“அதை நாம பேசவே இல்லை. கால் பன்றியா இல்லையான்றது தான்…” என்றவன்,
“உன் கால்க்காக ரொம்ப வெய்ட் பண்ணிட்டேன் மேகா…” என்றதும் மெல்லிய புன்னகை மேகாவிடம்.
“மேகா பேசு…” என்றான் அதிரன்.
“ம்ஹூம், தெரியாம கால் பண்ணிட்டேன்…”
“வீட்டுக்கு தெரியாம? உன் வீட்டுல இருக்கறவங்களுக்கு தெரியாம. ரைட்?…” என்று அவன் சிரித்தவன்,
“நானும் என் வீட்டுக்கு தெரியாம தான் உனக்கு கால் பண்ணேன். இனியும் பண்ணுவேன்…” என்றான்.
“இல்லை, இல்லை. அது அப்பாவோட முகம் பார்த்து, ஒரு பதட்டத்துல. அதனால இது சேர்த்தி இல்லை…” என்றாள் வேகமாக.
“நோ மேகா. ஐ’ம் ஹெல்ப்லெஸ். இனிமே நான் என்னை ஏமாத்திக்கறதா இல்லை. நம்மோட இந்த கேமை முடிச்சுப்போம்…” என்று சொல்லவும் மேகா மௌனமாகி போனாள்.
என்ன பேச, எப்படி மறுக்க, ஆசைகொண்ட மனது வலிமையாய் மறுக்க கூட விடவில்லை அவளை.
இருவரும் பேசாமல் அந்த மௌனத்தை கடக்க முடியாமல் தேங்கி இருக்க அதற்கு மேல் எங்கே இப்போதே கிளம்பி நேரில் பார்க்க சென்றுவோமோ என்று நினைத்தான் அதிரன்.
“இப்பவும் சொல்லமாட்டியா மேகா?…” அவளிடம் கேட்க,
“என்ன? என்ன சொல்லனும்?…”
“உன்னோட ஸ்டேட்மென்ட்ல இப்பவும் ஸ்ட்ராங்கா இருக்கியா?…” என்றதும் எதை என்று கூட அவளுக்கு நியாபகம் இல்லை.
“எனக்கு புரியலை?…”
“ஹாஸ்பிட்டல்ல வச்சு என்னை பிடிக்கலைன்னு சொன்னியே? இப்பவும் பிடிக்காதா மேகா?…” என மீண்டும் அவளை உறைநிலைக்குள் தள்ளிவிட்டான் அதிரன்.
“மேகா…”
“அது வந்து…” மேகா பதிலை தேடினாள்.
உடனே ஆமாம் என்று சொல்லி அவனின் மனதை உடைக்க அவளால் முடியவில்லை.
“மேகா…”
“இப்ப ஏன் இதை கேட்கறீங்க?…”
“பதில் தெரியனும் மேகா…”
“ப்ளீஸ், கால் கட் பண்ணுங்க….” என்றாள் உடனே பேச்சை மாற்றும் விதமாய்.
“எனக்கு புரிஞ்சிருச்சு. சொல்ல மாட்டியா நீ?…” என்றான் அதிரன் உல்லாச புன்னகையோடு.
“ஆமா, எதுவும் சொல்லமாட்டேன். எதுவும் நினைக்கலை. யாரையும் நினைக்கலை. கால் கட் பண்ணுங்க…” என்றாள் பிடிவாதமாய்.
“நான் பண்ண மாட்டேன்…” என்றவன் ஒரு சிரிப்புடன்,
“யாரும் டோர் நாக் பன்றாங்களா மேகா?…” என சொல்லவும்,
“அச்சோ பை. அப்பறமா பேசறேன்…” என சொல்லி அவள் வைத்துவிட அதிரனின் முகத்தில் அத்தனை பூரிப்பு.
முகமெல்லாம் புன்னகையுடன் அவன் கட்டிலில் சரிய அத்தனை சஞ்சலமும் பனியாய் கரைந்தது.
அமுதினியன் பேசி சென்றதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை போல தூசியாய் மனதை விட்டு பறந்துவிட இதயம் முழுவது அவன் மேகத்தின் ஆட்சி தான்.
மீண்டும் மொபைலை எடுத்து பார்த்தவனுக்கு அப்போதுதான் ஒருவிஷயம் புலப்பட்டது.
உடலில் ஒரு பரபரப்பு தோன்ற மீண்டும் எடுத்து பார்த்தவனுக்கு வானில் பறக்காத குறையாய் அப்படி ஒரு மகிழ்ச்சி மழை.
நினைத்தும் பார்க்காத ஒன்று. ஆனால் அவன் விரும்பியதுவும் அதுவே. மொபைலில் மேகாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
எடுத்து பார்த்தவளுக்கு பயந்து வந்தது அப்போதே. என்ன இப்படி அனுப்பியிருக்கிறான் என்று.
அதிரன் அனுப்பியிருந்ததை போலவே எழுந்து சென்றவள் கதவை மெதுவாய் திறந்து பார்க்க ஹாலில் எந்த விளக்குகளும் எரியப்படவில்லை.
மாடியில் ஏதோ பேச்சு சத்தம் கேட்க மீண்டும் கதவை தாழிட்டுவிட்டு வந்து அமர்ந்து அவனுக்கு பதில் அனுப்பிய நொடி அவளின் அலைபேசி திரையை நிறைத்தான் அதிரன்.
எடுக்காவிட்டால் எங்கே கிளம்பி வந்துவிடுவானோ என்று அழைப்பை ஏற்று பார்க்க மெல்லிய விளக்கொளியில் ஓவியமாய் தெரிந்தவளின் முகத்தை கண்டவன் மனமெங்கும் மல்லிகை வாசம்.
“மேகா…” என்ற அழைப்பும் அவன் முகத்தில் தெரிந்த அதீத சந்தோஷமும் மேகாவையும் தொற்றினாலும் பயத்துடன் பார்த்தாள் அவனை.
“கண்டுபிடிச்சுட்டேன்…” என்றான் முகமெல்லாம் நிறைந்த புன்னகையுடன்.
“ஹ்ம்ம், என்ன?…” என்றாள்.
“உன்னை, உன் மனசை, அதுக்குள்ள என்னை எல்லாமே கண்டுபிடிச்சுட்டேன்…” என்றதும் மேகாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
“எப்படி எப்படி? நான் எதுவும் சொல்லலையே?…” என உளறிக்கொட்டினாள் அவனிடத்தில் பதட்டத்தில்.
“ஹேய் மேகா பொண்ணே. நீ சொல்லனும்ன்னு இல்லை. எனக்கு தெரிஞ்சிருச்சு. இதோ இப்போ கூட என்னன்னு கேட்காம எப்படின்னு கேட்ட பாரு. மேகா, மேகா…”
அவன் சொல்லவும் எச்சிலை கூட்டி விழுங்கியவள் தொண்டைக்குழி ஏறி இறங்க அதிரனின் பார்வை ஒருநொடி அங்கே நகர்ந்து மீண்டும் அவள் விழிகளில் தஞ்சமடைந்தது.
“இவ்வளோ நாள் கூட எதுவும் தெரியல. ஆனா இப்போ? ஹ்ம்ம், மேகா…” என்றான் தலையை கோதியபடி.
எப்போதும் அவனின் பேச்சும், புன்னகையும் அவளை நிலைகுலைய செய்யும். இன்று அதற்கு மேலாய் அவனின் அந்த பரிமாணத்தில் பேச்சற்று போனாள்.