இன்று சுபத்ரா வேறு மௌனவிரதம். தன்னால் நிச்சயம் எங்கும் நகரமுடியாது. அதுவும் மகன் இத்தனை பெரிய கண்டத்தை தாண்டி வந்ததை போல வந்திருக்க எங்கே செல்ல தோன்றும்?
“வரு, நீ போய்ட்டு வா. நாங்க இருக்கோம்…” என்றார் மலர்.
“ப்பா, நான் ட்ராப் பண்ணிட்டு வரேன்…” அதிரன் சொல்ல,
“இல்லை நீங்க இருங்க. நான்…”
“ப்ச், வா நீ…” என சொல்லியவன் மாமனார் மாமியாரிடம் சொல்லிக்கொண்டு அஷ்வினை தேட,
“நீங்க போய்ட்டு வாங்க. அவன் அம்மாவோட ஜெல்லாகிட்டான். கிட்சன்ல இருக்கான்…” என்றாள் மோனிகா.
“கேட்கவே மாட்டீங்களா?…” என்றவளை பார்த்து கண் சிமிட்டியவன்,
“உன்னை கேட்டுட்டே தான் இருக்கேன். எப்போ மாட்டேன்னு சொன்னேன்? தாயேன்….” என்றதும் மேகா ஒருநொடி நின்று பின் நடந்தாள் அவனின் பேச்சில்.
“எல்லாரும் பார்க்கறாங்க அதி…”
“முன்னாடி வா…” என சொல்லிவிட்டு சாவிக்கு கை நீட்ட அவனின் கையில் வந்து தந்துவிட்டு சென்றார் ட்ரைவர்.
ஹர்ஷத் இன்னும் வந்திருக்கவில்லை. அதிரனுடன் கேரளா சென்றவர்கள் அனைவருமே ஓய்வில் இருக்க பாதுகாவலர்கள் இங்கிருந்தவர்கள் மட்டும் பின் தொடர்ந்தனர்.
“நான் மட்டும்ன்னா கூட ஒரு கார்லயே முடிஞ்சிரும். இப்ப பாருங்க…”
“உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் ரிட்டர்ன் ஆகிடுவேன். உன்னோட கார் உனக்கு வெய்ட் பண்ணும்…” என சொல்ல மேகாவின் பார்வை அதிரனின் காலில் பதிந்தது.
“நடந்து வந்தீங்களா அங்க? முள் செடி எதாச்சும் கீறிடுச்சா?…” என்று காலை பார்த்துக்கொண்டே கேட்க,
“மேகா மேகா…” என சிரித்துக்கொண்டவன் இடதுகையால் தலையை கோதிக்கொண்டான்.
“ஒரு கையாள கார் ட்ரைவ் பண்ண கூடாதுன்னு சொல்லியிருக்கேன்…” என்றதும் உடனே தலையில் இருந்து கையை எடுத்து அவளின் கன்னத்திற்கு கொண்டு செல்ல,
“அதி…” என்று விரல்களை பிடித்துக்கொண்டாள்.
“உன் கொலுசு இன்னும் பழகலை போலடா…” என்றான் சம்பந்தமின்றி.
“ஏன் என்னாச்சு? என்ன பழகனும்?…” என தன் காலை குனிந்து பார்த்தவள்,
“பழகலைன்னா? கொலுசு நல்லா இல்லையா? குவாலிட்டியை சொல்றீங்களா?…” என்றவள் ஒற்றை காலை மடக்கி மடியில் வைத்து பார்க்க அதிரன் முகத்தில் குறும்பு புன்னகை படர்ந்தது.
“கொலுசு துவளலை. நல்ல குவாலிட்டி தான். பாருங்க இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கு…” என தலையாட்டி சொல்ல,
“ம்ஹூம், விட்டா எக்ஸாமாவது ஒன்னாவதுன்னு நான் இப்படியே உன்னை கூட்டிட்டு எங்கையாவது போய்டுவேன் பொண்ணே. மயக்கற நீ…” என்று சொல்லியவன்,
“என் காலெல்லாம் உன் கொலுசு பண்ணின வேலை தான். அதை தான் சொன்னேன் இன்னும் பழகலைன்னு…” என சொல்லவும் கப்பென்று வாயை மூடிகொண்டாள் மேகா.
மடியில் இருந்த பாத கொலுசை லேசாய் உருட்டியவாறு நிமிராமல் அமர்ந்திருக்க அதிரனின் சிரிப்பு சத்தம் அவளை இம்சித்தது.
“மேகா…”
“இல்ல, எனக்கே தெரியலை…” திக்கி திணறி வந்த வார்த்தைகளை கண்டு அவளை பார்த்து சிரித்தவன்,
“எனக்கு தெரியுமே? அதான் அம்மா கேட்கவும் சட்டுன்னு பதில் சொல்ல முடியலை…”