கூட்டமில்லாமல் வெறிச்சென்று இருந்தது அந்த பகுதியே. யாரும் வந்ததை போலவும் தெரியவில்லை.
“இங்க யாரும் வரமாட்டாங்களா?…” கையை கன்னத்தில் வைத்தபடி அந்த குளுமையை ரசித்துக்கொண்டே அதிரனிடம் கேட்க,
“நேத்து நல்ல மழை. மார்னிங் வரை இருந்தது. அதனால மேலே வர அலோவ் பண்ணினாங்களான்னு தெரியலை. வரலாம் இனிமே கூட. நாம பக்கம்ன்றதால சீக்கிரம் வந்துட்டோம்…”
அதிரன் பேசிக்கொண்டே வசந்த்தை பார்க்க வேகமாய் ஒரு கேமராவை கொண்டுவந்து நீட்டினான் வசந்த்.
“மேகா ஸ்கார்ப் கழட்டிட்டு இங்க வா…” என ஓரிடத்தில் அவளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்தான்.
“நீங்களும் வாங்க…” என அவனை அழைக்க வசந்த் வந்து கேமராவை வாங்கிக்கொண்டான்.
“இது வியூ பாயின்ட். அழகா இருக்குல?…” என காண்பிக்க தேயிலை தோட்டங்களுக்கு நடுவே தூரத்தில் பறந்து விரிந்த ஏரி அழகாய் வீற்றிருந்தது.
“ஓகே, அடுத்ததா மகாராஜா மெட்டு. அதுக்கு மேல இன்னொரு டேம்…” என்று கிளம்பிவிட்டான்.
மகாராஜா மெட்டு, மணலார் எஸ்டேட் எல்லாம் தாண்டி மேலே இரவங்கலார் டேம் வந்து சேர்ந்தனர்.
மீண்டும் மேகமூட்டம் இருட்டிக்கொண்டு சூழ ஆரம்பிக்க அதன் பாதையும் குறுகலாய் அத்தனை மோசமாய்.
பைக்கை ஓட்டவே அதிரனுக்கு சிரமமாக இருந்தது. அவ்வப்போது ஒரு கையால் ஓட்டியபடி இன்னொரு கையை லேசாய் உதறிக்கொண்டு வந்தான்.
“கீழே இறங்கிடலாம்ங்க. முடியலை தானே?…” மேகா சொல்ல,
“க்ரவுட் இல்லாமல் இப்படி ஒரு சூழ்நிலையில் தனியா வரத்து எவ்வளோ திரில். என்ஜாய் பண்ணு மேகா. என்னோட பீலிங் சொல்லவே வார்த்தை இல்லை பொண்ணே…”
அவளை சமாதானம் செய்து பைக்கை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மேகாவுடன் கை கோர்த்தபடி மேலே நடக்க ஆரம்பித்தான்.
அடர்ந்த காடு போன்ற சூழல். என்னதான் மக்கள் வந்து செல்லும் இடமாக இருந்தாலும் அன்றைய பொழுது யாருமற்று காட்டிற்குள் செல்வதை போலிருந்தது.
போகும் வழி சின்ன ஏற்றமும், அதன் கீழே இறங்கினால் அணைக்கட்டும், சிறிய நீர்வீழ்ச்சியும் என இருந்தது.
அணைக்கட்டை நெருங்க நெருங்க தண்ணீரின் இரைச்சல். பாறையின் மேலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து மெல்லிய அருவியாய் அணையில் விழ அதிரனின் கையை பிடித்துக்கொண்டு அருகே சென்று பார்த்தாள்.
“அழகா இருக்கு…”
“ஆஹாங்…” என சிரித்தவன்,
“இந்த டேம் சின்னது தான். இந்த ப்ரிட்ஜ் க்ராஸ் பண்ணலாம்ன்னா சேஃப் இல்லை. அங்கங்க உடைஞ்சிருக்கு பார்…” என காண்பித்தவன்,
“இந்த ரெண்டு மலைக்கு நடுவில ஒரு இடம் தெரியுது பார். கம்பம்மெட்டு ஏரியா அதுதான்….” என்று காண்பிக்க மலைகளை சூழ்ந்திருந்தது மேகக்கூட்டம்.
“அமேஸிங்…” என்று மேகா வியப்புடன் பார்க்க தலையை கோதியபடி பின்னால் கவனித்தான் அதிரன்.
வசந்த்தும், அவனுடன் வந்தவர்களும் மேலே வரவில்லை. இருப்பினும் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு மேகாவை நெருங்கி நின்றவன்,
“ஜஸ்ட் வாவ் இல்லையா மேகா?…” என்றவனின் குரல் மாற்றத்தில் அவனை திரும்பி பார்த்தவள்,
“நீங்க முன்னால நடங்க ஸார்…” என்று அவர்கள் இருவரையும் மற்ற நால்வரும் சுற்றியபடி நடந்தனர்.
பைக்கை நெருங்கியதும் தான் மூச்சு வந்தது. ஆனாலும் அங்கே சொல்ல முடியாதே, எப்போது வேண்டுமானாலும் பாதையை கூட வழி மறிக்கும் வனவிலங்குகள்.
மேகாவின் முகம் வெளுத்துவிட்டது. பைக்கை எடுக்க லேசாய் தூறல்கள் ஆரம்பித்திருந்தது.
சிறிது தூரம் கடக்கவும் ஒருசில வாகனங்கள் மேலே வர ஆரம்பித்திருந்தது. எதிர்ப்பட்டதை நிறுத்தி விஷயத்தை சொல்ல அவர்களுக்கு அதிரனை தெரியவில்லை.
