“வருத்தப்பட்டா ஓகே வா? சரியாகிடுமா? சில் ப்பா…” என்று அவரை தேற்றினான்.
உள்ளுக்குள் ஈட்டி இறங்கிய வலி தான். ஆனால் தன் வலி அவர்களையும் அல்லவா பாதிக்கும்?
அதீத சந்தோஷமோ, துக்கமோ, வேதனையோ, கோபமோ எதையுமே ஒற்றை புன்னகையில் மறைத்துக்கொள்ளும் வித்தைக்காரன் அவன். இன்று அதனையும் மறைக்க தேவராஜ் மகனை கண்ணெடுக்காமல் பார்த்தார்.
“லீவ் இட் ப்பா…” என்றான் மெல்லிய குரலில் அதிரன்.
“எனக்கு புரியுது அதி. ஆனா அவரோட பாயின்ட் ஆஃப் வ்யூல கொஞ்சம் பாரு. அவங்களுக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. அதுவும் பர்ஸ்ட் டைம் ஷூட்டிங் பார்த்திருக்காங்க…”
“ப்பா, அவர் என்னை நம்பனும்னு சொல்லலை. ஆனா அது ஒருமாதிரி எனக்கு எப்படி சொல்ல? அவங்க பார்த்தது அருவருப்பா, சந்தேகமா, என்னவோ நான் அந்த நடிகையோட. எனக்கு சொல்லவே பிடிக்கலை. ஆனா தப்பில்லையா?…”
“அவர் பொண்ணை பெத்தவர். இது எல்லாமே யோசிக்க தான் செய்வார்…”
“நான் கல்யாணம் செஞ்சுக்க போறவன், அப்போ இவங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னு தோணுமே ப்பா. அவரோட பார்வை இருக்கே…” என்று தோளை குலுக்கியவன் தலையசைத்துக்கொண்டான்.
“அதி…”
“யாரும் என்னவும் நினைச்சுட்டு போங்கன்னு சொல்ல அவங்களாம் அடுத்தவங்க இல்லை. மேகாவோட அப்பா. அவங்க மனசுல இருக்கறது ஏதாவது ஒரு இடத்துல மேகாட்ட ரிப்லேக்ட் ஆனா கூட அது எங்களோட வாழ்க்கையை பாதிக்கும்…”
“அதி…”
“அதுக்கு நான் கல்யாணம் செஞ்சுக்காமலே இருந்துப்பேன்…” என்றவன் கதவு தட்டும் ஓசையில் எழுந்து சென்றான்.
ப்ளாக் டீ வரவும் வாங்கி வந்து அமர்ந்தவன் அவருக்கும் கொடுத்து தனக்கும் எடுத்துக்கொண்டான்.
“ஓகே, இப்போ என்ன தான் செய்யலாம்னு இருக்க?…”
“எதுவும் இல்லை. கஷ்டம் தான். ஆனா பார்க்கலாம்…” என்றவன் டீயை குடிக்காமல் அதனை சுழற்றியபடி பார்த்துக்கொண்டே இருந்தான்.
மனம் முழுவதும் அவனின் மேகம். அவனின் உள்மனது சொல்லியது தன்னை அவளுக்கு பிடிக்கிறதென்று.
ஆனாலும் சிறு குறிப்பு கிடைத்தாலும் போதும். வேறெதுவும் தேவை இல்லை அதிரனுக்கு. யாரின் பார்வையும் ஒன்றும் செய்யாது தன்னை.
ஆனால் அவளுமே அல்லவா மௌனம் காக்கிறாள்? அந்த மௌனம் அவனை அனலில் இட்டு உருக்கிக்கொண்டிருப்பதை அவள் அறிவாளா இல்லையா?
“ஹ்ம்ம்…” என்று ஒரே மடக்கில் குடித்து முடித்தவன் கப்பை வைக்க,
“நான் வேணும்னா அவங்க வீட்டுல பேசட்டுமா?…” என்றார் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று தெரிந்தும்.
