அவன் தர மறுக்காமல் வாங்கிக்கொள்ளவும் செய்திருந்தாள். பெரிதாய் மனதைவிட்டு கேட்டுக்கொள்ளவில்லை.
இன்னும் அவளில் இருந்து முழுதாய் வெளிப்பட்டு பேசவில்லை என உணர்ந்து தான் இருந்தான் அதிரனும்.
அதிலும் அவளின் சுபாவமே அப்படி இருக்க அதிரனுக்கு அதுவுமே பிடிக்கத்தான் செய்தது.
அளந்த பேச்சுக்களும், மொத்தமாய் அள்ளிக்கொள்ளலாம் என தோன்ற வைக்கும் வெட்கங்களும் என மேகாவின் ஒவ்வொரு பரிமாணத்திலும் அதிரன் உயிரில் நிறைய தான் செய்தாள்.
கதவு தட்டப்பட அவன் யோசித்தபடி சாய்ந்திருக்க மேகா தான் எழுந்து சென்று வாங்கி வந்தாள்.
“இப்ப பெட்டரா?…” என்று கேட்டபடி தனக்கு ப்ளாக் டீயை எடுத்துக்கொள்ள மேகா காபியை எடுத்துக்கொண்டாள்.
“காபி ரொம்ப இஷ்டமோ?…” அவள் சில்லாகித்தபடி குடிப்பதை பார்த்தவன்,
“ரொம்ப ரொம்ப. அதுவும் இப்படி ஒரு கிளைமேட்க்கு இவ்வளோ ஸ்பெஷலான காபினா குடிச்சிட்டே இருக்கலாம்….” என சொல்ல தலையசைத்து சிரித்தவன் எழுந்து சென்று ஒரு பெட்டியில் இருந்து மாத்திரையுடன் வந்தான்.
“இதை போட்டுக்கோ மேகா…” என நீட்ட,
“இப்போ எதுக்கு?…”
“பீவர் வராம இருக்கனுமே? இந்த மழை உனக்கு ஒத்துக்குமோ இல்லையோ?…” என்றபடி அமர,
“அப்ப நீங்களும் போடுங்க. உங்களுக்கும் ஒத்துக்காம போச்சுன்னா…” என்றவள் வாங்கி போட்டு காபியை குடிக்க அதிரன் எடுக்கவில்லை.
“நீங்க?…”
“எனக்கு பழகிருச்சு மேகா. நான் நிறையதடவை இங்க வந்திருக்கேன். நனைஞ்சிருக்கேன்…” என்று தனது டீயை குடித்து முடித்து டேபிளில் வைத்துவிட்டு எழுந்து சென்று ஜன்னல் திரையை பார்த்தான்.
மழை இப்போது பலமாய் பெய்துகொண்டு இருந்தது. கூடவே அப்படி ஒரு காற்று வேறு.
தனது பாதுகாவலன் வசந்த்திற்கு அழைத்து உடன் வந்தவர்களை பத்திரமாய் இருக்கும்படி எச்சரித்துவிட்டு போனை வைத்தான்.
“இன்னைக்கு எங்கயும் போக முடியாது போல?…” என சிரித்தபடி மேகாவை கை நீட்டி அழைக்க,
“இதை வெளில வச்சிட்டு வரேன்….” என்று ட்ரேயை வெளியே வைத்துவிட்டு கதவடைத்துவிட்டு வந்தாள்.
அருகே வந்தவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் குளிருக்கு அவளிடம் இதத்தை தேட மேகாவும் விழிமூடிக்கொண்டவள் திகைப்பாய் விழி திறந்தாள்.
“அதி, என்னாச்சு?…” என அவனின் மாற்றத்தில் கேள்வி எழுப்ப,
“ஹ்ம்ம் மேகா…” என்றவன் தன்னை கட்டுப்படுத்தி நிதானத்தில் வந்து அவள் முகம் பார்த்தான்.
“என்னடா? நாத்திங்…” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு இறுக்கிக்கொள்ள அவனிடம் மிதமான வன்மையை சற்றுமுன் மேகா உணர்ந்தது உண்மை.
