“நானும் எங்கப்பா சொல்லித்தான் உன்னை பார்க்க வந்தேன், ஆனா எனக்கு உன்னை பிடிச்சதாலதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், அதேபோல உனக்கும் என்னை பிடிச்சிருந்தாதான் என்னால கல்யாணம் செய்துக்க முடியும்.. அப்பா அம்மாலாம் ஒதுக்கிட்டு என்னை பிடிச்சிருக்கா? இல்லையா மட்டும் சொல்லு.” என்றான்.
‘ம்ம்..” என்று சொன்ன தாமரைக்கு அதற்கு மேல் பேச வாய் வரவில்லை.. தந்தையிடம் சம்மதிக்கும்போது தோன்றாத அவஸ்த்தை தற்போது தோன்றிட, சூர்யபிரகாசிடம் சம்மதம் சொன்னதும் ஏதோ பெரிய தப்பு செய்ததைபோல் மனம் பாடாய்பட, உடனே இணைப்பை துண்டித்தாள்.
வெக்கத்தால் இணைப்பை துண்டித்திருக்கிறாள் என சூர்யப்ரகாஷ் நினைக்க, தாம் அவசரப்பட்டுட்டோமா? என்று பலமாக யோசிக்கலானாள் தாமரை.
** ** ** ** ** **
காமாட்சி மதியழகனுக்கு அழைத்து ‘மாப்பிள்ளை வீட்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க..” என்றார்.
‘உங்க பொண்ணு என்ன சொன்னா.?” என்றான்.
‘நாங்க பார்த்து சொன்னா சரிதான்னு சொல்லிட்டா..” என்றார்.
ரஞ்சித்தை பழிவாங்குவதென முடிவான பின்னே, தன் எதிர்காலம் என்னவாகுமோ என தாமரை, திருமணம், இரண்டுமே தன் வாழ்வில் வேண்டாம் என உறுதியாய் முடிவெடுத்தபோதும் மனம் வலிக்கத்தான் செய்தது. ‘சரிங்கத்தை..” என்றான் உணர்வின்றி.
“மாப்பிள்ளை குடும்பம்பத்தி கேட்க மாட்டியா?
“நீங்க முடிவு செய்த விசயத்தை நான் கேட்டு என்னாகப்போகுது அத்தை?” என்க, காமாட்சி பதில் சொல்ல முடியாமல் தவிக்க.. “நான் வெளில இருக்கேன்த்தை, அப்புறம் பேசறேன்.” என துண்டித்தான்.
தாமரையின் சோர்ந்த முகம் கண்டு.. ‘தாமரை.. உனக்கு பிடிக்காம ஏன் பிடிச்சிருக்கு சொன்ன..?” என்றாள் மஞ்சு.
“பிடிக்கலனு இல்ல மஞ்சு.” என்க, “அப்போ ஏன் உம்முனு இருக்க?” என்றாள் கவலையாக.
“நான் நல்லாத்தான் இருக்கேன்.”
“இல்ல.. நீ நல்லா இல்ல. உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல.” என்றாள் அக்காவைப் புரிந்தவளாய்.
“ப்ச்.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.” என சலிப்பாய் சொல்ல.. “என்கிட்ட கூட சொல்ல மாட்டியா? போ.” என பிணக்கோடு நகர, தங்கை கையை பிடித்து நிறுத்தியவள்..
‘நம்ம அப்பா முடிவு பண்ணியிருக்கார் மஞ்சு.. நான் என்ன பண்றது? அதுவுமில்லாம என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கார். என்னை பிடிச்சவங்களைத்தான் என்னால கல்யாணம் செய்துக்க முடியும்..?” என்றாள்.
“அப்பாக்காக உனக்கு பிடிச்ச படிப்பை விட்டுட்டு பிடிக்காத கல்யாணத்தை செய்துக்கப்போறியா? என்கிட்ட பேசாத போ..” என்ற கோபத்தோடு தனதறைக்கு வந்தவள் மதிக்கு அழைத்தாள்.
“அழகு மாமா..” என ராகமிழுத்தாள் மஞ்சு.
“என்ன மஞ்சு?” என்றான் தற்சமயம் பேசும் விருப்பமற்றவனாய்.
“தாமரை ரொம்ப டிஸ்டப்பா இருக்கா, அது எனக்கு கஷ்டமா இருக்கு.” என்றாள் பெரும் கவலையாக.
நான் உங்க வீட்டுக்கு வரும்போது அவ உள்ள ஓடுறதை போல என்னால இருக்க முடியாம, அவ உள்ள வரனும்னு நானா போய் பேசினேன். இதைத் தவிர அவமேல கோபம்ன்ற மாதிரி என்னைக்காவது நடந்துருக்கேனா?” என்றான் அமைதியாகவே.
