Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
மேகம் வந்து தாலாட்ட – 18 (1)
Post Views:
9,023
மேகம் – 18
மேகா ஆட்டோவில் ஏறி கிளம்பும் வரை பார்த்திருந்தவன் சற்று நேரம் அவ்வுணர்வை அசைபோட்டபடி கண்ணை மூடிக்கொண்டான்.
பின் அவனாக ஹர்ஷத்தை அழைக்கவும் தான் ஹர்ஷத்துடன் மற்றவர்களும் வந்து காரில் ஏறினார்கள்.
நல்ல நேரத்திற்கு யாரும் இல்லை என்று யோசித்தபடி அவ்விடத்தை விட்டு நகர உள்ளுணர்வு எதையோ வலியுறுத்த முயன்றது.
மீண்டும் மீண்டும் என்னவென்று யோசித்து பார்க்க அதிரனால் என்னவென்று கண்டுகொள்ள முடியவில்லை.
இத்தனை யோசித்தால் மீண்டும் நினைவுகள் பின்னே தங்கிவிடும் என்று மனதை அப்படியே அமைதிப்படுத்தினான்.
அன்று மறுநாளைய படப்பிடிப்பிற்கான சண்டைகாட்சி பயிற்சி இருக்க அங்கே சென்றான் அதிரன்.
அங்கே சென்று பயிற்சி முடிந்து அரைமணி நேரம் சென்றிருக்கும். அதிரன் ஒரு ரிங் விட்டு மீண்டும் சில நொடி இடைவெளியில் மேகாவிற்கு அழைத்தான்.
“மேகா…” என அதிரன் குரல் கேட்கவும் எழுந்து அறைக்குள்ளே சென்று கதவை பூட்டிவிட்டு வந்தாள்.
“எதுக்கு கால் பண்ணுனீங்க?…” என்றாள் மேகா வேகமாய்.
“நீ வீட்டுக்கு போய்ட்டியான்னு தெரிஞ்சுக்க தான்…” என மூச்சுவாங்க பேச,
“நைட் தானே கால் பன்றேன்னு சொன்னீங்க? நான் அப்பவே வந்துட்டேன். உங்களுக்கு என்னாச்சு?…”
“இங்க ஃபைட் ரிகர்ஸல். அதான். நீ சொல்லு. இப்போ கூலாகியாச்சா மேகா…”
“ஹ்ம்ம்…”
“க்ளாஸ்க்கு ஏன் போகலை? எப்போ போகலாம்ன்னு முடிவு பண்ணியிருக்க?…”
“தெரியலை. ஆனா இன்னைக்கு போக தோணலை…”
இப்போது அதிரனிடம் பேசும் பொழுது மேகாவிடம் பேச்சுக்கள் சரளமாக வந்துகொண்டிருந்தது.
“ஓஹ்…”
“அப்போ நான் போனை வைக்கட்டுமா?…” மேகா அவசரப்பட,
“ஏன் இப்போ தானே கால் பண்ணேன். அதுக்குள்ளே என்ன?…”
“இப்ப தான பார்த்தோம்? வெளில அம்மாவும், அண்ணியும் பேசிட்டிருகாங்க. என்னை தேடுவாங்க…”
“ஓஹ், ஓகே, நீ என்ன சொன்ன மேகா? சென்டருக்கு போனேன்னு சொன்னியா?…”
“எதுவும் கேட்கலை. என்ன சீக்கிரம் வந்துட்டன்னாங்க…”
“கேட்டிருந்தா சொல்லிருப்பியா என்னை பார்க்க வந்தேன்னு…” ஒரு சிரிப்புடன் கேட்டான்.
“அச்சோ சும்மா இருங்க ப்ளீஸ். நானே பயந்துட்டு இருக்கேன்…” என்னும் பொழுதே கதவு தட்டப்பட பேசிக்கொண்டே ஏதோ ஞாபகத்தில் எழுந்து சென்று திறந்துவிட்டாள்.
வெளியே மலர் நின்றுகொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் திக்கென்றானது மேகாவிற்கு.
“ம்மா…” என திணறி அழைக்க லைனில் அதிரன் அமைதியாய் இருந்தான் அவள் என்ன செய்கிறாள் என கவனிக்க.