“ம்ஹூம், வேண்டாம்….”
“அதி…”
“முதல்ல மேகா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியனும்…”
“அந்த பொண்ணு அவங்க வீட்டுக்காக சொல்லாம இருந்தா?…”
“என்கிட்டே சொல்லனும்னு இல்லை. மேகா சொல்லாமலே என்னால புரிஞ்சுக்க முடியும்ன்னு தோணுது…” என்றவன்,
“நம்ம மனசுல ஒருத்தர் வந்துட்டா ஏதாவது ஒருவகையில மத்தவங்க உணராம அதை வெளிப்படுத்துவாங்க. எனக்கு நிச்சயம் தெரியவரும்…” என்று அத்தனை நம்பிக்கையுடன் சொன்னான்.
அதிரனின் முகத்தில் அத்தனை நம்பிக்கை. எவ்வளவு காதல்? இது கிடைக்க அப்பெண் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எத்தனை படங்கள் எத்தனை நடிகைகளுடன் நடித்திருந்தாலும் இதுவரை எந்த கதாநாயகியுடனும் கிசுகிசுக்கப்படாதவன் என்பதில் ஏக பெருமை அவருக்கு.
அவனின் எல்லையில் நின்று, மற்றவர்களையும் நிறுத்திவிடுபவன், ஒரு பெண்ணின் மேல் காதல் என்று கரைந்து இன்று அதனாலேயே கலங்கி இருக்க தேவராஜிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மகனின் ஆசை எப்படியாகினும் நிறைவேற வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் அவர்.
அவரின் ஆசை அன்றே நிறைவேறி அதிரனின் மன கலக்கமும் அகலவதை போன்ற நிகழ்வுகள் அரங்கேறியது.
“ஓகே அதி, ரெஸ்ட் எடு…” என்று சொல்லி அவர் எழுந்து கிளம்பி கீழே வந்துவிட்டார்.
“என்னங்க பேசிட்டீங்களா?…” என சுபத்ரா தவிப்புடன் கேட்க,
“ஹ்ம்ம், பேசியாச்சு. நீ பயப்படற மாதிரி ஒன்னும் இல்லை. அவன் ஸ்டெடியா இருக்கான்…” என்றார் ஆறுதலாய்.
“இல்லையே, அவன் வந்து எப்படி நின்னான் தெரியுமா? கண்ணெல்லாம் சிவந்து போய். என்னை கட்டி புடிக்கும் போது லேசா உடம்பு நடுங்குன மாதிரி இருந்துச்சே. என்னால உணர முடிஞ்சதே…”
தன்னிரு கைகளையும் காண்பித்து சுபத்ரா மருக தேவராஜிற்கு இப்போது மனைவியை சமாதானம் செய்வதே பெரும் வேலையாகி போனது.
“இங்க வா…” என்று அழைத்து சென்றவர் அமரவைத்து பொறுமையாய் விளக்கம் குடுக்க,
“என்ன என் பிள்ளையை அப்படி பார்த்தாங்களா? தேடினாலும் என் மகன் மாதிரி ஒருத்தன் கிடைப்பானா?…” என்று கொதித்து போனார் சுபத்ரா.
“இந்த பீல்ட்ல இருக்கற எத்தனை பேர் எப்படி எல்லாம் இருக்காங்க? என் பையன் பத்தரமாத்து தங்கம். எந்த கெட்ட பழக்கமும் கண்டுபிடிக்க முடியுமா இவங்களால?…”
“கூட நடிக்கிற பொண்ணோட நடிக்க தான செஞ்சான்? என்னவோ நிஜமா சுத்தின மாதிரி பார்த்தாங்களா? என் பிள்ளை ஒழுக்கத்துல சந்தேகப்பட்டா அந்த பொண்ணே வேண்டாம்…” என்று பொரிந்து தள்ள தேவராஜிற்கு அத்தனை சிரிப்பு.
“என்னவோ அவர் பொண்ணை கட்டிக்க தவம் இருக்கற மாதிரி?…”