“டேய் பொண்ணே? என்னடா பண்ண?…” அதிரனின் பழைய துள்ளலும், காதல் கொண்ட குரலும் மீண்டுவிட்டது.
“நத்திங்…” என சொல்லியவள் வெட்கத்துடன் வேறு திசை திரும்ப,
“ஹ்ம்ம், நான் கொஞ்சம் பீல் பண்ணா மேகம் என்னவோலாம் தருதே?…” வெகுவாய் அவளை சீண்ட,
“ப்ளீஸ்…” என்றவள் தன் செய்கையில் இன்னுமே நாணம் கொண்டாள்.
“ஒன்ஸ் மோர் மேகா. பாரேன், ஜஸ்ட் வாவ் சொல்ல கூட மறந்துட்டேன் நான்…”
“அச்சோ, தெரியாம குடுத்துட்டேன்…”
“தெரிஞ்சு குடுக்கலைன்னா திருப்பி வாங்கிக்கோ, வேண்டாம். வேண்டாம்…” என்றவன் மச்சத்தை முற்றுகையிட்டவன்,
“ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப்குள்ள குடுக்கறதை விட வாங்கறதுல உள்ள சந்தோஷம் தனி இல்லையா பொண்ணே? இன்னும் வேணும்னே தோணுது….” என பேசினான்.
“போதும் அதி, பசிக்குது…” என திசை திருப்பினாள் அவனை.
“டைம் என்ன?…” என்று பார்த்தவன்,
“இப்ப ரெடியாகிருக்கும். நான் குளிச்சுட்டு போய் பார்த்துட்டு வரேன்…”
“ம்ஹூம், இருங்க. அவங்களே கூப்பிடட்டும். அதுவரை தூங்கலாம்…” என்று அவனின் கை பிடித்து மேகா தடுக்க,
“தூங்கலாம். எப்படியும் வெளில போற சூழ்நிலை சுத்தமாய் இல்லை. அதனால ரூம்க்குள்ளையே தான் இருக்கனும்…” என்று கை உயர்த்தி தன்னை அலுப்புடன் உடல் வளைத்து சொல்லியவன்,
“ஓகே வாஷ் ரூம் போய்ட்டு வரேன்…” என சொல்லி கண்சிமிட்டிவிட்டு செல்லவும் ராஜாயை இழுத்து கழுத்துவரை போர்த்திக்கொண்டாள் மேகா.
‘காதலின் தனிமை’ அவன் எத்தனைய அவஸ்தையை அனுபவித்திருக்கிறான் என்பது மேகாவிற்கு அதிரனின் சொல்லிலும் செயலிலும் முழுதாய் விளங்கிவிட்டது.
அதிரனின் அன்பு இப்போதும் எப்போதும் அவளை பிரமிக்க செய்வதாக மட்டுமே இருந்திருக்கிறது.
அன்று இரவு முழுவதும் அவனுக்கு எங்கேனும் வலி இருக்கிறதா இல்லையா என்று பார்த்து பார்த்து எழுந்து கவனிக்க அதிரனின் முகத்தை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
“ஒன்னுமில்லடா, நீ ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகற மேகா?…” என்று அவளை சமாதானம் செய்தான் அவன்.
மறுநாள் காலை வீட்டிலிருந்து அழைப்பு. அதிரனுக்கு இப்போது நன்றாக இருக்க வலி எதுவுமில்லை என்றதும் நிம்மதியுடன் மேகா இருக்க மலர் தான் பேசினார் மகளிடம்.
“நேத்து ஈவ்னிங் நீ கூப்பிடுவன்னு நினைச்சேன் வரு. கூப்பிடலைன்னதும் தான் இப்ப நானே போன் பண்ணேன்…” என்றார்.
“இல்லம்மா, வந்து இங்க அவங்களோட பேசிட்டிருந்ததுல மறந்துட்டேன்….” மேகாவினால் வேறு எப்படியும் சமாளிக்க முடியவில்லை.
வந்ததும் மருத்துவர் வந்து செல்ல, பின் தேவராஜ், சுபத்ரா பேச்சு. அதிரனிடம் அழுகை என்று நாள் முடிந்துவிட்டதே.
