அப்போதுதான் அண்ணனும் கிளம்ப மேகாவிற்கு கண்களை கரித்துக்கொண்டு வந்தது.
“நீ இந்த ரூம்க்கு வா…” என்று கீழிருந்த அறையில் ஒற்றை காண்பித்தவர்,
“அம்மாடி மோனிகா, பிரபா. கூட வரு இருங்கப்பா. இப்ப வந்திடறேன்…” என்று துணைக்கு இருக்க சொல்ல,
“என்னம்மா நீங்க? உங்க சொந்தக்காரங்க எல்லாம் பேசிட்டிருந்தாங்க. நீங்க கூட்டிட்டு வந்துட்டீங்க…” மோனிகா கூறவும் மேகாவை பார்த்து புன்னகைத்தவர்,
“சொந்தக்காரங்க எங்கயும் போக மாட்டாங்க. இனி ஒவ்வொரு விசேஷத்துளையும் கலந்துப்பாங்க தானே? ஆனா புதுசா கல்யாணமாகி வர பொண்ணுக்கு எப்பவும் அந்த இடத்துமேல ஒரு பயம் இருக்கும். அன்னைக்கே கூடுதலா இதையும் பேசி கஷ்டபடுத்தனுமா?…” என்றார்.
“சூப்பர் ம்மா நீங்க…” மோனிகா சில்லாகிக்க,
“நான் அதியோட அம்மா…” என சிரிப்புடன் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் செல்லவும் பல்லவனும், அதிரனும் அறைக்குள் வர அதிரனை மேகா கவனிக்கவே இல்லை.
“கிளம்பறேன்டா வரும்மா…” என சொல்லி அவளின் தலையை வருடிய நொடி அவனை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
“என்னடா? எதுக்கு இவ்வளோ அழுகை? இதே ஊர்ல தான் இருக்க போற. நினைச்ச நேரம் பார்த்துப்போம். அவ்வளோ தானே?…” என்றவனுக்கு சங்கடமாகி போனது.
அதிரனும் கைகளை கட்டியபடி இதனை பார்த்துக்கொண்டு தான் நின்றான். தங்கையை சமாதானம் செய்துகொண்டே அவனையும் திரும்பி பார்த்துக்கொள்ள தொண்டையடைத்தது பல்லவனுக்கு.
“இங்க பாரு, அண்ணா நாளைக்கு வருவேனாம். அழாம இருக்கனும். நல்ல பொண்ணுல…” என்று சிறுபிள்ளைக்கு சொல்வதை போல சொல்ல தலையசைத்தாள் மேகா.
அழுகை குறைந்து விசும்பல் மட்டுமே அவளிடத்தில் இருக்க பல்லவன் மெல்லிய குரலில் அவளுக்கு ஆறுதலை சொல்லிவிட்டு அதிரனையும் பார்த்துவிட்டு தலையசைத்து கிளம்பினான்.
சிறிது நேரத்தில் அதிரன் பக்க சொந்தங்களும் கிளம்பியிருக்க வீட்டினரும், மேகாவுடன் மோனியும், பிரபாவும் மட்டுமே இருந்தனர்.
சத்தமில்லாமல் கதவை சாற்றியவன் மெல்ல அவள் கேட்டுவிடாமல் எட்டு வைத்து அவளருகே வந்தான்.
“ஹ்ம்ம், ம்மா. சரிங்கம்மா. கேட்டுப்பேன். நீங்க அப்பாவை பார்த்துக்கோங்க. இல்லை அழமாட்டேன். நிஜமா…” மேகா சொல்லிக்கொண்டிருக்க அமைதியாக அவளின் பின்னே வந்து நின்றுவிட்டான்.
இன்னும் மேகா அவன் வந்ததை கவனிக்கவில்லை. வெளியே வேடிக்கை பார்த்தபடி பேசியவள்,
“வச்சிடறேன் ம்மா. பத்திரம்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் அங்கேயே இருந்த திண்டு போன்ற இடத்தில் போனை கீழே வைத்தாள்.
இரு நொடிகள் மூச்சை இழுத்துவிட்டவள் திரும்ப மூச்சே நின்றுவிட்டது அதிரனை அத்தனை நெருக்கத்தில் திடீரென பார்த்தவளுக்கு.
பின்னால் சாய போனவளை இடையில் கைகொடுத்து பிடித்து நிறுத்தினான் அதிரன்.