“பேசிட்டிருக்கும் போதே போனை எடுத்துட்டு உள்ள வந்துட்ட?…” மலர் கேட்கவும்,
“இல்லம்மா, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலாம்ன்னு தான் வந்தேன்…”
“வந்ததும் மாத்த சொன்னதுக்கு கேட்கலை. இந்த ட்ரெஸ்லையே இருக்கேன்னுட்டு இப்ப மாத்தனும்ன்ற. என்ன நினைப்புல இருக்க நீ?…” என்றார் அதட்டலாக.
“ம்மா…”
“கைல என்ன? போனா? எப்ப பார்த்தாலும் அந்த வயரை காதோட மாட்டிட்டு எதையாச்சும் கேட்டுட்டே இருக்க வேண்டியது. உன் இஷ்டத்துக்கு விட்டது தப்பா போச்சு…” என்றார் மலர்.
“ம்மா, ப்ரெண்ட் கால். அதான்…”
“சரி அண்ணன் நீ எங்கன்னு கேட்டு போன் பண்ணான்…”
“ஓஹ்…”
“என்ன ஓஹ்? ஏன் சென்டருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துட்டன்னு கேட்டுட்டு இருக்கான், உன் அண்ணி தான் பதில் பேசிட்டு இருக்கா….”
மலர் அங்கே சொல்ல அதிரனின் மனதில் மீண்டும் அதே உள்ளுணர்வு. கண்ணை மூடியபடி யோசிக்க ஆரம்பித்தான்.
எங்கேயோ எதுவோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது. என்ன என்ன என யோசனையுடனே இருக்க,
“சரி துணியை மாத்திட்டு வா. ரூம்குள்ளையே அடைஞ்சு இருக்காத…” என்று சொல்லிவிட்டு அவர் சென்றதும் கதவை தாழிட்டு வந்து அமர்ந்தாள்.
“ஓகே, நான் வைக்கறேன். அம்மா வர சொல்றாங்க…” என்றாள் அவள்.
“மேகா, உன் அண்ணா வந்துட்டு போகவும், ஹ்ம்ம்…” என்று யோசித்தவன்,
“இல்லை நான் நைட் எட்டு மணி போல கால் பன்றேன். ஓகே…”
“ஏன் என்னாச்சு? வேண்டாம். ஏற்கனவே அம்மா சொல்லிட்டே இருக்காங்க. கேட்டீங்க தானே?…”
“மேகா, மேகா. எந்த அம்மாவும் சொல்ல தான் செய்வாங்க…” என சிரித்து சமாளித்தான்.
அவளிடம் தன்னுணர்வுகளை அந்த நிமிடம் காட்ட முனையவில்லை. மலர் சொல்லியது எதோ ஒரு வகையில் எங்கோ அவனுக்கு தொடர்பை தர பளிச்சென்று மூளையில் மின்னலடித்தது.
“மேகா…”
“ஹ்ம்ம், வைக்கட்டுமா?…” என்றாள் நடக்க போவதை அறிந்துகொள்ளாமல்.
“என்ன நடந்தாலும் ஸ்ட்ராங்கா இருப்பியா மேகா?…” என்றான் அதிரன் தவிப்பை குரலில் தேக்கியபடி.
அவன் உள்ளுணர்வு கூறுவது சரியென்றால் இதோ அவர்கள் சந்திக்க வேண்டிய அடுத்த பிரச்சனை வந்துவிட்டதென்று.
இப்போது அதிரன் முழுதாய் முடிவிற்கு வந்துவிட்டான். இனி எக்காரணத்தை கொண்டும் மேகாவை விடுவதில்லை என்று.
‘என் மேகம் தாங்குமா?’ என நினைக்கையில் வலிகள் கூட அவனின் நிசப்தத்தில் மேகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“ஹலோ…” அவனை அழைத்து பார்த்தாள்.
“அதி சொல்லு மேகா…” என்றவனின் குரலே மேகாவை பயமுறுத்த,
“என்னாச்சு? என்ன செய்யறீங்க?…” என்றாள்.
“ம்ஹூம், நத்திங்…” என்று சுதாரித்தவன்,
“ஒரு விஷயம், திரும்ப திரும்ப சொல்றேன். நான் எப்பவும் உன்னோட தான் மேகா. எனக்கு எப்பவும் நீ மட்டும் தான்…” என்றவன் குரலில் அத்தனை தீவிரம்.
