோபப்படாம குறை சொல்லிட்டு போறான்? ஒருவேளை கல்யாணமாகப்போகுதேனு கோபத்தை குறைச்சிக்கிட்டானா என யோசிக்கலானார் பழனியப்பன்.
கல்லூரிக்கு வந்தவன் மனமெல்லாம் ரஞ்சித்குமாரும் தாமரையுமே ஆக்ரமித்திருந்தனர். அரை மணி நேரத்தில் கதிரேசனோட தாமரை வந்தாள்.
கதிரேசன் கண்கள் தன்னைத்தான் தேடுகிறது என்றுணர, அவரிடமிருந்து அழைப்பு வந்தது. “ம்.. சொல்லுங்க மாமா..” என்றான்.
“மதி.. நான் காலேஜ்லதான் இருக்கேன், உன்னை பார்க்கனுமே.” என்றார்.
“இப்போ வேலையிருக்கு மாமா, ஈவ்னிங் வரேன்.”
“இல்ல மதி..” என ஆரம்பிக்க, “பொண்ணு பார்க்க வந்ததை மஞ்சு சொல்லிட்டா, அதைப் பத்தி பேச நேரமில்ல, வைக்கிறேன் மாமா..” என கட் செய்தான்.
“இன்னைக்கென்ன கோபமில்லாம பேசுறான்.” என வியந்தபடி கிளம்பினார் கதிரேசன்.