“அதி…” என்றவளிடம் இருந்து விலகியவன்,
“மேகாம்மா, கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நீ ஓகே தானே?…” என்று கேட்டான் சங்கடத்துடன்.
“என்னடா? ஏன் இப்படி பார்க்க?…” குரலே கம்மிவிட்டிருந்தது அதிரனுக்கு.
அவன் வருந்துகிறான் என புரிந்தது. அவனை வேண்டாம் என்ற பொழுதே அந்த வேதனை சுமந்த முகம் நெஞ்சை விட்டு மறையவில்லை மேகாவிற்கு.
இப்போது முழுக்க முழுக்க காதல் சுமந்த மனது, அவனின் கஷ்டத்தையும், மருகளையும் பொறுக்குமா?
“அதி…” என்றவள் அவனை திரும்பி அணைத்துக்கொள்ள அதிரனுக்கு ஆறுதலாக இருந்ததோ என்னவோ அவனை மீண்டும் பழைய அதிரனாக பார்த்துவிட வேண்டுமே என அவள் தவித்து போனாள்.
இங்கே வந்ததில் இருந்து அதிகபட்ச சந்தோஷம். அதிலும் மேகமலையின் அடிவாரத்தில் அவ்வப்போது மேகாவின் முகம் பார்க்கவும் இயற்கையை பார்க்கவும் என அந்த அதிரன் இன்னும் வித்தியாசமாய் தெரிந்தான்.
இப்போது காலை தன்னை எழுப்பிக்கொண்டு மேகங்களுக்கு நடுவே நிறுத்தியதும், சற்று முன்னான இணைவில் தெரிந்த மாற்றமும் என மேகாவை திகைக்க செய்தது.
“நத்திங் டா மேகாம்மா…” என தன்னை நிதானித்துக்கொண்டான் அவளின் அணைப்பில்.
“முதல் தடவை உன்னை லைவ்ல பார்த்ததுக்கு அப்பறமா. உன்னோட பேசினதுக்கு அப்பறமா. நிறைய முறை. கணக்கில்லை. அப்போ எல்லாம் எனக்கு இருந்த ஒரே ஆறுதல் இந்த மேகங்கள் தான். வருவேன். போய்டுவேன். ரொம்ப தங்கமாட்டேன்…”
“அதி…”
“ஹ்ம்ம், எப்பவும் சிரிப்பும், அதை தாண்டி அமைதியும் என் அடையாளமாவே இருந்துச்சு. ஆனா மனசு. அது படும்பாடு. இங்க உன்னையே நான் உணர்வேன். உன் கூட இருக்கிறது மாதிரி ஒரு ஃபீல். அதான் முதல் தடவை உன்னோட இங்க வரனும்னு முடிவு பண்ணேன்…”
“என்னை பிடிக்கலைன்னு ஹாஸ்பிட்டல்ல வச்சு சொன்னியே? அன்னைக்கு நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என்னால வீட்டுலையும், சென்னைலையுமே இருக்க முடியலை. இங்க தான் இங்கதான் வந்து இருந்தேன்…”
“உன்னோட இங்க வரவே முடியாதோன்னு கூட நிறைய நினைச்சிருக்கேன். இப்போ நான் தனியா பார்த்து அனுபவிச்ச எல்லாம் என் மேகாவோட…” என்றவன் உணர்ச்சிவசப்பட்டு பேச பேச பார்த்துக்கொண்டே இருந்தவள் தானாக எம்பி அவனின் பேச்சை நிறுத்தினாள்.
அவனுக்கு அவள் தரும் முதல் முத்தம். எப்போதும் பெற்றுக்கொண்டே இருப்பவள் இன்று அவனுக்கு திருப்பி தர முற்றிலும் தொலைந்து தான் போனான் அதிரன்.
இது என்னவிதமான நேசம்? எதிர்பார்ப்பில்லாத அன்பு. அது நிறைவேறிவிட்டதில் மனதிற்குள் அமிழ்ந்திருந்த அழுத்தங்கள் வெடித்து மேகங்களோடு காற்றில் பறக்கும் இந்த தருணம்.