அவர் வருகையில் வீட்டின் சர்வன்ட் ஒருவரும் மேகாவிற்கானதை மாடிக்கு எடுத்து செல்வதை பார்த்துவிட்டு தனது க்ரீன் டீயை எடுத்துக்கொண்டான்.
“பாம்புக்கு பால் வார்த்தா கொத்த தான செய்யும். ஒன்னு அதுக்கான இடத்துல புடிச்சு போடனும். இல்லையா நம்மை காப்பாத்திக்க என்ன செய்யனுமோ அதை செய்யனும். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்…”
சுபத்ரா தன் போக்கில் காதில் விழுந்தவைக்கு பதில் சொல்ல தேவராஜும், அதிரனும் சிரித்துக்கொண்டனர்.
“சுபா…”
“வரப்போ காதுல விழுந்துச்சு. இவன் வேற வந்ததுல இருந்து விரலால தாளம் போட்டுட்டே இருக்கான். என்னவோ பிரச்சனைன்னு தெரியுது. அதான் எனக்கு மனசுல பட்டதை சொன்னேன்…” என்றவர்,
“சரி நான் போய் தூங்கறேன். இதுக்கு மேல முழிச்சிருக்க என்னால முடியாது. நீங்க பேசிட்டு வாங்க…” என்று சொல்லி சென்றுவிட்டார்.
சுபத்ரா சொல்லவும் அப்போது தான் தேவராஜும் அதிரனின் விரல்களை கவனித்தார்.
மென்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவனின் ஒரு கை விரல்கள் சோபாவில் நர்த்தனமாட மகனின் அமைதியின்மையை காட்டியது.
“அதி ரிலாக்ஸ்…”
“ஹ்ம்ம் ப்பா…” என்றவன்,
“நீங்க அந்த ப்ரடியூசர்கிட்ட நீங்க நோ சொல்லிருங்க…” என்றான்.
எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தனிப்பட்ட விஷயத்தை தொழிலுக்கு கொண்டுவராதவன் அதிரன்.
அவன் இப்படி சொல்லும் பொழுது உமேஷின் மேல் தான் ஆத்திரம் வந்தது தேவராஜிற்கு.
இதுவரை யாரையும் பார்த்து அவர்கள் முன்னேறி வருவதை கண்டு பொறாமை பட்டதும் இல்லை. வருபவர்களுக்கு தடையாய் இருந்ததும் இல்லை.
ஆனால் உமேஷ் விஷயத்தில் எல்லாமே தலைகீழ். அவனை பொருட்டாக தாங்கள் நினைக்காத போதும் இப்படி தானாக வந்து எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டானே என நினைத்தார்.
“நெக்ஸ்ட்…” தேவராஜ் கேட்க,
“இதுக்கு உமேஷ் கம்ப்ளைன்ட் பண்ணதும். உமேஷ் மேல கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ண என்ன பண்ணனுமோ அதை நான் பார்த்துக்கறேன் ப்பா…” என்றான்.
“அதி…”
“எதுவுமே ஃபேக் இல்லைப்பா. க்ரியேட் பண்ண வேண்டிய அவசியமே இல்லாம மிஸ்டர் உமேஷ் பண்ணினதே நிறைய இருக்கே…” என்றான்.
“ஹ்ம்ம், கேள்விப்பட்டிருக்கேன்…” எனும் பொழுதே தேவராஜ் முகம் மாறியிருந்தது.
“நமக்கு தேவை இல்லைன்னு ஒதுங்கி போனது உமேஷ்க்கு ரொம்ப இளப்பமா போச்சு. இனி அப்படி தோணாது இல்லையாப்பா?…”
“ஆல்வேய்ஸ் ப்பா…” என்ற புன்னகை தேவராஜையும் தொற்றியது.
“ஓகே குட்நைட். மார்னிங் பார்க்கலாம்…” என்றுவிட்டு எழுந்து சென்றார்.
அதிரனும் மாடிக்கு செல்ல மேகாவிற்கு வந்திருந்த பாலும், பழங்களும் அப்படியே இருந்தது.
அறையில் இல்லாமல் இருக்க அவள் குளித்துக்கொண்டிருப்பாள் என நினைத்தபடி ஒரு ஆப்பிள் துண்டை எடுத்து கடித்தவனுக்கு அப்போது தான் மேகா சொல்லியது ஞாபகம் வந்தது.
