திடீரென்று அதிரன் வந்து நிற்கவும் ஒருநொடி தான் மேகாவின் திகைப்பெல்லாம்.
அடுத்த நொடி ஒரு ஆசுவாசமான பெருமூச்சுடன் அவனருகே வந்து நின்றுகொண்டாள்.
அவளை பார்வையாலேயே அமைதிப்படுத்தியவன் புன்னகையுடன் பிரதாப்பிடம் திரும்பினான்.
“என்ன பிரதாப்? மேகாக்கிட்ட பேசனுமா?…” என்றான் அவன் புறம் திரும்பி பார்த்து.
பிரதாப்பிற்கு அந்த நிமிடத்தை எப்படி சமாளிக்க என தெரியவில்லை. அதிரன் இப்படி வருவான் என்று நினைக்கவில்லை.
திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவன் வார்த்தைகளை தேட அதிரன் மென்னகையுடன் பார்த்தாலும் பார்வையில் அத்தனை கூர்மை.
“என்ன விஷயம் பிரதாப்?…” என்றான் மீண்டும் அமைதியாக.
“வர்ணாவுக்கு கல்யாணம்ன்னு…”
“ஓஹ், உங்களுக்கு இப்போதான் தெரியுமா? எஸ், இன்னும் ட்வேன்ட்டி டேய்ஸ்ல வெடிங்…” என்றவன்,
“ஆனா உங்களை வெடிங்க்கு இன்வைட் பண்ண முடியாதே பிரதாப். ஏனா ஒன்லி ரிலேட்டிவ்ஸ்…” என்று சொல்ல பிரதாப்பின் முகம் சிறுத்துவிட்டது.
அமைதியாக நின்றான் அதிரன் பேச்சுக்களை கேட்டபடி. அவனால் இப்போது மேகாவையும் பார்க்க முடியவில்லை.
கிட்டத்தட்ட அதிரனின் முதுகின் பின்னால் நிற்பதை போலிருந்தது அவள் நின்ற விதம்.
கொஞ்சமும் மரியாதையான பார்வையும் இல்லை தன்னை பார்ப்பவள் பார்வையில்.
திருமணம் நின்ற வேகத்தில் என்னென்னவோ பேசி வைத்து அவள் தன் மீது வைத்திருந்த அபிப்ராயத்தை தானே மாற்றிவிட்டோமே என்று வருத்தம் தோய பார்த்தான்.
இப்போதும் இந்த திருமணம் எதற்கென்று அவனுக்கு தெரியவில்லை. அதிலும் மேகாவை தொடர்புகொள்ள முயன்று தோற்றிருந்தான்.
இந்த திருமணம் கட்டாய திருமணமோ? தன்னுடனான திருமண ஏற்பாடும் கூட வீட்டினர் சொல்லி சம்மதித்தது தானே? என்று தோன்றியது.
ஆனால் இப்போது அதிரன் வந்ததும் அவனை மேகா பார்த்த பார்வை பிரதாப்பிற்கு அவள் மனதை புரிய வைக்க சுரீரென்று ஒரு வலி.
“எங்க ரிஷப்ஷன் கார்ட் இருக்கு. உங்களுக்கு நேரமிருந்தா வாங்களேன்…” என்று புன்னகைத்தவன்,
“ஹர்ஷத்…” என்ற சத்தத்தில் காரில் இருந்து கார்டுடன் வந்தான் அவன்.
வாங்கிய அதிரன் பிரதாப்பிடம் நீட்ட அதனை வெறித்தபடி பார்த்துக்கொண்டே நின்றவன் தன்னை சுதாரித்து,
“இல்லை எனக்கு நேரமிருக்காது…” என்றான் உடனே.
“ஓகே, பை…” என அதிரன் சொல்லிவிட்டு,
“மேகா கெட் இன்…” என்றான் காரை காண்பித்து.
பிரதாப் நின்றுகொண்டே தான் இருந்தான் இதனை பார்த்து. மேகா அவன் பக்கம் திரும்பாமல் காரில் சென்று ஏற, அதிரன் மீண்டும் பிரதாப்பை பார்த்து புன்னகைத்துவிட்டு காரில் ஏறிக்கொண்டான்.
