மயங்கிய குரலில் அவன் சொல்ல மேகாவிற்கு அவ்வுணர்வை தாங்கவியலாமல் கிறுகிறுத்தது.
‘இன்னைக்கு கீழே போன மாதிரி தான் போல?’ என நினைத்தபடி அசையாமல் நின்றாள்.
“மேகா…”
“ஹாங் சொல்லுங்க…”
“சொன்னேனே? அதி சொல்லுன்னு…”
“அது இப்ப சொல்லமுடியாது….”
அவனின் கைகளை எடுத்துவிடவும் முடியவில்லை. தன்னுடன் ஒட்டிக்கொண்டு நின்றவன் அவளின் கையையும் கட்டியதை போல இடையோடு அணைத்திருக்க காதினருகே கிசுகிசுப்பாய் குரல் மட்டும்.
வெளிச்சம் இறங்க ஆரம்பித்து அறையில் ஊடுருவி இருந்தது. கண்ணாடியின் முன், அதுவும் தன் முகத்தை அவன் பார்த்து ரசிக்கும் வண்ணம் நின்றிருந்தது பெண்ணை கிறங்கவும் செய்திருந்தது.
ஆனாலும் உள்ளுக்குள் கொஞ்சம் சுதாரிப்பு. விட்டுவிட்டால் கிளம்பி ஓடிவிடலாம் என்று.
அவன் தள்ளி நின்றால் தானே என்பதை போல அவளை தன் கைகளுக்குள்ளேயே பொத்தி வைத்திருந்தான்.
“கீழ போகனும்…”
“அம்மா வையும், காசு குடு டயலாக்கா?…” என்று இன்னும் சிரித்தவன் கழுத்தில் குறுகுறுப்பு மூட்ட,
“பர்ஸ்ட் டைம் கால் பண்ணும் போதும் எவ்வளோ கோவம். அழுதாலும் உன் கண்ணு தீ மாதிரி என்னை எரிச்சிருவோமான்னு தானே பார்த்துச்சு மேகா?…” என்றான் இலகுவான குரலில்.
அப்போது தான் அவனை எத்தனை பேச்சு அன்று பேசினோம் என்று ஞாபகம் வர மேகாவின் முகம் சின்னதாகிவிட்டது.
அதுவரை வெட்கத்தில் ஜொலித்த முகத்தின் சோகத்தில் கூட சிறிது சோபையும் தென்பட அதிரனின் முகம் கனிந்தது.
“ஹேய், என்னடா?…” என்றான் அவளை தன் பக்கமாய் திருப்பி.
“ம்ஹூம், ஒண்ணுமில்லை…”
“என்ன ஒண்ணுமில்லை? மேகம் முகமே வாடிருச்சே?…” அவளின் தாடையை பிடித்து தன்னை நோக்கி முகத்தை நிமிர்த்தினான்.
“சும்மா, வேறொன்னுமில்லை…”
“எப்பவுமே மனசுல இருக்கறதை சொல்லமாட்டியா மேகா? எனக்கு டெஸ்ட் வச்சிட்டே இருக்க. நானே கண்டுபிடிக்கனும்னு…”
சாதாரணமாய் சொன்னாலும் சிறிது மனத்தாங்கல் இருந்ததோ என்று குரல் ஏற்ற இறக்கங்கள் மேகாவை குழப்பியது.
“என்னடா?…” என்றவனை பார்த்து தலையாட்டியவள் அவனை அணைத்துக்கொண்டாள்.
“வாவ் மேகா…” அதற்கும் அவன் சிலிர்த்து சிரித்தான்.