“ஓஹ் நோ…” என மொபைலை எடுத்தவன் நேரத்தை பார்த்துவிட்டு அழைப்போமா வேண்டாமா என யோசிக்க அவனின் இன்னொரு எண்ணிற்கு வந்த குறுஞ்செய்திகளை ஹர்ஷத் இவனுக்கு அனுப்பி இருக்க அதில் கவனம் பதிந்தது.
அடுத்த நிமிடம் செல்வத்தின் எண்ணிற்கு அழைத்துவிட்டான் அதிரன். அவர் எடுக்கும் வரை சுளித்த புருவமுடன் தான் இருந்தான்.
தனது பர்சனல் நம்பரில் இருந்து பல்லவனுக்கு செய்தி அனுப்பினான். ‘தாங்கள் வீடு வந்துவிட்டோம் என்பதையும், அவர்கள் சென்றாகிற்றா?’ என கேட்டும்.
பல்லவன் இன்னும் எடுத்து பார்க்கவில்லை. அதற்குள் செல்வம் அழைப்பை ஏற்கவும்,
“தூங்கிட்டீங்களா மாமா?…” என்றான் அவன்.
“இல்லைங்க மாப்பிள்ளை. இனிமே தான். சொல்லுங்க…” என்றார்.
அவர் தனக்கெதிரே அமர்ந்திருந்த அமுதினியனையும், பல்லவனையும் பார்த்துக்கொண்டே தான் பேசினார்.
பல்லவன் சேரில் செல்வத்தின் அருகே அமர்ந்திருக்க, அமுதினியன் கட்டிலில் சாய்ந்திருக்க மலரும் மோனிகாவும் கீழே அமர்ந்திருந்தனர்.
அமுதினியன் அருகே அஷ்வின் உறக்கத்தில் இருந்தான். இந்த நேரம் அதிரனின் அழைப்பு.
அப்போதுதான் பல்லவன் தனது மொபைலை பார்க்க தனக்கும் அப்போதுதான் மெசேஜ் வந்திருக்க செல்வத்திடம் அதனை காட்டிவிட்டு வேறு எதுவும் சொல்ல வேண்டாம் என்றான்.
“மாமா வீட்டில தானே இருக்கீங்க நீங்க?…” அடுத்ததாய் அதிரன் கேட்க,
“ஆமாங்க மாப்பிள்ளை, எல்லாரும் இங்க தான் இருக்கோம்…”
“ஓஹ்…” அதிரன் அமைதியில் செல்வம் புரியாமல் மௌனமாக இருக்க,
“அப்படிங்களா, வாங்க கண்டிப்பா…” என்று சொல்லவும் அதிரன் போனை வைத்துவிட்டான்.
வருத்தமாக இருந்தது அவர்களை நினைக்கையில். இது மேகாவிற்கு தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாளோ என்றும் இருந்தது.
மீண்டும் மனதில் என்னவோ அழுத்தும் உணர்வு. எழுந்தவன் இங்குமங்கும் நடக்க இன்னும் மேகா வெளியே வரவில்லை.
தான் வரும் பொழுதுதான் உள்ளே சென்றிருக்க கூடும் என்று நினைத்தவன் தனது பிரத்யோக அறையை திறந்துகொண்டு நுழைந்தான்.
அவனின் மனஅமைதி, அவனின் வடிகால், அவனின் தாய்மடிக்கு பின்னான இன்னொரு இளைப்பாறுதல்.
அவனின் மனதிற்கினிய வீணைகளின் சாம்ராஜ்யம். உள்ளே நுழைந்ததுமே என்னவோ ஒரு அமைதி வந்து ஒட்டிக்கொண்டது.
அந்த அறையில் ஒவ்வொன்றாக பார்த்தவன் பின் ஒன்றை எடுத்து வைத்து வாசிக்க ஆரம்பித்தான்.
எப்போதும் அமர்ந்து வாசிக்க ஒரு மேடை போன்ற வட்டமான இருக்கை அவனுக்கு இருக்க ஒரு வீணையுடன் அதில் அமர்ந்தவன் கண்ணை மூடிக்கொண்டான்.
அவன் வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அருகில் மேகத்தின் வாசம். மெல்ல கண்ணை திறந்தவனின் விழிகள் மின்னியது அவளை கண்டதும்.
மனதின் அழுத்தம் இசையில் பாதி கரைந்ததென்றால் மேகாவை பார்த்ததும் சொச்சமும் மறைந்தது.
மேகாவும் சிரித்தபடி அவன் வாசிப்பதை கேட்டுக்கொண்டிருக்க வாசித்து முடித்தவன் வீணையை அங்கே வைத்துவிட்டு எழுந்து வந்தான்.