அவ்விடம் விட்டு கார் நகரும் வரை பார்த்துக்கொண்டே நின்ற பிரதாப்பிற்கு தனியே நிற்கும் உணர்வு.
எல்லாம் முடிந்தது. இனி எதுவும் தன் கையில் இல்லை. இருந்த சிறு நம்பிக்கையும் பொய்யாகிய கசப்பு. பைக்கை எடுத்தவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
காரில் ஏறியதில் இருந்து அதிரன் போனில் பேசிக்கொண்டே வர மேகா அமைதியாக இருந்தாள்.
பேசி முடித்து போனை வைத்தவன் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டே அவளை பார்த்து புன்னகைக்க,
“நல்லவேளை நீங்க வந்தீங்க…” என்றாள்.
“நான் வரலைன்னாலும் பிரதாப் பேசியிருக்க முடியாது. உனக்கு ஒரு சேஃப்டிக்கு ஷேடோ போட்டிருக்கேன்…” என்றதும் அதிர்ச்சியாக பார்த்தாள்.
“என்ன லுக்? எல்லாம் பாதுகாப்புக்கு தான். பயப்பட எதுவுமில்லை…” என்றான்.
அதற்கு மேல் அவனிடம் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கமுடியாமல் வேறு பேசினாள்.
“எங்க போலாம்? இப்போவே என்னோட வர ரெடியா மேகா?…” அவன் கேட்க விழித்தாள்.
பத்து நாட்களாகிற்று அவனிடம் சரியாக பேசியே. பேசமுடியவில்லை என்றாலும் ஏதாவது குறுஞ்செய்தியும், அவனின் மேகா என்ற அழைப்பையும் அவளுக்கு நாள் தவறாது அனுப்பி வைப்பவன்.
திருமணம் நெருங்கியாகிற்று. இன்னும் அவனாக அழைத்தாலன்றி மேகா அழைக்க முற்படவில்லை.
இன்னும் ஒரு தயக்கம் தந்த வெட்கம். அதுவும் திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டுமே என்னும் பதட்டம் அவளுக்கு இருந்துகொண்டே இருந்தது.
வீட்டில் அத்தனை ஏற்பாடுகள். சுபத்ராவிடமிருந்து ஒவ்வொன்றிற்கும் வரிசையாக தவறாது போன் வந்துவிடும்.
மலரிடம் கலந்துவிட்டே எதையும் செய்யலாம் என அவர் பேசியவிதம் மலரை இன்னும் வெளிக்கொண்டு வந்தது.
இப்படி திருமண நாள் அருகில் வந்துவிட அதிரனும் வந்துவிட்டான் அவனின் வேலைகளை முடித்துக்கொண்டு.
அவளிடம் கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்லாமல் அவள் பார்க்க புருவம் உயர்த்தியவன்,
“என்ன என் முகத்துல என்ன இருக்காம் மேகா?…” என்றான் அவளின் முகத்தின் முன் கையசைத்து.
“ஹாங், ஒண்ணுமில்லை…” என்றவள்,
“ஏன் இப்படி இருக்கீங்க?…” அவனின் முகத்தை கவனித்து கேட்க தன்னைப்போல் தன் தாடையை வருடியது அதிரனின் விரல்கள்.
“எப்படி? நல்லா இல்லையா?…”
“ஹ்ம்ம், ம்ஹூம்…” என்றவள் முன்னே அமர்ந்திருந்த ஹர்ஷத்தையும் கார் ஓட்டுனரையும் பார்த்துவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
“ஹர்ஷத்…” என்று அதிரன் அழைக்க அவன் திரும்பவும் அவனின் மொபைலை பார்க்கும்படி காண்பித்தான் அதிரன்.
அதை பார்த்ததும் அந்த ஏரியாவை ஆராய்ந்து மேகா வீட்டிற்கு போகும் முன்னான வேறு வழியில் ஆளரவமற்ற ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டனர். பின்னோடு வந்த பாதுகாவலர்களுமே.
