“நீங்களும், வம்சிஸ்ரீயும் பர்பெக்ட் மேட்ச்…” என கதாநாயகியுடன் இணைத்து சொல்லிய இயக்குனர் ஒருவர்,
“அப்படியே ரியல் கப்பிள் மாதிரி இருந்தீங்க. என்னோட கண்டிப்பா நீங்க ஒரு படம் பண்ணனும் அதிரன். ஜோடி வம்சிஸ்ரீ தான்…” என இன்னொரு இயக்குனர் உறுதியாக சொல்லி சென்றார்.
இப்படி ஒவ்வொருவராய் வந்து வாழ்த்தி சொல்ல கதாநாயகியும் வந்து தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துவிட்டே சென்றாள்.
“ஸ்க்ரீன்ல நம்ம பேர் ரொம்ப அழகா வந்திருக்கு அதிரன். தேங்க்ஸ் ஃபார் எவ்ரித்திங்…” என்று சொல்லிவிட்டு செல்ல அதிரனுக்கு எப்போதடா அனைவரும் கிளம்புவார்கள் என்றிருந்தது.
அவனருகே மேகா நின்றுகொண்டு தான் இருந்தாள் எல்லாவற்றையும் பார்த்தபடி.
கிட்டத்தட்ட அந்த அரங்கமே காலியாகி இருக்க பேச்சினூடே ஹர்ஷத்திற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு திரும்ப மேகா முன்னே நடந்தாள்.
கடைசியாக அவர்கள் மட்டும் தான் இருக்க தாங்கள் தான் கிளம்ப போகிறோம் என நினைத்து நடந்தாள். அவளின் பின்னே வேகமாய் வந்தவன்,
“ஹ்ம்ம், போகலாம். வெய்ட்…” என்றான் இன்னும் நெருங்கி நின்று.
“அதி என்ன இது? யாராச்சும் வர போறாங்க?…” என பின்னால் சுவற்றோடு சாய,
“இருக்கட்டும்…” என்றவன்,
“படம் எப்படி இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே என் மேகம்?…” என்றான் ஒரு கையை சுவற்றில் ஊன்றியபடி அவள் மேல் உரசாமல் நின்று.
“இங்க தான் கேட்கனுமா? அதுவும் எவ்வளோ பெரிய ஆளுங்க எல்லாம் சொல்லிட்டாங்க? நான் சொல்ல என்ன இருக்கு?…”
“எனக்கு நீ சொல்லு. எப்படி இருந்துச்சு?…” என்னும் பொழுதே திறந்திருந்த கதவை கடந்து யாரோ செல்வதை போலிருக்க,
“அதி தள்ளுங்க, யாராச்சும் பார்க்க போறாங்க…” என சொல்லியும் அவன் நகரவில்லை.
“இப்படி யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?…”
“சொல்லேன் நீதான் மேகா…” என்றான் அதிரன் அசையாமல்.
“ப்ச், அவங்க நீங்க என்னை…” என்றவளுக்கு அப்போது தான் என்னவோ சுரீரென்று உரைக்க வேகமாய் அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.
“என்ன பன்றீங்க நீங்க?…” என முறைப்புடன் கேட்க,
“புரியுதா உனக்கு?…” என்றதும்,
“என்ன ப்ரூவ் பண்ண பார்க்கறீங்க நீங்க?…” அவனின் பாவனையில் அவள் புருவம் சுருக்கவும்,
“ப்ரூவ் பண்ண இல்லை. உனக்கு புரியுதான்னு பார்த்தேன். க்ளவர் மேகா…” என இப்போது இன்னும் நெருங்கி மூக்கோடு உரசி நிற்க கதவு மெல்ல மூடியது.
“விடுங்க நீங்க. என்னை நினைச்சீங்க என்னை பத்தி?…” என்று சொல்லியவளுக்கு அத்தனை கோபம்.
“இதுவரைக்கும் நான் ஸ்க்ரீன்ல டீப் கிஸ் பண்ணினதில்லைம்மா…” என்றவன் தலையை கோதியபடி,
“நீ என்ன நினைக்கிறன்னு தெரியலை மேகா. எனக்கு கொஞ்சம் எம்பேரிசிங் மொமெண்ட்டா இருந்துச்சுடா. கொஞ்சம் ஸ்கிட் ஆகிட்டேன் அதுல…” என்று சொல்ல அவள் எதுவும் பேசாமல் அவனை தாண்டி படியேறி கதவை நோக்கி செல்ல,
“டேய் பொண்ணே…” என பின்னால் சென்றவன் அவளோடு கை கோர்க்க,
“பேசாதீங்க. வீட்டுக்கு வர வரைக்கும் பேச கூடாது…” என்றவளை இன்னும் பிடித்தது அதிரனுக்கு.