“மேகம் தானா கூடி வருதே?…” என்று அவளை அப்படியே தூக்கி சுழற்ற,
“நான் அன்னைக்கு ரொம்ப பேசிட்டேனே? அதான் இப்ப…”
“நீ ஒன்னும் தப்பா பேசலை. சொல்லபோனா இன்னும் பேசியிருக்கலாம்…” என்று சிரித்தவன்,
“அவ்வளோ அப்படி ஒரு லுக் உன்னை நான் பார்த்துட்டேன். ரசிச்சுட்டேன்…”
“என்ன?…”
“ஆமா உன்னோட இந்த மச்சம் என்னை பார்க்க வச்சிடுச்சே. அப்போ என்னை பேசினதுல என்ன தப்பு?…”
“பார்த்தது தப்பு தான்…” அதற்கு மேல் அந்த விஷயத்தில் அவனுக்கு ஆதரவாக பேச முடியாமல் அவள் நிற்க,
“பார்த்தது மட்டுமில்லை. இப்படியும் தோணுச்சே…” என்று மீண்டும் மச்சத்தின் அருகே முகத்தை சாய்க்க,
“விடுங்க முதல்ல…” என்று நகர்ந்து திரும்பிக்கொண்டாள்.
“என்ன கலாட்டா இது?…” மேகாவிற்கு அவனை சமாளிக்க முடியவில்லை.
“கலாட்டாவுக்கு பேர் வைக்கலாம் மேகா…” மீண்டும் அணைத்துக்கொண்டு நின்றான்.
“ப்ளீஸ், நான் கிளம்பனும். அண்ணி கூட பரவாயில்லை. பிரபாண்ணியும் இருக்காங்க. அம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க…”
“இன்னைக்கு லேட்டா போனா தான வருத்தப்படமாட்டாங்க மேகா. நீ சினிமால்லாம் பார்க்கறதில்லையா மேகாம்மா?…”
“ம்ஹூம், இன்னைக்கு ரொம்ப பேசிட்டீங்க…”
“நேத்தும் பேசினேன். ஒன்னும் சொல்லலை…” அதிரனின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
மேகாவால் அவனின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க, கணிக்க முடிந்தது. தன்னை பார்க்கும் நேரம் மின்னலடிக்கும் அந்த விழிகளே ஆயிரம் சாட்சி தன் மீதான அவனின் நேசத்திற்கு.
தன்னருகில் இருக்கையில் இவன் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறான் என தோன்றாமல் இல்லை.
“மேகம் உடனே யோசனை?…” என்றவன்,
“ஓகே, நீ கிளம்பு, நான் இப்படி நிக்கறேன்…” என்றான் அவளின் முன்னால் வந்து நின்று தலைசாய்த்து.
“ஹ்ம்ம், சரி…” என்றாள் சிரித்துக்கொண்டே.
“அப்ப ஓகே…” என்று ட்ரெஸ்ஸிங் டேபிளில் சாய்ந்து நின்றுகொண்டவன் அவள் பின்னல் போடுவதை பார்த்துக்கொண்டே நிற்க இப்போது மேகா விழித்தாள்.
“இதென்ன இப்படி பார்வை?…” என்றாள்.
“நீங்க தானே மேகமே சரி சொன்னீங்க? அதான்…” என்று தோளை குலுக்க,
“தெரியாம சொல்லிட்டேன் ப்ளீஸ்…”
“ஓகே ஓகே, சில்…” என்று அவளின் கன்னம் தட்டிவிட்டு தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு கதவை திறக்க மேகாவும் வந்துவிட்டாள்.
“டன், போலாம் தானே?…”
“ஹ்ம்ம்…” என்றவள் பார்வை வெளியே வீட்டை சுற்றியபடி சுழன்றது.
“யாரை தேடற மேகா?…”
“ஹாங், அத்தையை தான்…”
“அம்மா டேப்லெட் போட்டுட்டு தூங்கிட்டிருப்ப்பாங்க. நேத்து ரொம்ப டயர்ட் ஆகிட்டாங்களே? அவங்களுக்கு முடியாது. அதனால இன்னும் எழுந்திருக்க மாட்டாங்களா இருக்கும்…” என்றான் அதிரன்.
“ஹ்ம்ம்…” என்று கீழே வர ஹாலில் தேவராஜுடன் அஷ்வின் விளையாடிக்கொண்டு இருக்க மோனிகாவும், பிரபாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.