சற்று நேரத்தில் அமுதினியன் இல்லத்தில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டனர் அதிரனும் மேகாவும்.
முறையாய் அதிரனின் உறவுகளில் இருந்து தான் யாரேனும் மணமக்களை மறுவீட்டிலிருந்து அதிரன் வீட்டிற்கு அழைத்து செல்ல வந்திருக்க வேண்டும்.
அப்படி யாரும் வர கூடியவர்கள் அல்ல என்பதால் இந்த முறையை அப்படியே விட்டுவிட்டனர்.
சுபத்ரா மோனிகாவையே அதிரனின் தங்கை முறையில் இருந்து அழைத்துக்கொண்டு வந்து விட்டுவிட்டு செல்லும்படி சொல்லிவிட பல்லவனும் மோனிகாவும் உடன் கிளம்பினார்கள் அஷ்வினை அழைத்துக்கொண்டு.
மீண்டும் அதிரனின் வீட்டிற்கு என்று குதித்துக்கொண்டு சந்தோஷமாய் கிளம்பினான் அஷ்வின்.
கேட்பதற்கு அழகாய் பதில் சொல்லி, தானும் பேசி என வழி முழுவதும் அதிரனும் அஷ்வினும் இருக்க இடையிடையே பல்லவனும், மோனிகாவும் பேச மேகா அரை உறக்கத்தில் கண்களை திறப்பதும் மூடுவதுமாய் இருந்தாள்.
“வொய்ப் முதல்தடவையா பரிமாறும் போது அவாய்ட் பண்ண முடியுமா அங்கிள்?…” என்றவன் தேவராஜை பார்க்க அவரின் முகத்தில் அதிருப்தி.
மருத்துவரை வைத்துக்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. அதனால் அமைதியாக நின்றார்.
“ஓகே, இந்த சிரப் அன்ட் டேப்லெட் நான் சொன்ன டைம்க்கு ஃபாலோ பண்ணுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்தா தலைவலி சரியாகிடும். சேராத சாப்பாட்டினால தலைவலி வந்திருக்கு. வேற ஒண்ணுமில்லை…” என்று சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் வருவதாக கிளம்பி சென்றார்.
“என்ன அதி இதெல்லாம்?…” தேவராஜ் மகனிடம் கேட்க,
“ப்பா லீவ் இட். சரியாகிடும்…”
“இது அதிரன் இல்லையே? எத்தனை நல்லதாவே இருந்தால் பழக்கமில்லைன்னா தொட மாட்டான் தானே?…” என்றவரின் குரலில் அழுத்தம் மிகுந்தது.
“ப்பா, முதல் தடவை அங்க போயிருக்கேன். அவங்களுக்கு தெரியுமா எனக்கு என்ன வேணும், வேண்டாம்ன்னு. ஆசையா செஞ்சு வச்சிருக்காங்க. மறுக்க முடியலை…”
“ம்ஹூம், வர்ணா பரிமாறினதால மறுக்க முடியலை. அதுதானே சரி…” என்று கேட்க,
“அப்படியும் சொல்லலாம்…”
“அதி…”
“அப்பா இது ஒரு சின்ன விஷயம். சரியாகிடும்…”
“எப்படி இவ்வளோ ஈஸியா சொல்ற நீ? நீ ஒரு ஆக்டர். அதோட சிங்கரும் கூட. ஸ்டமக் அப்ஸட் ஆனதோட ஓகே. ஆனா இதுவே அலர்ஜின்னு வந்திருந்தா?…” என்றவர்,
“எல்லாத்துக்கும் மேல எங்க பிள்ளை. நீ பெரியவனாவே இருந்தாலும் எங்களுக்கு நீயும், உன் ஆரோக்கியமும் முக்கியம் அதி…” என்றார் அவர்.
“ப்பா…” அதிரனுக்கு சங்கடமாக இருந்தது தேவராஜ் இப்படி பேசுவதை கேட்டு.
“அதி நான் சொல்றது உனக்கு புரியுதா? அதுவும் தெரிஞ்சும் சாப்பிட்டு இவ்வளோ நேரம் அதை பொறுத்திட்டும் இருந்திருக்க. எனக்கு இது சரியா படலை…”
தேவராஜன் தன் அதிருப்தியை சொல்லிவிட அதிரனுக்கு அவரிடம் ஒன்றும் பதில் பேச முடியவில்லை.
“ஏன் வர்ணாவுக்கு உனக்கு என்ன பிடிக்காது, பிடிக்கும்ன்னு தெரியாதா?…” அடுத்த கேள்வி.
“மேகாக்கிட்ட நான் எதுவும் சொல்லலையே?…” என்றவன்,
“இந்த விஷயம் இதோட முடியட்டும். விடுங்க. இனி இப்படி நடக்காது…” என அதிரன் சொல்லிக்கொண்டிருக்க,
“என்ன வரு இங்கயே நின்னுட்ட நீ? வா உள்ள…” என்று பேசிக்கொண்டே சுபத்ரா உள்ளே வர வெளிறிய முகத்துடன் அவரின் பின்னே வந்தாள் மேகா.
பார்த்ததும் அதிரனின் நெஞ்சம் நின்று துடித்தது. நிச்சயம் கேட்டிருப்பாள் என்பது அவளின் முகத்திலேயே தெரிய,
“மேகா…” என்றான் மெதுவாய்.
தேவராஜ் மருமகளை பார்த்ததும் முகம் மாறியவர் ஒரு தலையசைப்புடன் நகர்ந்தார்.
“என்ன அதி? நாங்க வரப்போ தான் டாக்டர் கிளம்பினார். அதான் வருவை என்னன்னு பார்க்க சொல்லிட்டு டாக்டர்கிட்ட போனேன்…” என்றவர்,