“அண்ணி, அண்ணி எங்க?…” என்று கேட்டபடி அங்கிருந்து நகர முயல மீண்டும் இழுத்து அணைத்தான்.
“உன்னோட ரெண்டு அண்ணியும் அம்மாவோட சைட் சீயிங் போயிருக்காங்க. உன்னை பார்த்துக்க சொல்லி என்கிட்டே விட்டுட்டு…” என கூறவும் மேகாவின் பார்வை கதவிற்கு சென்றது.
“லாக் பண்ணிட்டேன். யாரும் வரமாட்டாங்க…” என்று புன்னகையுடன் சொல்லியவனின் முகத்தை பார்க்க முடியவில்லை.
அவள் விழி உயர்த்தினால் அதிரனின் மீசையும், அதற்கடியிலான புன்னகை மிளிரும் இதழ்களுமே அவளின் பார்வையில் பதிந்தது.
“அச்சோ…” என்று கண்ணை மூடி அவன் நெஞ்சில் தலையை முட்டி நிற்க,
“என்ன பார்த்த அச்சோவுக்கு?…” எத்தனை இலகுவாய் வந்தது அவனின் குரல்.
“விடுங்களேன் ப்ளீஸ்…” என்றவளின் கழுத்தில் மீண்டும் முகத்தை புதைக்க அதற்கு மேல் முடியாமல் அவனை தள்ளிக்கொண்டு கதவை திறந்து வெளியேறினாள்.
“ஹேய் மேகா, மெதுவா…” என்றபடி அதிரன் நிதானமாய் வெளியே வர கீழ் தளத்தை பார்வையிட்டு முடித்து வந்த மோனிகா வந்துவிட்டாள்.
“வரு…” என்றதும் அவளின் பக்கத்தில் வந்து நின்றவள்,
“எங்க போனீங்க அண்ணி?…” என கேட்டாலும் இன்னும் உடலில் ஒரு நடுக்கம்.
அதிரனை ஓரப்பார்வை பார்த்தவாறு மோனிகாவிடம் பேச அதிரன் வெகு சாதாரணமாக வந்துகொண்டு இருந்தான்.
“நாங்க இங்க தான் இருந்தோம். ஆமா நீ ஏன் இப்படி மூச்சு வாங்க வர?…” என்ற பிரபா,
அதிரன் நமுட்டு சிரிப்போடு அவளை பார்த்துக்கொண்டே அஷ்வினை மடியில் தூக்கி வைத்துக்கொள்ள அவனை லேசாய் முறைத்துவிட்டு கை கொண்டு அதனை தட்டிவிட இச்சென்று ஒரு சத்தம்.
அதிரன் தான் அஷ்வினின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டு இருந்தான். பார்வை மேகாவின் கழுத்திலும், மருதாணியிட்ட கையிலும் இருக்க உள்ளங்காலே கூசிவிட்டது.
தனது உள்ளங்கையை எடுத்து பார்த்தவள் அலும்பு பண்ணும் அவனை அழமாட்டாத குறையாய் பார்த்தாள்.
மோனிகாவும், பிரபாவும் சிரித்துக்கொண்டே அவர்கள் பேசட்டும் என அவ்விடம் விட்டு நகர்ந்து செல்ல பார்க்க,
“அண்ணி நானும் வரேன்…” என்று ஒட்டிக்கொண்டு ஓடினாள் மேகா.
“இப்ப என்ன எங்களோட? நீ போய் ரெஸ்ட் எடு. இல்லனா அவரோட பேசிட்டிரு…” பிரபா சொல்ல,
“இல்லை தூக்கம் வரலை…” என மறுத்துவிட்டாள்.
இரவை நினைக்கையில் இருந்த சோர்வெல்லாம் பறந்துபோக அடிவயிற்றில் கலவர பந்து இம்சையை கூட்டியது.
தனியே அறைக்குள் இருந்தால் மீண்டும் அதிரன் வந்துவிடுவானோ என்றும் அச்சம்.
அதிலும் பகலில் அத்தனை பேர் வெளியில் இருக்க கதவை அடைத்துக்கொண்டு உள்ளிருக்க சங்கடமாய் இருந்தது.
இன்னுமே அவ்வப்போது கழுத்து மச்சம் குறுகுறுப்பை கூட அவ்வப்போது அதனை வேறு பதறி தட்டிவிட்டாள்.
இப்படி அரண்ட முகத்துடன் வலம் வர மோனிகாவிற்கு தான் அவளை காணவே பாவமாக இருந்தது.
“நாங்க இங்க தான் இருக்கோம் வரு. என்ன நீ முகத்தை இப்படி வச்சுட்டு இருக்க? சந்தோஷமா இருக்க வேண்டாமா?…” என்று சத்தம் போட,
“தெரியலை அண்ணி, பதட்டமா இருக்கு…” என மனதை வெளியிட்டாள்.
“இன்னைக்கு எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கற நெவேர்ஸ் தான் உனக்கும். சரியாகிடும்…” என்ற மோனிகா,
“இதுக்கா இவ்வளோ கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் நடந்துச்சு? சும்மா எதையும் நினைச்சு பயந்துட்டு இருக்காம கொஞ்சம் அமைதியா இரு. உனக்கு நான் சொல்லனுமா?…” என்றதும் மௌனமாக இருந்தாள்.
“இங்க நாங்க மட்டும் தான் இருக்கனுமா?…” மேகா கேட்க,
“பின்ன ஒரு ஊரையே கூட்டிட்டு வந்து இருப்போமா? ஊர் எதுக்கு பேசாம உன் சந்திரா அத்தையை கூட்டிட்டு வந்து துணைக்கு வச்சுக்கோ. வேற யாரும் தேவைப்படமாட்டாங்க…” என சொல்ல,
“என்னவாம் என்னை விட்டுட்டு என் அம்மாவை பத்தி பேச்சு…” பிரபா வந்தமர,