மதி சொல்வதனைத்தும் உண்மைதானே? என்ன பதில் சொல்வார் இதற்கு.? காமாட்சி அமைதியாக, “வர வெள்ளிக்கிழமை வந்துடு மதி.” என்றார் கதிரேசன்.
“இல்ல மாமா.. என்னால வரமுடியாது.” என்றான்.
காமாட்சி கதிரேசன் இருவர் முகமும் வாடிட.. “நான் வரனும்னா என்னோட வசதியையும் கேட்டுட்டு ஃபங்சன் டேட் முடிவு செய்திருக்கனும், வர வெள்ளிக்கிழமை காலேஜ்ல இன்டர்னல். என்னால லீவ் போட முடியாது.” என்று திட்டவட்டமாய் கூறி வெளியேறினான்.
இருவருக்கும் தாமரையை இன்று உறுதி செய்வதற்கு வருகிறார்கள் என்ற சந்தோசம் சிறிதும் இல்லை. மதியழகன் வராதது பெரும் குறையாகவும், அவன் சொன்ன பதில் நெருடலாகவும் இருந்தது கதிரேசனுக்கு.
உள்ளே வந்த சூர்யபிரகாஷ்.. ‘ஹாய்.. பேபி..” என்று மஞ்சுவிற்கு கை கொடுத்தான்.
‘ஹாய்..” என்றாள் சிரிக்காமல்.
தண்ணீர் கொடுத்த பின்னே, “நான் போய் தாமரை ரெடியாகிட்டாளா பார்த்துட்டு வரேன்.” என கணவனிடம் கிசுகிசுத்து மகளறைக்கு வந்தவர்.. “அவங்க வந்துட்டாங்க தாமரை.. இன்னும் சாரியே கட்டாம இருக்க? சீக்கிரம் கட்டு..” என்று அவசரப்படுத்தினார் காமாட்சி.
தாமரை அமைதியாகவே நின்றிருக்க, மகளை அழைத்தபடி உள்ளே வந்த கதிரேசன்.. ‘இன்னும் ரெடியாகலையா? என்னம்மா நீ?” என்றார் பதட்டமாக.
தந்தை பதட்டம் தாளமுடியாமல்.. ‘நீங்க போங்கப்பா.. நான் பத்து நிமிசத்தில ரெடியாகி வந்திடறேன்..” என்றாள்.
சொன்னது போலவே தாமரை பத்து நிமிடத்தில் ரெடியாகி ஹாலுக்கு வந்தாள். தினமும் போடும் கம்மல், வளையல் ஒரு சிறிய தங்க சங்கிலியோடு.. சாரிகட்டி தலை நிறைய பூவை மட்டும் வைத்து வந்திருந்தாள்.
மகளருகே வந்தவர்.. ‘எவ்ளோ நகை வாங்கி வச்சிருக்கேன்? மானத்தை வாங்கன்னே இப்படி வந்தியா?” என காய்ந்தார் கதிரேசன்.
‘அம்மா சாரி கட்ட சொன்னாங்க, நகையெல்லாம் மாத்தனும்னு எனக்கு தெரியாதுப்பா..” என்றாள் பாவமாக.
அன்று சுடிதாரில் இருந்தவள், இன்று சாரிக்கு மாறியிருக்க வருங்கால மனைவியின் வரிவடிவத்தில் மயங்கிய சூர்யபிரகாஷ், அவளருகில் வந்து.. ‘ஹாய்..” என்றான்.
எதுவும் சொல்லாமல் அப்பொழுது தலை குனிந்தவள்தான்.. அதன் பிறகு நிமிரவேயில்லை. திருணமன சம்மந்தம் குறித்து பெரியவர்களின் முறையான பேச்சிற்கு பிறகு.. ‘சூர்யா.. இந்த செயினை தாமரை கழுத்திலபோட்டுவிடுப்பா..” என்றார் சூர்யாவின் அப்பா.
தன் தந்தையிடம் செயினை வாங்கியவன்.. தாமரையை நெருங்கி நின்று, அவளின் தோள்மீது படர்ந்திருந்த மல்லிகையை விலக்கிவிட, அருவருப்பாய் உணர்ந்த தாமரை அதிலிருந்து மீளும் முன்னே,
செயினை அணிவிப்பதற்காக கழுத்தை மறைத்திருக்கும் மறுபக்க மல்லிகையையும் விலக்கிவிடும் சாக்கில் தாமரையின் வெற்று முதுகில் தன் கரங்களால் லேசாய் வருட.. உயிர் வலியை உணர்ந்த தாமரை.. இதற்கு மேல் தாங்கமுடியாதென, இருகரம் கூப்பி.. ‘என்னை மன்னிச்சிடுங்க.. இந்த கல்யாணம் வேண்டாம்..” என்று கண் கலங்கினாள்.
