“அப்பவே வந்திருப்போம். இங்க சூழ்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால முடியாம போச்சு. நாங்க வந்து அது இன்னும் உங்களுக்கு கஷ்டத்தை குடுக்க கூடாதேன்னு நினைச்சோம். நடந்ததுக்கு வருத்தம் தெரிவிக்கிறதை தவிர வேற என்ன செய்ய முடியும்ன்னு தெரியலம்மா…” என்றார் மனமார்ந்து தேவராஜ்.
அனைவருமே ஒரு கனத்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்க எல்லோரும் மீண்டும் அந்த தாக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.
“மாமா…” என அழைக்க அதிரன் மீண்டும் அவன் காதில் மேகாவை காண்பித்து சொல்ல,
“நோ மேகம்…” என்று அஷ்வின் மேகாவை காண்பித்து சத்தம் கொடுக்கவும் தான் அனைவரும் பக்கம் பார்க்க அதிரனும் புன்னகையுடன்,
“எஸ், மேகம் தான்…” என்றான் மேகாவை காண்பித்து மெல்ல அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
“அது அத்தை…” என அவன் எல்லோரும் கேட்குபடி திருத்த அதிரன் அஷ்வினுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லியதையே சொல்ல என்று அவ்விடத்தில் மீண்டும் இலகு தன்மை.
“சரி நாங்க கிளம்பறோம். உங்களை எல்லாம் சந்தோஷத்துல ரொம்ப சந்தோஷம்…” என தேவராஜ் கை கூப்பினார்.
அமுதினியன், பல்லவன் என்று தனி தனியே சொல்லிக்கொண்டு அவர்கள் முன்னே நகர மலர் மேகாவுடன் நிற்க,
“அத்தை வாங்க…” என்று மலரை கையோடு கூட்டிக்கொண்டு செல்ல செல்வமும், பல்லவனுமே நகர்ந்துவிட அஷ்வின் அதிரனின் கையை பிடித்து விடவில்லை.
வந்ததில் இருந்து அதிரனின் மொபைலில் கார்ட்டூன் படம் பார்த்துக்கொண்டு விளையாடியபடி இருக்க அவனை அத்தனை பிடித்து போனது.
அவனின் சுண்டுவிரலை பிடித்த அஷ்வின் விடவில்லை. அதிரன் மேகாவிடம் வர அவள் தன் அறைவாசலில் நின்றாள் மேகா.
“இதுதான் உன் ரூமா மேகா?…” என்றான் அவளை தாண்டிய பார்வையில்.
“ஹ்ம்ம், ஆமா…” என லேசாய் நகர அவன் கண்ணாடியை பார்த்தான்.
“அப்போ நீ கூப்பிடனும்னு இல்லை. ஆனா இப்போ நீ தான் கூப்பிடனும்…” என சொல்ல,
“இல்ல இப்ப எப்படி கூப்பிட? அதான் பார்த்துட்டீங்களே? வேறொன்னுமில்லை….” என்றாள் கைகளை விரித்து தன்னறையை திரும்பி பார்த்துவிட்டு.
“என் மேகம் இருக்கே. என்னை உள்ள கூப்பிடு. பார்க்கனும்…” என்றான்.
குரலில் பிடிவாதமோ, இல்லை அவளை செய்ய வைக்கும் அழுத்தமோ என்று மேகா அவனை பார்க்க கண்கள் சிரித்தது அதிரனுக்கு.
“ப்ளீஸ்…”
“இதுக்குமா?…” சத்தமின்றி புன்னகைக்க மேகா அமைதியுடன் கீழே நின்ற அஷ்வினை பார்த்தாள்.
அவள் பேசமாட்டாள் என்று தெரியும். இந்த பதட்டம் மேகாவை வியர்க்க செய்ய அன்றைய நாளை போல இன்றும் காதோரத்தில் இருந்து கழுத்தெல்லாம் வியர்த்துவிட்டிருந்தது.
முதன்முதலில் வீடியோகாலில் பார்த்த பொழுதும் இப்படித்தானே தன்னுடன் பேசியதில் பயந்து வியர்த்து போயிருந்தாள் என நினைத்தபடி பார்த்தவன் பார்வை ட்ரெஸிங் டேபிளில் சென்று நின்றது.