அதிலும் இரவு அதிரன் நெருங்க அவனுக்கு முடியவில்லை என்று மேகா மறுத்ததும் கூட ஒன்றும் சொல்லாமல் அணைத்துக்கொண்டே உறங்கி இருந்தான் அவன்.
நினைவுகள் மொத்தமும் அவனும், அவனின் உடல்நிலையும், இனி அவனை எப்படி கவனிக்க போகிறோம் என்பதே ஆக்கிரமித்து இருந்தது மேகாவிற்கு.
இதில் எங்கே வீட்டின் நினைவு வருவதை போலிருக்க என தோன்றாமலில்லை உள்மனதிற்குள்.
ஆனால் மேகா வருத்தத்துடன் சொல்லியதை போலவெல்லாம் மலர் நினைக்கவில்லை. அவருக்கு ஏக சந்தோஷம் தான்.
“அதிருக்கட்டும், நேத்து நம்ம வீட்டு சாப்பாடு பிடிச்சிருந்ததா மருமகனுக்கு? எந்த டிஷ் புடிச்சது?…” என்றார் ஆர்வமாக.
“என்னம்மா? எதுக்கு?…”
“என்ன எதுக்கு? இனி அவர் வரும்போது செய்யலாம்ல? என்ன பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சு வச்சுக்கறது நல்லது தானே?…”
“ஆமாம்மா….” என்றாள் சங்கடத்துடன்.
“அவருக்கு பிடிக்கனும்னு தான் நல்ல காரசாரமா செஞ்சிருந்தேன். நீ கிளம்பும் போது உன் மாமியாருக்கு குடுத்துவிடலாம்ன்னு நினைச்சேன். எங்க? அதுக்குள்ளே நல்லா இருக்குன்னு இங்க எல்லாம் காலி ஆகிடுச்சு…”
“இருக்கட்டும்மா, அத்தை கூட சொன்னாங்க, உங்களை இங்க கூட்டிட்டு வந்து செஞ்சு சாப்பிடனும்னு…” மேகா சொல்லவும் அத்தனை சந்தோஷம் மலருக்கு.
“ஆனாலும் உன் மாமனார், மாமியாரை மாதிரி பார்க்க முடியாது. கொஞ்சம் உசந்துட்டாலே எனக்கு நீ சமமான்னு பார்க்கற மனுஷங்க மத்தியில இவ்வளோ பெரிய இடத்துல இருக்கற கர்வமே இல்லாம இருக்காங்களே…”
பெருமையாக பேச மேகாவும் சிரித்தபடி தலையசைத்தாள். உண்மையாகவும் தானே உள்ளது.
“ம்மா, அவங்க வெளியுலகம் தெரிஞ்ச பிரபலம். நாமளும் பிரபலம் தான்ம்மா நம்ம சர்க்கிள்க்கு…” என்றும் சொல்லிக்கொண்டாள் தாயிடம்.
“அதுவும் சரிதான். நாமளும் இருக்கப்பட்டவங்க தான் வரும்மா…” என்றார் மலர்.
“இப்ப என்ன பன்ற? சாப்பிட்டியா நீ?…”
“இனிமே தான் கீழே போகனும். அவங்க குளிச்சிட்டு இருக்காங்கம்மா…”
“சரி சரி. மாப்பிள்ளை வரவும் நான் விசாரிச்சேன்னு சொல்லு. நான் கேட்டதையும் கேட்டு வை….” என்றவர்,
“அவருக்கு அல்வா பிடிச்சதா கேசரி பிடிச்சதான்னும் கேளு. அடுத்து வரப்போ செஞ்சு கொண்டு வரேன்…” என்றும் சொல்ல மேகாவிற்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
“சரிங்கம்மா…” என்று சொல்லவும் போனை வைத்துவிட்டார் மலர்.
“மேகா கால் வருதா?…” அவள் கையில் போனை பார்த்தபடி நிற்பதை கண்டு குளித்துவிட்டு வந்தவன் கேட்க,
“ஹ்ம்ம், வந்திச்சு. அம்மா…” என்றவள் பார்வை அவனின் வயிற்றில் பதிய,
“இனிமே ட்ரான்ஸ்பரென்ட் ஸ்டமக் தான் நான் பிக்ஸ் பண்ணனும் போல? சும்மா அங்கயே பார்க்கற? என்ன தெரியுதாம்?…” என்று கிண்டலடித்தவன்,
“என்ன சொன்னாங்க?…” என்று உடை மாற்ற ஆரம்பித்தான்.