அதுவே மேகாவை பயமுறுத்தியது. இத்தனை நேரமில்லாமல் இது ஏன் என யோசிக்க எதுவும் புலப்படவில்லை.
“என்னன்னு சொல்லலயே நீங்க?…” என்றாள்.
“எனக்கே தெரியலை. ஆனா…” என்றவன்,
“ஓகே, சியரப். நீ எப்பவும் போல இரு. ஓகே…” என்றான்.
ஒருவேளை தான் நினைப்பதை போல எதுவுமில்லை என்றால் வீணாக யூகங்களை சொல்லி இன்னும் அவளை கலவரப்படுத்த முயலவில்லை.
இப்போதும் தான் பூடகமாக கூறியதே அவளை பெரிதும் அச்சம்கொள்ள வைத்திருக்கும் என்பதில் சர்வ நிச்சயம். அதை போக்கவென்று புன்னகையுடன் பேசலானான்.
“ஹ்ம்ம், தென்…” என்று சிரிக்க அந்த சப்தம் மேகாவை சற்றே அமைதியூட்டியது.
“என்ன தென்? போன் வைக்கனும்…”
“ஹ்ம்ம், தென் மேகா…” இப்போது இன்னும் உல்லாசமாய்.
“வெளில அம்மா கூப்பிட்டாங்க. போகனும். வேறென்ன?…”
“ஆமா ஏன் ட்ரெஸ் மாத்தலைன்னு வந்ததும் சொன்னியாம்? தெரிஞ்சுக்கலாமா?…” என்று அதிரன் கேட்டதும் ஒருநொடி திகைத்தவள்,
“அது சும்மா. நான் வைக்கறேன்…”
“சொல்லிட்டு போ மேகா…” என்று அவன் வம்பு செய்ய,
“என்ன பன்றீங்க நீங்க?…” என்றாள் கூச்சத்துடன்.
“காதுல மாட்டிட்டு கேட்டுட்டே இருப்பேன்னு சொன்னியே? என்ன அது?…” என்றான் விடாமல்.
“ஒண்ணுமில்லை சும்மா…”
“என்னோட சாங்ஸா? என் வாய்ஸா?…” என்றான் விளையாட்டாய்.
“ஹ்ம்ம், உங்க வாய்ஸ் தான்…” என அவனின் மேகம் ஒப்புவித்ததும் அதிரனின் புருவம் உயர்ந்தது.
“நீங்க என்னோட பேசின வாய்ஸ்…” என சொல்லும்பொழுதே மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் அதிரனை எட்ட,
“ஓகே ஓகே. நீ போ. நான் நைட் கால் பன்றேன்…”
“எட்டு மணிக்கே வேண்டாம். ஒரு ஒன்பது மணிக்கு மேல. ஹ்ம்ம்…”
“ஹ்ம்ம்…” என அதிரனும் புன்னகைக்க,
“பை…” என்று அவளே போனை வைத்துவிட்டாள்.
வைத்துவிட்டு வேறு உடையை எடுத்த நேரம் மீண்டும் படபடவென்று கதவு தட்டப்பட அதிர்ந்து போனாள்.
இப்படி ஒருமுறை கூட அந்த வீட்டில் இப்படி கதவு அதிர்ந்ததே இல்லை. அந்தளவிற்கு தட்டப்பட்டது.
யாராக இருக்கும் இப்படி தட்டுகிறார்களே என யோசனையுடன் கதவை திறக்க அங்கே ஆவேசத்துடன் நின்றிருந்ததோ பல்லவன்.
“அண்ணா…” என அவனின் தோரணையில் பயந்துபோய் பின்னால் இரண்டெட்டு வைத்து நின்ற மேகாவின் முகமெங்கும் அச்சம்.
“என்னங்க நான் சொல்றதை கேளுங்க…” என்று மோனி அவனின் கையை பிடித்தாள்.
“நீ விடு முதல்ல…” என அவளை உதறியவன்,
“எங்க போன வரு?…” என்றான் தங்கையிடம்.
“ண்ணா…” தொண்டை வறண்டுவிட்டது அவனின் கேள்வியில்.
“உன்னை தான் எங்க போய்ட்டு வந்தன்னு கேட்டேன்…” மீண்டும் அழுத்தி சொல்ல மேகாவின் பார்வை அண்ணியையும், அம்மாவையும் பார்த்தது.
Advertising
Advertising