“அன்னைக்கு அங்க தான உட்கார்ந்திருந்த நீ மேகா?…” என அவ்விடத்தை சுட்டி காட்ட மேகாவிற்குள் அன்றைய நாளின் ஞாபகம்.
“ஹ்ம்ம்…” என்றபடி அவளும் அந்த திக்கில் தான் பார்த்தாள்.
“இங்க இருந்து தானே நடந்து அங்க வந்து உக்கார்ந்த?…” லேசாய் அவள் பக்கமாய் குனிந்து அதனை காண்பிக்க அவனின் அருகாமையில் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்தாள்.
“ஹேய் பார்த்து மேகா…” என்றவன் பின் புன்னகையுடன்,
“மதியம் ஏன் அவ்வளோ அழுகை?…” என்றான் மென்மையாக.
“அண்ணா ரொம்ப கோவமாகிட்டாங்க. அதான்…”
“அண்ணான்னா அப்படித்தான். இது நார்மல். நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டாமா? அழுவியா நீ?…” என கேட்க அஷ்வின் அதிரனின் கையை பிடித்து இழுத்தான்.
“சேம்ப்…” என்று அவனை தூக்கிக்கொண்ட அதிரன்,
“மேகம் எங்க?…” என்றான் அவனிடம்.
“வெளில…” அஷ்வின் வெளியே வாசல்பக்கம் கை காண்பித்து சொல்ல,
“நோ நோ இதோ இங்க…” என்று மேகாவை காட்டினான் அவன்.
“மாமா…” என்று அஷ்வின் அவனின் மொபைலை கேட்க,
“பிடி…” மொபைலை எடுத்து நீட்டியவன்,
“அங்க வெய்ட் பண்ணு…” என்று அனுப்பினான்.
அஷ்வின் சென்று சோபாவில் அமர்ந்ததும் மீண்டும் மேகாவின் பக்கம் திரும்பினான் அதிரன்.
“நடந்தது நல்லதாவே இருந்தாலும் நீ அழுதது, ப்ச். என்னால முடியலை மேகா…” மனதின் வலி வார்த்தைகளை தாங்கி முகத்தில் படர்ந்தது.
“ஓகே, நான் கிளம்பட்டுமா?…”
“ஹ்ம்ம்…”
“இப்ப நீ எதுவும் பேசற மூட்ல இல்லை. கால் பன்றேன். ஓகே…” என்று சொல்லவும் தலையசைத்தாள்.
“எதை நினைச்சும் கஷ்டப்படுத்திக்க கூடாது. நான் அப்ப சொன்னது தான். எப்பவும் உன் கூடவே நான். புரியுதா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்று அதற்கும் தலையசைப்பு தான்.
“நீ அழுதா நான் கஷ்டபடுவேன்ற அளவுக்கு என் மேகத்துக்கு என்னை தெரியுமோ?…” என்றான் மெல்லிய புன்னகையை சிதறவிட்டு.
அவனுக்கு தன் பேச்சும் தெளிவாய் கேட்டிருக்கிறதென வியந்து நிமிர்ந்து பார்த்தாள் மேகா.
“சீக்கிரம் கல்யாணம் வைக்க சொல்லிட்டேன் மேகா. உனக்கு ஓகே தானே?…”
அதற்கு அவளிடம் பதிலில்லை. என்ன சொல்ல? இல்லை என்றா சொல்லமுடியும்? இல்லை இப்படி எனக்கு நடக்குமென்று தெரியாதென்றா?
ஆனால் ஒன்று, இது எல்லாம் எதுவும் தாங்களாக நடத்திக்கொள்வதில்லை என்று விளங்கியது. எங்கிருந்தோ எதற்கோ செலுத்தப்படுகிறோம்.
அதன் போக்கில் வாழ்க்கையின் பயணம். சுகமாகவும், அதன் சுமையுடனும் சுமந்து கடக்கிறோம் என்று நினைத்திருந்தாள்.
அடுத்து என்ன என்பதெல்லாம் தோன்றவில்லை. எதுவாகவும் இருக்கட்டும். இவனுடன் என் வாழ்வு இனிப்போ? கசப்போ?
