“என்னவோ அதிரன் இவர் பொண்ணை கட்டிக்கிட்ட மாதிரி எவ்வளோ நாட்டாமை பாரேன்…” என்று சொல்லி பொருமினார்கள்.
அதிரனுக்கு விருந்து தடபுடல்பட்டது. மேகாவை வைத்தே கேட்க சொல்லி பரிமாற எதையும் மறுக்கவில்லை.
அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துகொண்டவன் புன்னகையோடு போதும் என்றுவிடுவான்.
அவனின் முகம் மாற ஆரம்பிக்க மேகாவிற்கு புரியவில்லை. அவன் முயன்று சமாளிக்கிறான் என்று தெரிந்தது.
“நான் ரெஸ்ட் எடுக்கனும் மேகா. உன் ரூம் போறேன்…” என கையை கழுவியதும்.
“வாங்க…” என்று அழைத்து சென்றாள்.
“நீ வேணா பேசிட்டிரு. நான் இங்க இருக்கேன், கொஞ்சம் தண்ணி மட்டும் கொண்டு வந்து குடு…” முகத்தில் என்னவோ அசாதாரணம்.
“ஹ்ம்ம், யாரும் வரமாட்டாங்க. நீங்க லாக் பண்ணிக்கலாம்…”
“ஓகே, தண்ணி கொண்டுவா…” என்று சொல்லி கதவை சாற்றிக்கொண்டான்.
மேகா நகர்ந்து வரும் பொழுதே யோசனை அதிரனை எண்ணி. இரவு தானாவது தூங்கினோம். அவன் உறங்கினானா என்பது கூட தெரியவில்லை.
விடியலை நெருங்கும் வரை மேகா மேகாவென்று அவனின் ஆளுமை குறையவில்லையே.
பேசினான், முத்தமிட்டான், வருடினான், கொஞ்சினான், இப்படி ஒவ்வொரு நொடியும் தன் முகம் பார்த்து தன்னை பேச வைத்து என்று அவனின் இரவுகள் முழுவது தன்னிடமே தஞ்சமடைந்திருந்ததே.
இப்போது நன்றாக உறங்கட்டும் என நினைத்தபடி கிட்சனிற்கு வந்தாள் மேகா. ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க,
“எதுவும் வலுக்கட்டாயமா இருக்க கூடாது மேகாம்மா, தானா நடக்கனும். தெரியும் பொது தெரிஞ்சிக்கலாம். அப்ப தான் தானாவே மனசுல பதியும். நீ என் மனசுக்குள்ள பதிஞ்ச மாதிரி. உன்னையறியாம உனக்குள்ள நான் நுழைஞ்ச மாதிரி…”
“ஹ்ம்ம்…” என்றாள் மலர்ந்த சிரிப்புடன்.
“எங்க இதோட அதி சொல்லு, கேட்போம்…” என்று வம்பிழுக்க,
“ம்ஹூம்…” என்றவள் அவனை நெருங்கி தானாக தோளில் சாய்ந்துகொள்ள,
“நீ என்ன பண்ணாலும் வாவ் சொல்ல தோணுதே மேகா. ஜஸ்ட் வாவ்…” என்றான் அதிரன் கிசுகிசுப்பாக அவளின் மச்சத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு.
இன்னும் அவளை தன் அருகே இழுத்தவன் நெருக்கமாய் அணைத்துக்கொள்ள அவனுக்கு வாகாய் அவன் கைகளில் நெகிழ்ந்தாள் மேகா.
“வெளில யாரும் உன்னை தேடமாட்டாங்களா?…”
“தெரியலை, அண்ணி தான் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. ஈவ்னிங் தான் வெளில வரனும்னு…”
“ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாதுன்னு சொல்லிடு நீ…” என சிரிக்க,
“உங்களை…” என்று அவனின் தோளில் தட்டினாள்.
“ஹ்ம்ம், நல்லது தான். இல்லைன்னா நீ வெளில என்ன பண்ணிட்டிருக்கன்னு நினைச்சுட்டே இருப்பேன்…” என சொல்ல,
“எப்பவும் நினைச்சிட்டே இருப்பீங்களோ?…” தலையுயர்த்தி அவள் கேட்க நெற்றியில் முட்டியவன்,
“எப்பவும், எப்பவும், எப்பவும் மேகா…” என்றவன் அதனை நிறுத்தவில்லை.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இதழ்கொண்டு ஊர்வலம் நடத்த கூச்சத்தில் அவனின் மார்போடு ஒண்டிக்கொண்டாள் மேகா.