“உங்களுக்கு நேத்து சாப்பிட்ட டிஷ்ல எது புடிச்சிருக்குன்னு கேட்டு சொல்ல சொன்னாங்க. அதோட அல்வா, கேசரில எது பிடிச்சிருக்குன்னு சொன்னா செஞ்சு கொண்டு வராங்கலாம்…” என்றதும் அதிரன் அதிர்ச்சியுடன் பார்ப்பான் என னியானிக்க,
“ஆஹாங், கொண்டுவர சொல்லேன்…” என புன்னகைத்தான்.
“நிஜமாவா? நீங்க ஜெர்க் ஆகலை?…”
“எதுக்கு?…”
“திரும்ப அதே டிஷ், ஸ்வீட்ஸ்?…”
“அதுக்கு ஜெர்க்காவாங்களா? இங்க தானே கொண்டுவராங்க. அம்மா இருக்காங்களே. காரம் நல்லா சாப்பிடுவாங்க. நான் வேணும்னா ஜஸ்ட் டேஸ்ட் பார்த்துக்கறேன்….” என்றவன்,
“அவங்க ஆசையா செஞ்சு தரதை வேண்டாம்ன்னு சொல்ல முடியுமா? கொண்டு வரப்போ கொஞ்சமா கொண்டுவர சொல்லலாம். காரம் கம்மியா செய்ய சொல்லலாம். மிளகாய் சேர்க்கிற இடத்துல மிளகு சேர்க்க சொல்லலாம். மிளகு குளிர்ச்சி தான்…”
அவன் சொல்ல சொல்ல கேட்டிருந்தவளுக்கு இதை முதலிலேயே சொல்லியிருந்தால் என்ன என்று கேட்க தோன்றியது.
“அன்னைக்கே சொல்லியிருந்தா இவன் என்ன நம்ம சமையலை இப்படி செய்ன்னு ரூல் பன்றான்னு தோணிருக்கும். இல்லையா மருமகனுக்கு நம்ம ஆசைப்படி செய்ய முடியலையேன்னு தோணிருக்கும்…”
“ரெண்டுமே அவங்களுக்கும் கஷ்டம், அதனால மேகாவுக்கும் கஷ்டம். அது எனக்கு கஷ்டம் தானே?…” என்று அவளின் இரு தோள்களிலும் கைபோட்டு மாலையாக்கியவன்,
“சரிதானே மேகமே?…” என்றான் நெற்றியில் முட்டி.
“ஹ்ம்ம்…” என்று தலையசைக்க,
“இப்ப நான் பெர்பெக்ட்லி ஆல்ரைட் மேகா. இப்படி சோகமா பார்க்காத. என்னவோ அதுவும் உன்னை பார்த்துட்டே இருக்க சொல்லி தான் தோண வைக்குது…” என்றவன் பார்வை கழுத்திற்கு செல்ல,
“இந்த டிஸ்கஷன்ல நான் என்னோட முக்கியமான வேலையை மறந்துட்டேன். குட்மார்னிங் சொல்லனும்…”
“சொல்லிட்டீங்களே?…”
“அது உனக்கு. இது என்னை அட்ராக்ட் பண்ணினதுக்கு…” என்றவன் மச்சத்திற்கு காலைவணக்கத்தை சொல்லும் விதமாய் சொல்ல,
“கீழே போகனும். அத்தையும், மாமாவும் வெய்ட் பண்ணுவாங்க…” என்று அவனை விலக்க,
“ஹ்ம்ம், வா போகலாம்…” என்று கீழே இறங்கினான் மேகாவுடன்.
தேவராஜும், சுபத்ராவும் தீவிரமான பேசிக்கொண்டிருக்க இருவரும் வந்ததுமே சுபத்ரா புன்னகைத்தார்.
“வா அதி…” தேவராஜ் அழைக்க,
“குட்மார்னிங் ப்பா…” என்றான் அவன் பளிச்சென்ற புன்னகையுடன்.