“நாம சண்டை போடறோமா மேகா?…” என்றான் சிரிப்புடன்.
“நான் கோவமா இருக்கேன்…”
“தெரியலைடா எனக்கு…” என்று இழைந்துகொண்டு சொல்ல அந்த கதவை இழுத்தவளால் திறக்க முடியவில்லை.
“வெய்ட்…” என்று தான் திறந்தான்.
வெளியே வரவும் மேகாவின் முகம் எப்போதும் போல இருக்க அதிரன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வர தயாரிப்பாளருடன் தேவராஜ் பேசிக்கொண்டு இருந்தார்.
“சரி நீங்க கிளம்புங்க. நான் மார்னிங் தான் வீட்டுக்கு வருவேன். அம்மாட்ட சொல்லிட்டேன்…” என்றவர் தயாரிப்பாளருடன் பேசிக்கொண்டே சென்றுவிட இன்னும் குறையாத கூட்டம் வெளியே.
அதிரன் காருக்காக மேகாவுடன் வந்து நிற்க பாதுகாப்பு தடுப்பை தாண்ட முயலும் ரசிகர்கள் அங்கே ஆர்ப்பரிக்க கையசைத்தான் அனைவருக்கும்.
கார் வந்துவிட்டது. வந்ததை போல இருவரும் சென்று காரில் ஏறிக்கொள்ள அந்த திரையரங்க வளாகத்தை தாண்டும் வரை அதிரன் ரூப்டாப்பை திறந்துவைத்து நின்றுகொண்டு கையசைத்தபடி இருந்தான்.
அவற்றை தாண்டும் வரை கூட ரசிகர்களின் அலை ஓயாதது போல அவனின் காரை பின்தொடரவும் செய்தனர்.
“பின்னாடியே வராங்க…” மேகா திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சொல்ல,
“சொல்லியாச்சு. கேட்கமாட்டேன்றாங்க. என்ன பன்றது மேகா?…” என்றான் அதிரன்.
காரின் வேகத்தில் பைக்கில் இளைஞர்கள் காரை சுற்றிக்கொண்டு வர அதிரன் தலையை குனிந்தபடி மொபைலில் இருந்தான்.
“உங்களை தான் கூப்பிடறாங்க, பாருங்க…” என ஜன்னல் வெளியே தெரிந்தவர்களை காண்பிக்க,
“இப்ப ஒருத்தரை பார்த்து கை கொடுத்த அடுத்தடுத்து பின்னாடி இருக்கறவங்க இன்னும் வேகமா பார்க்கனும்னு வருவாங்க மேகா. அது அவங்களுக்கு தான் ஆபத்து…” என்றான்.
மேகாவிற்கு அவர்களை பார்க்க பாவமாகவும், கோபமாகவும் வந்தது. இதென்ன உயிரை பணயம் வைத்து அப்படி ஒருவனை பார்க்கவேண்டும் என்று ஆசை என.
அவள் பார்ப்பதை கண்டதும் அவளுக்கும் அவர்கள் கையசைத்து ஆர்ப்பரிக்க தூக்கிவாரிபோட்டது மேகாவிற்கு.
தானாக இன்னும் தள்ளி அதிரனருகே வந்து அமர்ந்துகொள்ள எப்போதும் இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த இடைவெளி அன்றில்லை.
“மேகா…” சிரிப்புடன் புருவம் உயர்த்தினான் அதிரன்.
“இல்லை நான் அங்க பார்த்தேன். எனக்கு கையாட்டறாங்க…” என சொல்லிய பாவனையில் அதிரன் சத்தமாய் சிரித்துவிட,
“உங்ககிட்ட சொன்னேன் பாருங்க…” என்று திரும்ப அங்கே இன்னும் அந்த பைக்கில் வருபவர்கள்.
“போச்சு, எங்கயும் பார்க்க முடியலை…” என முன்னால் பார்த்தபடி அமர்ந்துகொள்ள அதிரன், ஹர்ஷத், டிரைவர் என அனைவருக்குமே புன்னகை மேகாவின் புலம்பலில்.
வீடு வந்து சேரும் வரை மேகா ஜன்னல் பக்கம் திரும்பவில்லை. நேர்கொண்ட பார்வை தான் முன்னால் கண்ணாடியில் தெரிந்த சாலையில்.
“கழுத்து சுழுக்கிக்கும் மேகா…” என அதிரன் கூட மெல்லிய குரலில் சொல்ல,
“நீங்க பேச கூடாது…” என்றாள் அவளும் அதே குரலில்.
“ப்பா பயங்கர காரம் தான்…” என்று சிரித்துக்கொண்டான்.
வீடு வரும் வரை பின்தொடர்ந்து வந்தவர்கள் கார் கேட்டை தாண்டி வீட்டிற்குள் நுழையும் வரை வாசலில் நின்று வேடிக்கை பார்த்தனர்.