“எங்க போறாங்க?…” மேகா கேட்க,
“நீ என்னோட பேச வேண்டாமா? அதான்…” என்று நன்றாக அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான். அதில் திகைத்தவள்,
“நல்லா இருக்கும்ன்னு சொல்லலை மேடம்…” என்றவன் விரல்கள் இருவருக்குமான இடைவெளி இருக்கையில் தாளமிட்டுக்கொண்டு இருக்க மேகாவின் பார்வை அவனின் விரல்களில் நிலைத்தது.
தன்னை, தன் பார்வையை கூட தாங்க இயலாமல் விழி தாழ்த்துபவளிடம் விளையாடி பார்க்க நினைத்தவன் தாளமிட்ட விரல்களை அப்படியே அவளருகில் நகர்த்த மீண்டும் இமை உயர்த்தினாள் அவன் முகத்திற்கு.
“ப்ளீஸ் நான் போகட்டுமா? இப்படி நடு வீதில நிப்பாட்டி வச்சிருக்கீங்க…”
“பத்து நாளா பேச முடியலை. நீ ஒன்னும் கேட்கலையே அதை பத்தி…”
“ஓஹ்…” என்று தலையசைத்தவன் அவள் கையில் இருந்த கார்டை எட்டி உருவினான்.
“நானே தருவேனே?…” என மேகா இன்னும் ஓரத்தில் நகர,
“உன் மடில வந்து உட்கார போறேன் பாரு இப்ப…” என்றான் ஒரு மிரட்டல் போல.
“என்ன?…” என்றவளை பார்த்தவன்,
“ஏன்? நான் உட்காரமாட்டேன்னு தான் சொல்லி பாரேன்…” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“ம்ஹூம், நீங்க சரி கிடையாது…” என்றவள்,
“வர இன்னும் பத்து நாள் ஆகும்ன்னு சொன்னீங்க? ஆனா இன்னைக்கே? நான் எதிர்பார்க்கலை…” என்றவள் முகம் அவனை கண்டுவிட்டதில் அத்தனை ஒளிர்ந்தது.
“உனக்கு சந்தோஷமா மேகா?…”
“ஹ்ம்ம், ரொம்ப…” என்றவள் முகம் மனதை போல மகிழ்ச்சியில் தத்தளித்ததை காட்டிக்கொடுக்க பார்த்து அனுபவித்தான் அதிரன்.
“உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாமேன்னு தான் வந்துட்டேன். ஆனா எனக்கே சர்ப்ரைஸ் போல…” என்று சிரிக்கவும் மேகாவிற்கு சங்கடமாகியது.
“நானும் எதிர்பார்க்கலை. அண்ணா தான் ப்ரென்ட் வீட்டுக்கு வந்து ட்ராப் பண்ணாங்க. கிளம்பும் போது கால் பண்ண சொல்லி. அவங்களுக்கு கூப்பிட்டேன் ரீச் ஆகல. சரி ஆட்டோ புடிச்சிருவோம்ன்னு நானே வந்தேன்…”
“ஹ்ம்ம்…” என்றான் அவனும்.
“நீங்க ஏன் இத்தனை சீக்கிரம்? வரதா சொல்லவே இல்லை?…”
“அங்க ஷூட்டிங் முடிஞ்சது. இன்னும் சின்ன சின்ன ஸீன்ஸ் இங்க முடிச்சிடலாம்னு தான். அதோட சாங்ஸ் இருக்கே. கமிட் பண்ணினதை முடிச்சு குடுக்கனும்…” என்றான்.
“அதான் ஷேவ் பண்ண கூட நேரமில்லையோ?…” அவனுக்கு கேட்டதை விட அவளுக்கு மட்டும் கேட்பதை போல முனுமுனுக்க சற்றே முன்னால் நகர்ந்து வந்து அமர்ந்தான் அதிரன்.
“இப்ப சொல்லு, சரியா கேட்கலை…” என அவளருகே முகத்தை கொண்டுசெல்ல,
“அம்மாடியோவ், என்ன இது?…” என்றாள் அவள் வெளியே ஜன்னல் பக்கம் பார்த்துவிட்டு.