ஆனால் இவனின்றி அந்த வாழ்வு எச்சுவையையும் தனக்கு தந்துவிட போவதில்லை என்பதில் அத்தனை நிச்சயம்.
“மேகா…” என்று மீண்டும் அவளின் முகத்தின் கை நீட்டி அழைக்க,
“ஹாங்…” என்று தெளிந்து பார்த்தாள்.
“இது உனக்கு. காலையிலேயே குடுக்கலாம்ன்னா நீ வாங்கிருக்கமாட்ட. அதான் இப்ப எடுத்துட்டு வந்தேன்…” என ஒரு புது மொபைலை நீட்டினான்.
“இனி உனக்கு ப்ரைவேட் நம்பர்ல இருந்து கால் வராது. நமக்குன்னே ஒரு ப்ரைவேட் நம்பர் வாங்கிட்டேன். நீ எப்ப வேணாலும் அதுல பேசலாம்…” என்று நீட்டியவன்,
“ஸ்மைல் ப்ளீஸ் மேகா…” என்றான் அவளிடத்தில்.
அவன் கேட்டதற்கிணங்க மெல்லிய புன்னகையை அவள் முகம் பிரதிபலிக்க அசையாத பார்வையுடன் அவள் முகம் கண்டு நின்றான் அதிரன்.
“மேகா…” அவனின் கை மென்மையான அவளின் கன்னங்களுக்கருகே மெல்ல உயர்ந்தது.
முதல் முதலாய் அதை தீண்டிவிடவேண்டும் என்னும் ஆசை பார்வை அதிரனிடத்தில்.
‘அச்சோ தொடுவிடுவானோ?’ மேகா அவனையும் அவனின் கரத்தையுமே மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
முழங்கை வரை மடித்துவிடப்பட்ட சட்டை, இன் செய்யப்படாமல் படு கேஷ்வலாக இருக்க அவனின் அந்த தோரணை அவள் மனதை வேறு விதமாய் அசைத்து பார்த்தது.
“நோ…” என்றாள் பின்னே நகராமல் தலையசைத்து.
“வொய்?…” என்று சிரித்தவன் மீண்டும் கையை பாக்கெட்டினுள் நுழைத்துக்கொண்டான் அவளின் மிரட்சியான பார்வையில்.
அத்தனை பதட்டம் மேகாவினுள். இந்த நேரம் யாரேனும் வந்தாலும் கூட எத்தனை சங்கடமாகிவிடும் என நினைக்க,
“ஓகே சில். நத்திங் மேகா…” என்றான் அவளை அமைதிப்படுத்தும் விதமாக.
அதிரன் வெகுநேரமாக அங்கிருக்க பல்லவன் வீட்டிற்கு வந்தான் அஷ்வின் தனியே நின்றுப்பதை பார்த்து.
மேகா கையில் போனுடனும், அவளிடமிருந்து சற்று தள்ளி அதிரன் பாக்கெட்டினுள் இரு கைகளை கோர்த்தவண்ணம் அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை காண பல்லவன் வந்த அரவத்தில் அதிரனும் திரும்பினான்.
“ஓகே, பை. கால் பன்றேன். பேசலாம்…” என்று சொல்லிவிட்டு பல்லவன் பக்கம் வந்தான்.
“கிளம்பறேன் பல்லவன். இன்னொருநாள் மீட் பண்ணலாம்…” என்று கை நீட்ட பல்லவனும் பிடித்து குலுக்கினான்.
“ஹேவ் எ நைஸ் டே பல்லவன்…” என புன்னகையுடன் சொல்லிவிட்டு அஷ்வினையும் கொஞ்சி தனது மொபைலை வாங்கிக்கொண்டான்.
“மேகா…” மீண்டும் அழைக்க பல்லவனையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
தன் முன்னேயே இப்படி சொல்லியதில் பல்லவன் முகம் திகைத்தாலும் முயன்று முகத்தை மாற்ற அவனை கண்டு தலையசைத்தான்.
மேகாவின் பக்கம் திரும்பியவன் அவளை புன்னகைக்குமாறு கைகொண்டு காண்பித்து அவளின் சிரிப்பை கண்டு புன்னகையுடன் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான் அதிரன் தேவராஜ்.