“வசந்த் மேல யாரும் க்ராஸ் பண்ணி போகாம ஸ்டாப் பண்ணி திருப்பி அனுப்பு….” என்றவன் தனக்கு முன்னால் வந்த வாகனங்களை நிறுத்தி சொல்லிக்கொண்டிருந்தானர்.
ஹைவேயிஸ் நெருங்கவும் தான் மூச்சே வந்தது. அதுவரை இருந்த பிடிமானம் லேசாய் இளகவும் தான் பைக்கை நிறுத்திவிட்டு அவளை திரும்பி பார்த்து புன்னகைத்தான் அதிரன்.
“சொன்னேன்ல?…” மேகா அவனின் தோளில் தட்ட,
“செம்ம த்ரில் மேகா. ஆனா அந்த நிமிஷம் ஜெர்க் ஆகிட்டேன்…” என்றவன் மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு கெஸ்ட்ஹவுஸ் வந்து சேர்ந்தான்.
அங்கே அன்று ஒருநாள் இருந்துவிட்டு மறுநாள் மலையிறங்கினார்கள் இருவரும்.
இருவருக்குமே அந்த பயணம் தேனாய் தான் தித்தித்தது. நிச்சயம் மீண்டும் ஒருமுறை அங்கே வந்து வெகுநாட்கள் செலவிடவேண்டும் என அதிரன் சொல்ல, மேகா தலையை அசைப்பேனா என்றாள்.
இதோ சென்னை வந்துவிட்டனர். இரு நாட்களில் வரவேற்பு. அவர்களுக்கான உடைகளில் இருந்து, அணிகலன்கள் வரை அனைத்தும் தயார்.
ஏற்கனவே தேவராஜ் முக்கியமானவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார்.
தொழில்துறை நண்பர்களில் இருந்து, அனைவருக்குமே அழைப்பு சென்றிருந்தது.
உமேஷ் உட்பட வரவேற்பிற்கு சினிமா துறையை சார்ந்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் படிதான் பிரமாண்டபாக ஏற்பாடாகி இருந்தது.
எம்ஆர்சி நகரில் உள்ள செட்டியார் மஹாலில் வரவேற்பிற்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்க அதுவரை திரைத்துறையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தேறாத விதத்தில் ஏற்பாடாகி இருந்தது.
அன்று வரவேற்பு. முதல் நாள் இரவே அதிரன் யார் யார் வர கூடும் என்று சொல்லியிருக்க மலைப்புடன் தான் அமர்ந்திருந்தாள் மேகா.
நேரில் கூட பார்த்திராத பிரபலங்கள் தங்களின் வரவேற்பில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர இருக்க அந்த நிமிடம் அவளின் ஐம்புலன்களும் திகைப்பில் தான் இருந்தது.
மறுநாள் மாலை வரவேற்பு. நேரம் நெருங்க நெருங்க பதட்டம். அவளை கவனித்தவனுக்கு அத்தனை சிரிப்பு.
“ஏன் நெவர்ஸாகற மேகா? நான் இருக்கேனே உன்னோடவே?…” என்று அவளை ஆற்றுப்படுத்தினான்.
மேகாவின் சொந்தங்களும் வந்து சேர்ந்திருக்க அங்கே வைத்துதான் இருவருக்குமே அலங்காரமும் கூட.
தனி தனி அறையில் அவர்கள் தயாராகிக்கொண்டிருக்க இங்கே தேவராஜ் அமுதினியனை தனக்கருகே நிறுத்திக்கொண்டார்.
பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியலிலும், தொழில்துறை வட்டாரங்களில் முக்கிய பிரமுகர்களுமே இடம்பெற்றிருந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக சமூக ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் தங்களின் வேலையை பரபரப்பாய் செய்தனர்.
சில ஊடகங்கள் தங்கள் யூட்யூப் சேனலில் நேரடி ஒளிபரப்பும் செய்ய ஆரம்பித்திருந்தனர்.
அதிரன் தான் முதலில் தயாரானவன் மேகாவை அழைத்து மேடைக்கு செல்ல தேடி சென்றான் அவளறைக்கு.
மேகங்களும் நட்சத்திரங்களும் என்ற தீமில் மண்டபம் மொத்தமும் அலங்காரங்கள் இருக்க அதற்கு அழகுக்கு அழகு சேர்ப்பதை போல இளம் தாமரை இதழ் நிறத்தில் மேகாவை அலங்கரித்திருந்தனர்.
அதிரன் அறைக்குள் நுழையவுமே மற்றவர்கள் எல்லாம் அவனின் கண்ணசைவில் வெளியேற புன்சிரிப்புடன் மேகாவை நெருங்கினான் மெல்லிய விசில் சத்தத்தோடு.
“தங்க தாமரை மகளே…” என ராகமாய் அவன் அழைக்க,
“ஹெவியா இருக்கு அதி…” என்றாள் மேகா சங்கோஜமாய்.
வேலைபாடுகள் மிகுந்த லெஹங்காவை லேசாய் உயர்த்தி பிடித்தபடி அவள் சொல்லியதில் மென்னகை புரிந்தவன் சிரிப்புடன் அவளை நெருங்கி,
“மேகா…” வழக்கமான குரலில் அழைத்து மச்சத்தில் முத்தமிட,
“அதி, யாராச்சும் வர போறாங்க…” என்றவளை விலகவிடாமல் அணைத்தவன்,
“மனசை அள்ளிட்ட பொண்ணே…” என தலைசாய்த்து வசீகரிக்கும் புன்னகையுடன்.