“எவ்வளோ பயம் உனக்கு மேகா….” என சிரிப்பும் கூட.
“நீங்களா?…” என்று அவனின் கைவளைவில் இருந்து தன்னை விடுவித்து பின்னால் நகர சுவற்றில் சாய்ந்து நின்றான் அதிரன்.
“மேகா…” என்று புன்னகைத்தவன்,
“ம்ஹூம், மிஸஸ். மேகவர்ணா அதிரன் தேவராஜ்…” என்றதும் மேகாவின் முகத்தின் கலக்கம், கவலை எல்லாம் அகன்று அந்த நொடி அந்த பேரிலும், அதன் உரிமையிலும், அந்த பந்தத்திலும் சென்று அழகாய் சிக்குண்டது.
அவன் சொல்லியதில் நாணம் மீதுற மேகாவின் முகத்தில் மெல்லிய புன்னகை. இன்னும் மணப்பெண்ணின் அலங்காரம் அவனை அழகாய் கட்டியது.
“லவ்லி…” அவளை பார்த்தபடி ரசனையுடன் சொல்ல அமைதியாய் நின்றாள்.
“மேகா, கிட்ட வா…” கையை நீட்டினான் அதிரன்.
“இல்லை சொல்லுங்க…” இப்போது பதற்றம் லேசாய் தொற்றியது மேகாவிடம்.
“சொல்றேன். அதான் பக்கத்துல வா சொல்றேன். நான் இன்னும் மருதாணியை சரியா கூட பார்க்கலை…” என்றவன் தானே அருகில் வந்தான்.
மேகாவின் கையை பிடித்து பார்த்து நாசியின் அருகே கொண்டு சென்றவன் வாசம் பிடிக்க நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது மேகாவிற்கு.
“விடுங்க. அண்ணி வருவாங்க…” கையை உருவ பார்த்தாள்.
“வரமாட்டாங்க…” என்றவன் இப்போது அவளை தன்னருகே திருப்பி நகர்த்தினான்.
“ஹ்ம்ம், என்னோட முகம்…” என்று பஞ்சென இருந்த உள்ளங்கையை மெதுவாய் விரல்கொண்டு வருட மேகா அதற்கே நெளிந்தாள்.
“மேகா…” அவளின் கை கொண்டே அவளின் கன்னத்தில் அழுத்தமாய் பதிக்க என்ன செய்கிறான் இவன் என்று பார்த்தாள்.
தன் விரல்களோடு அதிரனின் விரலும் சேர கன்னத்தின் தீண்டலில் லேசாய் விழி மூடியவள் எப்போது அவனின் அணைப்பிற்குள் நுழைந்தாள் என்று ஞாபகமில்லை மேகாவிற்கு.
இருவருக்குமான முதல் முதல் நெருக்கம். முதல் அணைப்பு. முதல் பிரத்யோக தொடுகை.
அதிரன் மோனநிலையில் இருந்தான். அவனின் மேகம் அவன் கைகளுக்குள். அணைப்பிற்குள். புன்னகையுடன் மனதார ரசித்து அவளை தழுவி இருந்தான்.
“ஓபன் யூர் ஐஸ் மேகா…” என்றவன் குரல் காதுக்கருகே கிசுகிசுக்க மெல்ல கண்களை திறந்தாள்.
அருகே அவனின் முகம். வாழ்நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்க நினைத்த புன்னகை. அவளை காதல் கொண்டு கவர்ந்த நேசம் மினுங்கும் கண்கள் என அதிரன், அவள் அதிரன்.
“கார்ஜியஸ் மேகாம்மா…” என்று கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய இறுக்கமாய் விழி மூடினாள்.
“இப்போ கிளீன் ஷேவ் பண்ணிட்டேன், ஓகே தானே?…” என்று அதிரன் சிரிக்க,
“ப்ளீஸ்…”
“ஹ்ம்ம்…” என்றவன் இதழ்கள் மெல்ல கன்னத்தின் அருகே காதிற்கு நகர்ந்து கீழ் இறங்க சூடான மூச்சுக்காற்றில் உணர்வெனும் மூங்கில் காடு பற்றிவிடும் போல் பயந்து போனாள்.
“நான் போகனும்…” என்ற சத்தம் அவளிடம் நலிந்த குரலில் எழும்ப,