சூர்யப்ரகாஷ் அதிர்ந்து நிற்க.. இத்தனை பேரை வரவழைத்து இப்படி கூறுவது பெரும் தவறு என்றுணர்ந்து, சிறிதும் யோசிக்காமல் அவனின் பாதம் பணிந்தாள்.
பதறிய சூர்யா.. ‘தாமரை.. எழுந்திரி..” என்று தூக்கி விடுவதற்காக அவளின் தோள் தொட முயல.. அதற்கு வாயப்பளிக்காமல் பதறி எழுந்தவள் இரண்டடி பின்னே நகர்ந்து நின்றாள்.
‘நீங்க என்னை விட கலரா இருக்கிங்க..” என்று அப்பொழுது தோன்றிய காரணத்தை சொன்னாள்.
‘பொண்ணு பார்க்க வந்தன்னைக்கும் இதே கலர்லதான் இருந்தேன்.” என்றான் கோபமாக.
‘நான் உங்களை அசிங்கப்படுத்தனும்னு ப்ராமிசா நினைக்கல.. ஆனா ப்ளீஸ்.. இந்த கல்யாணம் வேண்டாம்..” என்று மீண்டும் சொல்லி கண்ணீர் விட..
‘அம்மா.. இதுக்குமேல இங்க இருக்கிறது நமக்குத்தான் அசிங்கம்.. கிளம்புங்க..” என்று வெளியேறினான் சூர்யபிரகாஷ்.
சூர்யாவின் அன்னை.. “உங்க ஃப்ரண்டுனு நம்பி வந்தேன் பாருங்க, என்னை சொல்லனும்.” என முனுமுனுத்தபடிம் கதிரேசனை முறைத்தவாறும் கிளம்பினர்.
அனைவரும் சென்றதும்.. ‘ஏன் தாமரை இப்படி செய்த.? நீ சம்மதிச்சதுக்கப்புறம்தான அவங்களை வர சொன்னேன்?” என்றார் கோபமாக.
‘ சாரிப்பா.. எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை..” என்று மீண்டும் அழுதாள்.
தாமரையின் அழுகையில் கோபம் அதிகமாக.. ‘இதை முன்னாடியே சொல்லியிருக்கனும்.. வீட்டுக்கு கூப்பிட்டு வச்சி இப்படி அசிங்கப்படுத்துவியா? நம்ம குடும்பத்தைப் பத்தி என் வளர்ப்பைப் பத்தி என்ன நினைப்பான்.?”
கண்ணீர் விட்டபடி தாமரை அமைதியாக இருக்கவும்.. ‘இப்பதான் எல்லாரும் போய்ட்டாங்கயில்ல.. முன்னாடி பிடிச்சிருக்குன்னுட்டு, இப்ப ஏன் பிடிக்கலைன்னு சொன்னன்னு உண்மையை சொல்லு..” என்றார் காமாட்சி.
‘அம்மா.. அவன் செயின் போட்டுவிடற மாதிரி என் முதுகை..” என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் ‘எனக்கு பிடிக்கலைம்மா..” என்று மீண்டும் சொன்னதையே சொல்லி அழுதபடி தன் ரூமினுள் தஞ்சம் புகுந்தாள் தாமரை.
தாமரை சொன்னதிலிருந்து என்ன நடந்திருக்கும்.. என்று யூகித்த மதியழகன் ச்ச்ச.. நாமளாவது எதாவது செய்து இந்த சம்பந்தத்தை முன்னாடியே தடுத்திருக்கலாம் என்று வருந்தி நினைத்தான். அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல்.. ‘நான் கிளம்பறேன் அத்தை..” என்று சொல்லி கிளம்பினான்.
தாமரையின் ரூமிற்கு சென்ற மஞ்சு.. ‘நான்தான் முன்னாடியே உனக்கு பிடிக்கலனா வேணாம்னு சொல்லுனு சொன்னேன்ல்ல..? அப்பவே சொல்லியிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது.. சரி விடு அழாத.. அப்பா ஈவ்னிங்க்குள்ள உன்னை மன்னிச்சிடுவார்.” என்று தாமரையை தேற்றினாள் மஞ்சு.
மஞ்சு சென்றதும் ரூமை தாழ் போட்டவளுக்கு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்ததை போல் உணர்ந்தாள். வெகுநேரம் ரூமிலேயே அடைந்து இருந்தவள்.. சாரியிலிருந்து சுடிதாருக்கு மாறியதும் மனது லேசானதைபோல் உணர.. அடுத்து தந்தையின் கோபத்தை எப்படி தணிப்பதென யோசித்திருந்தாள்.