“ஹ்ம்ம்…” என்று மேகாவும் போனை வைத்துவிட்டு ஆட்டோவிற்கான பணத்தை செலுத்திவிட்டு தோளில் இருந்த பேக்கை இறுக்கமாய் பிடித்தபடி அவள் முன்னேறி நடந்து வர அதிரனின் மனதிற்குள் தடதடக்கும் உணர்வு.
முன்னால் சாய்ந்து கால் முட்டியில் கை ஊன்றியவன் தன் விரல்களை கொண்டு தாடையை கோர்த்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான்.
அங்கே சற்று தள்ளி தள்ளி நின்றவர்களை காணவே அச்சமாக இருக்க இப்படியே ஓடிவிட்டால் என்ன என்று தோன்றியது.
காரை நெருங்கும் முன் பயந்து போய் பின்னால் இரண்டெட்டு வைத்துவிட்டு மீண்டும் காரை பார்க்க உள்ளிருந்த அதிரனுக்கு அத்தனை சிரிப்பு.
“மேகா நாம லைஃப் லாங் சேர்ந்து ட்ராவல் பண்ணனும் பொண்ணே. ஓஹ் காட்…” என்று சொல்லி சிரிக்க,
“மேம் இந்த கார்…” என்று காட்டினான் அதிரனின் பாதுகாவலன் வசந்த்.
அவனின் உயரமும், உருவமும் பயத்தை கொடுத்தாலும் இத்தனை பேரின் கண்காணிப்பில் மனதிற்கு பிடித்தவனை சந்திக்கிறோம் என்ற நினைவே சங்கடத்தை கொடுத்தது.
இதில் இன்னொருவன் காரின் கதவை திறந்துவிட வேறு வழியே இன்றி ஏறி அமர்ந்தாள் மேகா.
அவளின் மறுபக்கம் இடது கையை ஹோல்டரில் ஊன்றியபடி அதிரன் அவளை பார்த்தபடி புன்னகையுடன்,
“குட்மார்னிங் மேகா…” என்றான்.
“குட்மார்னிங்…” சத்தமே வரவில்லை அவளுக்கு.
காரின் குளுமை கொஞ்சமும் அண்டாமல் வியர்த்துபோய் அவள் இருக்க கலைந்திருந்த தலைமுடி காதோரமும், கன்னத்திலும் ஒட்டியிருந்தது.
ரவிவர்மா ஓவியமாய் அதன் நெளிவுகள் அதிரனின் விழிகளை கவர ஊஃப் என்று காற்றை இழுத்துவிட்டான்.
இருவரும் காதலுடன் கூடிய முதல் சந்திப்பு மனதை தித்திக்க செய்ய சில நொடிகள் இருவரிடமும் பேச்சில்லை.
இன்னும் அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை மேகா. வெளியே பார்வையை பதித்தபடியே அவள் இருக்க வெளிப்பார்வை ஊடுருவாத அந்த சூழ்நிலையும் ஆள் அரவமற்ற பகுதியும் உள்ளுக்குள் மத்தளம் கொட்டியது.
‘போய்விடுவோமா? அதுதான் பார்த்தாகிற்றே. கிளம்பிவிடலாம்’ என்று வழக்கம் போல கண்ணை மூடி தனக்குள் சொல்லிக்கொண்டவள்,
“நான் கிளம்பட்டுமா?…” என்றாள் அவனிடம்.
“இன்னும் மேகம் என்னை பார்க்கலையே?…” அதிரனின் சின்ன புன்னகையின் சத்தத்தில் அவனை திரும்பி பார்க்க இன்னும் அழகாய் கவர்ந்தான் அவளை.
“பேசு மேகா…” என்றதும் அந்த பார்வை வீச்சில் வேறு திசையில் திரும்ப,
“மேகா…” மீண்டும்.
“எதுக்கு வர சொன்னீங்க? நான் கிளம்பனும்…” அவனை பாராமல் சொல்ல,
“உன்னை பார்க்க…” என்றவன்,
“ஆனா நீ திரும்பவே இல்லை…” என்றான்.
“ப்ளீஸ்…” இப்போது அவனை பார்த்தே சொல்ல,
“கையை காமி, பார்க்கனும்…” என்றான் பேச்சை மாற்றி.