“ரொம்ப அழகா வாசிச்சீங்க…” மனைவி பாராட்டுப்பத்திரம் வாசித்தாள் அவனின் வாசிப்பிற்கு.
“ஓஹ் ரியல்லி…” என்று நெற்றியில் முட்டியவன் பார்வை அங்கே சின்னஞ்சிறிய மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீணையில் சென்று நிலைத்தது.
அதிரனின் பார்வையை கொண்டு தானும் திரும்பி பார்க்க அன்று முதல் நாள் அவன் வாசித்த வீணை.
கற்றுத்தருகிறேன் என்று அவளை வாசிக்க வைத்து அவளை அவன் வாசிக்க ஆரம்ப ராகத்தை மீட்டிய வீணை.
“வாசிக்கலாமா மேகமே?…” என அவன் குரல் கிசுகிசுப்பாய் கேட்க,
“எனக்கு கத்துக்க வேண்டாம்…” என்று வெளியேற முயன்றாள் மேகா.
“இசைகலைஞன் மனைவி நீ. இப்படியா கத்துக்க பயந்து போகனும்?…” என்றவன் சிரிப்பு அறையில் இன்னும் சத்தமாய் எதிரொலித்தது.
“ப்ளீஸ் அதி, இங்க வேண்டாம்…” என்றாள் மேகா.
“ஓஹ், சரி சொல்லு, நான் கேட்கறதுக்கு சரியா பதில் சொல்லிட்டா யூர் விஷ்…”
“இல்லைன்னா?…”
“அதை இப்ப நான் சொல்லமாட்டேன்..” என்றவன் விரல்கள் அவளின் ஈர கூந்தலுக்குள் நுழைந்து அலைந்தது.
“கேளுங்க…”
“அன்னைக்கு நான் வாசிச்ச ராகம் என்ன?…” என்றதும் மேகாவின் முகம் யோசனையில் சுருங்கிவிட்டது.
“அவசரமில்ல யோசி…” என குறுஞ்சிரிப்புடன் அதிரன் சொல்ல,
“நிஜமா ஞாபகமில்லை…”
“நான் சொன்னேனே?…”
“கவனிக்கலை அதி….” என அவனின் மார்பில் தலையை சாய்த்துக்கொள்ள,
“போங்கு, ஞாபகப்படுத்தி பாரு…” என்று கேட்க அவன் கேட்க கேட்கத்தான் இன்னும் ஞாபகங்கள் எல்லாம் பின்னோக்கி சென்றது.
எவ்வளவு யோசித்தாலும் தனக்கு நிச்சயம் இப்போதைக்கு தெரியபோவதில்லை என்று,
“யூர் விஷ்…” என்றாள் இப்போது அவனை போலவே மெல்லிய குரலில் நிமிராமல்.
“வாட்?…” என்று சிரித்தவன்,
“வாட் யூ மீன் மேகமே?…” என்றான்.
“எனக்கு தெரியலை. அதான் உங்க இஷ்டம்ன்னு சொன்னேன்…”
“ஓகே பேச்சு மாற கூடாது…” என அவன் சொல்லும் பொழுதே மேகாவிற்கு உதறியது.
‘வகையா மாட்டினடி நீ’ என்று தான் நினைத்துக்கொண்டாள் அவனின் பேச்சிலும் பார்வையிலும்.
“ம்ஹூம், மாறமாட்டேன்…”
“சில் மேகா, என்ன பண்ணிடுவேன்?…” என சிரிக்க,
“ஹ்ம்ம்…” என்றாள்.
“இப்ப நீ வரும் போது நான் வாசிச்ச ராகம் நீலாம்பரி ராகம். மனஅமைதிக்காக வாசிக்கிறது…” என்றதும் அதுவரை இருந்த சந்தோஷ அலை பின்னோக்கி செல்வது போல் தோன்றியது மேகாவிற்கு.
“அன்னைக்கு நான் வாசிச்சது தர்மவதி ராகம். அது ஒரு மூவியோட சாங். இன்னைக்கு ராகம் மட்டும்…” என சொல்லியவன்,
“அடுத்த முறை இந்த ரெண்டு கொஷினையும் கேட்பேன் பொண்ணே. மறந்து போய் மாட்டிக்காத…” என்றான் அவளின் மூக்கோடு உரசியபடி.
“ஹ்ம்ம், சரி…” என்றவள் உடனே கண்ணை மூடி இரண்டையும் மனப்பாடம் செய்வதை போல சத்தமின்றி இதழசைத்து சொல்ல கழுத்தில் அழுத்தமாய் ஒரு அச்சாரம்.