“இல்ல அது சின்ன காயம் தான். சரியாகிடும்…”
“நான் பார்க்கறேன். காமி…” என்று சொல்ல அவனிடம் தன் வலதுகையின் உள்ளங்கையை விரித்து காண்பிக்க வியர்த்து கையெல்லாம் ஈரமாய் இருந்தது.
“என்ன பயம் உனக்கு? இவ்வளோ வியர்த்திருக்கு…” என சொல்லி காற்றை இழுத்து அவன் கையில் ஊத அந்த சில்லென்ற உணர்வில் வேகமாய் கையை மடித்து இறுக்கிக்கொண்டாள்.
“பயப்படாத, டச் பண்ண மாட்டேன்…” என்று லேசாய் உடல் குலுங்க சிரித்தவனை ஒன்றும் சொல்லமுடியாமல் மீண்டும் பார்வை சுற்றி அலைபாய்ந்தது.
யாரேனும் தெரிந்தவர்கள் தென்பட்டுவிடுவார்களோ என்று எண்ணி கவனமாய் பார்க்கவும் செய்தாள்.
“எப்போ உன்னோட பீஸ்ஃபுல்லா டைம் ஸ்பென்ட் பண்ணுவேன் மேகா?…” என கேட்க அவனின் குரலில் பொங்கிய உணர்வின் மிகுதியில் அவனை பார்த்தாள்.
“ஓகே, கையை நீட்டு…” என்று மீண்டும் கேட்கவும் தானாக அவன் முன்னே கரம் நீண்டது. அவள் சொன்னதெல்லாம் ஞாபகம் வர,
“மோனிகா கண்டுபிடிச்சுட்டாங்கன்னு தான் நினைக்கறேன். கேட்டாங்கன்னா நீ பேசேன்…” என்றதும் மேகா அதிர்ந்து பார்க்க,
“எப்பவும் தெரிய வேண்டியது தானே? பேசலாம்…” என்றான் இலகுவாக.
“ம்ஹூம்…” என்றவள் முகம் அரண்டிருந்தது.
எப்படி தன்னுடைய தந்தையையும், அண்ணனையும் இந்த விஷயத்தில் தன்னால் எதிர்கொள்ள முடியும்?
இப்படி காதலுக்கும், குடும்பத்திற்கும் இடையில் அவள் தடுமாறி நிற்க அவளின் முகத்தையே கவனித்திருந்தவனுக்கு அரவணைப்பாய் அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
“மேகா…”
“ம்ஹூம், பேச முடியாது. அப்பா என்னை ஒரு பார்வை பார்த்துட்டா என்னால தாங்கிக்க முடியாது…” என்றாள் உடைந்துபோய்.
“அதுவும் அண்ணனுக்கு என்னவோ உங்க மேல பயங்கர கோவம். எங்க வீட்டில் டிவி கூட போட விடமாட்டேன்றங்க. எங்க அதுல உங்க முகம் வந்திருமோன்னு…” கம்மிய குரலில் அவள் சொல்ல மெல்லிய புன்னகை அதிரனின் இதழ்களில்.
“மேகா…” என்று சிரித்தவன் அவள் நீட்டியிருந்த கையின் மேல் தனது கரத்தை இங்குமங்கும் உரசாமல் அலையவிட மேகாவிற்கு பதட்டம் கூடியது.
அவனின் முகத்தில் அத்தனை காதல் கொட்டிக்கிடக்க கையை இழுக்கவும் முடியாமல், அசைத்தால் உரசிவிடுமோ என்னும் பதட்டம் கூட வெடவெடத்து போனாள்.
“ஹ்ம்ம்…” என்றவன் அதற்கு மேல் தாளமாட்டாது கையை அடுத்து இருக்கையில் தட்டி தாளமிட ஆரம்பித்தான்.
இந்த சில நாட்களில் அவள் அறிந்து வைத்திருந்த வரை அவன் உணர்வுகளின் பிடியில் இருக்கையில் தன்னை நிதானப்படுத்த அம்முறையை கையாள்கிறான் என்பது.
“மேகா…” என்றதும் அழைக்கிறானோ என திரும்பி பார்க்க, அதிரன் ஒற்றை கையால் முகத்தை தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தான்.
இன்னும் அவள் நீட்டிய கையை அப்படியே வைத்து அவன் புறமாய் லேசாய் திரும்பி அமர்ந்திருந்தாள்.
மூச்சை இழுத்துவிட்டவன் இரு கையாளும் தலையை கோதிவிட்டு அவளை பார்த்து,